Jump to content

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்


Recommended Posts

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

 

துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

குட்டை பாவாடையுடன் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.

"இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் ஊதா நிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்துவரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் கன்னிப்படலத்தை மீண்டும் ஒட்டச்செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான ஹேமன்நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தியாரிடம் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டுபிடிக்கலாம் என்று மிகவும் கவலையடைகிறார்.

பிறப்புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச்செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர்காலத்தில் எப்போதாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.

துனீசிய கடற்கரையில் அமர்ந்திருக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

"என்றாவது ஒருநாள் என்னுடைய கணவரோடு உரையாடும்போது என்னை நானே காட்டிக்கொடுத்துவிடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

அழுத்தம்

சில இளம் பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப்பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.

அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்தையே நிறுத்திவிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

துனீசிய பெண்கள் ஆண்களை விட வேறுபட்ட தரநிலைகளில் நடத்தப்படுகிறார்கள்” ராதௌவம் , பல்கலைக்கழக மாணவர்

"நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை" என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.

"இப்போது எனக்கு பயமாக இருக்கிறது. என்னைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், எங்களுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும்" என்று அவர் அங்கலாய்கிறார்.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டியிருந்தது.

தொழுகைபடத்தின் காப்புரிமைREUTERS

 

யாஸ்மினுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்பவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, வாரத்திற்கு இரண்டு கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமானத்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கையாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக்கிறார்.

உண்மையிலே தாங்கள் கன்னித்தன்மையோடு இல்லை என்பதை மறைக்க யாஸ்மினை போன்ற பலரும் முயல்கின்றனர்.

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,

இதனால், திருமணத்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர் என்று தவறுதலாக குற்றுஞ்சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவுகிறது.

துனீசிய பெண்கள்படத்தின் காப்புரிமைFETHI BELAID/AFP/GETTY IMAGES

"மகளிர் சிறப்பு மருத்துவர்கள் கிழிந்துபோன கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்கின்றனர். இதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை" என்று கூறும் ராசிட், "சில மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில்லை. கன்னித்தன்மையை புனிதப்பொருளாக கருதுவோரின் கருத்துக்களை நான் ஏற்பதில்லை. எனவே, இந்த சிகிச்சையை வழங்கி வருகிறேன்” என்று தெரிவிக்கிறார்.

"இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சில மத கோட்பாடுகளுடனான, ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு இது. நான் குறிப்பிடுவது போல இது ஆண் ஆதிக்கம்தான். இதற்கு எதிரான முழுப் போரை தொடருவேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

"பாசாங்குத்தனம்"

வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும்வரை இளம் பெண்கள் கன்னித்தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.

மலரோடு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் கன்னித்தன்மை இல்லாதவர்களாக இருப்பதை கண்டுபிடித்தால், விவாகரத்து பெற்றுகொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது.

"வெளிப்படையான துனீசிய சமூகத்தில் இந்த விடயத்தில் மட்டும், நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாங்சாங்குத்தனம் உடையவராக மாறிவிடுகிறோம்" என்று சமூகவியலாளர் சாமியா எல்லௌமி தெரிவிக்கிறார்.

"நவீன சமூகத்தில் வாழ்வதாக நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், பெண்களின் பாலியல் மற்றும் சுதந்திரம் என்று வருகின்றபோது, அதிக நவீனத்துவம் இல்லை என்பதால் ஒரு வகையான பழமை வாய்ந்த சமூக பழமைவாதத்தை நியாயப்படுத்துவது கடினமாக உள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"கன்னித்தன்மை மிக மிக முக்கியம்"

பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹிச்செம்மை, பிபிசி செய்தியாளர் சந்தித்தார். 29 வயதாகும் இந்த மாணவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

"என்னை பொறுத்தமட்டில் இது மிக மிக முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

தலையை மூடிய பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"திருமணத்திற்கு பிறகு அவர் கன்னித்தன்மையுடன் இல்லை என்று நான் அறிய வந்தால், அவரை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அதனை நான் நம்பிக்கை துரோகமாக கருதுவேன். கன்னித்திரையை ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை நம்பவில்லை. அது சரியாக செயல்படும் என்று எண்ணவில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக இருந்த இன்னொரு மாணவர் ராதௌவம் பேசுகையில், "துனீசிய பராம்பரியம் பெண்களுக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது" என்று தெரிவித்தார்.

