Jump to content

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்


Recommended Posts

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

 

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் சிறிலங்காப் படையினரால் மாத்திரமே இடம்பெறவில்லையென்று தெரிவித்த சுமந்திரன், இதனுடன் தமிழ் ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=71705

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்
 
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
 
இவ்வாறான உண்மைகளைத் தெரிவித்தால் தம்மை தேசத் துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தா லேயே தமிழீழ விடுதலை புலிகளின் தவறுகள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள்  வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருப்பதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய சுமந்திரன், யுத்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான ஆட்சேர்ப்பு குறித்தும் கண்டறியப்பட வேண்டும். 
 
தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தால் சிலர் அதனைக் கூறாமல் இருக்கலாம். எனினும் இது அனைத்தும் உண்மை. அது எமது மக்களுக்கு தெரியும். யாராலும் இதனை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவது மிகவும் முக்கியம்.
 
உண்மை வெளிக்கொண்டுவரப்படும் போது உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். இந்த அலுவலகத்தை செயற்படுத்துவதில் அச்சமில்லாமல் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின் றேன். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். யார் என்ன செய்தது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லிணக்கத்தை நோக்கி ஏனைய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
 
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இராணுவம் உட்பட அரச படையினரால் மாத்திரம்  இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த சுமந்திரன் இதற்கு தமிழ் ஆயுதக் குழு க்களுக்கும் தொடர்பிருப்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், காணாமல்போனவர்கள் தடுப்புக் காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது மாத்திரம் போதுமானது அல்ல. மிகவும் முக்கியமான இந்த விடயத்தை கையாளும் அரசாங்கத்தினது வழி முறையாக இது அமையாது. 
 
கட்டாயம் நடை முறையொன்று இருக்க வேண்டும். இந்த விடயத்தில் பாதுகாப்பு துறைசார்ந்த அச்சம் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு தரப்பினால் மாத்திரம் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர் என்பது உண்மையான விடயம். அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயத்தில் கட்டாயம் பொறுப்புகூற வேண்டும். அது தொடர்பான விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.
 
 
நீண்டகாலம் நீடித்த மோதல்களின் போது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனையவர்களும் பொறுப்புகூற வேண்டும். பரணகம ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது எனது மகன் காணாமல் போயுள்ளார். நான் ஆயுதக்குழுவுடன் அலுவலகத்திற்கு சென்று ஏன் எனது மகனை பிடித்துவைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். 
 
அவரை விரைவில் விடுதலை செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தார்கள் என பல பெற்றோர் சாட் சியம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்களினால் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியும் உள்ளன. 
 
ஏனைய ஆயுதக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட காலப் பகுதியும் உள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட காலத்தில் இந்த காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களை யார் முன்னெடுத்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும். 
 
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான உண்மை கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15009&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் சிங்களவனுக்கு பதிலா நாடு நாடாய் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வார் போல் உள்ளது  அண்ணருக்கு cv இடம் வாங்கிகட்ட காரணமானவர்கள் மீது கோபம் வருவது இயற்கைதானே. நாலு பணம் விதை மாத்திரம் நட்டவர் தமிழர் பகுதியுள் வேறு ஒன்றும் இதுவரை தமிழர்க்கு செய்ததா சரித்திரம் இல்லை மொத்தத்தில் இவர் ஓய்வு போனால் வடமாகாண அரசியல் ஒரு குழப்பமும் இல்லாமல் போகும் இன்று இப்படி சொல்றவர் நாளை தேர்தல் மேடையில் பல்டி அடித்து கதைப்பார் நான் அப்படி சொல்லவில்லை என்றும் சொல்லிவிட்டு போய் விடுவார்.  தமிழர்க்கு கிடைத்த சாபக்கேடு சுமத்திரன் அரசியலுக்கு வந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

 

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
 

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

 

