Jump to content

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்


Recommended Posts

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

 

துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

குட்டை பாவாடையுடன் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.

"இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் ஊதா நிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்துவரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் கன்னிப்படலத்தை மீண்டும் ஒட்டச்செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான ஹேமன்நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தியாரிடம் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டுபிடிக்கலாம் என்று மிகவும் கவலையடைகிறார்.

பிறப்புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச்செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர்காலத்தில் எப்போதாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.

துனீசிய கடற்கரையில் அமர்ந்திருக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

"என்றாவது ஒருநாள் என்னுடைய கணவரோடு உரையாடும்போது என்னை நானே காட்டிக்கொடுத்துவிடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

அழுத்தம்

சில இளம் பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப்பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.

அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்தையே நிறுத்திவிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

துனீசிய பெண்கள் ஆண்களை விட வேறுபட்ட தரநிலைகளில் நடத்தப்படுகிறார்கள்” ராதௌவம் , பல்கலைக்கழக மாணவர்

"நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை" என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.

"இப்போது எனக்கு பயமாக இருக்கிறது. என்னைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், எங்களுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும்" என்று அவர் அங்கலாய்கிறார்.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டியிருந்தது.

தொழுகைபடத்தின் காப்புரிமைREUTERS

 

யாஸ்மினுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்பவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, வாரத்திற்கு இரண்டு கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமானத்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கையாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக்கிறார்.

உண்மையிலே தாங்கள் கன்னித்தன்மையோடு இல்லை என்பதை மறைக்க யாஸ்மினை போன்ற பலரும் முயல்கின்றனர்.

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,

இதனால், திருமணத்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர் என்று தவறுதலாக குற்றுஞ்சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவுகிறது.

துனீசிய பெண்கள்படத்தின் காப்புரிமைFETHI BELAID/AFP/GETTY IMAGES

"மகளிர் சிறப்பு மருத்துவர்கள் கிழிந்துபோன கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்கின்றனர். இதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை" என்று கூறும் ராசிட், "சில மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில்லை. கன்னித்தன்மையை புனிதப்பொருளாக கருதுவோரின் கருத்துக்களை நான் ஏற்பதில்லை. எனவே, இந்த சிகிச்சையை வழங்கி வருகிறேன்” என்று தெரிவிக்கிறார்.

"இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சில மத கோட்பாடுகளுடனான, ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு இது. நான் குறிப்பிடுவது போல இது ஆண் ஆதிக்கம்தான். இதற்கு எதிரான முழுப் போரை தொடருவேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

"பாசாங்குத்தனம்"

வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும்வரை இளம் பெண்கள் கன்னித்தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.

மலரோடு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் கன்னித்தன்மை இல்லாதவர்களாக இருப்பதை கண்டுபிடித்தால், விவாகரத்து பெற்றுகொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது.

"வெளிப்படையான துனீசிய சமூகத்தில் இந்த விடயத்தில் மட்டும், நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாங்சாங்குத்தனம் உடையவராக மாறிவிடுகிறோம்" என்று சமூகவியலாளர் சாமியா எல்லௌமி தெரிவிக்கிறார்.

"நவீன சமூகத்தில் வாழ்வதாக நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், பெண்களின் பாலியல் மற்றும் சுதந்திரம் என்று வருகின்றபோது, அதிக நவீனத்துவம் இல்லை என்பதால் ஒரு வகையான பழமை வாய்ந்த சமூக பழமைவாதத்தை நியாயப்படுத்துவது கடினமாக உள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"கன்னித்தன்மை மிக மிக முக்கியம்"

பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹிச்செம்மை, பிபிசி செய்தியாளர் சந்தித்தார். 29 வயதாகும் இந்த மாணவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

"என்னை பொறுத்தமட்டில் இது மிக மிக முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

தலையை மூடிய பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"திருமணத்திற்கு பிறகு அவர் கன்னித்தன்மையுடன் இல்லை என்று நான் அறிய வந்தால், அவரை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அதனை நான் நம்பிக்கை துரோகமாக கருதுவேன். கன்னித்திரையை ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை நம்பவில்லை. அது சரியாக செயல்படும் என்று எண்ணவில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக இருந்த இன்னொரு மாணவர் ராதௌவம் பேசுகையில், "துனீசிய பராம்பரியம் பெண்களுக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது" என்று தெரிவித்தார்.