"என்னைப் பொறுத்தமட்டில், இது முற்றிலும் பாசாங்குதனம்" என்று தெரிவித்த அவர், "திருமணத்திற்கு முன்னர் இளம் ஆண்கள் சுதந்திரமாக பாலியல் உறவு வைத்துகொள்ளலாம். அப்படியானால், அதனை இளம் பெண்கள் செய்யும்போது எவ்வாறு குறை சொல்ல முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.

http://www.bbc.com/tamil/global-40373629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,

பட்டையால கிழியாதுப்பா, 

இதால வேணுமின்னா கிழியலாம்

IMG_4661.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

பட்டையால கிழியாதுப்பா, 

இதால வேணுமின்னா கிழியலாம்

IMG_4661.jpg

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனி ஒருவன் said:

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

முனி இது தான் ஏவுகனைப் பட்டம்.:unsure:இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.அறிவாழிகளுக்கு எப்பவும் ஆபத்து.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

 

துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

குட்டை பாவாடையுடன் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.

"இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் ஊதா நிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்துவரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் கன்னிப்படலத்தை மீண்டும் ஒட்டச்செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான ஹேமன்நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தியாரிடம் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டுபிடிக்கலாம் என்று மிகவும் கவலையடைகிறார்.

பிறப்புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச்செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர்காலத்தில் எப்போதாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.

துனீசிய கடற்கரையில் அமர்ந்திருக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

"என்றாவது ஒருநாள் என்னுடைய கணவரோடு உரையாடும்போது என்னை நானே காட்டிக்கொடுத்துவிடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

அழுத்தம்

சில இளம் பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப்பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.

அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்தையே நிறுத்திவிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

துனீசிய பெண்கள் ஆண்களை விட வேறுபட்ட தரநிலைகளில் நடத்தப்படுகிறார்கள்” ராதௌவம் , பல்கலைக்கழக மாணவர்

"நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை" என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.

"இப்போது எனக்கு பயமாக இருக்கிறது. என்னைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், எங்களுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும்" என்று அவர் அங்கலாய்கிறார்.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டியிருந்தது.

தொழுகைபடத்தின் காப்புரிமைREUTERS

 

யாஸ்மினுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்பவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, வாரத்திற்கு இரண்டு கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமானத்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கையாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக்கிறார்.

உண்மையிலே தாங்கள் கன்னித்தன்மையோடு இல்லை என்பதை மறைக்க யாஸ்மினை போன்ற பலரும் முயல்கின்றனர்.

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,

இதனால், திருமணத்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர் என்று தவறுதலாக குற்றுஞ்சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவுகிறது.

துனீசிய பெண்கள்படத்தின் காப்புரிமைFETHI BELAID/AFP/GETTY IMAGES

"மகளிர் சிறப்பு மருத்துவர்கள் கிழிந்துபோன கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்கின்றனர். இதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை" என்று கூறும் ராசிட், "சில மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில்லை. கன்னித்தன்மையை புனிதப்பொருளாக கருதுவோரின் கருத்துக்களை நான் ஏற்பதில்லை. எனவே, இந்த சிகிச்சையை வழங்கி வருகிறேன்” என்று தெரிவிக்கிறார்.

"இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சில மத கோட்பாடுகளுடனான, ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு இது. நான் குறிப்பிடுவது போல இது ஆண் ஆதிக்கம்தான். இதற்கு எதிரான முழுப் போரை தொடருவேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

"பாசாங்குத்தனம்"

வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும்வரை இளம் பெண்கள் கன்னித்தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.

மலரோடு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் கன்னித்தன்மை இல்லாதவர்களாக இருப்பதை கண்டுபிடித்தால், விவாகரத்து பெற்றுகொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது.

"வெளிப்படையான துனீசிய சமூகத்தில் இந்த விடயத்தில் மட்டும், நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாங்சாங்குத்தனம் உடையவராக மாறிவிடுகிறோம்" என்று சமூகவியலாளர் சாமியா எல்லௌமி தெரிவிக்கிறார்.