அருமை
அற்புதம்
ஆழம்
நிறைந்த
ஆரோக்கியமான கருத்து

மேலும் அதிகம்
எதிர்பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

அதானே ஆரம்ப காலங்களில் அரசாங்க துணையுடன்  கடத்தியவர்கள் இன்று கதிரையிலே இருக்குறார்கள் அவர்களை இவர் கண் பார்க்க வில்லையா அல்லது அவர்கள் இவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்று யோசிக்கிறாரா என்ன 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்... இருக்கும் .மட்டும்.. வாலை சுருட்டிக் கொண்டு, பதுங்கி  இருந்து விட்டு, 
பின் கதவால்.... தமிழ்  அரசியலுக்குள் நுழைந்து, 
இன்று.. தமிழ்  மக்களுக்காகவே... போராடி மடிந்த, புலிகளை விமர்சிக்க...
சுமந்திரனுக்கு... என்ன அருகதை உள்ளது.
(வாயில கனக்க  வருது, எழுத்து...  நாகரிகம் கருதி, எழுதவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் பெரிய நீதிமான் போல பேசிட்டராம்...

அப்படின்னா.. நீதிமான் அவர்களே..

தாங்கள் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்ட ஆட்பிடிப்பு பற்றியும் விசாரிக்க கேட்கலாம்..

ஏன்.. சிங்கள இளைஞர்களை கட்டாய ஆட்பிடிப்புக்கு உட்படுத்திய சொறீலங்கா இராணுவத்தையும் விசாரிக்க கேட்கலாம்..

அதுபோக.. சிங்கள இராணுவத்தின் கைக்கூலி உதிரி தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கு சொறீலங்கா இராணுவம் ஆட்பிடிக்க உதவியமை குறித்தும் விசாரிக்கலாம்..

அதுக்கு மேல.. தமிழரசுக் கட்சி ஆட்கள்.. சாராயமும்.. சோடாப் போத்தலும்.. கத்தி.. பொல்லும் கொடுத்து இளைஞர்களை... ஆட்சேர்த்தது குறித்தும் விசாரிக்கலாம்..

இதுகளை தாங்கள்.. பேச மறுப்பது ஏனோ.. நீதிமான் அவர்களே..

ஓ தங்களுக்கு புலிகள் என்றால்.. கொஞ்சம் நடுக்கம் போலும். tw_blush::rolleyes:

முடிஞ்சா.. உந்த சுமந்திரன் என்ற வகையறா.. யாழ் இணையத்தளத்தில் நேரடி கேள்வி பதிலுக்கு வருவாரா... 

ஒரு உருப்படியான.. ஈழத்தின் வரலாறே தெரியாத.. இந்த அரைகுறை.. இப்ப ஈழத்தமிழர்களின் அரசியலை தீர்மானிப்பது.. அவமானம்..!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Athavan CH said:

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

கலோ மிஸ்டர் சுமந்திரன்! 
என்ன சொல்லி வாக்கு கேட்டு பாராளுமன்றம் போனீர்கள்?
ஞாபகமிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இப்ப வேண்டாம் என்றது ..........?

முன்பக்கம் விசாரியுங்கோ ...
பின்பக்கம் விசாரியுங்கோ ....
சுத்தி சுத்தி விசாரியுங்கோ ....

தமிழர்களை திட்டமிட்டு கொன்ற சிங்கள அரசை யார் விசாரிப்பது ?

ஏற்கனவே இங்கு இருந்தவர் ஒருவர் மீண்டும் 
வேறு பெயரில் வந்து குழை அடிச்சுக்கொண்டு நிற்கிறார்.

சிலர் நினைக்கினம் ... முதல்வர் சி வி ஒன்றும் செய்யவில்லை என்பது 
எமக்கு தெரியாது என்று ....... அவர் ஒன்றும் செய்யவில்லை .... இனிமேலும் ஒன்றும் 
செய்யவும் மாட்ட்டார் ....... இது யாழில் இருக்கும் சாதரண மக்களுக்கும் தெரியும் 
அப்படி அவர் ஏதும் செய்தாலும் .......... சிங்களவன் விடடாலும் 
பொறுக்கிகள் விட மாட்டார்கள் என்பதும் யாவருக்கும் தெரியும். 

இருந்தாலும் எமக்கு சி வி தான் வேண்டும்.
ஒரே ஒரு காரணம் ..........

இப்படி சொந்த இனத்தை வித்து பிழைக்க அந்த மனுஷன் துணியாது 
எனும் ஒரே காரணம்தான். 

