Jump to content

கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்?


Recommended Posts

கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்?

 
Graham Ford and Sangakkara
Davis-Cup-2017-728-banner.jpg

ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக மாறிய விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்த இரு கிரிக்கெட் வீரர்களில் டேரன் லீமன் மற்றும் ஜெஃப் மார்ஷ் காணப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜெஃப் மார்ஷை எவ்விதமான பாரபட்சமின்றி 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையானது பணிநீக்கம் செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டி இருந்தமையே இதற்கான காரணமாக கூறப்பட்டது. எனினும் இதை ஏற்காத ஜெஃப் மார்ஷ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் அதில் வெற்றி பெற்றதனால், இலங்கை கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய இழப்பீடு ஒன்றை வழங்க நேரிட்டது.

அதேபோன்று முன்னாள் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சந்திக்க ஹத்துருசிங்கவையும் அப்பதவியிலிருந்து தூக்கி எறிந்திருந்தது. அதிலிருந்து இலங்கை கிரிக்கெட் சபையின் நன்மதிப்புகள் குறைத்திருந்தது. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்டீவ் ரிக்ஸ்ன் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தார். எனினும், முன்னாள் அவுஸ்திரேலிய  விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான  ஸ்டீவ் ரிக்ஸ்ன் இலங்கை கிரிக்கெட் சபை தொழில்முறை நிபுணத்துவ மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக குறை கூறியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபை எனக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அனுப்பியது, உண்மையில் அது மிகவும் சங்கடமாக இருந்தது, ஏனினில் மிகவும் மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது, என்று ஸ்டீவ் ரிக்ஸ்ன் குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து 2015ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற எந்தவொரு பயிற்றுவிப்பாளரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்ற முன்வரவில்லை. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையானது, முன்னாள் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரான கிரஹாம் போர்ட்டை  இலக்கு வைத்தது. 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்த கிரஹாம் போர்ட் குறித்த ஒப்பந்தத்தின் முடிவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் மீண்டுமொருமுறை வழங்கப்பட்ட வாய்ப்பினை நிராகரித்திருந்தார்.

தற்போது குமார் சங்கக்கார விளையாடி வரும் இங்கிலாந்து உள்ளூர் கழகமான சர்ரே அணியில் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்ட கிரஹாம் போர்ட் அவ்வணியை டிவிஷன் 1 இற்கு தரமுயர்த்த தனது அயராத பங்களிப்பை வழங்கியிருந்த அதேநேரம் குறித்த பதவியில் முழு திருப்தியுடன் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் எப்படியாவது இலங்கை பயிற்றுவிப்பாளராக கிரஹாம் போர்ட்டை இணைத்துவிட வேண்டும் என்று எண்ணிய இலங்கை கிரிக்கெட் சபை முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவை நாடியது. ஏனெனில்,  கிரஹாம் போர்ட் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரிடையே சிறந்த நட்பு ரீதியிலான உறவொன்று இருந்தது. இடது கை துடுப்பாட்ட வீரரான சங்கக்கார தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த  கிரஹாம் போர்ட்டின் பரந்த அறிவு, உண்மை மற்றும் அவரது அயராத உழைப்புக்கு பெரிதும் மதிப்பளித்திருந்தார். அது மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சராசரியாக 36 ஓட்டங்கள் மற்றும் 12 சதங்களை மாத்திரமே பதிவு செய்திருந்த குமார் சங்கக்கார கிரஹாம் போர்ட்டின் வருகைக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளின் சராசரி 55 இற்கும் மேல் உயர்ந்ததோடு மேலும் 13 சதங்களை விளாசியிருந்தார். அத்துடன், இலங்கை அணி சார்பாக ஒருநாள் போட்டி வரலாற்றில் கிரிக்கெட் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட சிறந்த சராசரியாக, சங்கக்கராவின் சராசரி (41.98) அமைந்தது.

2013ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 169 ஓட்டங்களை பதிவு செய்த குமார் சங்கக்கார, ”தனது வெற்றிகரமான துடுப்பாட்டத்துக்கு கிரஹாம் போர்ட்டின் சிறந்த பயிற்சிகளே காரணமாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். மிகவும் வற்புறுத்தி கடுமையான பயிற்சிகள் வழங்கினார். ரிவர்ஸ் ஸ்வீப் (Reverse sweep) மற்றும் படல் ஸ்வீப் (Padal Sweep) முறைகளை மிகவும் நுணுக்கமான முறையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களை பயிற்சிகளின் போது அற்புதமாக விளக்கி பல புதிய நுணுக்கங்களை எங்களுடைய துடுப்பாட்ட பாணியில் புகுத்தினார் என்று சங்கக்கார மேலும்  தெரிவித்திருந்தார்.”

