Jump to content

ரவிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல.

"அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்"

"ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை"

"அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்"

" அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்"

"கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்"

"உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி"

"அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களை சொல்லாதையுங்கோ"

"எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனென்றால் கீரிமலையில் வந்து நிற்பன்"

"பின்ன போறது தானே பிள்ளைகள் கூப்பிடுதுகள்"

"எங்கன்ட நாட்டு தண்ணி அந்த மாதிரி,  சுவிம் பண்ணினாலும் ஒரு சுகமிருக்கும் உவங்கன்ட சாக்கடை கடலில் எவன் சுவிம் பண்ணுவான் அதோட சுறாவும் வந்து கடிச்சு போடும்"

"உவற்றையை தான் சுறா பார்த்துகொண்டிருக்கு கடிக்கிறதற்கு விட்டா அப்பர்  உதுவும் கதைப்பார் உதுக்கு மேலயும் கதைப்பார்"

மனிசி அவனுடைய‌ கதைகளால் எரிச்சலடைவது புரிந்து

"சரி வீக்கென்ட் போவம்"

எங்கன்ட நாட்டில நல்ல சுவிம்மேர்ஸ் இருந்தவையள் அவையள் இலங்கையிலிருந்து     இந்தியாவிற்கு நீந்தி போய் திரும்பி வந்தவையள் ,அதுமட்டுமல்ல இங்கிலிஸ் கனலையும் நீந்த முயற்சித்தவையள்  என  ஆழிக்குமரன் ஆனந்தனைப்பற்றி சொல்லி சரிந்த எனது இமேஜ்ஜை  சரிக்கட்ட முயற்சித் தான் ஆனால் ஒருத்தரும் அதை கண்டு கொண்டமாதிரி தெரியவில்லை.

கறுத்த கண்ணாடி போடுற வழக்கம் அவனுக்கில்லை.ஆனால் கடற்கரைக்கு போகும் பொழுது மட்டும்  மறக்காமல் கொண்டு போய் விடுவான்.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க வேணும் என்ற நல்லெண்ணம்எல்லோரும் வெளியால சூரியனை கண்டவுடனே கறுத்த கண்ணாடி போடுவினம் ஆனால் அவன் பீச்சுக்கு போனால் மட்டும்தான் கறுத்தக்கண்ணாடி போடுறவன்அன்று வெளிக்கிட்டு சிறுதூரம் சென்ற பின்பு பொக்கற்றை தட்டிப்பார்த்தவன் ,கறுத்த கண்ணாடி எடுத்து வரவில்லை என்றுணர்ந்து காரை திருப்பினான்.

"ஏன் இப்ப திரும்பி வீட்டை விடுறீயள்"

"வயிற்றை வலிக்குது ஒருக்கா இறக்கினால் சுகமா இருக்கும் "

"வெளிக்கிட முதல் உதுகளை செய்யிறதில்லை"

"சரி சரி இருங்கோ டக் என்று ஓடி வாறேன்."

"டக் என்று வாறது என்றால் காரை ஸ்டார்ட்டில் விட்டிட்டு .சியை ஒன் பண்ணிட்டு போங்கோ"

" பெற்றோல் வெஸ்டா போயிடும் யன்னலை திறந்துவிடுங்கோ"

கார் திறப்பை எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று

கண்ணாடியை தூக்கினான் அவனை பார்த்து  அது 'என்ன பீச்சுக்கோ' என்று கேட்பது போன்றிருந்தது.

மீண்டும் காரை பீச் நோக்கி செலுத்தினான்.லெட்டாக போனால் கார் பார்க் கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் வேகத்தை கூட்டினான்.சிட்னிமுருகன் புண்ணியத்தில் பீச்சுக்கு கிட்ட ஓரிடம் கிடைத்தது.

