Jump to content

ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன?


Recommended Posts

ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன?

மோடி

உலக அரசியல் வரலாற்றில் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதாகத்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ட்ரம்ப் புகழ்ந்ததும், அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே.

அமெரிக்காவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்றனர். பின்பு பேசிய ட்ரம்ப் 'மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். இந்தியாவை அவர் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்' என்று மோடிக்குப் புகழாரம் சூட்டினார்.

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியைச் சந்தித்த மோடி, அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பிரத்யேகமாகக் கொண்டுசென்ற பரிசுகளை வழங்கினார். ஹிமாச்சல் சில்வர் பிரேஸ்லெட், காங்க்ரா வாலி தேயிலை, தேன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி சால்வைகள் ஆகியவை மோடி வழங்கிய பரிசுப்பொருள்களில் அடங்கும்.

"உலகளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும். பயங்கரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் முழுமூச்சுடன் இணைந்து பணியாற்றும். ராணுவரீதியாகவும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என்று மோடியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் ட்ரம்ப் தெரிவித்தார்.

மோடி - ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றுள்ளது. இதில் 20 நிமிடம் இருவரும் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். சந்திப்பின்போது, இருவரும் பல்வேறு முக்கியமான பிரச்னைகள் குறித்து பேச்சுகள் நடத்தியதாகத் தெரிகிறது.

மோடி

ட்ரம்ப் - மோடி சந்திப்பு ட்விட்டர் டைம் லைன்:

ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப், ''பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறோம்" என்று ட்விட்டரில் பதிவிட்டார். அதை மோடி ரீ-ட்வீட் செய்தார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களான @FLOTUS மற்றும் @POTUS-ஐ குறிப்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். 

'இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது' என மோடி தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

India & USA are global engines of growth. @POTUS & I discussed ways to strengthen the economic & trade relationship between our nations.

 
 

ட்ரம்ப் உடன் தனியான சந்திப்பில் இருதரப்பு வர்த்தகம், தீவிரவாதம் குறித்து பேசப்பட்டது. 'இது, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

During our talks, @POTUS and I discussed the menace of terrorism as well as the need to uproot all forms of terrorism.

 
 

ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகள் தொடர்பான படத்தை மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Areas where India-USA cooperation can scale up even further include maritime economy, technology, innovation & the knowledge economy.

 
 

பின்பு மோடி, ட்ரம்ப், மெலனியா ஆகியோர் சந்தித்தது குறித்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

Was deeply touched by your warmth, energy and positivity, and also by your personal gestures. @POTUS @FLOTUS

 
 

இந்தியா - அமெரிக்கா இடையேயான உத்திகள் தொடர்பான சிறந்த பேச்சுவார்த்தையாக இது அமைந்தது என்று பதிவிட்டு சந்திப்பு தொடர்பான ட்வீட்களை நிறைவு செய்தார் மோடி.

கைகுலுக்கத் தெரியாத மோடி, ட்ரம்ப்:

மோடி, ட்ரம்ப் இருவருமே விஐபி-களுடன் கைகுலுக்குவதில் சொதப்புவார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியபின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் கைகுலுக்கும் நேரத்தில் சிறு தடங்கல் ஏற்பட, பின்பு இருவரும் சுதாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கைகொடுத்தனர். 

சமூக வலைதளங்களில் Modi-Trump என்ற வார்த்தை ட்ரெண்டானது. இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அமைந்தது. ட்ரம்ப்பை இந்தியா வருமாறு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 

Posted Date : 11:09 (28/06/2017)
Last updated : 11:45 (28/06/2017)
  •  
  •  
  •  

ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன?

மோடி

உலக அரசியல் வரலாற்றில் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதாகத்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ட்ரம்ப் புகழ்ந்ததும், அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே.

அமெரிக்காவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்றனர். பின்பு பேசிய ட்ரம்ப் 'மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். இந்தியாவை அவர் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்' என்று மோடிக்குப் புகழாரம் சூட்டினார்.

