Jump to content

தினகரன் அணியுடன் மோதல் முற்றுகிறது: வாரிசு அரசியலை சசிகலா உருவாக்கியதை ஏற்க மாட்டோம் - முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் திட்டவட்டம்


Recommended Posts

தினகரன் அணியுடன் மோதல் முற்றுகிறது: வாரிசு அரசியலை சசிகலா உருவாக்கியதை ஏற்க மாட்டோம் - முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் திட்டவட்டம்

 

 
 
 
நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் வெற்றிவேல் எம்எல்ஏ ஆகியோரின் செயல்பாடுகளைக் கண்டித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் | படம்: ம.பிரபு
நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் வெற்றிவேல் எம்எல்ஏ ஆகியோரின் செயல்பாடுகளைக் கண்டித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் | படம்: ம.பிரபு
 
 

வாரிசு அரசியலை சசிகலா உருவாக் கியதை நாங்கள் ஏற்கவில்லை. எனவேதான் நாங்கள் புறக்கணிக் கிறோம் என்று அதிமுகவில் முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையில் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுகவில் 3 அணிகள் உருவாகி, ஒருவரை ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதில் சமீபகாலமாக, ஓபிஎஸ் அணியை தவிர்த்து தினகரன் மற்றும் முதல்வர் கே.பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுகவில் சசிகலாவை ஒதுக்கிவைத்த பின்னணியையும் தற்போது எம்எல்ஏக்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர். நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் இடையில், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது முருகுமாறன் கூறியதாவது:

சமீபத்தில் நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை, சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்தார். அப்போது பத்திரிகையால் முகத்தை மறைத்தபடி சென்றுவந்தார். அவரிடம் இது தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி, “தங்கள் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் உள்ளதா?” என்று கேட்டார். ஆனால், அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக தெரிவித்தார்.

அதன்பின், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இக்கூட்ட முடிவில், பிரதமர் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக முதல்வர் அறிவித்தார். அப்போது பொதுச் செயலாளரிடம் கேட்டுத்தான் அறிவிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால், முதல்வரை தம்பிதுரை அழைத்துச் சென்றுவிட்டார். ஆனால், சில தினங்களில், டெல்லியில் பொதுச் செயலாளரும், முதல்வரும் சேர்ந்துதான் முடிவெடுத்ததாக தம்பிதுரை தெரிவித்தார்.

அவரது இந்த இரட்டை நிலை அறிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தோம். இக்கருத்தை தவறாக புரிந்துகொண்ட எம்எல்ஏ வெற்றிவேல், ‘எங்களுக்கு கட்சி விதிகள் தெரியாது’ என்று கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மாவட்டச் செயலாளராக இருந்த அவர், பொதுச் செயலாளர் படம், பெயரைக் குறிப்பிடாதது ஏன்? கட்சியின் நலன் சார்ந்துதான் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பொதுச் செயலாளரை பொது உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதுகூட தெரியாமலா நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த அடிப்படையில் அவர்கள் கூறும் பொதுச் செயலாளர் பெயரை, துணைப் பொதுச் செயலாளர், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படுத்தவில்லையோ அதே அடிப்படையில்தான் நாங்களும் புறக்கணிக்கிறோம். நாங்கள் கட்சிக்கு பொதுச் செயலாளர் இல்லை என்று கூறவில்லை. இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆர் தனக்குப் பின் மனைவியையோ, அண்ணன் மகன், பேரப் பிள்ளைகளையோ வாரிசாக அறிவிக்கவில்லை. ஜானகியும் கட்சியை வழிநடத்தும் தகுதி கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதாவிடம் இருப்பதாக அவரிடம் ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்.

அதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் தன் உறவினர்களை கட்சிக்கு கொண்டுவரவில்லை. அதே நேரம், 33 ஆண்டுகளால் குடும்பத்தை விடுத்து உடன் இருந்த சசிகலாவை பொதுச் செயலாளராக நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டோம். ஆனால், அவருக்கு இடையூறு ஏற்பட்ட காலத்தில் கட்சியின் தொண்டர்களில் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால், வாரிசு அரசியலை சசிகலா ஏற்படுத்தியதைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/தினகரன்-அணியுடன்-மோதல்-முற்றுகிறது-வாரிசு-அரசியலை-சசிகலா-உருவாக்கியதை-ஏற்க-மாட்டோம்-முதல்வர்-பழனிசாமி-ஆதரவு-எம்எல்ஏக்கள்-திட்டவட்டம்/article9740658.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.