குடும்பத்தினருடன்  உடையைமாற்றி நீந்த  சென்றான் . அவனுடைய நீச்சல் சகாசங்களை புரிந்து விட்டு கரைக்கு வந்தவன் , ரவலை விரித்து அமர்ந்து கலப்படம் செய்த கோக்கை சுவைத்தபடி கறுத்த கண்ணாடியை மாட்டினான் அது அவனைப்பார்த்து சிரிப்பது போலிருந்தது.  .நீச்சல் உடையில் பலர் உலா வந்தனர் .சிலர் உள்ளாடைபட்டிகளால் வந்த அடையாளங்களை கலைவதற்காக  சூரிய குளியல் செய்துகொண்டிருந்தனர்.சிறுவர்கள் மணலில் வீடுகள்,கோட்டைகள் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். 

இளைஞன் ஒருவன் கோக் கான் ஒன்றை மறைவாககுலுக்கிவிட்டு நண்பியிடம் கொடுத்தான் அவள் வாங்கி திறக்க அது சிறீப்பாய்ந்து  அவளது முகத்தை நனைத்தது,செல்லமாக திட்டியபடி அவனை துரத்திசென்று கட்டிப்பிடித்து மணலில் வீழ்த்தினாள் அவன் அவளது இதழ்களை தனது இதழ்களால் கவ்விகொண்டான்.

 

அருகிலிருந்த  கலப்படமான கொக்கை ஊறிஞ்சியவன்  ,நாகரிகம் கருதி பார்வையை திருப்பவில்லை வேறு காட்சிகள் தெரியும் என்ற எதிர்பார்ப்பில் திருப்பினான்.

 

 

அவனுக்கு  உலக நடப்புக்கள் தெரியதொடங்கிய காலகட்டத்தில் அதாவது சின்ன வயசில்  அவன் கண்ட ஆச்சிமார்களில் பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த ஆச்சிமார் பிளவுஸ் போட்டிருப்பினம்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரவிக்கை போட்டிருக்கமாட்டார்கள்.பிளவுஸ் போட்ட ஆச்சிமார்கள் கூட்டத்தில் பழகிய அவனுக்கு ரவிக்கை போடாதா ஆச்சிமாரை கண்டால் ஒரே சிரிப்பு .. அவனுடய‌  ஊர் சந்தைக்கு பெயரே ரவிக்கை சந்தை.சந்தைக்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள் ரவிக்கை போட்டிருந்தகாரணத்தாலோ அல்லது அங்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் ரவிக்கை போட்டிருந்தகாரணத்தால் அந்த பெயர் வந்ததோ என அண்மைக்காலம் வரை தெரியாமலிருந்த அவனுக்கு மேடைபேச்சாளர் ஒருவர் மூலம் விடை கிடைத்தது..

மானிப்பாயிலிருந்த டச்சுஇராணுத்தினர் ரொந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது மானிப்பாய் சந்தையில் மட்டும் ஏன் அதிகளவு நேரத்தை செலவழிக்கின்றனர்  என்பதை அறிவதற்காக அவர்களது கப்டன் மறைமுகமாக நின்று அவதானித்துள்ளான் .காரணத்தை அறிந்த கப்டன் அடுத்த நாள் சந்தைக்கு தனது மனைவியின் ரவிக்கையை கொண்டு வந்து இரண்டு தடியை குறுக்காக கட்டி அதற்கு ரவிக்கையை அணிவித்து இனி வியாபாரம் செய்ய வரும் பெண்கள் இதை அணிந்து வரவேண்டும் இல்லையேல் வியாபாரம் பண்ணமுடியாது என்று கட்டளை பிறப்பித்தான் அன்றிலிருந்து அது ரவிக்கை சந்தையாக மாறியது என மேடை பேச்சாளர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வரவே மீண்டும் தனது கலப்பட கோக்கை முழுமையாக குடித்து முடித்தவன்  . அன்று சுதந்திரமாக திரிந்த எம்மை அடிமையாக்கியவன் ,இன்று சுதந்திரமா திரியிரான் நாங்கள் கறுத்த கண்ணாடியோட திரியவேண்டிகிடக்கு எனபுறுபுறுத்தபடியே எழும்பி     உடம்பில் பட்டிருந்த மண்ணை தட்டியவன் கானை வாயில்வைத்தான் அது நான் காலிடப்பா என்றது .கானை கையால் நசுக்கி ஆத்திரதை குறைத்தான்.

 

குடும்பத்தினர் இவனருகே வர கார் திறப்பை மனைவியிடம் கொடுத்தான்.

