Jump to content

ஒரு எலிய காதல் கதை


Recommended Posts

ஒரு எலிய காதல் கதை

 

 

 

ம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின்  இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள் தரையும், லிஃப்ட்டும், கனவான்களும், கனவான்கள் பெற்ற கண்கவர் கன்னிகளும்கொண்ட அபார்ட்மென்ட் அல்ல. தண்ணீர் லாரிக்காக யுத்தம் செய்கிற வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. ஒரே அறைதான். ஓரத்தில் பாத்ரூம், டாய்லெட். பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் பொங்கித் தின்ன ஏற்பட்ட சமையல் மேடை. ஒட்டியிருக்கும் சின்ன பால்கனி. அந்த வீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பார்த்து வந்த வேலை போய்விட, ராமச்சந்திரனுக்கு இது ராசி இல்லாத வீடு என்று பட்டது. ஆனால், இந்த வீட்டை விட்டால், நேரே மெரினா பீச்சில்தான் போய் பேப்பர் விரித்துப் படுக்க வேண்டும். ஆனால், இப்போது போலீஸ் நவீனமயமாகி, குதிரைக்குப் பதிலாக சின்னதாக ஒரு பேட்டரி வண்டியில் வந்து துரத்துவதாகக் கேள்விப்பட்டான். எனவே, வீட்டைக் காலி செய்யாமல் அடுத்த வேலையை யோசித்தான். சென்னைக்கு வேலை தேடி வந்து பாரிஸ் கார்னரில் ஒரு ஸ்டேஷனரி கடையிலும், பிறகு ஒரு ஆப்டிகல்ஸிலும் வேலை. கொஞ்ச காலம் கூரியர் சர்வீஸ். எதுவுமே அவனுக்கு நிலைக்கவில்லை. கடைசியாக, ஒரு ஜெராக்ஸ் கடையில் இன்சார்ஜாக இருந்து டி.டி.பி. பண்ணிக்கொண்டு இருந்தான். திடீரென்று ஒரு நாள் முதலாளி வேலையில் இருந்து தூக்கிவிட்டார். அவரது மனைவியின் தம்பி டிகிரி முடித்துவிட்டு ஊரில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டானாம். மனைவியின் தம்பி என்கிற உறவு நம் சமூகத்தில் மோஸ்ட் பவர்ஃபுல் இல்லையா? எனவே, ராமச் சந்திரன் வெளியேற்றப்பட்டான்.

இது வரையிலும் பார்த்த வேலைகளின் வழியே கொஞ்சூண்டு சேமிப்பும் ஒரு பெண் சிநேகிதமும் எஞ்சியது. ஜெராக்ஸ் கடையில் உடன் வேலை பார்த்த ஐஸ்வர்யா. அவ்வப்போது போன் பண்ணுவாள். இரவில் இவன் அறையில் தனியே இருக்கையில் பெரும்பாலும் அவள் போன் வரும். இவன் கிளர்ச்சி பொங்கி வழிய அவளோடு பேசுவான்.

p106.jpg

''எதுக்குப்பா அங்கிருந்து வந்த பிறகும் எனக்கு போன் பண்றே? என்னை அவ்வளவு பிடிக்குமா?' என்றெல்லாம் அவளிடம் வாயைப் பிடுங்கப் பார்ப்பான். அவளோ, ''அந்த சினிமா பாத்தியா? இந்த சினிமா பாத்தியா? அன்னிக்கு பஸ்ல என்னாச்சு தெரியுமா?'' என்று உறைப்பு புளிப்பு இல்லாத விஷயங்களையே பேசுவாள். இவன் ஒரு புள்ளியையே எப்போதும் குறிவைத்து சுற்றிச் சுற்றி அதை நோக்கியே பேச, அவளோ மைய விலக்கு விசையாக இவனை வெளியே நகர்த்துவாள். பெரும்பாலும் கடைசியாக ஒரு விஷயத்தில்தான் முடிப்பாள். ''ராம், எனக்கு டாப்அப் பண்ணிவிடேன்.'' இவனுக்கு புஸ்ஸென்று காற்று இறங்கும். சமயங்களில், ''அது வந்து... காசு கொஞ்சம் டைட்டா இருக்கு'' என்று இழுப்பான். ''ஜஸ்ட் ஹண்ட்ரட் ருபீஸுக்காவது பண்ணிவிடேம்ப்பா. உன்கிட்ட அப்பப்ப பேசறதுதான்டா எனக்கு ஹேப்பியா இருக்கு'' என்று அவள் சொன்னதும், இவன் அப்படியே சட்டையை உதறி நூறு ரூபாயை அலமாரியில் இருந்து பொறுக்கிக்கொண்டு போய் டாப்அப் பண்ணிவிட்டு வருவது வழக்கமாயிருந்தது. ஒரு நாள் ஏதோ ஒரு எரிச்சலில், ''எப்பவும் மிஸ்டு கால்தானே குடுக்கிறே? அப்புறம் எதுக்கு 'டாப் அப்... டாப் அப்’னு டார்ச்சர் பண்றே?'' என்று சொல்லிவிட்டான். மறுமுனையில் குமுறிக் குமுறி அழுகை. ''அவ்ளோதானாடா நீ? இவ்ளோ சீப்பா பேசறே? எவ்ளோ கேவலமா என்னை நினைச்சிட்டே? இவ்ளோ நாளா பழகியும் என்னைப் புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதானா? டாப்அப் பண்ணிவிடறதுக்குத்தான் உன்கிட்ட பேசறேனா? அவ்ளோ சீப்பா நெனைச்சுட்டேல்ல?'' என்று அவள் அழ... இவனுக்கு, 'ஆமா, அப்படித்தான் தோணுது’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. மறுமுனை ''சொல்லுடா, ஐஸ்வர்யா அவ்ளோ சீப்பானவளா?'' என்று அழுகையினூடே கேட்க, ''சேச்சே, என்ன ஐஸு நீ? உன்னை நான் அப்படி நினைப்பேனா? நீ எவ்ளோ நல்லவ'' என்று ஆரம்பித்தவன், கிண்டல் என்று அவள் நினைத்துவிடும் அபாயம் உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டு, ''எவ்வளவு நல்லவ' என்று பதில் சொன்னான். கடைசியில், அன்று நூறுக்குப் பதில் இருநூறு ரூபாய்க்கு டாப்அப் பண்ணிவிட்டான். உடனே போன்.

