Jump to content

குசல் மெண்டிஸ் என்னைவிடத் திறமையானவர் – குமார் சங்கக்கார


Recommended Posts

குசல் மெண்டிஸ் என்னைவிடத் திறமையானவர் – குமார் சங்கக்கார

 
Kusal-Mendis5-696x4511-696x450.jpg
Davis-Cup-2017-728-banner.jpg

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, இளம் வீரரான குசல் மெண்டிஸ் அவரது தற்போதைய வயதில் அடைந்திருக்கும் (சாதனை) அடைவுமட்டத்தினை தான் அப்போதைய தனது வயதில் பெற்றிருக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

மேலும், குசல் மெண்டிஸ் தனது இளவயதில் வெளிக்காட்டிய திறமைகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்கார பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, தற்போதைய மெண்டிசின் வயதில் தான் இருந்த போது தான் வெளிக்காட்டிய ஆட்டத்தினை விட மிகவும் முன்னேற்றகரமான ஆட்டத்தினை அவர் காட்டுவதாகவும் கூறியிருக்கின்றார்.

குசல் மெண்டிஸ், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் போட்டியொன்றில், 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன் மூலம் அப்போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருந்த அவர் கிரிக்கெட் உலகிற்கும் தன்னால் சாதிக்க முடியும் என்பதனை வெளிக்காட்டியிருந்தார்.

 

மெண்டிஸ் தனது 21ஆவது வயதில் பெற்றிருந்த இச்சதமானது, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இத்தசாப்த காலத்தில் வயது குறைந்த இளம் வீரர் ஒருவரினால் பெறப்பட்ட சதமாகப் பதிவாகியிருந்தது. இன்னும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 150 ஓட்டங்களைக் கடந்த, வயது குறைந்த இளம் வீரர்களில் இரண்டாவது வீரராகவும் அச்சதம் மூலம் மெண்டிஸ் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.

தற்போது, மீள்கட்டியெழுப்பப்படும் அனுபவம் குறைந்த இலங்கை அணியில், முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக காணப்படும் மெண்டிஸ், குமார் சங்கக்கார தனது கன்னி டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்த வயதிற்கு (23) இரண்டு வயது குறைவான நிலையில் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கக்கார, மெண்டிஸ் உடன் சேர்த்து ஏனைய சில இலங்கை வீரர்களின் அண்மைய ஆட்டங்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

“நான் குசல் மெண்டிஸை, கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் பார்த்திருந்தேன். அவரது ஆட்டம் மிகவும் ரசிக்கும் விதமாக காணப்பட்டிருந்தது. அப்படியான ஒரு ஆட்டத்தினை, நான் எனது அப்போதைய வயதில் கனவில் கூட  நினைத்துப் பார்த்திருக்கவில்லை.“

“அதே போன்று, அசேல குணரத்ன அவுஸ்திரேலிய அணியுடன் T20 போட்டிகளில் விளையாடிய விதம், லஹிரு குமார தென்னாபிரிக்க அணியியை தனது பந்து வீச்சினால் கட்டுப்படுத்தியிருந்த விதம், துஷ்மந்த சமீர நியூசிலாந்தில் பந்து வீசிய விதம், லக்‌ஷாக்ஷன் சந்தகன் அவுஸ்திரேலிய அணியை நிலைகுலையச் செய்ய விதம், (போன்ற) இளம் வீரர்களின் ஆட்டத்தினை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தேன். இதனாலேயே, இலங்கை கிரிக்கெட் மீது ஒரு நல்லெண்ணம் காணப்படுகின்றது.”

என குமார் சங்கக்கார குசல் மெண்டிஸ் பற்றியும், ஏனைய வீரர்கள் பற்றியும் பேசியிருந்தார்.

 

குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலகரத்ன தில்ஷான் ஆகிய முக்கிய வீரர்களின் ஓய்விற்குப் பின்னர், இலங்கை அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

எனினும், தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை வீரர்களின் ஆட்டம் முன்னேற்றம் அடைந்திருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறி இருப்பினும் குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க மற்றும் அசேல குணரத்ன ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர். இவ்வாறான வீரர்கள் இலங்கை அணிக்கு கிடைத்திருப்பது துவண்டு போயிருந்த இலங்கை கிரிக்கெட் மீண்டும் புத்துயிர் அடைந்து வருவதனை உறுதிப்படுத்துகின்றது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.