Jump to content

வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை


Recommended Posts

வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை 

 


வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை 
 

தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே வட மாகாண சபையைக் குழப்ப முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் இடம்பெறும் விடயங்களுக்கும் தெற்கு அரசியலுக்குமிடையிலான தொடர்பு குறித்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வட மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு, அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம் அதனைச் செய்யாது காலத்தினை இழுத்தடிப்பதாக சி.வி.விக்னேஷ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தேச அரசியல் அமைப்பில் தமிழர் தரப்புக்கு அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்காத விதத்தில் மாற்றங்களை உள்ளடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான அதிகாரப் பகிர்வினை தமிழர் தரப்பு எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அவற்றினை வழங்காது ஒரு அரைகுறைத் தீர்வினைத் திணிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருவதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சில தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் அரசின் இந்தப் போக்கிற்கு ஆதரவளித்து வருவதுடன் மக்களுக்கு இது தொடர்பிலான விடயங்களைத் தெளிவுபடுத்தாது மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேல் எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது என்று சிலர் கூறி வருவது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/06/106490/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நவீனன் said:

வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை 

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இலங்கை தமிழின அரசியலுக்கு ஆப்பு வைப்பது தெற்கு அரசியல் தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கிந்தியர்களுக்கு ஏதும் தொடர்பு இல்லாது மாறி போஸ்ட் போடுவது எனக்கும் வருத்தமளிக்கிறது தோழர்கள் !! :cool:

Link to comment
Share on other sites

அனா உனா என்றவுடன் சிறிலங்கா அரசு சதி, சிறிலங்கா புலனாய்வுத்துறை சதி. கொஞ்சம் சென்றால் இந்திய உளவுத்துறை றோ சதி என்று கூறி தப்பிப்பதே எமக்கு பழக்கமாகி விட்டது.

எமக்குள் ஒற்றுமை இருந்தால் மற்றவர்கள் ஏன் புகுந்து குழப்பங்களை உருவாக்கப் போகின்றனர்?

முதலில் பிற தமிழ்க் கட்சிகளை தமிழரசுக் கட்சி மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். 

தமிழரசுக் கட்சி ஏதேச்சதிகாரமாக நடந்து கொண்டால் அடுத்த தேர்தலில் பெருமளவு ஆசனங்களை இழக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nirmalan said:

அனா உனா என்றவுடன் சிறிலங்கா அரசு சதி, சிறிலங்கா புலனாய்வுத்துறை சதி. கொஞ்சம் சென்றால் இந்திய உளவுத்துறை றோ சதி என்று கூறி தப்பிப்பதே எமக்கு பழக்கமாகி விட்டது.

எமக்குள் ஒற்றுமை இருந்தால் மற்றவர்கள் ஏன் புகுந்து குழப்பங்களை உருவாக்கப் போகின்றனர்?

முதலில் பிற தமிழ்க் கட்சிகளை தமிழரசுக் கட்சி மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். 

தமிழரசுக் கட்சி ஏதேச்சதிகாரமாக நடந்து கொண்டால் அடுத்த தேர்தலில் பெருமளவு ஆசனங்களை இழக்க வேண்டி வரும்.

தமிழரசுக்கட்சி இழக்க வேண்டி வாற பெருமளவு ஆசனங்கள் எங்கை? ஆரோடை போய் சேரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழரசுக்கட்சி இழக்க வேண்டி வாற பெருமளவு ஆசனங்கள் எங்கை? ஆரோடை போய் சேரும்?

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, MEERA said:

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

பிறகென்ன வெற்றி தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, MEERA said:

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

 

3 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன வெற்றி தானே.

விக்கி ஐயா இப்பவே சொல்லிட்டார்
மக்களை இறைவன் காப்பாற்றுவார்

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

முஸ்லிம் , அவர்களை மறந்து விட்டீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதில் கிந்தியர்களுக்கு ஏதும் தொடர்பு இல்லாது மாறி போஸ்ட் போடுவது எனக்கும் வருத்தமளிக்கிறது தோழர்கள் !! :cool:

சரி... தோழரே.... இந்த, சிற்று வேஷன்  சாங்கை  கேளுங்களேன்.

 

Link to comment
Share on other sites

வட­மா­கா­ண ­ச­பையை குழப்­பு­வதன் மூலம் தமிழ் மக்­களின் கவ­னத்தை திருப்ப முயற்சி

p21-38766484341d0f2d5bbc5b6f280146b58d1a0e77.jpg

 

அர­சாங்­கமும் அவர்­க­ளோடு இயங்கும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முஸ்­தீபு என்­கிறார் முதல்வர் சி.வி. 
(நமது நிருபர்)

வட­மா­கா­ண­ச­பை­யி­னையும் அதன் செயற்­பா­டு­க­ளையும் திட்­ட­மிட்ட வகையில் குழப்­பு­வதன் மூலம் தமிழ் மக்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்­பு­வ­தற்கு அர­சாங்­கமும் அவர்­க­ளோடு சேர்ந்து இயங்­கு­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முனை­கின்­றனர். இது தொடர்பில் தமிழர் தரப்பு விழிப்­ப­டைதல் அவ­சி­ய­மா­ன­தாகும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி. வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.  