''எப்பவும் ஹண்ட்ரடுக்குத்தானே பண்ணுவே? இன்னிக்கு என்ன டூ ஹண்ட்ரட்?''

''அது... சும்மா... கையில காசு இருந்துச்சு'' என்றான், கடைசி ரூபாய் வரை சுரண்டி எடுத்த வேதனையை மறைத்துக்கொண்டு.

''இதப் பாரு. நான் டாப்அப் பண்றதுக்காக உன்கிட்ட பேசலை. அதை ஃபர்ஸ்ட் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கோ!'  

இவன், ''புரியுது ஐஸு!''

அவள், ''என்ன புரியுது?'

''டாப்அப் பண்ணணும்... அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும். அதான?''

''ம்...'

''இப்ப என்ன டிரெஸ் போட்டிருக்கே?''

''ஏன் கேக்குற?''

''சும்மாதான்...'' சற்று மௌனம். பின் அவள் கேட்டாள். ''அதிருக்கட்டும். அடுத்து என்ன செய்றதா இருக்கே?''

இவன் யோசித்தான். ''வேற ஏதாவது வேலை தேடணும்!''

''ஏம்ப்பா வேலை தேடணும்? உனக்குத்தான் டி.டி.பி. நல்லாத் தெரியும்ல? சொந்தமா நீயே ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வீட்ல இருந்தே ஆர்டர் எடுத்து டி.டி.பி. பண்ணு!''

இவன் யோசித்தான். ''சரியா வருமா?''

''வரும் ராம். என்னதான் அடுத்தவன்கிட்ட உழைச்சாலும் பெரிசாக் கிடைக்காது. மனசுவெச்சு நீ உழைச்சா பெரிய ஆளாயிடலாம். உன்னால முடியும். உன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ எனக்கு இருக்கு!''

ராமச்சந்திரனுக்கு விக்கிரமன் படங்களும், அந்தக் கதாநாயகிகளும் ஞாபகத்துக்கு வந்து 'லாலாலா’ சத்தங்கள் உச்சந்தலையில் மலர்ந்தன. அந்த நொடியே முடிவெடுத்தான்.

அடுத்த நாள் காலையிலேயே பக்கத்து பிளாக்கில் சதுரமாகக் கறுப்புப் பையும், காதில் ப்ளூடூத்தும், ஹெல்மெட்டுமாக பைக்கில் தினமும் போய்வரும் கம்ப்யூட்டர் நபரான செல்வத்தைப் பிடித்தான். ''இந்த மாதிரி எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வேணும்'' என்று சொல்ல... அவன் ''இருபதாயிரம் ரூபாய் இருந்தால் செட் பண்ணிக் கொடுத்துடுறேன். கம்ப்யூட்டரில் பிரச்னை ஏதும் வந்தால், நானே சர்வீஸ் பண்ணித் தந்துடுவேன்'' என்றான். ராமச்சந்திரனுக்கு வாழ்வில் நம்பிக்கையும் உற்சாகமும் பீறிட்டது.  வெள்ளிக்கிழமையாகப் பார்த்து செல்வத்துடன் ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போய் மானிட்டர், மதர்போர்டு, ஃபாதர் போர்டு, கீ போர்டு, பிரின்ட்டர், மவுஸ் என்று பல அயிட்டங்களை வாங்கிக்கொண்டு வந்து பக்காவாக அனைத்தையும் மாட்டினார்கள். ''கம்ப்யூட்டர் பாதுகாப்பா இருக்கணும்'' என்று ராமச்சந்திரன் தொணதொணக்க, ''பயப்படாதீங்க பாஸ்... யு.பி.எஸ். இருக்கு. எர்த் வொயரும் போட்டுரலாம்!’ என்று சொன்ன செல்வம், மாடியில் இருந்து ஒரு கம்பியைப் பால்கனி வழியே தரைக்கு இறக்கி, ஒரு குழாயில் பொருத்தி அங்கே கரியும் உப்பும் போட்டு அதில் பொதித்து, ''இனி மேல் உன் கம்ப்யூட்டர் நீடுழி வாழும்'' என்று உறுதியளித்தான். அவனே கம்ப்யூட்டரில் முதல் வேலையாக, ''உடனடி டி.டி.பி. செய்து தர அணுகவும்'' என்று செல்போன் நம்பரும் விலாசமும் டைப் பண்ணி பிரின்ட்டரில் ஒரு நூறு பிட்டுகள் பிரின்ட் எடுத்துத் தந்தான். அந்த ஏரியா பூராவும் ஒட்டி விட்டால் ஆர்டர்கள் வரத் துவங்கிவிடும். ஆசுவாசமும் நம்பிக்கையுமாக ராமச்சந்திரன் முகமலர்ச்சியுடன் செல்வத்திடம் ''எவ்வளவு பாஸ்?' என்று கேட்டு பணத்தைக் கொடுக்க, வாங்கிக்கொண்டு கிளம்பும் முன் செல்வம் சாதாரணமாகக் கேட்டான். ''எலி கிலி ஒண்ணும் இல்லையே?''