Link to comment
Share on other sites

முன்னாள் போராளிகளை வாழவே விடமாட்டீர்களா?

 

15018.jpg
பொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம்  ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும்.
 
அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தங்களை ஒரு நிலையாளர்கள்  போல காட்டிக் கொள்ள முனைகின்றனர்.
 
நம் நாட்டைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் சரி, இன யுத்தம் சரி, அனைத்தும் பேரினவாதத்தின் கொடுமையின் விளைவுகளாகும்.
 
தமிழினத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பேரினவாத ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் அமுலாக்கிய அரசியலமைப்புகளும் திட்டமிடல்களும் சிறுபான்மைத் தமிழினத்தை மிக மோசமாகப் பாதித்தது.
 
தவிர, காலத்துக்குக் காலம் தமிழின அழிப்புகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறின. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் இனக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
இந்நிலையிலேயே ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை முகிழ்ந்தது.
 
ஆயுதப் போராட்ட சிந்தனைகூட தமிழனத் தலைவர்களின் அகிம்சைப் போராட்டங்கள் நசுக்கப்பட்ட நிலையில்; தமிழ் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு விடுதலையைத் தரும் என தமிழ் தலைவர்கள் மேடையேறி உசுப்பேத்திய நிலையில் ஏற்பட்டதுதான்.
 
இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம் என்ற கட்டத்தில் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை தமிழர் தாயகத்தில் தோற்றமுற்றன.
 
அவற்றின் பாதை பல வழிப்பட்டு ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மண் மீட்புப் போரை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்பாக நின்று நிலைத்தது.
 
ஒருபுறம் இன யுத்தம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனால் தீர்வை எட்டுவதற்கு எவரும் உடன்பட்டிலர். ஈற்றில் உலக நாடுகளின் உதவியோடு வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகக் கொடும் போர் நடந்தது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாமல் போயிற்று.
 
தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு  பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொன்று அழித்தது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றது.
 
சரணடைந்த புலிப் போராளிகள் எங்கே? என்பது இன்றுவரை தெரியவில்லை.
 
நிலைமை இதுவாக இருக்கையில் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிப்பதென்றால் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என்று நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர் எனில், அதன் பொருள் புரியவில்லை.
 
போரில் அழிக்கப்பட்ட  ஓர் அமைப்புத் தொடர் பில் விசாரணை நடத்துவது எங்ஙனம் சாத்தியமாகும்?
 
அதேநேரம் சட்டப்படி காப்பாற்ற வேண்டிய படையினரிடம், ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்து வதே பொருத்துடையதும் நியாயமானதுமாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15018&ctype=news

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடுகுடுப்பைக் கும்பலுக்கு யாரோ (யார் ஹிந்திய எஜமானர்கள் தான். நக்கிறதுக்கு.. பொறுக்கிறதுக்கு.. கூனுறத்துக்கு குறுகிறதுக்கு.. போற இடமெல்லாம் எஜமானர்கள் வாய்க்கிறது... சகஜம் தானே..)     சொல்லிக்கொடுத்துள்ள ராஜதந்திரம் என்ன என்றால்.. உங்கள் சிங்கள எஜமானர்களை செல்லக் கிள்ளுப் பண்ணனுன்னா.. சொந்த இனத்துக்கு தலையில் சம்மட்டியால் அடிச்சு வீழ்த்தனும். நீங்களே உங்கள் இனத்தை அழிக்க உதவனும்.. அப்ப தான்.. நீங்கள் எங்களையும்.. உங்கள் சிங்கள எஜமானர்களையும் மகிழ்வித்து.. சுயபோக.. சுகபோகங்களை அனுபவிக்கலாம்.

இது தான் சம் சும் மாவை கும்பலின் ராஜதரித்திரம். இது தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மீள முடியாத அடிமை நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பது மட்டுமே.. யதார்த்தமாகும்.

புலிகளை அழித்ததும் இந்தா தீர்வு என்றார்கள்.. இன்று... தீர்வு.. தமிழர்களை அழி என்றாகி வந்து நிற்கிறது. இந்தக் கும்பலின் ராஜதரித்திரத்தின்.. முடிவு இது.