"என்னைப் பொறுத்தமட்டில், இது முற்றிலும் பாசாங்குதனம்" என்று தெரிவித்த அவர், "திருமணத்திற்கு முன்னர் இளம் ஆண்கள் சுதந்திரமாக பாலியல் உறவு வைத்துகொள்ளலாம். அப்படியானால், அதனை இளம் பெண்கள் செய்யும்போது எவ்வாறு குறை சொல்ல முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.

http://www.bbc.com/tamil/global-40373629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,

பட்டையால கிழியாதுப்பா, 

இதால வேணுமின்னா கிழியலாம்

IMG_4661.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

பட்டையால கிழியாதுப்பா, 

இதால வேணுமின்னா கிழியலாம்

IMG_4661.jpg

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனி ஒருவன் said:

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

முனி இது தான் ஏவுகனைப் பட்டம்.:unsure:இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.அறிவாழிகளுக்கு எப்பவும் ஆபத்து.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

 

துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

குட்டை பாவாடையுடன் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.

"இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் ஊதா நிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்துவரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் கன்னிப்படலத்தை மீண்டும் ஒட்டச்செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான ஹேமன்நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தியாரிடம் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டுபிடிக்கலாம் என்று மிகவும் கவலையடைகிறார்.

பிறப்புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச்செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர்காலத்தில் எப்போதாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.

துனீசிய கடற்கரையில் அமர்ந்திருக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

"என்றாவது ஒருநாள் என்னுடைய கணவரோடு உரையாடும்போது என்னை நானே காட்டிக்கொடுத்துவிடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

அழுத்தம்

சில இளம் பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப்பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.

அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்தையே நிறுத்திவிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

துனீசிய பெண்கள் ஆண்களை விட வேறுபட்ட தரநிலைகளில் நடத்தப்படுகிறார்கள்” ராதௌவம் , பல்கலைக்கழக மாணவர்

"நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை" என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.

"இப்போது எனக்கு பயமாக இருக்கிறது. என்னைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், எங்களுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும்" என்று அவர் அங்கலாய்கிறார்.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டியிருந்தது.

தொழுகைபடத்தின் காப்புரிமைREUTERS

 

யாஸ்மினுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்பவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, வாரத்திற்கு இரண்டு கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமானத்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கையாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக்கிறார்.

உண்மையிலே தாங்கள் கன்னித்தன்மையோடு இல்லை என்பதை மறைக்க யாஸ்மினை போன்ற பலரும் முயல்கின்றனர்.

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,

இதனால், திருமணத்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர் என்று தவறுதலாக குற்றுஞ்சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவுகிறது.

துனீசிய பெண்கள்படத்தின் காப்புரிமைFETHI BELAID/AFP/GETTY IMAGES

"மகளிர் சிறப்பு மருத்துவர்கள் கிழிந்துபோன கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்கின்றனர். இதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை" என்று கூறும் ராசிட், "சில மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில்லை. கன்னித்தன்மையை புனிதப்பொருளாக கருதுவோரின் கருத்துக்களை நான் ஏற்பதில்லை. எனவே, இந்த சிகிச்சையை வழங்கி வருகிறேன்” என்று தெரிவிக்கிறார்.

"இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சில மத கோட்பாடுகளுடனான, ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு இது. நான் குறிப்பிடுவது போல இது ஆண் ஆதிக்கம்தான். இதற்கு எதிரான முழுப் போரை தொடருவேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

"பாசாங்குத்தனம்"

வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும்வரை இளம் பெண்கள் கன்னித்தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.

மலரோடு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் கன்னித்தன்மை இல்லாதவர்களாக இருப்பதை கண்டுபிடித்தால், விவாகரத்து பெற்றுகொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது.

"வெளிப்படையான துனீசிய சமூகத்தில் இந்த விடயத்தில் மட்டும், நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாங்சாங்குத்தனம் உடையவராக மாறிவிடுகிறோம்" என்று சமூகவியலாளர் சாமியா எல்லௌமி தெரிவிக்கிறார்.

