Jump to content

கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் EuropeCar நிறுவனம் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் 

இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம்.

ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. 

போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள்.

வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்டார்கள்.

நிறுவனத்தின் உள்ளே போய், கார் டயர் மாத்தவேண்டுமே என்றேன்.

அவர்களோ, இந்த காருக்கு, £120 வரியுடன் என்றார்கள். காரினை உள்ளே கொண்டு போய், கார் இலக்கத்தினை கணனியில் பதிவு செய்தவுடன், தலையை சொறிந்தவாறே சொன்னார், இது வாடைக்கு எடுத்த கார் அல்லவா என்றார். அதற்கு என்ன என்றேன்.

இல்லை, எமக்கும் அவர்களுக்கு ஒரு வியாபார தொடர்பு உண்டு. நீ பணம் கட்டிட தேவையில்லை. நாம் டயர் மாத்தி தருகிறோம் என்றார்கள்

பொறி தட்டியது. நான் உனக்கு பணத்தினை செலுத்துகிறேன். அவர்களுடன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். இல்லை அவ்வாறு செய்ய முடியாது என்றார்.

நான் கடுப்புடன், எனது வங்கி தரும் ரெகவரி சர்வீஸைக் கூப்பிட்டு, வேறு இடத்துக்கு கொண்டு போவேன் என்றேன்.

வழிக்கு வந்தார்கள். 

வண்டியைக் திருப்பிக் கொடுத்து விட்டு வந்த பின்னர், £260 க்கு பில் வந்தது. டயர் மாத்திய வகையில் செலுத்த வேண்டுமாம்.

நான் நேரே செலுத்தி, ரசீது வைத்திருக்கிறேன். இப்ப எங்கிருந்து பில் வருகிறது என்றேன். அவர்களோ, நீ கட்டி இருக்க கூடாதே. பணக் கொடுப்பனவு எல்லாம் எம்முடன் தானே இருந்திருக்க வேண்டும் என்றார்கள்.

உனது வேலை கார் வாடைக்கு தருவது. போன இடத்தில பெட்ரோல் போடுவது எங்கே என்பது எனது கவலை. அதே போல் எங்கே டயர் மாத்துவது என்பது எனது கவலை என்றேன்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் அதை கான்செல் பண்ணுனார்கள்.

இப்ப பலரது முறைப்பாடுகளின் பின்னர் அதிகாரிகள் முழித்திருக்கிறார்கள். இது ஒரு மோசடி என Trading standard agency களமிறங்கி உள்ளது. இந்த மோசடி அநேகமாக எல்லா வாடைக்கு கார் தரும் நிறுவனங்கள் அனைத்துமே செய்கின்றன. ஆகவே சிக்கல் அனைவருக்கும் தான் என்கிறார்கள்.

சந்தையில் ஒருவர் இருந்தால் monopoly: அவர் நினைத்த பணத்தினை அறவிடுவார். 

பலர் இருந்தால் Oligopoli: போட்டியினால் விலை குறையும். ஆனால் அவர்கள் தமக்குள் பேசி, அதிக விலை அறவிடுவோம் என்று ரகசியமாக தீர்மானித்தால் அது Price Fixing. 

Price Fixing என்பது மிகவும் சீரியஸ் ஆன மோசடி என்று இந்த துறை சார்ந்த நிபுணர்கள் சொல்கின்றனர். இந்த வகை மோசடியினை தடுப்பதில் அரசு மிக கவனமாக இருக்கும். இவ்வகையான ஒரு மோசடியில், விர்ஜின் ஏர்வேய்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் அதிகாரிகள் சிக்கி உள்ளே போனார்கள்.

உதாரணமாக, கொழும்பு போக கத்தார் ஏர் £400, ஏர்லங்கா £800 என்று விலை இருக்கிறது. ஏர்லங்கா அதிகாரிக்கு குறைக்க விருப்பமில்லை என்றால், கத்தார் அதிகாரிக்கு போனை போட்டு, என்ன, இந்த விலை விக்கிறாய், பேசாம இருவருமே £900 ஆக்கி விடுவோம். ரெண்டு பேருக்கும் நல்ல காசு என்று பேசி விலையை நிர்ணயித்தால் அது, சந்தையின் சுஜமான இயக்கத்தினை குலைக்கும் Price fixing மோசடி

http://www.telegraph.co.uk/news/2017/06/24/exclusive-europcar-accused-overcharging-customers-repairs/

**************************

இன்னொமொரு மோசடி விரைவில் சிக்கும். அது கூரியர் கொம்பனிகள்.

முன்னர் இந்தியாவில் இருந்து ஒன்லைன் மூலமாக புடவை வாங்கும் போது, கிபிட் அல்லது வியாபார மாதிரி என்று போடடால் வரி இருக்காது.

இப்ப வரி அடிக்கிறார்கள். தாமதத்தினை தவிர்க்க அந்த வரியை தாம் கட்டிவிட்டதாகவும், டெலிவரி செய்ய முதல், £12 admin சார்ஜ் உடன் வரியையும் சேர்த்துக் காட்டுமாறு ஈமெயில் வரும்.

இரு வேறு கம்பெனிகள் (DHL, Fedex) மூலம் இரு வேறு கடைகள் இருந்து பொருட்கள் ஓர்டர் பண்ண இருவரும் £12 சேர்த்து பில் போட்டு அனுப்பினார்கள்.

