Jump to content

உஷார்


Recommended Posts

உஷார்
 

பகவதி’ என்று ஒரு திரைப்படம் 15 வருடங்களுக்கு முன்னர் வெளியானது. நடிகர் விஜய்தான் திரைப்படத்தின் கதாநாயகன். அந்தப் படத்தில் இரண்டு பாத்திரமேற்று வடிவேலு நடித்திருக்கிறார். நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத திரைப்படம். வடிவேலுவின் பிரபல வசனமான, ‘வந்துட்டான்யா... வந்துட்டான்’, அந்தத் திரைப்படத்தில்தான் உள்ளது. 

அத்திரைப்படத்தில், விஜய்யின் பெயர் பகவதி. அதனால், இரண்டு வடிவேலுகளில் ஒருவர், தனது பெயரை ‘சின்ன பகவதி’ என்று வைத்துக்கொண்டு காட்டும் அலப்பறைகள் படுசுவாரசியமானவை. ‘சின்ன பகவதி’ வடிவேலு, மற்றைய வடிவேலுவைச் சந்திக்க வரும்போது, நிலம் அதிரும்; பாத்திரங்களில் அசைவற்றிருக்கும் நீர் தளம்பத் தொடங்கும்; புழுதி கிளம்பும்; இதன்போது, சொல்ல முடியாத ஒரு மின்னல் வேகத்தில், சுழற்காற்று போல் ‘சின்ன பகவதி’ வருவார். போகும் போதும், அதேவேகத்தில் சுழன்று மறைந்து விடுவார்.

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர், கடந்த புதன்கிழமை வெளியே வந்து, நீதிமன்றில் சரணடைந்ததும், அதையடுத்து அவருக்குப் பிணை வழங்கப்பட்டதும், பிறகு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதும், அதன் பிறகு, மீண்டும் பிணை வழங்கப்பட்டதும், பிறகு அவர் அங்கிருந்து கிளம்பியதும் என, ஒன்றிரண்டு மணித்தியாலங்களில் நடந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தபோது, சுழற்காற்று வேகத்தில் ‘சின்ன பகவதி’ வந்து போகும், திரைப்படக் காட்சிகள்தான் நினைவுக்கு வந்து போயின.

விசனங்களும் விமர்சனங்களும்

நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேடப்படுவதாகக் கூறப்பட்ட ஒருவர், அதுவும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர், சுழற்காற்று போல் வந்து, எல்லாப் பிடிகளிலிருந்தும் கழன்று சென்றமையானது திகைப்புக்குரியதாகும். 

பாமர மனிதர்கள் முதல் சட்டம் தெரிந்தவர்கள் வரை, அவற்றை ஏமாற்றத்துடன் வாய் பிளந்து பார்த்து நின்றனர். பிரபலமான சட்டத்தரணிகளும் கவனிப்புக்குரிய ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்த எதிரணியினரும் ‘அந்த’ சம்பவங்களைக் கேள்விக்குட்படுத்தி விமர்சனம் செய்தனர். 

மேலும், அவை குறித்து, அரசாங்கத்துக்குள்ளிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. உதாரணமாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த நிகழ்வுகள் குறித்துக்   கூறுகையில், “சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன” என்று விசனம் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

ஞானசார தேரரை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்த பொலிஸார், “அவருக்குப் பிணை கொடுப்பதற்குத் தாங்கள் எதிர்ப்பில்லை” என, நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதைச் சுட்டிக்காட்டி குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் “நாசகாரி ஒருவருக்காக, மன்றில் பொலிஸார் கெஞ்சி விடுதலை பெற்றுக்கொடுத்த கபடத்தனமான செயலொன்று, இந்த நல்லாட்சியில் அரங்கேறி முடிந்திருக்கிறது. இனவாதி ஒருவரைச் சட்டத்தின் பிடியிலிருந்து, அதன் பாதுகாவலர்கள் தப்ப வைத்திருக்கிறார்கள். நீதியும் நியாயமும் செத்துப் போயிருக்கிறது” எனப் பகிரங்கமாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆனால், ஆட்சியாளர்கள் இவை குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

பொய்த்துப்போன ஆருடங்கள்

இன்னொருபுறம், பிணை வழங்கப்பட்டு வெளியேறிய ஞானசார தேரர் மனம் கசிந்து, கண்ணீர் சிந்தியதாக சில ஊடகங்கள் வீடியோக்களுடன் செய்திகளை வெளியிட்டன. 
அதேவேளை, “நான் இனி மகாநாயக்கர்களின் சொற்கேட்டு நடப்பேன்” என்று ஞானசார தேரர் கூறியதாகவும் ஒரு செய்தி வெளிவந்தது. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த சிலர், “முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசார தேரர் மேற்கொண்டு வந்த தீவிர செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறார்” என, ஆருடம் கூறினார்கள். 

ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் தகர்த்தெறிந்து விட்டு, சில தினங்களுக்கு முன்னர், ஊடகமொன்றுக்கு வீடியோ வடிவிலான பேட்டியை வழங்கிய ஞானசார தேரர், “முஸ்லிம் அடிப்படைவாதத்தைத் தொடர்ந்தும் எதிர்ப்பேன்” என்று கூறியிருக்கின்றார். அப்படியென்றால், விவகாரம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பது அர்த்தமாகும்.

image_966e34f5e4.jpg

இவ்வளவும் நடந்த பிறகும், ஞானசாரர் இப்படிக் கூறுகின்றார் என்றால், அவருக்குப் பின்னாலும் முன்னாலும் பெரும் சக்திகள் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் கருதுகின்றனர். ஞானசார தேரர் தலைமறைவாகியிருந்த போது, அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில்தான் அவர் இருக்கின்றார் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. 

அமைச்சர்களான சம்பிக ரணவக்க, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் துமிந்த திசாநாயக ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, இவர்களில் ஒருவர்தான் ஞானசார தேரரைப் பாதுகாக்கின்றார் என, சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும், இதுவரையில் அவை நிரூபிக்க முடியாத சந்தேகங்களாக மட்டுமே இருக்கின்றன.

image_26ae0c8dca.jpg

இது இவ்வாறிருக்க, கடந்த ஒரு மாத காலமாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டு வந்தன. மிகத் திட்டமிட்டு அந்தச் செயற்பாடுகள் நடைபெற்றிருந்தன. இதனால், ஒரு மாதத்தில் மட்டும், 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளை முஸ்லிம்கள் இழந்தனர் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார். 

இந்த நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குத் தீ வைத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பொலிஸார் கைது செய்துமிருந்தனர்.

ஹக்கீம் போட்ட குண்டு

இவ்வாறானதொனதொரு சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மேற்படி விவகாரங்கள் தொடர்பில் மிகப் பெரியதொரு ‘குண்டு’ ஒன்றை, மிகச் சாதாரணமாகத் தூக்கிப் போட்டிருக்கின்றார். 

ஆனால், அது மிகவும் பாரதூரமானதொன்றாகும். “முஸ்லிம்கள் மீது, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும்” என, கண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். மேலும், “வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அது பாரதூரமானதாகும்” எனவும் அவர் கூறியிருந்தார்.

தங்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றவர்கள் யார்? அந்தத் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன? அவற்றின் பின்னால் எவரெல்லாம் உள்ளனர் என்கிற கேள்விகளுக்கெல்லாம், உறுதியான விடைகள் தெரியாமல், முஸ்லிம் சமூகம், தமது தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும்போது, “தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று, எமக்குத் தெரியும்” என, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கின்றமையானது அதிர்ச்சிகரமானதொரு செய்தியாகும். 

ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள ஒரு கட்சியின் தலைவராவார். முஸ்லிம் காங்கிரஸ் எனும் அந்தக் கட்சியானது, இலங்கையிலுள்ள முஸ்லிம் கட்சிகளில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள ஒரு கட்சியாகும். 

அந்தவகையில், முஸ்லிம் சமூகம் மீது அக்கறையுடையவராக ரவூப் ஹக்கீம் இருக்க வேண்டும் என்பதோடு, அந்தச் சமூகத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடும் அவருக்கு உள்ளது. 

இந்த நிலையில், முஸ்லிம்கள் மீது தற்போது மேற்கொள்ளப்படும் இனவாதத் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று, ரவூப் ஹக்கீமுக்கு தெரிந்திருக்கின்றபோதும், அதை அவர் இதுவரையில் வெளிப்படுத்தாமல் இருக்கின்றமையானது திகைப்புக்கும், விசனத்துக்கும் உரியதாகும்.

ஒரு சமூகம் மீது நடைபெறும், சட்ட விரோதமான இனவாதத் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று தெரிந்திருந்தும், அதைக் கூறாமல் மறைப்பதென்பது சட்டத்துக்கு முரணானதொரு விடயமாகும் என்பதையும் இந்த இடத்தில் பொறுப்புடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் சாமரம்

இது இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் மீது ஞானசார தேரர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு சாமரம் வீசும் வகையில், அஸ்கிரிய பீடம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்மூலம், முஸ்லிம்களுக்கு எதிராக, இதுவரையில் ஞானசார தேரர் மேற்கொண்ட அநியாயங்களை அஸ்கிரிய பீடம் நியாயப்படுத்தியிருப்பது, முஸ்லிம்களிடத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. ஆனாலும், அஸ்கிரிய பீடத்தின் அந்த அறிக்கை தொடர்பில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பல அமில தேரர் கண்டனங்களை முன்வைத்திருக்கின்றார். 