''இல்லை. ஏன் பாஸ்?''

''எலி இருந்தா கம்ப்யூட்டருக்குச் சிக்கல் பாஸ். எலி வராமப் பாத்துக்கங்க!'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். நாளது தேதி வரை அந்த அறையில் குட்டி முதலை போல் அலையும் ஓரிரு பல்லிகளைத் தவிர்த்து, எலி என்பது இல்லவே இல்லை என்பதால்,ராமச் சந்திரன் பெரிதாக அலட் டிக்கொள்ளவில்லை. அன்று இரவு இவன் கம்ப்யூட்டர் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் மென்மையாகக் குடித்துவிட்டு கால் நீட்டிப் படுத்தவாறு டி.வி-யின் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தான். போன் ஒரு மைக்ரோ நொடி ஒலித்து கட் ஆனது. ஐஸ்வர்யாதான். இப்படி மின்னல் துண்டுபோல் மிஸ்டு கால் கொடுக்க அவளால்தான் முடியும் என்று வியந்தபடி அழைத்தான்.

''என்னாச்சு... கம்ப்யூட்டர் வாங்கிட்டியா?''

''வாங்கிட்டேன் ஐஸு. ரொம்பப் பெருமையா இருக்கு. சந்தோஷமா இருக்கு. இனி, அடுத்தடுத்து ஒவ்வொண்ணா வாங்க வேண்டியதுதான். கார் வாங்கின உடனே கல்யாணம்!''- சரக்கு இவனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருந்தது.

''என்னது... கார் வாங்கினப்புறம் கல்யாணமா?''

''உனக்கு அவசரம்னா, கல்யாணத்துக்கு அப்புறம் கார் வாங்கிக்கிரலாம் ஐஸு!'' என்று இவன் குழற... அவள் குரலில் ஒரு கறார் தன்மை வந்தது.

''என்ன... குடிச்சிருக்கியா?'

''ம்... இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா? அதான். எக்ஸ்கியூஸ்மீ? ஓ.கே.?''

''ஓ! எவ்ளோ ஆச்சு?''

''ம்... ஒரு குவார்ட்டர் ஆச்சு. அதான் லிமிட்.''

''லூஸு! கம்ப்யூட்டர் எவ்ளோ ஆச்சு?'

இவன் கையை விரித்து நக்கலாக, ''ம்... இவ்ளோ!'' என்றான். மறுமுனையில் அவள் கடுப்பாவதை உணராமல், ''ஏன்? எதுக்கெடுத்தாலும் அவ்ளோ, இவ்ளோனு அலட்டறே? 'எவ்வளவு?’னு கேக்க மாட்டியா? பெரிய ஸ்டைலாக்கும் இது?''

மறுமுனையில் ஓரிரு நொடிகள் மௌனம். பிறகு, ''குடிச்சுட்டா என்னையே நக்கல் பண்ணுவியா நீ?'

''ஏன் ஐஸு... உன்னை நக்கல் பண்ற உரிமை எனக்கு இல்லையா?'

''ப்ச்! இதப் பாரு ராம்... நீ லைஃப்ல முன்னேறணும்னா, முதல்ல உன்னை கன்ட்ரோல் பண்ணக் கத்துக்கோ. கம்ப்யூட்டர் வாங்கினதுக்கே குடிக்க ஆரம்பிச்சேன்னா, நாளைக்கு நிறைய சம்பாரிக்க ஆரம்பிச்சிட்டா தினம் தினம் குடிப்பே... இல்ல?''

''ஐயோ! அப்படி எல்லாம் இல்லை ஐஸு... நீ சொன்னா நான் என்ன வேணா செய்வேன். குடிக்காதேடா லூஸுன்னு சொல்லு... குடிக்க மாட்டேன்!''

''இதப் பார்... நீ உழைக்கணும். சம்பாதிக்கணும். முதல்ல சொந்தக் கால்ல நிக்கணும். அவ்ளோதான். மத்ததெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். ஓ.கே-வா?''