"ஏனப்பா நீங்கள் ஓடுங்கோவன்"

"எனக்கு தலையிடிக்குது"

"வாயை ஊதூங்கோ பார்ப்போம்"

"ஏய் நீ என்ன பொலிஸ்காரியே....மனசனுக்கு வெறுப்பை ஏற்றாமல் ஓடப்பா"

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

மானிப்பாயிலிருந்த டச்சுஇராணுத்தினர் ரொந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது மானிப்பாய் சந்தையில் மட்டும் ஏன் அதிகளவு நேரத்தை செலவழிக்கின்றனர்  என்பதை அறிவதற்காக அவர்களது கப்டன் மறைமுகமாக நின்று அவதானித்துள்ளான் .காரணத்தை அறிந்த கப்டன் அடுத்த நாள் சந்தைக்கு தனது மனைவியின் ரவிக்கையை கொண்டு வந்து இரண்டு தடியை குறுக்காக கட்டி அதற்கு ரவிக்கையை அணிவித்து இனி வியாபாரம் செய்ய வரும் பெண்கள் இதை அணிந்து வரவேண்டும் இல்லையேல் வியாபாரம் பண்ணமுடியாது என்று கட்டளை பிறப்பித்தான் அன்றிலிருந்து அது ரவிக்கை சந்தையாக மாறியது என மேடை பேச்சாளர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வரவே மீண்டும் தனது கலப்பட கோக்கை முழுமையாக குடித்து முடித்தவன்  . அன்று சுதந்திரமாக திரிந்த எம்மை அடிமையாக்கியவன் ,இன்று சுதந்திரமா திரியிரான் நாங்கள் கறுத்த கண்ணாடியோட திரியவேண்டிகிடக்கு எனபுறுபுறுத்தபடியே எழும்பி     உடம்பில் பட்டிருந்த மண்ணை தட்டியவன் கானை வாயில்வைத்தான் அது நான் காலிடப்பா என்றது .கானை கையால் நசுக்கி ஆத்திரதை குறைத்தான்.

"டச்சுக்கார கப்டன்"  செய்த வேலையால்... தான், நம்ம   சனங்கள்  ரவிக்கை போட  வேண்டி வந்தது.... 
என்ற அரிய தகவலை குறிப்பிட்ட, புத்தனின் "கல கல   கிறுக்கல்" அருமை. :D:

இந்தக் கதைக்கு,  படம் போடாமல் இருந்தால் சரியில்லை புத்தன்.:grin:

Bildergebnis für ரவிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை வழங்கிய நவீனனுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

ன்று வெளிக்கிட்டு சிறுதூரம் சென்ற பின்பு பொக்கற்றை தட்டிப்பார்த்தவன் ,கறுத்த கண்ணாடி எடுத்து வரவில்லை என்றுணர்ந்து காரை திருப்பினான்.

இந்த கறுத்த கண்ணாடிக்குள்ள ஒரு பிட்டு படம் பார்க்க எத்தனித்து இருக்குறியள் என்பதை சொல்லாமல் சொல்லுகிறேன் உன்மையோ அது :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனி ஒருவன் said:

இந்த கறுத்த கண்ணாடிக்குள்ள ஒரு பிட்டு படம் பார்க்க எத்தனித்து இருக்குறியள் என்பதை சொல்லாமல் சொல்லுகிறேன் உன்மையோ அது :unsure:

நான் அவனில்லை( சில விசயங்களை பப்ளிக்கா சொன்னா என்ட‌ இமேஜ் கெட்டு போயிடும்)...:10_wink:.வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

"டச்சுக்கார கப்டன்"  செய்த வேலையால்... தான், நம்ம   சனங்கள்  ரவிக்கை போட  வேண்டி வந்தது.... 
என்ற அரிய தகவலை குறிப்பிட்ட, புத்தனின் "கல கல   கிறுக்கல்" அருமை. :D:

இந்தக் கதைக்கு,  படம் போடாமல் இருந்தால் சரியில்லை புத்தன்.:grin:

Bildergebnis für ரவிக்கை

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் அத்துடன் அருமையான  யன்னல் வைக்காத‌ ரவிக்கையை போட்டு வீட்டின் உள் அழகை ரசிக்க தந்தமைக்கு நன்றிகள்.. 