வட­மா­கா­ண­ச­பையில் இடம்­பெறும் சம்­ப­வங்­க­ளுக்கும் தெற்கின் அர­சி­ய­லுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்­குமா என்று முத­ல­மைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இது­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:- 

 வடக்கு மாகா­ண­ச­பை­யி­னையும் அதன் செயற்­பா­டு­க­ளையும் திட்­ட­மிட்ட வகையில் குழப்­பு­வதன் மூலம் தமிழ் மக்­களின் கவ­னத்­தினைத் திசை திருப்­பு­வ­தற்கு அர­சாங்­கமும் அவர்­க­ளோடு சேர்ந்து இயங்­கு­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முனைந்து வரு­கின்­றார்­களோ என்று எண்ண வேண்­டி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தி­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தீர்­வினைப் பெற்றுத் தர வேண்­டிய அர­சாங்கம் அதனைச் செய்து முடிக்­காது காலத்­தினை இழுத்­த­டித்து வரு­வ­தோடு உத்­தேச அர­சியல் அமைப்பில் தமிழர் தரப்­புக்கு அதி­கா­ரங்­களை முழு­மை­யாகப் பகிர்ந்­த­ளிக்­காத விதத்தில் மாற்­றங்­களை உள்­ள­டக்கும் செயற்­பாட்­டிலும் ஈடு­பட்டு வரு­கின்­றது. இதி­லி­ருந்து தமி­ழர்­க­ளு­டைய கவ­னத்­தினைத் திசை திருப்­பு­வ­தற்­கா­கவே அவர்கள் வட­மா­காண சபை­யினைக் குழப்ப முனை­கின்­ற­னரோ என்ற சந்­தேகம் எம்முள் பல­ரிடம் எழும்­பு­கின்­றது.

சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஆட்சி அதி­காரம், வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்­பட பல்­வேறு ஆக்க பூர்­வ­மான அதி­காரப் பகிர்­வினை தமிழர் தரப்பு எதிர்­பார்த்­துள்ள வேளையில் அவற்­றினை வழங்­காது ஒரு அரை­குறைத் தீர்­வினைத் திணிப்­ப­தற்கு அரச தரப்பு முயன்று வரு­கின்­றது. இவ்­வி­ட­யங்­களைக் கையாளும் குறித்த சில தமிழ்த் தரப்பு அர­சி­யல்­வா­திகள் அரசின் இந்தப் போக்­கிற்கு ஆத­ர­வ­ளித்து வரு­வ­துடன் மக்­க­ளுக்கு இது தொடர்­பி­லான விட­யங்­களைத் தௌிவு­ப­டுத்­தாது மூடு மந்­திரம் போன்று அவற்றைக் கையாண்டு வரு­கின்­றனர். 13வது திருத்தச் சட்­டத்­திற்கு மேல் எத­னையும் தமிழ் மக்கள் எதிர்­பார்க்க முடி­யாது என்று சிலர் கூறி வரு­வது சந்­தே­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­கின்­றது.

இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் தமிழ் மக்­க­ளு­டைய கவ­னத்­தினைத் திசை­தி­ருப்பும் முக­மாக நன்கு திட்­ட­மிட்ட வகையில் வட­மா­கா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் தொடர்ச்­சி­யாகக் குழப்­பங்­களை உரு­வாக்கி தமிழ் மக்­க­ளையும் தமிழ் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் எனது கவ­னத்­தி­னையும் திசை­தி­ருப்ப அரசும் அவர்­க­ளுக்குச் சார்­பான சில தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முயன்று வரு­கின்­றனர் என்றே தோன்­று­கின்­றது. இதன் ஒரு அங்­க­மாக வட­மா­கா­ண­ச­பையின் உறுப்­பி­னர்கள் சிலரை பயன்­ப­டுத்தி வட­மா­கா­ண­ச­பையில் தொடர்ச்­சி­யான குழப்­பத்­தினை உரு­வாக்கி வரு­கின்­றனர். எனவே இது தொடர்பில் தமிழர் தரப்பு விழிப்படைதல் அவசியமானது. உத்தேச அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது பற்றி மக்கள் கவனம் செலுத்துதல் அவசியமானது. இல்லாதுபோயின் எமது கவனத்தினைத் திசைதிருப்பி வைத்துக்கொண்டு தாம் நினைத்ததை நிறைவேற்ற முனையும் சக்திகளுக்கு அது வாய்ப்பாக அமைந்து விடும். இத்தருணத்தில் எம்மிடையே விழிப்பு அவசியம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-29#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.