''சரி... சரி... போனை வைக்கிற துக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி. 'யெஸ் ஆர் நோ’னு பதில் சொல்லு. என்னை உனக்குப் பிடிச்சிருக் கில்ல?''

''பிடிக்காத ஆள்கிட்ட எவளா வது நைட்ல போன் பண்ணிப் பேசுவாளா?''

இவன் உற்சாகம் பீறிட, ''சந்தடிசாக்குல பொய் சொல்ற பாத்தியா? நீ என்ன போன் பண்ணியாப் பேசற? மிஸ்டு கால் குடுத்துதானே பேசறே?'' என்று சிரிக்க...

அவள், ''நீ குடிச்சிட்டா ரொம்பத்தான்டா என்னை நக்கல் பண்ற. வைடா போனை. பன்னி!'' என்று செல்லமாகத் திட்டியபடி போனை வைத்தாள்.

இவன் மகிழ்ச்சியுடன் கண்களை மூடினான். கனவில் இவன் சென்னையின் மிகப் பெரிய இளம் தொழிலதிபராக ஆகி விட்டான். இவன் வீட்டில் ஃபோர்ஸ் பண்ணி அமைச்சர் மகளை நிச்சயம் செய்துவிட்டார்கள். கடைசி நேரத்தில் இவன் மண மேடையில் இருந்து ஓடி வந்து, ரிசப்ஷனில் செக்யூரிட்டிகளால் தடுத்து நிறுத்தப் பட்டு இருக்கும் ஐஸ்வர்யாவை மேடைக்குக் கூட்டிச் சென்று, ''இவதான் என் மனைவி. இன்னிக்கு நான் இந்த இடத்துல நிக்கிறேன்னா, அதுக்குக் காரணம் இவதான்!'' என்று உரக்கக் கத்தியபோது இருமல் வந்து படுக்கையில் இருந்து எழுந்து தண்ணீர் குடித்தான். கனவை எண்ணிப் புன்னகைத்தபடி படுக்கையில் சரிந்தவன் காதில் அந்தச் சத்தம் கேட்டது. 'கர்ரட்... கர்ரட்’ என்று எதுவோ எதையோ சுரண்டும் சத்தம். இவன் எழுந்து விளக்கைப் போட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சத்தம் இல்லை. ஏதோ பிரமை என்று மீண்டும் விளக்கை அணைத்துப் படுக்கையில் சரிந்தால், சில விநாடிகள் கழித்து மீண்டும் 'கர்ரட்... கர்ரட்...’ என்று அதே சத்தம். லேசான பதற்றத் துடன், எழாமல் சத்தம் வரும் இடத்தை அவதா னித்தான். தலைக்கு மேலே இருக்கும் சிறிய கான்கிரீட் பரணில் இருந்துதான் வந்தது. எழுந்து விளக்கைப் போட்டான். அந்தப் பரணில் கம்ப் யூட்டர் உபகரணங்கள் இருந்த காலி அட்டைப் பெட்டிகளைப் போட்டு இருந்தான். அங்கே நிமிர்ந்து பார்த்தபோது அவன் மயிர் கூச்செறிந்தது. எலி!

அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் சைஸில் கரேலென்று தன் குறுகுறுத்த விழிகளால் இவனைப் பார்த்தபடி இருந்தது. அடக் கடவுளே! இத்தனை நாள் இல்லாமல் சரியாக கம்ப்யூட்டர் வாங்கிய தினத்தன்று எப்படி இந்த எலி இங்கு வந்தது? இவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு சிறிய அறைக்குள் சற்றுப் பெரிய சைஸ் எலியுடன் ஒத்தைக்கொத்தை நிற்கும் சூழ்நிலை வாழ்வில் முதன்முதலாக வாய்க்கும்போது உங்களுக்கு வேர்க்கும். படபடப்பாக வரும். இரவு நீங்கள் குடித்திருக்கும்பட்சத்தில் உங்கள் வாய் நிச்சயமாக உலர்ந்துபோகும். ராமச்சந்திரன் உதடுகளை ஈரப்படுத்த முயன்றான். நாக்கை ஓர் உலர்ந்த காகிதம்போல் உணர்ந்தான். கேனைச் சரித்து தண்ணீர் பிடித்து மடக் மடக் என்று குடித்துவிட்டு எலியைப் பார்த்தான். அது அந்த அட்டைப் பெட்டிகளுக்குள் போவதும் வருவதுமாக இருந்தது. இவன் புதிதாக வாங்கிய கம்ப்யூட்டரைப் பார்த்தான். ஏதாவது வொயரைக் கடித்துவிட்டதென்றால் பொழைப்பு போயிருமே என்று பயம் கவ்வ... சுற்றிலும் தேடினான். துடைப்பம் சற்று நீளமாக இருக்க, ஸ்டூலில் ஏறி துடைப்பத்தால் தட்டினான். எலி அங்கிருந்து இவன் மீது தாவ சரிந்து விழுந்தான். தடுமாறி எழுந்தால், அது சமையல் மேடையில் இருந்தது. பாய்ந்தான். அங்கிருந்து கம்ப்யூட்டர் மேஜை மீது அது தாவ... இவனுக்குச் சுர்ரென்று வயிறு இழுக்க, ''ஏய்..!'' என்று அதை நோக்கிப் பாய... அது இவன் காலடியில் குதித்து பால்கனிக்குச் சென்றது. இவன் பின்னாலேயே போய்த் தேடினான். காணவில்லை. சிறிய பால்கனி என்பதால் கதவு இடுக்கெல்லாம் தேடினான். இல்லை. பெருமூச்சு வாங்கியபடி வந்து மறுபடி தண்ணீர் குடித்தான். ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு ஃபுட்பால் ஆடிய மாதிரி அங்கும் இங்கும் தாவியதில் மூச்சிரைத்து தூக்கம் சுத்தமாகப் போய்விட்டது. விளக்கை அணைத்தால், எலி பிறாண்டும் சத்தம் கேட்குமோ என்ற தயக்கத்திலேயே வெகு நேரம் அமர்ந்திருந்து ஒரு வழியாக அவன் தூங்கும்போது அதிகாலை ஆகிவிட்டது.

