Jump to content

இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள்


Recommended Posts

இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள்
 

நோன்பு காலம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கே ஒரு புனிதமான காலப்பகுதியாகும்.   

அவர்கள், அக்காலப்பகுதியில் தங்களுடைய மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான, அமைதியான சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அவ்வாறான அமைதியான சூழல் இலங்கையில் இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியது.   

image_7099e9d256.jpg

நமது அனுபவங்களின்படி, கடந்த சில வருடங்களாக, இலங்கையில் இனவாத செயற்பாடுகள் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்த இனவாதச் செயற்பாடுகள், நோன்பு காலங்களில் தீவிரமடைகின்றன.   

‘கிறீஸ் பூதம்’, ‘அபாயா பிரச்சினை’, ‘பள்ளிகளுக்குள் பன்றி இறைச்சி வீசியமை’, ‘பள்ளிவாசல்களைத் தாக்கியமை’, ‘முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குத் தீயிட்டுக் கொழுத்தியமை’ போன்ற சம்பவங்கள், நோன்பு காலத்தை மையமாகக் கொண்டே, மேற்கொள்ளப்பட்டமை அல்லது ரமழான் நோன்பில் தீவிரமடைந்தமை கவனிப்புக்குரிய விடயமாகும்.   

இம்முறை நோன்பு காலத்தில், பள்ளிவாசல்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பல இடங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவை எல்லாக் காரியங்களையும் மேற்கொள்வது யாரென்பது தெட்டத்தெளிவாகத் தெரிந்திருக்க, சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை என்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.   

சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை என்று கூறுவதைக் காட்டிலும், பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத விதத்தில், மேலிடத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.   

இதனால், முஸ்லிம்கள் ஆத்திரமடைந்திருந்த கட்டத்தில், ஜனாதிபதி கொழும்பில் நடாத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டுமென்று, முஸ்லிம் சமூக செயற்பாட்டுத் தளத்தில் இருந்து குரல்கள் எழுந்தன.   

அதையும் மீறி, முஸ்லிம் அரசியல்வாதிகளும் கணிசமான முஸ்லிம்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மறுநாள், நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த, பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தில் சரணடைந்தார்.   

எனவே, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுகின்றது என்று, இனவாதத்துக்கு எதிரான எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும்போதே, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு, இரண்டு நீதிமன்றங்களால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இதனால், முஸ்லிம்கள் மத்தியில் மீளவும் பல்வேறு கருத்துகள் எழுந்திருக்கின்றன.   

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் இப்தாருக்கும் ஞானசார தேரர் சரணடைந்ததுக்கும் சிலவேளைகளில் தொடர்பிருக்கலாம் என்ற அனுமானங்களும் சமூக வலைத்தளங்களில் பகரப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.  

இம்முறை, ரமழான் நோன்பு காலத்தைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்களின் அரசியலிலும் சரி, தேசிய அரசியலிலும் சரி இப்தார் நிகழ்வுகள் வழமையைவிடவும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததாக சொல்ல முடியும்.   

குறிப்பாக, கிழக்கிலும் கொழும்பிலும் இந்நிலைமைகள் அவதானிக்கப்பட்டன. கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகளும் அமைப்புகளும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.  

 ஊடக அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா மற்றும் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எனப் பலர் கலந்து கொண்டனர். ஆனால், மு.கா தலைவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த யாருமே இந்த இப்தாருக்கு வந்திருக்கவில்லை.  

மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சம்மாந்துறையில் இடம்பெற்ற இப்தாரில், அக்கட்சியின் தலைவர் கலந்து கொண்டார். தேசிய காங்கிரஸ் கட்சியினால் அக்கரைப்பற்றில் நடாத்தப்பட்ட இப்தாரில் அக்கட்சியின் தலைவர் கலந்து கொண்டார்.   

ஆனால், இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்குப் பிராந்திய முக்கியஸ்தர்களாலும் மாகாண சபை உறுப்பினர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டு கிழக்கில் நடந்த இப்தார் நிகழ்வுகளில், கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவில்லை என்பது பல்வேறு கருத்தாடல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.   

மேற்குறிப்பிட்ட எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட அல்லது கலந்து கொள்ளாத அரசியல்வாதிகளின் முடிவுகளுக்குப் பின்னால், கொஞ்சம் அரசியலும் கொஞ்சம் நியாயங்களும் இருக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் மறந்து விடக் கூடாது.   

குறிப்பாக, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இப்தாரில் மு.கா தலைவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேசியப்பட்டியல் எம்.பி தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட அட்டாளைச்சேனைக்கு இன்னும் அந்த வெகுமானம் கொடுக்கப்படவில்லை. தற்காலிக எம்.பியே ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, அப்பதவியில் இருக்கின்றார்.   