"நவீன சமூகத்தில் வாழ்வதாக நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், பெண்களின் பாலியல் மற்றும் சுதந்திரம் என்று வருகின்றபோது, அதிக நவீனத்துவம் இல்லை என்பதால் ஒரு வகையான பழமை வாய்ந்த சமூக பழமைவாதத்தை நியாயப்படுத்துவது கடினமாக உள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"கன்னித்தன்மை மிக மிக முக்கியம்"

பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹிச்செம்மை, பிபிசி செய்தியாளர் சந்தித்தார். 29 வயதாகும் இந்த மாணவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

"என்னை பொறுத்தமட்டில் இது மிக மிக முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

தலையை மூடிய பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"திருமணத்திற்கு பிறகு அவர் கன்னித்தன்மையுடன் இல்லை என்று நான் அறிய வந்தால், அவரை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அதனை நான் நம்பிக்கை துரோகமாக கருதுவேன். கன்னித்திரையை ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை நம்பவில்லை. அது சரியாக செயல்படும் என்று எண்ணவில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக இருந்த இன்னொரு மாணவர் ராதௌவம் பேசுகையில், "துனீசிய பராம்பரியம் பெண்களுக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது" என்று தெரிவித்தார்.

"என்னைப் பொறுத்தமட்டில், இது முற்றிலும் பாசாங்குதனம்" என்று தெரிவித்த அவர், "திருமணத்திற்கு முன்னர் இளம் ஆண்கள் சுதந்திரமாக பாலியல் உறவு வைத்துகொள்ளலாம். அப்படியானால், அதனை இளம் பெண்கள் செய்யும்போது எவ்வாறு குறை சொல்ல முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.

http://www.bbc.com/tamil/global-40373629

ஒரு காலத்தில் தமிழ் பிபிசி தரம் வாய்ந்த செய்திகளையே மக்களுக்கு வழங்கியது.

இது உலகதமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் இன்று கன்னித்திரையை மூடி மறைக்கும் விடயம் கூட தமிழ் பிபிசிக்கு தலைப்பு செய்தி.
கேவலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை போல .......யோனி பொருத்தம் பார்த்து 
கலியாணம் கட்டினால் என்ன செய்வினம் ? 

டாக்குத்தர்மார் என்னத்தை பொருத்தினாலும் 
ஐயருக்கு குறிப்பு பார்க்கும்போது தெரியும்தானே ?
எது பொருந்தும் என்று ...........

(நாங்கள் கரை சேரும் மட்டும் இப்பிடி ஏதாவது புரளியை கிளப்பி 
சமூகத்தை ஒரு பயத்தில வைச்சிருக்கோணும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2017 at 11:51 AM, தனி ஒருவன் said:

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

உதென்ன.. கலர் கலரா.. இருக்கு.. சொக்லேட் பாக்ஸோ என்று நானும் ஒரு காலத்தில் பார்த்து ஏமாந்தனான். அப்புறம் தான் தெரிஞ்சுது.. உதன் பின்னால் உள்ள சமாச்சாரம். 

ஊரில.. முன்னர் பாட்டரி.. கொண்டு வர சிங்கள அரசு தடை போட்டிருந்த போது பலர் பாட்டரியை.. உப்படி செருகித்தானாம் கொண்டு வாறவை. 

அப்ப அவைட கன்னித்தன்மை...??!

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா,

எதை வச்சு காசு பார்கிறார்கள் உந்த டாக்குதர்மார்கள்.  

உந்த மாதிரி, ஜில்மாற், தில்லாலங்கடி வேலைக்குப் போறது பசைப்பாட்டிகள் தான்.

வேறு ஒரு பசைப்பாட்டியின் குடும்பத்துள், குத்துவிளக்காக பூந்து ஏமாத்த வசதியா, ஒரு நாலு இளை தான் போடுவினம்.

பணம் மட்டும்..... மழை இல்லை, சினோவா கொட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

உதென்ன.. கலர் கலரா.. இருக்கு.. சொக்லேட் பாக்ஸோ என்று நானும் ஒரு காலத்தில் பார்த்து ஏமாந்தனான். அப்புறம் தான் தெரிஞ்சுது.. உதன் பின்னால் உள்ள சமாச்சாரம். 