p106a.jpgஅடுத்த நாள் காலையில் எழுந்ததும் பரணை எட்டிப் பார்த்தான். எலி இல்லை. நிம்மதியாக இருந்தது. தெருமுனைக் கடையில் இட்லி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு அந்தப் பகுதி முழுவதும் போய் இவனது 'டி.டி.பி. செய்து தரப்படும்’ பிட்டு களை ஒட்டினான். நாலைந்து பழைய வாடிக்கையாளர்களுக்கு போன் செய்தான். அதில் ஒருவர் உடனே ஆர்டர் தர... ஓடிப் போய் வாங்கி வந்து மதியமே வேலையை ஆரம்பித்துவிட்டான். வேலை முடிய இரவு ஆகிவிட்டது. மனசு நிறைவாக இருந்தது. முதல் நாளே ஒரு ஆர்டர். நாளைக்கு கையில் காசு வந்துவிடும். மாதத்துக்கு இருபது ஆர்டர் கிடைத்தாலே வண்டியை ஓட்டிவிடலாம். அதற்கு மேலே கிடைத்தால் 'ஆஹா!’ என்று மனது குதித்தபோதுதான் ஞாபகம் வந்தது. காலையில் இருந்து மிஸ்டு கால் எதுவுமே வரவில்லை. இவன் போனை எடுத்து ஐஸ்வர்யாவுக்குப் போட்டான். பிஸியாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து மறுபடி போட்டான். பிஸி. சரி... மிஸ்டு கால் பார்த்துக் கூப்பிடுவாள் என்று பார்த்தான். இரவு பதினோரு மணியாகியும் அழைப்பே இல்லை. இவனுக்கு வித்தியாசமாக இருந்தது. இத்தனை மாதங்களில் இப்படி நடந்ததே இல்லை. குழப் பத்துடன் அவளுக்கு டயல் செய்தான். வெகு நேரம் அடித்து நின்றது. இவனுக்கு லேசான பதற்றம் ஏற்பட்டது. உடம்பு கிடம்பு சரியில்லையோ என்று தோன்ற கால் மணி நேரம் கழித்து மறுபடி கால் செய்தான். ரிங் போய்க்கொண்டு இருந்தது. போனைக் காதில் வைத்தபடி குழப்பத்துடன் அங்கும் இங்கும் பார்வையை அலையவிட்டவன் கண்ணில் பட்டது எலி... அதே எலி!

வாட்டர் கேனின் பின்புறம் அமர்ந்து வாலை வெளியே விட்டிருந்தது. இவன் மயிர்க்கூச்செறிந்த அதே கணம், மறுமுனையில் போனை ஐஸ்வர்யா எடுத்துவிட்டாள்.

''என்ன... இந்நேரம் போன் பண்றே?''- அவள் குரல் பதற்றமாகக் கிசுகிசுத்தது.

''அது வந்து எலி...'

''என்ன உளர்றே? என்ன எலி?''

''அது இங்க ஒரு எலி... அதிருக்கட்டும் என்னாச்சு உனக்கு? ஏன் கால் பண்ணலை?'

''வேலையா இருந்தேன். நீ ஏன் தேவை இல்லாம கால் பண்றே இந்நேரம்?''

இவனுக்குச் சுருக்கென்றது. ''என்ன ஐஸு? எத்தனை நாள் நைட்டு இதே நேரம் நாம பேசிஇருக்கோம்? நேத்துகூட...''

''உளறாதே ராம். அப்பல்லாம் நான் மிஸ்டுகால் கொடுப்பேன். இன்னிக்குத்தான் நான் குடுக்கலைல்ல? பின்ன எதுக்குக் கூப்பிட்டே?''

இவனுக்குள் சட்டென்று ஒரு சங்கடம் பரவி யது. ''என்ன ஐஸு... ஒரு மாதிரியாப் பேசற? நானா உனக்கு போன் பண்ணக் கூடாதா?''

''ஐயோ! வீட்ல கெஸ்ட் இருக்காங்க. ஓ.கே? போனை வை!''

