Jump to content

இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை


Recommended Posts

இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை

 

 

இலங்­கை அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

 

அதன்­படி பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வி­டமும், நியூ­ஸி­லாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிள­மிங்­கு­டனும், அவுஸ்­தி­ரே­லிய வீரர் டொம் மூடி­யுடனும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

hathurusinghe--tom-moody--stephen-flemin

இந்­நி­லையில் இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே­யொரு டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி விளை­யா­டு­கி­றது. இந்தத் தொட­ருக்­காக இடைக்­கால பயிற்­சி­யாளராக தற்­போ­தைய இலங்கை அணியின் களத்­த­டுப்பு பயிற்­சி­யா­ள­ரான நிக் போத்தஸ் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும், அதே­வேளை ஒருநாள் தொட­ருக்­கான துடுப்­பாட்ட பயிற்­சி­யாள­ராக முன்னாள் வீரர் அவிஷ்க குண­வர்­தன மற்றும் டெஸ்ட் போட்­டிக்­கான துடுப்­பாட்ட பயிற்சியாளராக ஹஷான் திலகரத்ன ஆகியோர் நியமிக் கப்பட வாய்ப்பிருப் பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்டு வந்த கிரஹம் போர்ட் தன் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து, புதிய பயிற்­சி­யா­ள­ராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜய­வர்­தன நிய­மிக்­கப்­ப­டலாம் என செய்­திகள் வெளி­யா­கின. 

இந்தத் தக­வலை மறுத்­துள்ள மஹேல தான் மும்பை இந்­தியன்ஸ் அணிக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தி­லேயே தற்­போது கவனம் செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21263

Link to comment
Share on other sites

இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நிக் போதஸ் நியமனம்

Published by Priyatharshan on 2017-06-27 18:06:00

 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

nic.jpg

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்திருந்த நிலையில் நிக் போதஸுக்கு இந்த இடைக்கால பயிற்றுவிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த இடைக்கால பயிற்றுவிப்பாளர் பதவி இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக் போதஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், கடமையாற்றி வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21275

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.