ஊரில.. முன்னர் பாட்டரி.. கொண்டு வர சிங்கள அரசு தடை போட்டிருந்த போது பலர் பாட்டரியை.. உப்படி செருகித்தானாம் கொண்டு வாறவை. 

அப்ப அவைட கன்னித்தன்மை...??!

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ. tw_blush:

நெடுக்கர் பற்றரி கொண்டு வந்தவை குமர் பிள்ளைகளில்லை, களம் பல கண்டவை.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2017 at 0:38 AM, சுவைப்பிரியன் said:

முனி இது தான் ஏவுகனைப் பட்டம்.:unsure:இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.அறிவாழிகளுக்கு எப்பவும் ஆபத்து.tw_angry:

 எனக்கு இது பற்றி தெரியாதுங்க சும்மா கேட்டன் ஆனாலும் வெளிநாட்டில் கடைகளில் கிடைக்குமாம் ஆனால் இங்கென்றால் ஒரு பலூன் ( கொண்டம் ) வாங்குவது கூட  முக்கி தக்கி தான் கேட்கணும் கடைக்காரனிடம் அவனும் ஏற இறங்கி பார்த்துப்புட்டுத்தான் தருவான் எங்கேயோ வேலி பாயப்போறதா நெனைச்சு :10_wink::10_wink::10_wink::10_wink:

 

On 6/24/2017 at 6:30 PM, nedukkalapoovan said:

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ.

யோவ்:10_wink::10_wink: கல்யாணம் காட்சி ஆன நீர் இதுக்க கிடந்து ஏன் மெனக்கெடுவான் சும்மா போவியா tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனி ஒருவன் said:

 எனக்கு இது பற்றி தெரியாதுங்க சும்மா கேட்டன் ஆனாலும் வெளிநாட்டில் கடைகளில் கிடைக்குமாம் ஆனால் இங்கென்றால் ஒரு பலூன் ( கொண்டம் ) வாங்குவது கூட  முக்கி தக்கி தான் கேட்கணும் கடைக்காரனிடம் அவனும் ஏற இறங்கி பார்த்துப்புட்டுத்தான் தருவான் எங்கேயோ வேலி பாயப்போறதா நெனைச்சு :10_wink::10_wink::10_wink::10_wink:

 

அட சிறிலங்கா இன்னும் வளரலையா? முன்னர் பார்மசியில் பெட்டையள் நிற்கும் போது கொண்டம் கேட்டு கடுப்பாக்கிறனாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அட சிறிலங்கா இன்னும் வளரலையா? முன்னர் பார்மசியில் பெட்டையள் நிற்கும் போது கொண்டம் கேட்டு கடுப்பாக்கிறனாங்கள்.

இப்பவும் தான் ஆனால் கேசியர் ஆண்  அதான் அவரிட்ட போய்  உடன்படிக்கை கைச்சாத்து வைக்கிறமாதிரியும் அணுகுண்டு  ரகசியம் பேசுறமாதிரியும் பேசித்தான் வாங்க வேணும் என்று நம்மட பொடிஸ் எல்லாம் சொன்னானுகள்  அவனுகள் கல்யாணம்கட்டிய  பொடிஸ் அனுபவத்தை அப்படியே சொல்லுவாங்க நானும் கேட்டுக்கொண்டு இருக்கிறன் :10_wink::10_wink::10_wink::10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

இப்பவும் தான் ஆனால் கேசியர் ஆண்  அதான் அவரிட்ட போய்  உடன்படிக்கை கைச்சாத்து வைக்கிறமாதிரியும் அணுகுண்டு  ரகசியம் பேசுறமாதிரியும் பேசித்தான் வாங்க வேணும் என்று நம்மட பொடிஸ் எல்லாம் சொன்னானுகள்  அவனுகள் கல்யாணம்கட்டிய  பொடிஸ் அனுபவத்தை அப்படியே சொல்லுவாங்க நானும் கேட்டுக்கொண்டு இருக்கிறன் :10_wink::10_wink::10_wink::10_wink:

முன்ன பின்ன தெரியாத இடம் .....
நோய் ஆபத்து என்றால்தான் உந்த காசு செலவழித்து 
குழந்தைகள் மாதிரி பலூன் ஊதி கொண்டு திரியவேணும்.