இவன் ஏதோ சொல்ல வருவதற்குள் லைன் கட் ஆகிவிட்டது. இவன் வருத்தத்துடன் பாயில் சரிந்து அமர்ந்தான். இவன் கண் முன்னாலேயே அந்த எலி விடு விடு என்று குறுக்காக ஓடி டேபிளின் மீது தாவி பரணுக்குப் போனது. இவன் கொலை வெறியுடன் எழுந்தான். ஓரமாக இருந்த செருப்பை எடுத்துப் பரணில் வீசினான். அது அங்கு இருந்து தரையில் தாவி சமையல் மேடைக்கு ஓட... இவன் தண்ணீர் பாட்டிலை வீசினான். தரை எங்கும் தண்ணீர் கொட்ட... அது பால்கனிக்கு ஓடியது. சிக்கினால் அதை மிதித்தே கொல்லும் வெறியுடன் இவன் ஓட, அதைக் காணவில்லை. பால்கனி முழுக்கப் பரபரப்புடன் தேடினான். அங்கு இருந்த பழைய பக்கெட், கால் மிதி எல்லாவற்றையும் தூக்கிப் பார்த்தான். காணோம் சனியனை.

உள்ளே வந்து படுத்தவனுக்கு இன்றைய நாளின் உற்சாகம் பறிபோனதுபோல் தோன்றியது. புரண்டு புரண்டு படுத்தான். எப்போதோ சோர்ந்து தூங்கிப்போனான்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களும்கூட இதே போலவே நடந்தது. சில ஆர்டர்கள் கிடைத்தன. உற்சாகமாக வேலை பார்த்தான். இரவானால் அந்த எலி எங்கிருந்தோ வந்தது. விரட்டியதும் ஓடிப்போனது. ஐஸ்வர்யா போன் பேசவில்லை. இவனுக்கு அது மிகப் பெரிய மன வேதனையைத் தர... அவளை பழைய ஜெராக்ஸ் கடைக்குத் தேடிப் போனான். அவள் அங்கு இல்லை. கடையில் யாரோ ஒரு சிறுவன் இருந்தான். இவன் வாசலில் நின்று போன் பண்ணினான். அவள் எடுத்ததும் இவன் கடைக்கு வந்திருக்கும் விவரம் சொல்ல, அவள் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. ''கடைக்கு எல்லாம் ஏன் தேடி வர்ற ராம்? ஓனர் தப்பா நினைப்பாரு.''

''கடையில யாரும் இல்லை... ஒரு சின்னப் பையன்தான் இருக்கான்!''

''ஐயோ... சொன்னாப் புரியாதா உனக்கு? நான் இன்னிக்கு லீவு ராம். நீ கடையில நிக்காதே. ஓனருக்கு டவுட் வந்தா பிராப்ளம்...'

''சரி... போயிர்றேன். ஆனா, நீ ஏன் எனக்கு போன் பண்ணவே மாட்டேங்கிறே?''

''அதான் சொன்னேனே, வீட்ல கெஸ்ட் வந்திருக்காங்க!''

''என்ன சொல்றே நீ? வீட்ல கெஸ்ட் வர்றதுக்கும் எனக்கு நீ போன் பண்றதுக்கும் என்ன இருக்கு?''

''ப்ச்... உனக்கு அதெல்லாம் புரியாது. ப்ளீஸ்... நான் ஒண்ணு சொல்றேன். கேப்பியா?''

''சொல்லு.''

''நானா போன் பண்ணாம எனக்கு கால் பண்ண வேணாம். நானே கால் பண்றேன். என்ன?''

இவன் மனமெங்கும் ஒரு தகிக்கும் உணர்வு பரவியது. ''உனக்கு என்னாச்சு ஐஸு? எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறே! ப்ளீஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். என்ன பிரச்னைனு சொல்லு?''

''ப்ச்... சொன்னாப் புரியாதா ராம்? எல்லாத்தையும் நான் விளக்கமா சொல்லிட்டே இருக்கணும்னு ஏன் எதிர்பார்க்கிறே? தயவுசெஞ்சு நான் கால் பண்ணாப் பேசு. நீயா பண்ணாதே... அவ்ளோதான். ஓ.கே?'

இவன் அடுத்துப் பேசும் முன் லைன் கட் ஆகிவிட்டது. மறுபடி முயற்சித்தான். அவள் போனை எடுக்கவில்லை. இவனது வேதனை கோபமாகவும் எரிச்சலாகவும் மாறியது. இனி, அவ கால் பண்ணாலும் எடுக்கக் கூடாது. 'அவ்ளோ பெரிய இவளா’ அவ என்று தோன்றியது.

