Jump to content

புதிய அரசியல் சக்தி வெறும் மாயை


Recommended Posts

புதிய அரசியல் சக்தி வெறும் மாயை

 
புதிய அரசியல் சக்தி வெறும் மாயை
 

வடக்­கில் புதி­ய­தொரு அர­சி­யல் சக்தி உரு­வா­கி­யுள்­ள­தா­க­வும்், வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ் வரனே அதற்­குத் தலைமை தாங்­கு­வ­தற்­கான முழுத் தகு­தி­க­ளை­யும் கொண்­டி­ருக்கிறார் என்றும், அண்­மைக் கால­ மா­கச் சில­ரால் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கூட்­ட­மைப்­பின் ஒரு பங்­கா­ளிக் கட்­சி­யா­னஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலை­வ­ரான சுரேஷ் பிரேச்­சந்­தி­ரன் புதிய அர­சி­யல் சக்­தி­யொன்று உரு­வா­கி­யுள்­ளதை ஏற்­றுக் கொண்­டார். ஆனால் அதற்கு விக்­னேஸ்­வ­ ரன் தலைமை ஏற்­பது தொடர்­பாக மழுப்­ப­லான பதி­வையே வழங்­கி­யுள்­ளார்.

இத­னால் புதிய தலைமை தொடர்­பாக அவர் எந்த வித­மான எண்­ணப்­பாட்­டை­யும் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது.
ஓர் இனத்­துக்­குத் தலைமை தாங்­கக் கூடிய ஒரு­வர், ஒரே யொரு இர­வி­லே உரு­வா­கி­விட முடி­யாது. மக்­க­ளும் அதை ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­கள்.

இன்­றைய நிலை­யில் தமிழ் மக்­க­ளி­டையே புதி­ய­தொரு அர­சி­யல் சக்­தி­உ­ரு­வா­கி­யுள்­ள­தாக எந்த அடிப்­ப­டை­யில் கூறு­கின் றார்­கள் என்­பது புரி­ய­வில்லை.

இது சில­ரின் கற்­ப­னை­யில் உரு­வா­ன­தொன்­றா­க­வும் இருக்­க­லாம். ஆனால் தமிழ் மக்­கள் தமது அர­சி­யல் கொள்­கை­யில் உறு­தி­யா­கவே உள்­ள­னர். கோயில் திரு­வி­ழாக்­க­ளின்­போது சிலர் தற்கா­லி­கக் கடை­க­ளைப் பரப்பி வியா­பா­ரத்­தில் ஈடு­ப­டு­வார்­கள். திரு­விழா முடிந்­த­தும் அவர்­க­ளைக் காணவே முடி­யாது. பின்­னர் அடுத்த திரு­வி­ழா­வின் போது­தான் அவர்­க­ளைக் காண முடி­யும்.

இவ்­வா­று­தான் சில­ரது அர­சி­யல் வியா­பா­ரம் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. இத்­த­கை­ய­வர்­கள் புதிய அர­சி­யல் சக்தி, புதிய அர­சி­யல் தலைமை என்­றெல்­லாம் புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

தற்­போது தமிழ் மக்­க­ளின் மிகப் பெரிய அர­சி­யல் சக்­தி­யா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு விளங்­கு­கின்­றது. இரா.சம்­பந்­தன் அதன் தலை­வ­ரா­கப் பதவி வகிக்­கின்­றார். நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் அவர்­தான்.

சி.வி.விக்­னேஸ்­வ ­ரன் கொழும்­பில் இருந்து நேர­டி­யாக வட­ப­கு­திக்கு வந்து அர­சி­ய­லில் ஈடு­ப­டும் வரை­யில் மாற்­றுத் தலைமை தொடர்­பாக எந்­தச் சிந்­த­னை­யும் இங்கு எழ­வில்லை. ஆனால் அவ­ரைக் கண்­ட­தும் கூட்­ட­மைப்­புக்­கும் தமி­ழ­ர­சுக் கட்­சிக்­கும் எதி­ரான சக்­தி­கள் காணா­த­தைக் கண்டு விட்­டது போன்று கிளர்ந்­தெ­ழுந்­தன.