VAT வரி அறவிட, கட்டணம் வசூலிக்க, சட்டத்தில் இடமில்லையே, எப்படி என்றேன். அரண்டு போன Fedex அதை கான்செல் பண்ணி விட்டது. DHL ல்  kuldeep என்னும் இந்தியர், பெரிய எடுப்பு எடுத்தார். அவர் இந்தியாவில் கால் சென்றரில் இருந்து ஈமெயில் போட்டுக் கொண்டிருந்ததால், இங்குள்ள சட்டம் புரியவில்லை.

அவசரம், £12 க்கு மினக்கெடுவதா என்று விட்டு விட்டேன். பிறகு நேரம் கிடைக்க வில்லை. அதுக்கும் Trading standard agenc கு முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்னமும் வசூலிக்கிறார்கள். எதிர்ப்பவர்களுக்கு கான்செல் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இரு வேறு கம்பெனிகள் (DHL, Fedex) மூலம் இரு வேறு கடைகள் இருந்து பொருட்கள் ஓர்டர் பண்ண இருவரும் £12 சேர்த்து பில் போட்டு அனுப்பினார்கள்.

usலிருந்து சில உதிரிபாககங்கள் வேண்டும்பொழுது இந்த  Fedexகாரன் வேறையா vat டியூட்டி அறவிட்டன் ஆனால் அப்படி கட்டினால் டக்ஸ் ஒபீசில் இருந்து இவ்வளவு டக்ஸ் கட்டியுள்ளாய் என்று சேர்ட்டிபிக்கட் போல் ஒன்றை (பெரிய அலுவா)அனுப்புவாங்கள் இந்த  Fedexகாரனின் டக்ஸ் கடடுனால் ஒன்றும் வராது நாதமுனி சொல்வது இதையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

usலிருந்து சில உதிரிபாககங்கள் வேண்டும்பொழுது இந்த  Fedexகாரன் வேறையா vat டியூட்டி அறவிட்டன் ஆனால் அப்படி கட்டினால் டக்ஸ் ஒபீசில் இருந்து இவ்வளவு டக்ஸ் கட்டியுள்ளாய் என்று சேர்ட்டிபிக்கட் போல் ஒன்றை (பெரிய அலுவா)அனுப்புவாங்கள் இந்த  Fedexகாரனின் டக்ஸ் கடடுனால் ஒன்றும் வராது நாதமுனி சொல்வது இதையா?

ஆமாம், பெருமாள். 

இந்த இணைய வியாபாரம் பெரிசா வளர்ந்த பின்னர், அரசாங்கம் வரி அறிவிடுவதில் மும்மரம்.

VAT சுங்கத்திணைக்களத்தினால் அறவிடப்படுவது.

இதில விஷயம் என்னவெனில், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகள், VAT கட்டினால் தான் பொருட்களை உள்ளே விடும். பிரித்தானியா மட்டும் பொருளை வித்த பின்னர் கடடலாம் என சொல்வதால், ஐரோப்பாவுக்கு வரும் எமது மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் பிரிட்டன் வந்தே ஏனைய ஐரோப்பிய நாடுகள் செல்லும்.

குறைந்தது மூன்று மாதம், cashflow வசதி இருக்கும். 

ஆனால், நீங்கள் US ல் இருந்து பொருள் எடுக்கும் போது, உங்கள் சொந்த பெயரில் என்னும் போது, உங்கள் பாவனைக்கு என கருதி உடனே வரி அறவிட அரசு சொல்கிறது.

இங்கே உள்ள விசயம் என்னெவெனில், உங்கள் பொருள், அங்கே sender கையளிக்கும் போதே, அதன் விலை என்ன என்று குறிப்பிட வேண்டும். அதில் இருந்து கட்டவேண்டிய 20% கணித்து உங்களுக்கு, பொருள் ட்ரான்சிட்டில் இருக்கும் போது, ஈமெயில் அனுப்பி விடுவார்கள். 

இந்த பொருளுக்கான கூரியர் பணத்தினை முதலே, பொருள் விலையுடன் செலுத்தி இருப்பீர்கள். ஆனால் US வியாபாரிக்கு உங்கள் நாட்டு வரி அறவிட அதிகாரம் இல்லை. தேவையும் இல்லை.

ஆகவே இந்த வேலையை கூரியர் தலையில் விட்டு விட்டார்கள். கூரியர் உங்களுக்கு ஈமெயில் அனுப்பி, பொருள் சுங்கச் சாவடியில் தாமதமாவதை தவிர்க்க, உங்களுக்காக, அந்த வரியை நாம் செலுத்துகிறோம். அதன் admin chare £12. சேர்த்துக் கொடுங்கோ என்கிறார்கள்.

அவர்களது கூரியர் சார்ஜ் £7. அட்மின் சார்ஜ் £12 என்றால் எந்த ஊர் நியாயம். இன்னும் மோசம். வரி £4 ஆயின்?

அப்ப நியாயத்தைப் பிளந்தால்,

1.  வரி எவ்வளவு என்று சொல்லு, நான் கட்டுகிறேன். உன்னிடம் நான் கடன் கேட்கவில்லையே. பிறகேன் கொடுத்துவிட்டு என்னிடம் £12 கேட்க்கிறாய்.

2. பிரித்தானியாவில் அரசுக்கான VAT அறவிட கட்டணம் வசூலிப்பது, பாரளுமன்ற சட்டத்தினால் அங்கீகரிக்கப் படவில்லை. இது சட்ட ரீதியானதா?

என்று போட, FEDEX அதைக் cancel பண்ணி விட்டது. DHL இந்தியாவில் இருந்து, இந்தியன் லா கதைச்சார். அந்த ஈமெயில்களை, அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தாலே அவர்களுக்கு சிக்கல். நமக்கு சரி £12 சண்டை போட பிரயோசனமான என்று விட்டு விட்டேன்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.