எனவே, இந்த இப்தாரில் இது குறித்துத் தலைவர் ஏதாவது பேசியாக வேண்டிய ஓர் இக்கட்டான நிலை இருந்தது. இந்த நிலையிலேயே, அவர் அதில் கலந்து கொள்ளவில்லைப் போலும். இதற்கு உண்மையாகவே நியாயமான காரணங்கள் கூறப்பட்டாலும், தேசியப்பட்டியல் எம்.பி குறித்த தேவையற்ற தலையிடிகள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் மு.கா தலைவர் இவ்வாறு நடந்து கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.   

சரி, அட்டாளைச்சேனைக்குத்தான் வரவில்லை என்றாலும் கூட, கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மு.க சார்பு இப்தார் நிகழ்வுகள் எதிலுமே அக்கட்சியின் தலைவர், ஏன் பிரசன்னமாகி இருக்கவில்லை என்ற கேள்வி கட்சி முக்கியஸ்தர்களிடையே தோன்றியுள்ளது. ஏனெனில், தலைவருக்கு மிக நெருக்கமான கிழக்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்விலோ, அக்கரைப்பற்றில் மாகாண சபை உறுப்பினர் ஒருவரால்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலோ மு.கா தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது, மக்களால் கவனிக்கப்பட்டுள்ளது.   

கிழக்கில் மு.காவுக்கு பாரிய சவால்கள் எழுந்துள்ள ஒரு காலசூழலில், கட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றார் என்றால், அதற்குத் தலைவரிடம் பலமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயமானது.   

இது இவ்வாறிருக்க, நாட்டின் ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வுபற்றிக் குறிப்பிடத்தக்க வாதப் பிரதிவாதங்கள் மேலெழுந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இலங்கையில் கடும்போக்கு சக்திகள், மிக மோசமான இனவெறுப்புப் பிரசாரங்களிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.  

 சட்டம் எல்லோருக்கும் பொதுவானது எனச் சொல்லப்பட்டாலும் கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஓரிரு பௌத்த துறவிகளின் விடயத்தில், அந்தப் பொதுவான தன்மையைக் காணக் கிடைக்கவில்லை.   

இந்தச் சக்திகளுக்குப் பின்னால், ஓரிரு அமைச்சர்களோ அல்லது அரசியல் பலமோ இருக்கின்றது என்று கூறப்படுகின்ற நிலையில், கண்முன்னே அத்துமீறுகின்ற இனவாதிகளைக் கைது செய்து, அதற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடிக்காமல், ‘இது சதி’ என்று அரசாங்கம் தொடர்ந்து கூறிக் கொண்டு, மெத்தனமாகச் செயற்படுகின்ற போக்கை, முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்ற நிலை இன்னுமிருக்கின்றது.  

எனவே, இப்படியாகச் செயற்பட்டுக் கொண்டு, முஸ்லிம்களோடு நட்புப் பாராட்டுவதற்காக ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வை, பகிஸ்கரிக்க வேண்டும் என்று முஸ்லிம் சிவில் செயற்பாட்டுத் தளத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.   

ஆனால், அதையும் மீறி, கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, நோன்பு திறந்ததையும் அவதானிக்க முடிந்தது.   

இலங்கை முஸ்லிம்கள், தமக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத நெருக்குவாரங்கள் மற்றும் அதற்கெதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யாதிருக்கின்றமை ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பை அரசுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்பதைக் கொஞ்சம் கூட மறுப்பதற்கில்லை. 

 ஆனால், இப்தார் போன்ற நிகழ்வுகள் இதற்குப் பொருத்தமான கருவியா என்பதையும் ஒரு சமய நிகழ்வைப் பகிஷ்கரிப்பதன் மூலம், தமது எதிர்ப்பை முஸ்லிம்கள் போதுமானளவுக்கு வெளிப்படுத்த முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.   

இப்போது முஸ்லிம்கள், எதிர்க்கட்சி அரசியலை முற்றாக இழந்திருக்கின்றனர். அதாவது, எதிர்க்கட்சி ஆசனங்களில் எந்த முஸ்லிம் எம்.பியும் இல்லை. எல்லா முஸ்லிம் எம்.பிகளும் ஆளும் தரப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர். பலருக்கு அமைச்சு, அரைஅமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.   

