Jump to content

இலங்கையின் இராஜதந்திர பொறிமுறையில் மாற்றம்


Recommended Posts

இலங்கையின் இராஜதந்திர பொறிமுறையில் மாற்றம்
 

image_9c264aa8d7.jpg-யொஹான் பெரேரா
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பல, விரைவில் மூடப்படும் என்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்றுத் தெரிவித்தார்.

குறித்த இராஜதந்திர நிலையங்களின் பெறுபேறுகளையும், அந்நிலையங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதன் காரணங்களையும் அறிந்த பின்னர், இவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என, கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, இராஜதந்திரப் பொறிமுறை தொடர்பாக விளக்கமளிக்கையில்
அவர் கூறினார்.

“சில தூதரகங்களை, நாங்கள் மூடவேண்டியிருக்கிறது. ஏனெனில், அவற்றின் மூலமாக, எந்தவிதப் பயனும் இல்லை என்பது, அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது”

“வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திரத்தில் ஈடுபடுவதற்கு, அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திர உறவுகளைக் கட்டியெழுப்பி, உலகத்தை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தப் புதிய கொள்கை தொடர்பாக, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் செப்டெம்பர் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்துக்கு, வெளிநாடுகளிலுள்ள அனைத்து இராஜதந்திர நிலையங்களின் பிரதானிகளும், அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் பணிபுரிந்த, இராஜதந்திர நிலையங்களின் பிரதானிகள் மூவர், இதுவரையில் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால், அவர்களின் பெயர்களையோ அல்லது விவரங்களையோ வெளியிடுவதற்கு அவர் மறுத்து விட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ், தேசிய லொத்தர் சபையைக் கொண்டு வந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தீய எதிர்பார்ப்புகளைக் கொண்ட ஒரேயொரு நபர் மாத்திரமே, இந்த நடவடிக்கைக்கு எதிராகக் குரலெழுப்புவதாகத் தெரிவித்தார்.

“நிதி இழப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையை, இலாபம் தரும் நிறுவனமாக நான் மாற்றினேன் என்பதால் தான், அவர்கள் சத்தமிடுகிறார்கள் என நினைக்கிறேன். மறைந்த லலித் அத்துலத்முதலியின் காலத்தில், தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் மகாபொல காணப்பட்டிருந்த சந்தர்ப்பமும், கடந்த காலங்களில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை காணப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.

“இருந்த போதிலும், எனது அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை கொண்டுவரப்பட்டதன் பின்னர், பெரிதாகக் கூக்குரலிடப்படுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையின்-இராஜதந்திர-பொறிமுறையில்-மாற்றம்/175-199298

Link to comment
Share on other sites

15 வருடங்களுக்கு நல்லாட்சி நீடிக்கும் :  அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் உச்­சக்­கட்ட ஜன­நா­யக சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே தற்­போ­தைய அர­சாங்கம் எதிர்­வரும் 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக நீடிக்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கருணா­நா­யக்க தெரி­வித்தார். 

 

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எம்மால் செலுத்த முடியாத அளவு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நாம் கடன்களை செலுத்திக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்ற வகையிலான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். வாக்குகளால் வரமுடியாத சில அரசியல் வாதிகள் இன்று ஆர்ப்பாட் டங்களை தூண்டி வருகின்றனர். இதனால் காந்தியைப் போல தற்காலத்திலும் அகிம் ஷையை கடைப்பிடிக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மாக சிறி­கொ­தவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது எமது நாட்­டிற்கு ஜீ.எஸ்.பீ. வரிச்­ச­லுகை கிடைத்­துள்­ளது. அத­னை­ய­டுத்து முத­லீட்­டா­ளர்­களின் வரு­கை­யிலும் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பங்­க­ளாதேஷ் உள்­ளிட்ட நாடு­க­ளி­லி­ருந்து பல முத­லீட்­டா­ளர்கள் வரு­கின்­றார்கள்.

ஏற்­று­மதி செய­வற்­கான வாய்ப்­புக்கள் பல கிட்­ட­டி­யுள்­ளன. அதேபால் இலங்கை வெளி­நா­டு­க­ளுடன் நாம் தொடர்பு கொள்­கின்ற போது எமது நாட்டின் மனித உரி­மைகள் செயற்­பா­டுகள் தொடர்பில் பேச வேண்­டி­யி­ருந்­தது. அதனை அமைச்சர் மங்­கள சம­ர­வீர சரி­யாக செய்­துள்ளார்.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக இரா­ஜந்­திர வணிக முறை­யி­னூ­ட­கவே இலங்­கையை உலக நாடு­க­ளுடன் இணைக்க முடியும். தற்­போது அதற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. எனவே எமது வணிக செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு வெளி­நாட்­டி­லுள்ள இலங்கை தூத­ரங்­களை வலுப்­ப­டுத்­து­கின்றோம்.

தற்­போது 64 இலங்கை துத­ரங்கள் வெளி­நா­டு­களில் இயங்­கு­கின்­றன.  அவற்றில் சில­வற்றை மூட தீர்­மா­னித்­துள்ளோம். அதேபோல் மற்றும் சில இடங்­களை மேலும் வலுப்­ப­டுத்­துவோம்.  அதனால் 70 வீதம் செலவும் குறையும்.

அதனால் வலுப்­ப­டுத்­தப்­படும் தூத­ர­கங்­களின் வாயி­லாக நாட்­டிற்குள் முத­லீ­டு­களை உள்­ளீர்ப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்வோம். 