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியைச் சந்தித்த மோடி, அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பிரத்யேகமாகக் கொண்டுசென்ற பரிசுகளை வழங்கினார். ஹிமாச்சல் சில்வர் பிரேஸ்லெட், காங்க்ரா வாலி தேயிலை, தேன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி சால்வைகள் ஆகியவை மோடி வழங்கிய பரிசுப்பொருள்களில் அடங்கும்.

"உலகளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும். பயங்கரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் முழுமூச்சுடன் இணைந்து பணியாற்றும். ராணுவரீதியாகவும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என்று மோடியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் ட்ரம்ப் தெரிவித்தார்.

மோடி - ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றுள்ளது. இதில் 20 நிமிடம் இருவரும் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். சந்திப்பின்போது, இருவரும் பல்வேறு முக்கியமான பிரச்னைகள் குறித்து பேச்சுகள் நடத்தியதாகத் தெரிகிறது.

மோடி

ட்ரம்ப் - மோடி சந்திப்பு ட்விட்டர் டைம் லைன்:

ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப், ''பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறோம்" என்று ட்விட்டரில் பதிவிட்டார். அதை மோடி ரீ-ட்வீட் செய்தார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களான @FLOTUS மற்றும் @POTUS-ஐ குறிப்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். 

'இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது' என மோடி தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

India & USA are global engines of growth. @POTUS & I discussed ways to strengthen the economic & trade relationship between our nations.

 
 

ட்ரம்ப் உடன் தனியான சந்திப்பில் இருதரப்பு வர்த்தகம், தீவிரவாதம் குறித்து பேசப்பட்டது. 'இது, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

During our talks, @POTUS and I discussed the menace of terrorism as well as the need to uproot all forms of terrorism.

 
 

ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகள் தொடர்பான படத்தை மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Areas where India-USA cooperation can scale up even further include maritime economy, technology, innovation & the knowledge economy.

 
 

பின்பு மோடி, ட்ரம்ப், மெலனியா ஆகியோர் சந்தித்தது குறித்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

Was deeply touched by your warmth, energy and positivity, and also by your personal gestures. @POTUS @FLOTUS

 
 

இந்தியா - அமெரிக்கா இடையேயான உத்திகள் தொடர்பான சிறந்த பேச்சுவார்த்தையாக இது அமைந்தது என்று பதிவிட்டு சந்திப்பு தொடர்பான ட்வீட்களை நிறைவு செய்தார் மோடி.

கைகுலுக்கத் தெரியாத மோடி, ட்ரம்ப்:

மோடி, ட்ரம்ப் இருவருமே விஐபி-களுடன் கைகுலுக்குவதில் சொதப்புவார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியபின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் கைகுலுக்கும் நேரத்தில் சிறு தடங்கல் ஏற்பட, பின்பு இருவரும் சுதாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கைகொடுத்தனர். 

சமூக வலைதளங்களில் Modi-Trump என்ற வார்த்தை ட்ரெண்டானது. இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அமைந்தது. ட்ரம்ப்பை இந்தியா வருமாறு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 

 

ட்ரம்ப் - மோடி சந்திப்பின் முக்கிய நோக்கமே, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்புடன் தொடர்புடையதாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருவருமே தங்களின் அதிரடித் திட்டங்கள் மூலம் அவரவர் நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்குவது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகப் பரவின. இந்தப் பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்றார்.

http://www.vikatan.com/news/india/93588-highlights-of-trump---modi-meet-in-us.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.   அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.   அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.   சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.   ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார்.   இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம்.  இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம்.   
    • உண்மை தான். ஆனால் இதில் முதலிட்டவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை. இதில் பல கோடி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வாழ்வு இருக்கிறது. இதை உணர்ந்து தான் புட்டினும் நரித்தனம் செய்தார். 
    • இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம்  உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல்  இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று  Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட)  இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made
    • ஹா ஹா அதெல்லாம் அந்த‌க் கால‌ம் இப்ப‌ கூட‌ இவ‌ரின் பெய‌ரை சொன்னால் சில‌ இட‌ங்க‌ள் அதிரும் லொல்🙏🥰.................................. ஓ மோம் உந்த‌ பெரிசுக்கு குசும்பு அதிக‌ம் தான்.........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.