"நவீன சமூகத்தில் வாழ்வதாக நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், பெண்களின் பாலியல் மற்றும் சுதந்திரம் என்று வருகின்றபோது, அதிக நவீனத்துவம் இல்லை என்பதால் ஒரு வகையான பழமை வாய்ந்த சமூக பழமைவாதத்தை நியாயப்படுத்துவது கடினமாக உள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"கன்னித்தன்மை மிக மிக முக்கியம்"

பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹிச்செம்மை, பிபிசி செய்தியாளர் சந்தித்தார். 29 வயதாகும் இந்த மாணவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

"என்னை பொறுத்தமட்டில் இது மிக மிக முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

தலையை மூடிய பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"திருமணத்திற்கு பிறகு அவர் கன்னித்தன்மையுடன் இல்லை என்று நான் அறிய வந்தால், அவரை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அதனை நான் நம்பிக்கை துரோகமாக கருதுவேன். கன்னித்திரையை ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை நம்பவில்லை. அது சரியாக செயல்படும் என்று எண்ணவில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக இருந்த இன்னொரு மாணவர் ராதௌவம் பேசுகையில், "துனீசிய பராம்பரியம் பெண்களுக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது" என்று தெரிவித்தார்.

"என்னைப் பொறுத்தமட்டில், இது முற்றிலும் பாசாங்குதனம்" என்று தெரிவித்த அவர், "திருமணத்திற்கு முன்னர் இளம் ஆண்கள் சுதந்திரமாக பாலியல் உறவு வைத்துகொள்ளலாம். அப்படியானால், அதனை இளம் பெண்கள் செய்யும்போது எவ்வாறு குறை சொல்ல முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.

http://www.bbc.com/tamil/global-40373629

ஒரு காலத்தில் தமிழ் பிபிசி தரம் வாய்ந்த செய்திகளையே மக்களுக்கு வழங்கியது.

இது உலகதமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் இன்று கன்னித்திரையை மூடி மறைக்கும் விடயம் கூட தமிழ் பிபிசிக்கு தலைப்பு செய்தி.
கேவலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை போல .......யோனி பொருத்தம் பார்த்து 
கலியாணம் கட்டினால் என்ன செய்வினம் ? 

டாக்குத்தர்மார் என்னத்தை பொருத்தினாலும் 
ஐயருக்கு குறிப்பு பார்க்கும்போது தெரியும்தானே ?
எது பொருந்தும் என்று ...........

(நாங்கள் கரை சேரும் மட்டும் இப்பிடி ஏதாவது புரளியை கிளப்பி 
சமூகத்தை ஒரு பயத்தில வைச்சிருக்கோணும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2017 at 11:51 AM, தனி ஒருவன் said:

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

உதென்ன.. கலர் கலரா.. இருக்கு.. சொக்லேட் பாக்ஸோ என்று நானும் ஒரு காலத்தில் பார்த்து ஏமாந்தனான். அப்புறம் தான் தெரிஞ்சுது.. உதன் பின்னால் உள்ள சமாச்சாரம். 

ஊரில.. முன்னர் பாட்டரி.. கொண்டு வர சிங்கள அரசு தடை போட்டிருந்த போது பலர் பாட்டரியை.. உப்படி செருகித்தானாம் கொண்டு வாறவை. 

அப்ப அவைட கன்னித்தன்மை...??!

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா,

எதை வச்சு காசு பார்கிறார்கள் உந்த டாக்குதர்மார்கள்.  

உந்த மாதிரி, ஜில்மாற், தில்லாலங்கடி வேலைக்குப் போறது பசைப்பாட்டிகள் தான்.

வேறு ஒரு பசைப்பாட்டியின் குடும்பத்துள், குத்துவிளக்காக பூந்து ஏமாத்த வசதியா, ஒரு நாலு இளை தான் போடுவினம்.

பணம் மட்டும்..... மழை இல்லை, சினோவா கொட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

உதென்ன.. கலர் கலரா.. இருக்கு.. சொக்லேட் பாக்ஸோ என்று நானும் ஒரு காலத்தில் பார்த்து ஏமாந்தனான். அப்புறம் தான் தெரிஞ்சுது.. உதன் பின்னால் உள்ள சமாச்சாரம். 