17 hours ago, putthan said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சமர்க்கதை புத்தன்.tw_thumbsup:

9 hours ago, putthan said:

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் அத்துடன் அருமையான  யன்னல் வைக்காத‌ ரவிக்கையை போட்டு வீட்டின் உள் அழகை ரசிக்க தந்தமைக்கு நன்றிகள்.. 

 

இதைப்போய் உள்வீடெண்டால்!!!!!!!!!!! அப்ப உள்வீட்டை என்னெண்டு சொல்லுவீங்க? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நல்ல சமர்க்கதை புத்தன்.tw_thumbsup:

இதைப்போய் உள்வீடெண்டால்!!!!!!!!!!! அப்ப உள்வீட்டை என்னெண்டு சொல்லுவீங்க? :grin:

மன்னிக்கவும் திண்ணையின் உள் அழகு என்று சொல்லலாமோ?:10_wink:வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கு.சா

Image result for திண்ணை images

பச்சை புள்ளிகள் வழங்கிய நவீனன்,ஜீவன்சிவா,வல்வைசகாரா,நிலாமதி,தும்பளையான்,யாழ்கவி,புங்கையூரன் 
ஆகியோருக்கு அடியேனின் மனம்கனிந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவிக்கை இல்லாமல் யாவாரம் செய்தால்தான் சனம் சாமனோட மினக்கிடாது.:unsure:வழமை மாதிரி பின்னிட்டிங்கள் புத்தன்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/26/2017 at 9:19 PM, குமாரசாமி said:

நல்ல சமர்க்கதை புத்தன்.tw_thumbsup:

இதைப்போய் உள்வீடெண்டால்!!!!!!!!!!! அப்ப உள்வீட்டை என்னெண்டு சொல்லுவீங்க? :grin:

சாமியார் எதை சொல்லுறியள்  எண்டுதான் ஒன்றும் விளங்குதில்லைtw_blush::10_wink: image.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-28 at 1:38 AM, சுவைப்பிரியன் said:

ரவிக்கை இல்லாமல் யாவாரம் செய்தால்தான் சனம் சாமனோட மினக்கிடாது.:unsure:வழமை மாதிரி பின்னிட்டிங்கள் புத்தன்:)

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் சுவைப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.6.2017 at 3:16 PM, putthan said:

 

 

"எங்கன்ட நாட்டு தண்ணி அந்த மாதிரி,  சுவிம் பண்ணினாலும் ஒரு சுகமிருக்கும் உவங்கன்ட சாக்கடை கடலில் எவன் சுவிம் பண்ணுவான் அதோட சுறாவும் வந்து கடிச்சு போடும்"

"உவற்றையை தான் சுறா பார்த்துகொண்டிருக்கு கடிக்கிறதற்கு விட்டா அப்பர்  உதுவும் கதைப்பார் உதுக்கு மேலயும் கதைப்பார்"

 

புத்தரே கவனம்
அடுத்த முறை பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள்
கிறுக்கல் மன்னா சூப்பர் :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/06/2017 at 10:03 PM, வாத்தியார் said:

புத்தரே கவனம்
அடுத்த முறை பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள்
கிறுக்கல் மன்னா சூப்பர் :11_blush:

இப்ப நான் உவங்கள் கிரிக்கட் காரன்கள் போடுறதை  போட்டுங்கொண்டு தான் சுவிமிங் போறனான் :10_wink:...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கந்தப்பு said:

உதுதான் புத்தர் அடிக்கடி கடற்கரைக்குப் போய் வார இரகசிமோ?

அப்பு நான் அவனில்லை ....எத்தனைதரம் சொல்லுறது.....அது சரி இவ்வளவு  நாளும் எங்க போயிருந்தீங்கள் ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் தொடர்ந்து யாழுக்கு வந்து உங்களுடைய பச்சை புள்ளிகளை அள்ளி வ‌ழ்ங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரவிக்கையை வைத்து வெரி இன்ரஸ்ட்டிங்கான கதை, மற்றும் ரவிக்கை சம்பந்தமான ஒரு தகவல்..... சூப்பர் புத்ஸ் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.