Jump to content

மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை; ஒப்பந்தத்தை மீறியதால் நடவடிக்கை


Recommended Posts

மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை; ஒப்பந்தத்தை மீறியதால் நடவடிக்கை

 
லசித் மலிங்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருமானத்திலிருந்து 50 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, இரண்டு முறை லசித் மலிங்க, ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியின்றி கருத்துத் தெரிவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.

மலிங்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட்டின் கெளரவ செயலர் மோகன் டி சில்வா, தலைமை செயல் அதிகாரி அஷ்லே டி சில்வா, ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் அசெல ரெகாவா ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு செவ்வாய்க்கிழமை பிற்பகல் விசாரணை நடத்தியது. இலங்கை கிரிக்கெட்டின் தலைமையகத்தில் நடந்த விசாரணையின்போது, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட லசித் மலிங்கா, முறைப்படி மன்னிப்புக் கோரியதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அந்த முடிவு, செவ்வாய்க்கிழமை மாலை கூடிய சிறப்பு செயலாக்கக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தக் குழு, மலிங்காவை, ஓராண்டு இடைநீக்கம் செய்து தண்டனை விதித்தது. ஆனால், அந்த தண்டனை, 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும். அந்த 6 மாதங்களுக்குள் இதேபோன்ற தவறு மீண்டும் நடந்தால், தண்டனை செயல்பாட்டுக்கு வரும்.

உற்சாகம் குறைந்ததுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், மலிங்காவின் அடுத்த ஒரு நாள் போட்டிக்கான வருவாயிலிருந்து 50 சதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை அடுத்து, இலங்கை வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கும் தொடருக்கான, தேர்வுக்குழுவில் மலிங்காவின் பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் நடக்கும் முதல் இரண்டு ஆட்டங்களுக்கான அணியிலும் மலிங்கா ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/sport-40424339

Link to comment
Share on other sites

“குரங்கு” என்றதற்கு மலிங்கவுக்கு தடை

Published by Priyatharshan on 2017-06-28 09:49:35

 

விளை­யாட்டுத் துறை அமைச்­சரை குரங்கு என விமர்­சித்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்­க­விற்கு 6 மாத காலம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

lasith_malinga.jpg

ஆனாலும் எதிர்­வரும் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சிம்­பாப்வே தொட ரில் லசித் மலிங்க விளை­யா­ட­மு­டியும். சிம்­பாப்­வேக்கு எதி­ரான ஒருநாள் தொடர் முடிந்­ததும் மலிங்­க­விற்­கான தடைக் காலம் ஆரம்­ப­மாகும். 

அதனால் எதிர்­வரும் ஜூலை மாத இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொடரில் லசித் மலிங்க விளை­யாட மாட்டார். 

அத்­தோடு நடை­பெ­ற­வுள்ள சிம்­பாப்­வேக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து 50 வீத அப­ராதமும் மலிங்­க­விற்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இங்­கி­லாந்தில் நடை ­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற் ­றோடு வெளி­யே­றி­யது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் இலங்­கையின் களத்­த­டுப்பு மோச­மாக இருந்­தது. முக்­கிய பிடி­யெ­டுப்­பு­களைத் தவ­ற­விட்­ட தன் கார­ண­மாக தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. 

இதனால் இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதி குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தி­ருந்தார். 

இந்­நி­லையில் அமைச்­சரின் இந்தக் கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் வித­மாக பேசிய லசித் மலிங்க,  

நாற்­கா­லியை அலங்­க­ரிகப்­ப­வர்­களின் விமர்­ச­னத்தை நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. இது கிளியின் கூடு­பற்றி குரங்கு பேசு­வது போல் இருக்­கி­றது. கிளிக் கூடு பற்றி குரங்­குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார். லசித் மலிங்­கவின் இந்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து மலிங்­க­விடம் விசா­ரணை நடத்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் உத்­த­ர­விட்­டது. விசா­ரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று அதி­காரி ஆஷ்­லிடி சில்வா தலை­மையில் 3 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டது. 

இக்­குழு மலிங்­க­விடம் நேற்று விசாரணை நடத்­தி­யது. அதன்­போது தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை லசித் மலிங்க ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அதன்­பி­றகு விசா­ரணை அறிக்­கை இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த அறிக்­கையின் படி லசித் மலிங்க மீது கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்­பந்த விதியை மீறிய குற்­றத்­திற்­காக ஆறு மாதம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  அத்­தோடு முத­லா­வது ஒருநாள் போட்டி சம்­ப­ளத்தின் 50 வீதம் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

அதன்படி நடை பெறவுள்ள சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட முடியும். ஆனால் அதன்பிறகு நடை பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவருக்கு விளையாட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21286

Link to comment
Share on other sites

மலிங்கவுக்கு மஹேல ஆதரவு
-

image_a3df5d7291.jpg

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள தடையை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கண்டித்துள்ளார்.  