இந்தக் கும்பலை முதலில் தமிழ் மக்களுக்கான அரசியலை தீர்மானிக்கும்.. தளத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியது தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்கு இப்போ.. மிக முக்கியமாக அமைகிறது. இந்தக் கும்பலுக்கு வால்பிடிக்கும் அனைவரும்.. வெளியேற்றப்படனும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கு அரசியல் சமூக.. பொருண்மிய விடிவு என்பது ஈழ மண்ணில்.. எனி அமைய வாய்ப்பே இல்லை. அந்த வாய்ப்பை.. இல்லாமல் செய்வதே இந்த கும்பலின் அரசியலாகும்.  இது மிகவும் ஆபத்தானது. புலித் துவேசிகள்.. இதுக்கு விசிலடிக்கலாம்.. ஆனால்.. இல்லாத புலிகளை சம்பந்தப்படுத்தி.. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையும்.. பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு.. வழங்கப்பட வேண்டிய உரிமையையும்.. பறிப்பது.. ராஜதந்திரம் அல்ல.. ராஜதரித்திர அணுகுமுறை... இது மொத்த தமிழ் இனத்துக்குமே பாதகமான விளைவுகளையே உண்டு பண்ணும். ஒரு சிலர் சுகபோகங்களை அனுபவிக்கலாம். அவ்வளவும் தான். 

சம் சும் மாவை கும்பல்.. இதை தான் செய்யும் என்று அப்பவே சொல்லிட்டார்கள்.. நாமும் இங்கு யாழில் சொல்லி இருந்தோம். இது ஒன்றும்.. எதிர்பார்க்காதது அல்ல. ஆனால்.. மக்கள்.. இன்னும் இவர்களை நம்பும் முட்டாள்களாக இருப்பது தான் வேடிக்கை. 

இவர்களின் சிந்தனை ஓட்டம்.. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த சிந்தனை ஓட்டமாக அன்றி.. அன்று ஒப்புக்காவது சில இனத்துக்கு விசுவாசமாக சிந்திக்கச் செய்யப்பட்டார்கள்.. இன்று அந்த ஒப்பும் இழந்து.. எஜமான விசுவாச நோக்கமும்.. சுயநலமுமே இவர்களிடம் பழையபடி மண்டி இட்டுக் கிடக்கிறது. இவர்களை மக்கள் எனியும் சரியாக இனங்கண்டு.. அரசியல் தளத்தில் இருந்து விரட்டி அடிக்கவில்லை என்றால்.. சரியான பதில் பிரதியீடுகளை செய்யவில்லை என்றால்... ஈழத்தீவில் தமிழ் மக்களின் இருப்பும் அரசியலும் நிச்சயம் முற்றாக நாசம் செய்யப்படும்.. சிங்கள ஹிந்திய வல்லாதிக்க எஜமானர்களாலும்.. அவர்களுக்கு வால்பிடிக்கும் எமது இன சுயபோக.. சுகபோகத் துரோகிகளாலும். :rolleyes:tw_angry:

மக்கள் தான் இப்போ தமது தலைவிதியை தீர்மானிக்க வேண்டியவர்களாகி உள்ளனர். 

அவர்களை வழிநடத்த.. நிச்சயம்.. நல்ல சிந்தன உள்ள இளைஞர்கள் தாயகத்திலும்.. புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர்.