இந்நிலையில், தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்றால், அரசாங்கத்தில் கணிசமான வீதத்தில் இருக்கின்ற முஸ்லிம் எம்.பிக்கள் சபை நடவடிக்கையைப் பகிஷ்கரிக்கலாம்; நாடாளுமன்றத்தின் முன் சத்தியாக்கிரகம் செய்யலாம்; ஓரிருவராவது தமது பதவிகளை இராஜினாமாச் செய்யலாம். அதன்மூலம், அரசாங்கத்தில் ஆட்சிக் கட்டமைப்பில் ஓர் அதிர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதைவிடுத்து, ஆளும் தரப்பில் இருந்து கொண்டு, அமைச்சுப் பதவிகள், அதற்குண்டான சொகுசுகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டு, இப்தார் போன்ற சாதாரணமான நிகழ்வுகளைப் பகிஷ்கரிப்பது எந்தளவுக்கு நன்மைபயக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.   

இவற்றையெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள், உலமா சபையினர் ஆழமாகச் சிந்தித்தார்களோ, சிந்திக்கவில்லையோ தெரியாது. ஆனால், அரச இப்தார் நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொது மகன்களும் கலந்து சிறப்பித்தனர்.   

இதைச் சரியென்று ஒரு தரப்பும் பிழை என்று இன்னொரு தரப்பும் வாதித்துக் கொண்டிருந்த நிலையில், நான்கு பொலிஸ் குழுக்களால் சல்லடை போட்டுத் தேடப்பட்டு வந்த, பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், மிகவும் இலாவகமான முறையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.   

அவர் சரணடைந்த செய்தி கடந்த புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வெளியானது. இனவாதத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழ், சிங்கள முற்போக்குச் சக்திகளுக்கும் இது ஓர் ஆறுதலான செய்தியாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நிலைபெறுவதாக அவர்கள் உணரத் தொடங்கினர்.   
ஆனால், அந்த உணர்வும் ஆறுதலும் நீடிக்கவில்லை. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட பிடியாணை, அவர் அங்கு சரணடைந்ததைத் தொடர்ந்து மீளப்பெறப்பட்டு, பிணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் மற்றும் 4ஆம் இலக்க நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போதும், அவருக்கு அந்தந்த நீதிமன்றங்கள் பிணை வழங்கியுள்ளன. சில மணித்தியால இடைவெளியில், ஒரு விறுவிறுப்பான திரைப்படக் காட்சியைப் போல மேற்சொன்ன எல்லாமும் நடந்தேறின. அவர் கைதான செய்தி மக்களுக்கு கிடைத்தவுடனேயே பிணை வழங்கிய செய்தியும் வெளியாகியிருந்தது.   

நீதிமன்ற நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, நாட்டில் ஒட்டுமொத்தமாக, இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்ட ஒரு நபர், இவ்வாறு சரணடைந்ததுக்கும் அரச இப்தாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள் கலந்து கொண்டதற்கும் தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்திலும் இவ்விடயம் நோக்கப்படுகின்றது. அதாவது, முஸ்லிம்களைக் கலந்து கொள்ளச் செய்வதற்காக அல்லது கலந்து கொண்டதற்கு பகரமாக அவர் சரணடையச் செய்யப்பட்டாரா என்று நோக்கப்படுகின்றது.   

அதைவிட முக்கியமாக, மேற்படி தேரர் நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டு வந்தவர். அவர் மீது பல முறைப்பாடுகளும் இருந்தன. இப்படியிருக்க, நான்கு பொலிஸ் குழுக்களாலும் கண்டுபிடிக்க முடியாதிருந்த (?) ஒருவருக்கு ஒரு நீதிமன்றத்தில் பிணை வாபஸ் பெறப்பட்டுள்ளது; மட்டுமன்றி, கைது செய்யப்பட்டு ஆஜர் செய்யப்பட்ட இரு நீதிமன்றங்களும் கூட பிணையில் விடுவித்து இருக்கின்றன.   

இலங்கை முஸ்லிம்கள் காலகாலமாக நாட்டின் சட்டத்தையும் இறைமையையும் மதித்துச் செயற்படுகின்றார்கள். இனவாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பல்ல; ஏனெனில், அதனால் ஏற்படக் கூடிய எதிர்விளைவுகளையும் அவர்கள் அறிவார்கள். மாறாக, இந்நாட்டில் இனவாத நெருக்குவாரங்கள் இல்லாத சூழலில், இன செளஜன்யத்துடன் வாழ வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர்.  

 அவ்வாறான ஒரு சூழல் நாட்டில் தற்போது இல்லை என்பதே நோன்புக் காலத்திலும் தொடரும் முஸ்லிம்களின் கவலையாக இருக்கின்றது. எனவே, சட்டமும் நீதித் துறையும் அந்தக் கவலையை போக்க வேண்டியுள்ளது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இப்தார்-அரசியல்-நோன்பு-காலத்து-கவலைகள்/91-199257

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சட்டம் வேணும்....மூதுரில் கெடுக்க்ப்பட்ட சிறுமிகளுக்கு நியாயம் கிடக்க மட்டும் ஒன்றாகநின்று நியாயம் மறுப்பியளோ.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.