இலங்கை அணியின் வீரர்களின் உடற்றகுதி தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விமர்சனத்துக்கு, மறைமுகமாகப் பதிலளித்திருந்த லசித் மலிங்க, கிளியின் கூடு பற்றி, குரங்குக்கு என்ன தெரியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.  

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தனது ஒப்பந்தத்துக்கு முரணாக, மலிங்க நடந்துகொண்ட 2ஆவது தடவை இதுவெனத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, அது தொடர்பாக விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைத்தது.  

விசாரணைக் குழு முன் ஆஜராகிய மலிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டதோடு, உத்தியோகபூர்வமான மன்னிப்பைச் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, ஒரு வருடத் தடை, அவருக்கு விதிக்கப்பட்டது. அத்தோடு, அவரது அடுத்த ஒருநாள் சர்வதேசப் போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது.  

இந்நிலையில், டுவிட்டர் இணையத் தளத்தில், மஹேலவிடம் கருத்தொன்றை முன்வைத்த இரசிகரொருவர், “வீரர்களைக் கேலியாகப் பேசுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுமதியுண்டு. ஆனால், வீரர் கருத்துத் தெரிவித்தால், அவருக்கு 6 மாதத் தடை (குறிப்பு: இரசிகரின் கருத்தில், தண்டனை பற்றித் தவறாகக் குறிப்பிடப்பட்டது) விதிக்கப்படுமா? இலங்கை கிரிக்கெட் சபை, அதன் மோசமான நிலையில்” என்று கூறியிருந்தார். அவரது கருத்தை ஆமோதித்த மஹேல, “இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்” என்று குறிப்பிட்டார்.  
அத்தோடு, விளையாட்டுத்துறை அமைச்சரின் நடத்தையை விமர்சித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரரின் வெளியான கேலிச் சித்திரத்தையும், மஹேல மீளப் பகிர்ந்திருந்தார்.  

தான் விளையாடும் காலத்திலேயே, இலங்கை கிரிக்கெட் சபையுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த மஹேல, ஓய்வுபெற்ற பின்னரும், அந்த விமர்சனங்களைத் தொடர்கிறார்.

இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித மலிங்க விளையாடியிருந்த நிலையில், அவ்வணியின் பயிற்றுநராக, மஹேல ஜெயவர்தன செயற்பட்டிருந்தார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மலிங்கவுக்கு-மஹேல-ஆதரவு/44-199579

Link to comment
Share on other sites

ஒரு சில ஊடகங்களே எனக்கும் மலிங்கவுக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவித்தன

ஒரு சில ஊடகங்களே எனக்கும்  மலிங்கவுக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவித்தன என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்   செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் எந்தவொரு  இடத்திலும் கிரிக்கெட் வீரர்  லசித் மாலிங்கவை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை.அதுபோலவே அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மீதும் நான் குறை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக  விளையாட்டு வீரர்களுக்கு உடற்தகுதி அவசியம் என்று வலியுறுத்தி கூறினேன். அதைவிடத்து யாரையும் குறிப்பிட்டு எதுவும் நான் தெரிவிக்கவில்லை. ஏதாவது ஒரு திட்டத்தை முன்னெடுக்கும்  போது சில ஊடகங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையினால் குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் போகின்றது. 

எமது நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு திறமை உள்ளது.  ஆனால் உடற்தகுதியைப் பேணாமல் திறமையை வைத்துக்கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை.  எவ்வாறெனினும்  எனது கருத்து தொடர்பில்  லசித் மலிங்க ஒரு ஊடகத்திற்கு  தெரிவித்த    விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.  அதுதொடர்பில் நான் கவலையடைகின்றேன். ஒரு வீரருக்கு அவ்வாறு உரையாற்ற முடியாது.  

வீரர்களுக்கு    கிரிக்கெட் நிறுவனத்துடன் உடன்படிக்கைகள் உள்ளன. அதன்படியே நடந்துகொள்ளவேண்டும். அதன்படி   அவரின் கூற்றுக்குறித்து  விசாரிக்க குழு அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த குழுவானது தற்போது தீர்ப்பை அறிவித்திருக்கிறது. 

இதில் அவருக்கு போட்டி தடை வருவதற்கான சாத்தியம் இருந்ததாக அறியமுடிகின்றது. ஆனால்  அதற்கு நான் இடமளிக்கமாட்டேன்.  காரணம் மாலிங்க போன்ற ஒரு வீரர் எமது அணிக்கு கட்டாயம் தேவை. அவர்  நிச்சயம் அணியில் விளையாடவேண்டும்.  அவர்  அணியில் இடம்பெறாவிடின்  இறுதியில் அனைவரும் என்னை  திட்டுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.  இந்த உடற்தகுதி என்பது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுக்களுக்கும் பொருந்தும். 

http://www.virakesari.lk/article/21316

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.