Jump to content

‘பொதுச் செயலாளர் நானா? தினகரனா?’ - சிறையில் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive


Recommended Posts

‘பொதுச் செயலாளர் நானா? தினகரனா?’ - சிறையில் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive

 

சசிகலா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது?’ என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது. ‘தினகரனின் செயல்பாடுகளால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ‘இனியும் தினகரனுக்காக அணி திரட்டும் வேலைகளைத் தொடங்கினால், விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்' என நிர்வாகிகளிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

‘பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை, கட்சிப் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது. கட்சியின் தலைமைப் பதவியில் அவர்தான் இருக்கிறார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்' என நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அதேநேரம், எம்எல்ஏ-க்களில் ஒரு சிலரும் தினகரனை தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர். இன்று காலை நெல்லை மாவட்ட எம்.பி பிரபாகரன், தினகரனை சந்தித்துப் பேசினார். “எம்.பி-க்கள் அன்வர் ராஜா, பிரபாகரன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர், தினகரனை சந்திப்பதற்குக் காரணம், இந்த மாவட்டங்களில் சசிகலா சமூகத்துக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகள் அதிகம் இருப்பதுதான். இந்த மாவட்டங்களில் உள்ள சாதிரீதியான செல்வாக்கை மனதில் வைத்துக் கொண்டே, அவர்கள் சசிகலா குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். ஆனால், இதுபோன்ற சந்திப்புகள் நடப்பதை சசிகலா ரசிக்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர், 

தினகரன்“சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற நாளில் இருந்தே, கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைகளில் தினகரன் இறங்கிவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா பெயரை தினகரன் தரப்பினர் இருட்டடிப்பு செய்தனர். தேர்தல் பிரசாரத்தின் எந்த இடத்திலும் சசிகலா என்ற பெயரை தினகரனும் அமைச்சர்களும் உச்சரிக்கவில்லை. இந்தக் கோபம் இன்னும் சசிகலாவிடம் இருந்து மறையவில்லை. ‘ஜெயலலிதா இறந்தபோது, உடைந்து போக இருந்த கட்சியை நான்தான் ஒற்றுமையோடு வழிநடத்தினேன். இதை டெல்லியில் விரும்பாததால்தான், நான் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் இல்லாவிட்டால், கட்சி பல துண்டுகளாக உடைந்து சிதறியிருக்கும். அனைவரையும் அரவணைத்துக் கொண்டு தினகரன் வழிநடத்துவார் என்றுதான் நம்பினேன். இந்தளவுக்குச் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை’ என அப்போதே வேதனையை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்பது குறித்து, சசிகலாவிடம் பேசி முடிவு செய்தோம்’ எனப் பேட்டி அளித்தார் தம்பிதுரை. தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களில் சிலர் தனி அணியாக உருவாகி, ‘கட்சியின் துணைப் பொதுச் செயலாளரிடம் பா.ஜ.க தலைமை பேசினால், ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்போம்' என நேரடியாகப் பேசியுள்ளனர். இதனை பா.ஜ.க தலைமை ரசிக்கவில்லை. இதைப் பற்றி தம்பிதுரையிடம் அவர்கள் பேசியுள்ளனர். அவரும் சசிகலாவின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். ‘நான் சொல்லும் வரையில் எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம்' என தினகரனிடம் கண்டிப்புடன் கூறிவிட்டார் சசிகலா.

தம்பிதுரைஇதன் பின்னரும் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் தினகரன் ஆதரவு மனநிலையில் பேசி வந்தனர். ‘தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது நல்லது அல்ல’ என குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு சிறையில் சசிகலாவை சந்திக்கச் சென்றிருக்கிறார் அ.தி.மு.க பேச்சாளர் ஒருவர். அவரிடம் பேசிய சசிகலா, ‘தினகரனுக்கு ஆள் திரட்டும் வேலைகளில் ஈடுபட்டால், நான் வேறு மாதிரி செயல்பட வேண்டியது வரும். கட்சிக்கு நான் பொதுச் செயலாளரா? தினகரன் பொதுச் செயலாளரா? எங்கு மேடை கிடைத்தாலும், இப்படித்தான் பேசுவீர்களா? இனியும் தினகரனுக்கு ஆதரவாக அணி திரட்டும் வேலைகளில் இறங்கினால், கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன். எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்' எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்த அதிரடிக்குப் பிறகு, தினகரன் புகழ்பாடுவதை பேச்சாளர்கள் குறைத்துக் கொண்டுவிட்டனர். கட்சியில் நடக்கும் நிலவரங்களையும் அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்" என்றார் விரிவாக. 

 

“தினகரனுக்கு எதிராக சசிகலா இந்தளவுக்குக் கோபத்தை வெளிப்படுத்துவதற்குக் காரணமே, அவருடைய குடும்ப உறவுகள்தான். தினகரனின் தன்னிச்சையான செயல்பாடுகளும் இளவரசி குடும்பத்து உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் அவருடைய கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறது. ‘கட்சியின் முழு அதிகாரமும் உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் வெளியில் வரும்போது, அந்த அதிகாரம் தொடர வேண்டும் என நினைக்கிறோம். தினகரனை இனியும் செயல்பட அனுமதித்தால், பொதுச் செயலாளர் பதவியும் கையைவிட்டுப் போய்விடும். நாங்களும் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். பணத்தை வைத்து மொத்த எம்எல்ஏ-க்களையும் விலை பேசிவிடுவார்’ என எச்சரித்துள்ளனர். இதன்பிறகே, தினகரன் ஆதரவு நிர்வாகிகளிடம் கடுமையைக் காட்டினார் சசிகலா” என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/93633-who-is-the-general-secretary-of-admk---me-or-ttv-dinakaran---sasikala.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.