Jump to content

5 எம்.பிக்கள் ஜேர்மனி பயணம்


Recommended Posts

5 எம்.பிக்கள் ஜேர்மனி பயணம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் உள்­ளிட்ட 5 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஜேர்­ம­னி­யின் அர­ச­மைப்­புத் தொடர்­பில் ஆராய்­வதற்காக 5 நாள் பய­ண­மாக இன்று புறப்­பட்­டுச் செல்­ல­வுள்­ள­னர்.

இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த, ஜேர்மன் சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார். அரசியல் பார்வை என்ற தலைப்பில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்தப் பயணத்தின்போது ஜேர்மனியின் அரசமைப்பு, அங்குள்ள நடைமுறைகள் தொடர்பில் நேரில் ஆராயப்படவுள்ளது.

இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியா, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

http://uthayandaily.com/story/7949.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நவீனன் said:

ரசியல் பார்வை என்ற தலைப்பில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

ஜெர்மன் காரங்கள் எங்களுக்கு அரசியல் சொல்லி தரத்தேவையில்லை...பெளத்தம் எங்கள் மதம் சிங்களம் எங்கள் மொழி ...இதுதான் எங்கள் அரசியல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மருதரின் வேண்டுகோள் ஒன்றரை வருடங்களின் பின்னர் நிறைவேறுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, MEERA said:

 

மருதரின் வேண்டுகோள் ஒன்றரை வருடங்களின் பின்னர் நிறைவேறுகிறது

 

மருதர்... ஒன்றரை வருடங்களுக்கு, முன்பு தெரிவித்த கருத்தை... நினைவில் வைத்தது மட்டுமல்லாமல்,
அந்தப் பதிவை தேடி எடுத்து, இணைத்த.... மீராவின், நினைவாற்றலுக்கு பாராட்டுக்கள். :) tw_thumbsup:

Link to comment
Share on other sites

இரா.சம்பந்தன் உட்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேர்மனிக்குப் பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்துநாள் பயணமாக ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர்.

ஜேர்மனியின் அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவே குறித்த குழுவினர் ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர்.

அண்மையில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த ஜேர்மன் சபாநாயகர் இவ்வழைப்பை விடுத்திருந்தார்.

இந்தப் பயணத்தின்போது ஜேர்மன் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அந்நாட்டின் நடைமுறைகள் தொடர்பாக இக்குழுவினர் ஆராயவுள்ளனர்.

இக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கருஜெயசூரிய, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

http://thuliyam.com/?p=71933

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

image.jpg

தோழர்,  அவர்கள்..... வடை, இட்டலி, தோசை சாப்பிட... தமிழ் நாட்டிற்கு வரவில்லை.
கறி  வூஸ்டும், போமஸு ம்.... சாப்பிட ஜெர்மனிக்கு வருகின்றார்கள்.  :grin:

Bildergebnis für currywurst comic Bildergebnis für currywurst comic

Link to comment
Share on other sites

ஜேர்மனியில் சபாநாயகர் கரு தலைமையில் சம்பந்தன், ஹக்கீம், அநுரகுமார,கயந்த, அதுனுகம

 

 

சபா­நா­யகர் கரு ஜய சூரிய தலை­மை­யி­லான முக்­கி­யஸ்­தர்கள் அடங்­கிய குழு­வொன்று ஜேர்மன் நோக்கி நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பய­ணித்­துள்­ளது.

german-sampanthan-anura-sarth-rauf-karu.

இக்­குழுவில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமி ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அமைச்­சர்­க­ளான ரவுப் ஹக்கீம், சரத் அமு­னு­கம, கயந்த கரு­ணா­தி­லக, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிரதம கொர­டா­வு­மான பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  அனுர குமா­ர­தி­ச­நா­யக்க ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர். 

எதிர்­வரும் ஐந்து தினங்கள் ஜேர்­மனில் தங்­கி­யி­ருக்கும் இக்­கு­ழு­வினர் அந்­நாட்டு அர­சி­ய­ல­மைப்பு உட்­பட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய்ந்­த­றி­ய­வுள்­ளனர். 

அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த  ஜேர்மன் சபா­நா­யகர் இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை கருத்திற் கொண்டு சுபீட்­ச­மான ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கத்­தினை அடைந்து கொள்­வ­தற்­கான தமது முழ­மை­யான  ஒத்­து­ழைப்­புக்­களை நல்­கு­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதற்­காக தமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பான அனு­ப­வத்­தினை பகிர்ந்து கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆதற்­கி­ணங்க சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற அர­சியல் கட்சி தலை­வர்­களை தமது நாட்­டிற்கு வருகை தரு­மாறும் அழைப்பை விடுத்­தி­ருந்தார். 

இந்­நி­லையில் "அர­சி­யல்­பார்வை" என்ற தலைப்பில் மேற்­படி விஜ­யத்­தினை மேற்­கொண்­டுள்ள இலங்கைக்கு குழுவினர் ஜேர்மனில் காணப்படும் அரசியலமைப்பு உட்பட ஏனைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு அரச உயர்மட்டத்தினரையும் துறைசார் நிபுணர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்

http://www.virakesari.lk/article/21225

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.