உலகம்.. வன்முறைக்கு எதிராக நிலை எடுத்துள்ள நிலையில்.. நாம்.. எமது மூலோபாயங்களை மாற்றி.. எமது மக்களின் அரசியல் சமூக.பொருண்மிய.. தேச விடுதலை என்பதை.. சாத்தியமாக்கும் எல்லா மாற்றுவழிகளையும் பாவிப்பதே இன்றுள்ள நல்ல தெரிவாகும். இதற்கு ஒரு குழுவாக அன்றி பல குழுவாக இயங்கினாலும்.. இலக்கை ஒன்றாக்கினால்... இன்னும் எதிரிகளை சமாளிப்பது இலகுவாகும்.  ஆனால்.. இனம்.. தேசம். என்ற கொள்கைப் பிடிப்பில் இருந்தும்.. அடைய வேண்டிய இலக்கில் இருந்தும்.. விலகாத.. நல்ல நோக்கம் அங்கு நிலையாக இருந்தால்.. வெற்றிகள் நிச்சயம் அமையும். மக்கள்  எனி இது தொடர்பில் தான் சிந்திக்கனும். பழைய பஞ்சாங்களையும்.. அவற்றை ஒட்டி உள்ள.. புதிய சந்தனம்.. குங்குமங்களையும் நம்பி.. எமது இனம்.. தேசம்.. தனது உரிமையை ஒருபோதும் அடையாது. அப்படி அடையச் செய்வதற்கான எந்த வலுவும்.. உந்தப் பஞ்சாங்கங்களிடம் இல்லை. அதையே.. கடந்த.. 8 வருடங்கள் எமக்கு உணர்த்தி உள்ளன. இதுவே காலம் கடந்தது தான். எனியும் காலம் கடத்துவதும்.. இந்த கோமாளிகளுக்கு..இனத்துரோக.. கூத்துக்காட்ட இடமளிப்பதும்.. ஆபத்தான விளைவுகளையே உண்டு பண்ணும்.

ஒன்றில்.. இந்தக் கோமாளிகள்.. தம்மை திருத்திக் கொள்ள மக்கள்.. தம்மை தம் வலுவை பாவிக்கனும்.. இல்லை.. இவர்களை.. மக்கள் தம் தீர்ப்பால்.. அரசியல் களத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும். அதேவேளை.. சோரம் போகாத..சரியான பிரதியீடுகளை செய்தும் கொள்ளவும் வேண்டும்.

இது மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். 

நன்றி.. நெடுக்காலபோவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2017 at 2:42 PM, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

செத்துப் போன உங்க ஆயா நடத்தை கெட்டவள் / கொலைகாரி என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? 

* முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-24 at 3:49 AM, விசுகு said:

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

உவையள் தாங்களே தங்களுக்கு ஒளிவட்டமிருக்கு என்று நினைச்சுகொண்டு கதைக்க வெளிக்கிடுற்வையள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

Link to comment
Share on other sites

43 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

 

5 hours ago, nunavilan said:

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

தமிழருக்கு மறதி அதிகம் 
சுமந்திரன் ஏன் அரசிலுக்கு கொண்டு வரப்பட்டார் என்பதே மறந்து போச்சு.

கோத்தபய எல்லோரையும் கடாசிய நேரத்தில் ... தமிழ்த்தேசிய கூடடமிப்பிலும் கை வைக்கலாம் 
எனும் நடுக்கம் எல்லோருக்கும் இருந்தது. சிங்கள மூத்த பத்திரிக்கையாளர்களையே களை 
எடுத்துக்கொண்டு இருந்த நேரம் ....... சம்மந்தருக்கு ஒரு குலை நடுக்கம் இருந்தது 
தன்னையும் ஏதும் காரணம் சொல்லி உள்ளே போடடால் என்ன செய்வது என்று.

அப்போதான் கொழும்பு வாழ் மகிந்த கூட்ட்டத்துடன் ஒட்டி உறவாடி கொண்டு இருந்த 
சுமந்திரன் தட்டு பட்டார் ......... அவரை கொண்டு கோத்தபாயவிட்கு செய்தி அனுப்பினார்.
நாங்கள் தேர்தலில் வெல்ல சும்மா அப்பிடி இப்படி பேசினோமே தவிர 
மற்றும்படி ....... நாங்களும் நீங்களும் ஒன்றுதான் என்று 
அதை சுமந்திரன் சாதகமாக்கி .........புலி இல்லை ... இனி உயிருக்கு ஆபத்தும் இல்லை 
என்று தெரிந்த பின்தான் பின் கதவால் உள்ளே வந்தார்.

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 

 

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

 டி.பி. எஸ் ஜெயராஜ் கனடாவில் இலங்கைத் தூதரகத்துடன் சேர்ந்தியங்கியவர் என்றும் அவர் சுமத்திரனின் உறவினர் என்றும் , சுமத்திரன் கனடா சென்றால் இவரின் வீட்டில் தான் தங்குவார் எனறும் நானும் எங்கோ படித்துள்ளேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.