விசேட பிர­மு­கர்கள் என்ற பேரில் அநா­வ­சி­ய­மான சிலரும் வெளி­வி­வ­கார அமைச்சில் செயற்பாடுகளை முன்­னெ­டுத்­துள்­ளனர். வரு­கின்ற நாட்­களில்  விசேட பிர­மு­கர்கள் என்ற நாமத்தை வைத்­துக்­கொண்டு செயற்­படும் அநா­வ­சி­ய­மா­ன­வர்­க­ளுக்கு அந்த அந்­தஸ்த்து பறிக்­கப்­படும்.

மத்­திய கிழக்கு நாடு­ள­களில் தோன்­றி­யுள்ள அசா­தா­ரண நிலை­மையின் கார­ண­மாக  அங்கு பணி புரியும் இலங்­கை­ய­ருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை  என்­பதை தற்­போது உறு­தி­யாக கூற முடியும். அது தொடர்பில் அந்­நாட்­டி­லுள்ள வெளி­வா­கார அமைச்­சர்­க­ளி­டத்தில் பேசி இலங்­கை­யர்­க­ளுக்கு உரிய பாது­காப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி­யுள்ளோம்.

மத்­திய கிழக்கு நாடு­களில் இவ்­வா­றான நிலைமை தோன்­று­வது சக­ஜம் இருப்­பினும் அர­சாங்கம் இலங்­கை­யரை பாது­காப்­பதில் கவ­ன­மாக இருப்­ப­தோடு மத்­திய கிழக்கு நாடு­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் நாம் வலு­வாக பேணுவோம்.

கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் எம்மால் செலுத்த முடி­யாத அளவு கடன் பெற்­றுக்­கொள்­ளப்­பட்து. ஆனால் நாம் கடன்­க­ளையும் செலுத்­திக்­கொண்டு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையும் மேம்­ப­டுத்­து­கின்ற வகை­யி­லான திட்­டங்­க­ளையே தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

அதற்­காவே இன்று உலக நாடு­க­ளுடன் கைகோர்த்­துக்­கொண்டு பய­ணிக்­கின்றோம்.  அதனால் தற்­போது உள்­நாட்டு அபி­வி­ருத்தி 12 இலி­ருந்து 16 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது. இவை புதிய வரி­களால் மாத்­திரம் வர­வில்லை கடந்த காலங்­களை சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டிற்கு வெளியில் பணம் சென்றது. தற்போது அந்த நிலையை மாற்றியமைத்துள்ளோம். எதிர்­கா­லத்தில் வரியும் குறைக்­கப்­படும்.

தற்­போது முக்­கிய வரிகள் நடை­மு­றைக்கு வரு­வ­தில்லை என்று குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக மாளிகை வரி ஆகி­யவை இன்றும் நடை­மு­றைக்கு வராமல் இருப்­பதற் காரணம் என்­ன­வென்­பதே பிரச்­சி­னை­யாக உள்­ளது. இருப்­பினும் மேற்­படி வரி­க­ளுக்­கான ஆவ­ணங்­களை தயா­ரிக்கும் பணி­கள் 100 வீதம் முழு­மை­யாக்­கப்­பட்டு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் சட்­டமா அதிபர் திணைக்­களம் தற்­போது வரையில் அது தொடர்பி்ல் அர­சாங்­கத்­திற்கு பதில் வழங்­கா­ம­லேயே இருக்­கின்­றது.

வெளி­நா­டு­களில் சென்று தூது­வர்கள் என்ற பெயரில் வினோத செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­வர்­களை மீண்டும் நாட்­டுக்கு அழைக்­க­வுள்ளோம். அவ்­வாறு மூன்று நாடு­க­ளுக்கு தூவர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை மீள அழைக்­க­வுள்ளோம். இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பணி­களை உரிய வித்தில் செய்­யா­மையே இவர்கள் மீள அழைக்­கப்­பட கார­ண­மாகும். தற்­போ­தைய அர­சாங்கம் முத­லீட்­ட­ளார்­க­ளி­டத்­தி­லி­ருந்து நாட்­டினுள் வரும் முத­லீட்­டா­ளர்­களின் தொகையில் அதி­க­ரிப்பை செய்து தரு­மாறு தான் கோரிக்கை விடுக்­கின்­றது.

 எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வெளி­நா­டு­களில் இருக்­கின்ற இலங்கை தூது­வர்­களை சக­ல­ரையும் அழைப்­பித்து அர­சாங்கம் அவர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­க­வுள்­ளது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இவர்­களை சந்­திப்­பார்கள்.  பய­னில்­லாத தூத­ரங்­க­ளையும் மூடு­வ­தற்கு தற்­போது அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

அர­சாங்­கம்­தொ­டர்ந்­தும்­நி­லைக்­குமா?

அர­சாங்­கத்தை நடத்திச் செல்­வதில் தற்­போது எந்த பிரச்­சி­னையும் இல்லை. அர­சாங்கம் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் அர­சாங்­கத்­திற்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. அவ்­வா­றி­ருந்தும் ஆர்ப்­பாட்டம் செய்­கின்­ற­வர்­க­ளுக்கும் இன்று சுதந்­திரம் உள்­ளது.

எவ்­வா­றா­யினும் இன்று பல்கலைகழக நிர்வாகங்களும் கூடஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டும் என்றே கூறுகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி போகின்றது. வாக்குகளால் வர முடியாத சில அரசியல் வாதிகளின்  இன்று இவ்வாறான தூண்டல்களை செய்கின்றார்கள். அதனால் காந்தியை போல தற்காலத்திலும் அகிம்சையை கடைபிபடிக்க முடியாது.

எனவே அரசாங்கம்  என்றும் சட்டத்திற்கு முறணான செயற்பாடுகளை அனுமதிக்காது. அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேலை மறுபுறத்தில் ஜனாநாய சுதந்திரத்தையும் அதிகமாக வழங்கியுள்ள அரசாங்கம் ஆட்சியில் இன்னும் 15 வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/21226

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.