இரண்டு மூன்று நாட்கள் அந்த மனநிலை நீடித்தது. ஆனால், மனதின் பிறிதொரு மூலை 'ஐஸு... ஐஸு’ என்று துடிக்க, அவளுக்கு போன் செய்தான். இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. நம்பரை மாற்றிவிட்டாள் என்று தோன்ற... உடைந்துபோனான். விடு விடு என்று ஜெராக்ஸ் கடைக்குப் போனான். கடை பூட்டி இருந்தது. என்ன செய்வது என்று தோன்றாமல் அங்கே இங்கே அலைந்தான். வடபழனி கோயில் அருகே கிளி ஜோசியம் பார்த்தான். வனவாசம் போன ராமர் படம் வந்தது. நீங்க உங்க துணையைப் பிரிஞ்சிருப்பீங்க என்று அந்த ஜோசியன் சொல்ல... இவன் விரக்தி யாக எழுந்துவந்தான். அருகில் இருந்த பார்க்கில் குழப்பத்துடன் வெறுமையாக உட்கார்ந்து இருந்தபோது கம்ப்யூட்டர் செல்வம் எதிர்ப் பட்டான்.

''என்ன பாஸ் கம்ப்யூட்டர் எல்லாம் ஓ.கே-வா?''

''கம்ப்யூட்டர் ஓ.கே... ஆனா, தினமும் ராத்திரி ஒரு எலி வருது!''

செல்வம் வியப்பாகப் பார்த்தான். ''தினமும் ராத்திரி எலி வருதா? அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவெச்ச மாதிரி சொல்றீங்க பாஸ்?''

''சத்தியமா... பகல் எல்லாம் தட்டுப்படறது இல்லை. நைட்டு மட்டும் வந்திருது. விரட்டினா போயிருது. போற சனியன் மறுபடி நைட்டு வந்துருது. ஒரு ஆச்சர்யம் என்னன்னா... கம்ப்யூட்டர் என்னைக்கு வாங்கினோமோ, அன்னைல இருந்துதான் அந்த எலி வருது!'' என்று இவன் தனது உறக்கமற்ற, இரக்கமற்ற இரவுகளை விவரிக்க... செல்வம் இவனையே கவலையுடன் பார்த்தவன், ''அது சரி பாஸ்... ஆனா, ஒரு எலிப் பிரச்னைக்கா உங்க முகத்துல இவ்வளவு சோகம்?''

ராம் வருத்தமாக, ''ப்ச்... அது வேற ஒரு பிராப்ளம்!''

''என்ன லவ்வா?''

''ம்... ஆமா, தினமும் பேசிக்கிட்டு இருந்தவ. இப்பப் பேசறதே இல்லை!''

''நாட் ரீச்சபிளா?''

''ம்ஹூம்... நம்பர் டஸ் நாட் எக்ஸிஸ்ட்!''

''ம்... மேட்டர் முழுசாத் தெரியாம நான் எதுவும் சொல்லக் கூடாது. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன் பாஸ். கம்ப்யூட்டர், ஃபேஸ் புக், சாட்டிங், மொபைல் எல்லாம் வந்த பிறகு லவ்வுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது. அதைப் புரிஞ்சுக்கோங்க!''

''பேசறதைப் பாத்தா, நீங்களும் நம்பர் மாத்தற ஆளு போலிருக்கு!''

''ம்ஹூம்... நான் நம்பரை எல்லாம் மாத்த மாட்டேன். மெம்பரை மாத்திருவேன்!'' என்று சிரித்தான்.

ராமச்சந்திரன் புன்னகைக்க... அவன், ''சரி வாங்க உங்க வீட்டுக்குப் போகலாம். சிஸ்டத்துல புதுசா ரெண்டு சாஃப்ட்வேர் போட்டுவிடறேன்'' என்க... இருவரும் அறைக்கு வந்தனர். வந்தவன் சிஸ்டத்தை ஆன் பண்ணி ஏதோ செய்துகொண்டு இருக்கையில் ராமச்சந்திரனின் போன் ஒலித்தது. புது நம்பர். எடுத்தான். ஐஸ்வர்யாவின் குரல் ஒலிக்க... பால்கனிக்கு வந்து பேசினான்.

''ராம், நான்தான் ஐஸ்வர்யா!''

''சொல்லு...''

''ஒரு மேட்டர் சொல்லுவேன். அதை நீ சரியாப் புரிஞ்சுக்கணும். தேவையில்லாம அப்செட் ஆகக் கூடாது. ப்ளீஸ்...''

இவனுக்கு அதற்குள் எல்லாம் புரிந்தது போல் தோன்ற, ''சொல்லு... என்ன மேட்டர்?''

''எனக்கு ஃபிக்ஸ் ஆயிருச்சு... அதாவது... மேரேஜ்!''

''நினைச்சேன்... யாரு?''

''நம்ம ஓனரோட மச்சினன்தான்!''

ராமச்சந்திரனுக்கு உடலெல்லாம் எரிந்தது. ''ஓனரின் மச்சானா?''

''பாவி! வந்ததும் என் வேலைக்கு ஆப்பு வெச்சான். இப்ப உன்னையும் கரெக்ட் பண்ணிட்டானா? காசு இருக்குதுன்னதும் நீயும் இளிச்சுட்டேஇல்ல..?'

''ப்ச், அப்படி இல்லை ராம். நீ கம்ப்யூட்டர் வாங்கினேல்ல? அன்னிக்குதான் அவன் புரபோஸ் பண்ணான். நான் ஃபர்ஸ்ட் ஓ.கே. சொல்லலை. ஆனா, அவன் ஓனர் மூலமா எங்க வீட்ல பேசிட்டான். நாங்க ஒரே கம்யூனிட்டி வேற. நல்ல இடம்னு வீட்லயும் ஓ.கே. சொல்லிட்டாங்க. அந்த ஜெராக்ஸ் கடையை அவன் பேருக்கு மாத்தியாச்சு!''