மற்றும்படி இயற்கையாகவே சிறந்த வழிகள் உண்டு 
மாதத்தில் 7 நாட்கள் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 10 நாள்தான் 
அவதானம் தேவை மற்றைய படி ஓப்பன் விசா தான்.

அந்த 7 நாளையும் தவற விட்டு விட்டு மீதி நாளில் சைக்கிள் ஓடி கொண்டு 
பின்பு பிள்ளை இல்லை பிள்ளை இல்லை என்று சிலர் திரிகிறார்களோ என்று 
நான் நினைப்பது உண்டு. 

வயது 23க்கு உள்ளே இருவருக்கும் இருக்கு மட்டும் கொஞ்சம் கூடிய அவதானம் தேவை 
பெட்ரோல் மணக்கிற வாட்டர் பம் மாதிரி டக்கென்று பத்திடும். அதுக்கு பிறகு இந்தியன் வாகனம் 
மாதிரி கொஞ்ச நேரம் எடுத்து மிதிக்கவேணும்.(நேரம் எடுத்து மிதிக்கோணும் என்றால் ... இதை தவறாக புரிந்து விடலாம் 
சில முட்டைகள் வீரியம் காரணமாக 10-14 நாட்கள் கூட நல்ல நிலையில் இருக்க 
சாத்தியம் உண்டு. அதுபோல் ஆணின் உயிர் அணுவும் வீரியம் காரணமாக ஓடி திரியிறது 
முட்டை தேடுற விளையாட்டு கொஞ்சம் கூட இருக்கும் ....பின்பு அதன் வீரியம் 
சராசரி நிலைக்கு வந்துவிடும் )

 

இப்போ ஸ்மார்ட் போனில் ஆப்ஸ் இருக்கு தரைஇறக்கி வைத்திருந்தால் 
மாத சுழட்ச்சி தொடங்கும் நாளை அதில் போட்டால் ... மீதி நாட்கள் எல்லாவற்றையும் 
அதுவே கணித்து தரும் .........
எல்லோர் உடல் நிலையும் ஒரே மாதிரி இல்லை ஆதாலால் குறைந்த பட்ஷம் ஒரு 
மூன்று நாலு மாதம் சரியான கணிப்புக்கு எடுக்கும் ...... முதலில் 28 நாட்கள் கணக்கு வைத்து 
கணிக்கும் ......... பின்பு எப்போது வருகிறோதோ ... அந்த திகதிகளை நீங்கள் போட்டு கொண்டு வந்தால் 
ஒரு நாலு மாதத்தில் அது சரியாக கணிக்க தொடங்கி விடும்.

பெண்களுக்கு மிக வசதியான ஆப்ஸ் ...
காரணம் விடுமுறை ...... வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று போகும் பெண்கள் 
அந்த காலண்டர் உதவியுடன் திகதிகளை நிர்ணயிக்கலாம். விடுமுறைக்கு 
திகதியை நிர்ணயித்து டிக்கெட் கோட்டல் எல்லாம் புக் பண்ணி விட்டு 
பின்பு பிளேன் ஏறும்போது .......... அட சனியன் இது வேற இதுக்குள்ள வந்து 
தொலைச்சுவிட்டதே என்று கடுப்பாக தேவை இல்லை. 
2018- 2019 ஆம்  ஆண்டு காலண்டரையே அண்ணளவாக பார்க்க முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெவரம் தெரியாமத்தான் கேக்கிறேன்...

ஆமா, ஆம்பளப் பயலுகளுக்கு இந்தமாதரி ஆப்பரேசன் செய்து.... கன்னிப்பயல் ஆகேலாதோ?

ஊர் வழிய இருப்பினமே.... பரியாரிமார்..? 

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

வெவரம் தெரியாமத்தான் கேக்கிறேன்...

ஆமா, ஆம்பளப் பயலுகளுக்கு இந்தமாதரி ஆப்பரேசன் செய்து.... கன்னிப்பயல் ஆகேலாதோ?

ஊர் வழிய இருப்பினமே.... பரியாரிமார்..? 

:rolleyes:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/06/2017 at 4:33 PM, தமிழ் சிறி said:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

பார்தியலோ.... எங்கண்ட பரியாரியார்.... தலை தெறிக்க ஓடீயாந்து நிக்கீறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

இது முதலுக்கே மோசம் சிறி பரியாரியார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.