விக்­னேஸ்­வ­ர­னைக் கொண்டே தமது நோக்­கத்தை நிறை ­வேற்­றிக்கொள்ள முடி­யு­மெ­னத் தீர்­மா­னித்­துக் கொண்­டன. இங்­குள்ள சில ஊட­கங்­க­ளும் இதற்­குப் பக்­கப்­பாட்­டுப் பாடின. இந்த உல­கி­லேயே எங்­கும் காண­மு­டி­யாத தலை­வர் இவர் தானெ­னப் புகழ்ந்து தள்­ளின. விக்­னேஸ்­வ ­ர­னும் இதில் மயங்­கா­மல் இல்லை. தன்­னிலை மறந்து புகழ்ச்­சி­யான வார்த்­தை­க­ளால் மயங்­கிப்­போ­னார். தாம் இருக்­கின்ற இடத்­தை­யும் மறந்­தார்.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் ஆளு­ந­ரி­டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­னர், கூட்­ட­மைப்­புக்­கும் தமி­ழ­ர­சுக் கட்­சிக்­கும் எதி­ரான நட­வ­டிக்­கை­கள் பல்­வேறு வடி­வங்­க­ளில் இடம்­பெற்­றன. ஆனால் இவற்­றில் ஈடு­பட்­ட­வர்­கள் முத­ல­மைச்­ச­ரும் கூட்­ட­மைப்­பை­யும், தமி­ழ­ர­சுக் கட்­சி­யை­யும் சேர்ந்­த­வர் என்­பதை ஏனோ மறந்து விட்­டார்கள். வின்­னேஸ்­வ­ர­னும் அராக் காட்­டிக் கொள்­ள­வில்லை. அவர் மதில்­மேல் பூனை­யின் நிலை­யில் இருந்­து­கொண்டு சக­ல­தை­யும் அவ­தா­னித்­துக் கொண்­டி­ருந்­தார்.

வடக்கு மாகா­ண­ச­பை­யில் வீசிய புயல் சற்று ஓய்ந்­தது போன்று காட்­சி­ய­ளிக்­கின்­றது. ஆனால் மற்­று­மொரு புயல் வட­ப­கு­தி­யில் மையம்­கொள்ள மாட்­டாது என்­ப­தற்கு எந்­த­வி­த­மான உத்­த­ர­வா­தத்­தை­யும் வழங்க முடி­யாது. ஏனென்­றால் மக்­க­ளின் உணர்ச்­சி­க­ளைத் தூண்­டி­விட்டு அர­சி­யல் இலா­பம் தேடு­வ­தற்­குச் சிலர் முய­ லு­கின்­ற­வ­ரை­யில் பிரச்­சி­னை­ கள் இங்கு தொட­ரத்­தான் போகின்­றன.

வடக்­கின் முத­ல­மைச்­சரை மைய­மா­கக்­கொண்டு புதிய அர­சி­யல் தலை­மையை உரு­வாக்க நினைப்­ப­வர்­கள் முத­லில் அதற்­கான அர­சி­யல் சக்­தியை இனம் காண வேண்­டும் அந்த அர­சி­யல் சக்­தியை மக்­கள் ஏற்­றுக் கொள்­வார்­களா? என்­ப­தை­யும் கண்­ட­றிய வேண்­டும் இவை­யெல்­லா­வற்­றை­யும் உறு­தி­செய்த பின்­னரே தலைமை தொடர்­பாக முடிவு செய்து கொள்­ள­லாம். இதை­வி­டுத்து அங்­கொரு காலும், இங்­கொரு காலு­மா­கத் தள்­ளா­டிக் கொண்­டி­ருக்­கும் விக்­னேஸ்­வ­ர­னுக்கு வலை வீசிக்­கொண்­டி­ருப்­பது எந்த வகை­யி­லம் அர­சி­யல் நாக­ரி­க­மா­காது.

அதே­வேளை வடக்கு முதல்­வ­ரும் இரண்டு தோணி­க­ளில் ஒரே வேளை­யில் பய­ணிப்­பது ஆபத்­தா­னது என்­பதை இப்­போ­தாது புரிந்­து­கொள்ள வேண்­டும்.

ஒன்­றில் அவர் இங்கே இருக்க வேண்­டும் அல்­லது அங்கே சென்று விட வேண்­டும். அதை­வி­டுத்து தமக்கு ஆத­ரவு தந்து பத­வி­யில் அமர்த்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் கள்­ளத் தொடர்­பு­க­ளைக் கொண்­டி­ருப்­பது அவர் முன்­னர் வகித்த பத­விக்கு இழுக்­கையே தரும்.

இன்­றைய சூழ்­நி­லை­யில் விழிப்­பு­டன் இருக்க வேண்­டி­ய­வர்­கள் மக்­கள்­தான். புதிய அர­சி­யல் சக்தி என்­பது வெறும் மாயை என்­பதை முத­லில் இவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். அத்­து­டன் பகட்டு வார்த்­தை­க­ளுக்கு இவர்­கள் மயங்­கி­வி­டாது யதார்த்­தத்­தைப் புரிந்­து­கொண்டு செயற்­பட வேண்­டும்.

http://uthayandaily.com/story/8139.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.