அதேநேரம், 2015ஆம் ஆண்டு சர்ரே அணிக்கு குமார் சங்கக்காரவை வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தார். இந்த சிறந்த உறவு முறைகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக கிரஹாம் போர்ட்டிடம் பேசுமாறு இலங்கை கிரிக்கெட் சபை குமார் சங்கக்காரவை வேண்டியிருந்தது. முதலில் தயக்கம் காட்டிய சங்கக்கார இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட பல உறுதி மொழிகளுக்கு பின்னர் இது குறித்து கிரஹாம் போர்ட்டிடம் பேசுவதாக ஒத்துக்கொண்டார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் உறுதி மொழிகளை நம்பிய குமார் சங்கக்கார கிரஹாம் போர்ட்டிடம் தன்னுடைய இறுதி தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டினார். எனினும், நிலையில்லாத கொள்கைகளையுடைய இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைவதற்கு கிரஹாம் போர்ட் தயக்கம் காட்டியிருந்தார். மேலும் பல்வேறு முறைகளில் கிரஹாம் போர்ட்டை சமாதானப்படுத்திய சங்கக்கார இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய உறுதி மொழிகளைத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகள் வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

சங்கக்காரவுடனான நீண்ட கலந்துரையாடல் மற்றும் சிறந்த உறவு முறை காரணமாக கொழும்புக்கு வர கிரஹாம் போர்ட் ஒப்புதல் அளித்தார். அதேநேரம், அவரை பெரிதும் எதிர்பார்த்திருந்த சர்ரே கிரிக்கெட் கழகத்தின் பணிப்பாளர் அலெக் ஸ்டூவர்ட் குறித்த தீர்மானம் தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், கிரஹாம் போர்ட் தலைமை பயிற்றுவிப்பாளராக மட்டும்மல்ல கடந்த இரண்டு வருடங்களில் எங்களுடைய கிரிக்கெட் தரத்தை உயர்த்துவதற்கு பல வழிகளில் பங்களிப்பு செய்திருந்தார் என்று மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தந்த கிரஹாம் போர்ட் இலங்கை அணியை மீண்டும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.  அந்த வகையில் கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இலங்கை 3-0 என்ற கணக்கில் வெற்றியீட்டி அவுஸ்திரேலிய அணியை வைட்வாஷ் செய்தது. எனினும், காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய அஞ்சலோ மெதிவ்ஸ், லசித் மலிங்க மற்றும் தினேஷ் சந்திமாலின் இழப்பினுடாக தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது 3-0 கணக்கில் டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் இழந்து பெரும் பின்னடைவை இலங்கை அணி கண்டது. அதுமட்டுமல்ல முதல் தடவையாக பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

எனினும், சற்றும் தளர்வடையாத கிரஹாம் போர்ட் இலங்கை அணியை மீண்டும் வல்லமை மிக்க அணியாக மாற்ற முடியும் என்று நம்பினார். அறிக்கைகளின்படி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப போட்டியில் அஞ்சலோ மெதிவ்ஸ் களமிறங்க கூடிய நிலை காணப்பட்டது. எனினும், கொழும்பிலிருந்து வந்த ஆணைப்படி அஞ்சலோ மெதிவ்ஸ் முதல் போட்டியில் கழட்டிவிடப்பட்டமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், ஏற்கனவே உடற்தகுதி பரிசோதனைகளிலிருந்து அஞ்சலோ மெதிவ்ஸ் சிறந்த நிலையிலிருப்பதாக வைத்தியர்களினால் சான்றளிக்கப்பட்டிருந்தது. உடற்தகுதிக்காக பரிசோதனைக்கு அஞ்சலோ மெதிவ்ஸ் ஒத்துழைப்பதாக கூறிய போதிலும் கொழும்பிலிருந்து தடைவிதிக்கப்பட்டது.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மோசமான முறையில் விளையாட வேண்டுமென்பதே அதிகாரிகளின் தேவையாக இருந்தது. அதன் மூலம் தலைமை பயிற்றுவிப்பாளரை மாற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்தது.

அத்துடன், மந்த கதியில் ஓவர்களை வீசியதன்  காரணமாக தற்காலிக அணித் தலைவர் உபுல் தரங்க இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமை பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட்டை குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் கிரஹாம் போர்ட் எதிர்கொண்ட தடைகளை உணர்ந்து கொண்ட  சங்கக்கார கிரஹாம் போர்ட்டுக்கு ஆதரவு கொடுத்தார்.

கிரஹாம் போர்ட் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு உலகில் தலை சிறந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார். திறமையுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு சரியான பயிற்றுவிப்பாளர் கிடைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முடிந்த திறமைகளை வெளிப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயிற்றுவிப்பாளர் இருப்பது பயிற்சி அளிப்பதற்கு, கிரிக்கெட் வீரர்கள் இருப்பது கிரிக்கெட் விளையாடுவதற்கு என்றும் அவர்களுக்கு தடையின்றி விளையாட வாய்ப்புக் கொடுத்து, அவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளுக்கு அவர்களே பொறுப்பு என்றால் நிச்சயமாக திறமைகளை இளம் வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட கிரிக்கெட் முகாமையாளர் என்ற பதவிக்கு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டதோடு தலைமை பயிற்றுவிப்பாளரின் சில அதிகாரங்கள் அசங்க குருசிங்கவுக்கு பிரித்து வழங்கப்பட்டமையானது கிரஹாம் போர்ட்டின் பணிகளுக்கு இடையூறாக அமைத்திருந்தது.

இந்நிலையில், உத்தியோகபூர்வ அதிகாரிகளை சந்தித்த கிரஹாம் போர்ட் இந்நிலைமை குறித்து விளக்கியதோடு, முழுமையான பொறுப்புகளை வழங்குவதில் சிக்கல் இருந்தால் அணியின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்படலாம் என தனது கருத்தை தெரிவித்தார்.

இதற்கு இலங்கை கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்து தங்களது கட்டளைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் அவ்வாறில்லையெனில் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகலாம் எனத் தெரிவித்தது.

குறித்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் கிரஹாம் போர்ட் பரிதாபமாக இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.