''அப்படியா! ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஜெராக்ஸ் எடுக்கலாம். நல்ல வசதி இல்ல?''

''நக்கல் பண்ணாதே ராம். எனக்கு எவ்ளோ குழப்பமா இருந்துச்சு தெரியுமா?''

''நானாடி நக்கல் பண்றேன்? நீ பண்ணதுதான்டி பெரிய நக்கல். அது சரி, நீயும் லைஃப்ல செட்டில் ஆகணுமில்ல? என்ன பண்ணுவ? நான் என்னிக்கு டி.டி.பி. பண்ணி சம்பாரிச்சு, பெரிய ஆளாகி கார் வாங்கி...'

''நீ நிச்சயம் பெரிய ஆளா வருவே ராம். எனக்கு நம்பிக்கை இருக்கு!''

இவன் பேசாமல் இருந்தான். வயிற்றுக்குள் ஏதோ கொதிப்பது போல் இருந்தது.

''இந்த டெசிஷன் எடுக்க நான் அவ்ளோ வேதனைப்பட்டேன். இப்பவும் எனக்கு உன் மேல எவ்ளோ அக்கறை இருக்கு தெரியுமா? அவர்கிட்டகூட உன்னைப் பத்தி அவ்ளோ நல்ல விதமா சொன்னேன்!''

''ம்... நீ எவ்ளோ நல்லவனு தெரிஞ்சுருச்சு. ஆனா, நான் அவ்ளோ நல்லவன் இல்லை. அதனால இனிமே எனக்கு போன் பண்ணாத... என்ன?''

அவள் ஏதோ சொல்ல வர... இவன் இணைப்பைத் துண்டித்தான். உள்ளிருந்த செல்வம் பால்கனிக்கு வந்தான்.

''பாஸ்... மேட்டர் என்னன்னு புரிஞ்சுபோச்சு!''

''என்ன?'

''அந்த எலி கம்ப்யூட்டர் வாங்கின அன்னையிலிருந்துதானே வருது?''

''ஆமா!''

''இத பாருங்க!'' என்று அவன் எர்த் கம்பியைக் காண்பித்தான்.

''கம்ப்யூட்டர் ஃபிக்ஸ் பண்ண அன்னிக்கு நான் கீழே வரைக்கும் கட்டினது. இது வழியாதான் அது தினமும் மேல ஏறி வருதுனு நினைக்கிறேன்!''

''கரெக்ட். விரட்டும்போது பால்கனிக்கு வந்து காணாமப் போயிரும்!''

''ஓ.கே... ஓ.கே. இதை கட் பண்ணிட்டா பிராப்ளம் சால்வ்டு. எர்த் வயர் இல்லாட்டி பெரிசா ஒண்ணும் ஆயிடாது!''

செல்வம் அந்தக் கம்பியை வெட்டிச் சுருட்டி எடுத்தான்.

''இனி எலி வராது பாஸ்!''

''தேங்க்ஸ்!''

''சீரியஸா போன்ல யாரையோ கடிச்சீங்க? உங்க ஆள்தானா?''

''ம்... மெம்பரை மாத்திட்டா!''

''நான் சொல்லல? விட்டுத்தள்ளுங்க பாஸ். தொழிலைக் கவனிங்க... நான் வர்றேன்!''

அவன் போய்விட்டான். அதன் பின் இரவுகளில் எலியும் வருவதில்லை. போனும் வருவது இல்லை. தூக்கமும் வருவதுஇல்லை.

p106b.jpgஓரிரு மாதங்களுக்குப் பின், ஒரு நாள் இரவு ராமச்சந்திரனின் போன் ஒலித்தது. புது நம்பர்.

''ஹலோ!''

''ராம், நான் ஐஸ்வர்யா பேசறேன். நல்லவேளை நீ நம்பரை மாத்தலை!''

இவன் குழப்பத்துடன் என்ன விஷயம் என்று கேட்டான்.

''மேரேஜ் நடக்கலை. பிரேக் ஆயிருச்சு. அவங்க ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றாங்கப்பா. எங்க வசதிக்கு அந்த அளவுக்குச் செய்ய முடியாதுனு அம்மா சொல்லிட்டாங்க. அதுக்கு அவங்க அவ்ளோ திமிரா பேசறாங்க தெரியுமா? எவ்ளோ பணம் இருந்து என்ன செய்ய ராம்? குணம் வேணும்ல? அந்த ராஸ்கல் அவ்ளோ சீப்பா இருக்கான். அவனோட கம்ப்பேர் பண்ணும்போது நீ எவ்ளோ தங்கமானவன் ராம்?''

காதில் வந்து விழும் வார்த்தைகளில் குழம்பியவாறு பால்கனியிலிருந்து கீழே பார்த்தான் ராம். ஒரு எலி பைப் லைனின் வழியே ஏற முயன்றுகொண்டிருந்தது!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.