“அவசியமற்றதும், கூறக்கூடாததுமான கருத்தை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை அஸ்கிரிய பீடம் வெளியிட்டிருக்கிறது” என, அமில தேரர் தெரிவித்திருக்கின்றார். 

மேலும், “முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு, ஞானசார தேரர் கூறும் கருத்துகளினால் பௌத்த தர்மம் பிரகாசிக்காது” எனவும் அமில தேரர் கூறியிருக்கின்றார்.

அஸ்கிரிய பீடம் வெளியிட்ட அறிக்கையில், ஞானசார தேரரின் நடத்தை தொடர்பில் தமக்கு உடன்பாடு இல்லை என்கிற போதிலும், அவர் முன்வைக்கும் கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தக் கூடாது என்றும், நாட்டைப் பாதுகாப்பதற்காகவே, பௌத்த பிக்குகள் போராடி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தாக்கமும் தர்க்கமும்

இதேவேளை, அஸ்கிரிய பீடத்தின் இந்த அறிக்கையானது சிங்கள அரசியல்வாதிகளிடம் பலமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது. 

அஸ்கிரிய பீடத்தின் அறிக்கை வெளிவந்த சூட்டுடன், அஸ்கிரிய மகாநாயக தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்களிடம், தான் மன்னிப்புக் கோருவதாக அமைச்சர் 
எஸ்.பி.திஸாநாயக தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் பெயரை மரியாதையின்றி, தான் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில், பௌத்த தேரர்கள் தன்மீது அதிருப்தி கொண்டிருந்தால், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அமைச்சர் திஸாநாயக கூறியிருந்தார்.

இன்னொருபுறம், “பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சில சமூக இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுவதாகவும், அதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். களுத்துறை விகாரையொன்றில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த உரையை, அஸ்கிரிய பீடம் வெளியிட்ட அறிக்கையின் பக்க விளைவாகவும் பார்க்க முடிகிறது. 

கௌரவத்துக்குரிய மதகுருக்களை அவமானப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில், நேர்மையான மக்களிடம் இரண்டுபட்ட கருத்துகள் இருக்க முடியாது.

ஆனால், மதகுருக்கள் தமது கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும்போது, அது தொடர்பில் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்படக் கூடாது என்று யாரும் எதிர்பார்ப்பதும் நியாயமாகாது. இன்னொருபுறம், அஸ்கிரிய பீட அறிக்கையை முன்வைத்து, அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ள நியாயங்கள் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. “பௌத்த தேரர் ஒருவரை அவமதிக்கும் வகையில், நான் பேசியதாகக் கூறும், அஸ்கிரிய பீடத்தினரின் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஞானசார தேரரை, அரசியல் கட்சியொன்றின் அங்கத்தவராகவே நான் பார்க்கிறேன். சிங்கத்தின் பெயரைத் தவிர, மற்றைய மிருகங்களின் பெயர்களையெல்லாம் கூறி, என்னை அவர் திட்டியிருக்கிறார். அதையடுத்தே, நானும் அவர்மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தேன்” என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருக்கின்றார்.

அஸ்கிரிய பீட மகாநாயக தேரரை முன்னொரு தடவை ஞானசார தேரர் சந்திக்கச் சென்றபோது, அந்தச் சந்திப்புக்கு இடம் வழங்காமல் ஞானசார தேரர் திருப்பியனுப்பப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

 இப்போது, காட்சிகள் மாறியிருக்கின்றன. அதே ஞானசார தேரருக்கு ஆதரவாக அஸ்கிரிய பீடம் குரல் உயர்த்தியிருக்கிறது. இது, ஞானசார தேரருக்கு நிச்சயமாக உசாரை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த உசாருடன் அவர் களமிறங்கினால், நிலைமை எங்குபோய் முடிமோ என்பதை நினைக்கும் போதுதான் அச்சமாக இருக்கிறது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உஷார்/91-199430

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவி உடைகள் வாழ்க...முசிலிம் அட்டகாசம் ஒழிக...இதில் எந்தவித மாற்றுக்   கருத்துக்கும் இடமில்லை...இன்றைய கிழக்கின்  நிலமைக்கு இந்த முலிமுகள்  காரணம்.....ஒழிக்க வேண்டும் இவர்கள்  அட்டகாசத்தை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.