ஊரில.. முன்னர் பாட்டரி.. கொண்டு வர சிங்கள அரசு தடை போட்டிருந்த போது பலர் பாட்டரியை.. உப்படி செருகித்தானாம் கொண்டு வாறவை. 

அப்ப அவைட கன்னித்தன்மை...??!

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ. tw_blush:

நெடுக்கர் பற்றரி கொண்டு வந்தவை குமர் பிள்ளைகளில்லை, களம் பல கண்டவை.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2017 at 0:38 AM, சுவைப்பிரியன் said:

முனி இது தான் ஏவுகனைப் பட்டம்.:unsure:இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.அறிவாழிகளுக்கு எப்பவும் ஆபத்து.tw_angry:

 எனக்கு இது பற்றி தெரியாதுங்க சும்மா கேட்டன் ஆனாலும் வெளிநாட்டில் கடைகளில் கிடைக்குமாம் ஆனால் இங்கென்றால் ஒரு பலூன் ( கொண்டம் ) வாங்குவது கூட  முக்கி தக்கி தான் கேட்கணும் கடைக்காரனிடம் அவனும் ஏற இறங்கி பார்த்துப்புட்டுத்தான் தருவான் எங்கேயோ வேலி பாயப்போறதா நெனைச்சு :10_wink::10_wink::10_wink::10_wink:

 

On 6/24/2017 at 6:30 PM, nedukkalapoovan said:

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ.

யோவ்:10_wink::10_wink: கல்யாணம் காட்சி ஆன நீர் இதுக்க கிடந்து ஏன் மெனக்கெடுவான் சும்மா போவியா tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனி ஒருவன் said:

 எனக்கு இது பற்றி தெரியாதுங்க சும்மா கேட்டன் ஆனாலும் வெளிநாட்டில் கடைகளில் கிடைக்குமாம் ஆனால் இங்கென்றால் ஒரு பலூன் ( கொண்டம் ) வாங்குவது கூட  முக்கி தக்கி தான் கேட்கணும் கடைக்காரனிடம் அவனும் ஏற இறங்கி பார்த்துப்புட்டுத்தான் தருவான் எங்கேயோ வேலி பாயப்போறதா நெனைச்சு :10_wink::10_wink::10_wink::10_wink:

 

அட சிறிலங்கா இன்னும் வளரலையா? முன்னர் பார்மசியில் பெட்டையள் நிற்கும் போது கொண்டம் கேட்டு கடுப்பாக்கிறனாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அட சிறிலங்கா இன்னும் வளரலையா? முன்னர் பார்மசியில் பெட்டையள் நிற்கும் போது கொண்டம் கேட்டு கடுப்பாக்கிறனாங்கள்.

இப்பவும் தான் ஆனால் கேசியர் ஆண்  அதான் அவரிட்ட போய்  உடன்படிக்கை கைச்சாத்து வைக்கிறமாதிரியும் அணுகுண்டு  ரகசியம் பேசுறமாதிரியும் பேசித்தான் வாங்க வேணும் என்று நம்மட பொடிஸ் எல்லாம் சொன்னானுகள்  அவனுகள் கல்யாணம்கட்டிய  பொடிஸ் அனுபவத்தை அப்படியே சொல்லுவாங்க நானும் கேட்டுக்கொண்டு இருக்கிறன் :10_wink::10_wink::10_wink::10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

இப்பவும் தான் ஆனால் கேசியர் ஆண்  அதான் அவரிட்ட போய்  உடன்படிக்கை கைச்சாத்து வைக்கிறமாதிரியும் அணுகுண்டு  ரகசியம் பேசுறமாதிரியும் பேசித்தான் வாங்க வேணும் என்று நம்மட பொடிஸ் எல்லாம் சொன்னானுகள்  அவனுகள் கல்யாணம்கட்டிய  பொடிஸ் அனுபவத்தை அப்படியே சொல்லுவாங்க நானும் கேட்டுக்கொண்டு இருக்கிறன் :10_wink::10_wink::10_wink::10_wink:

முன்ன பின்ன தெரியாத இடம் .....
நோய் ஆபத்து என்றால்தான் உந்த காசு செலவழித்து 
குழந்தைகள் மாதிரி பலூன் ஊதி கொண்டு திரியவேணும்.

மற்றும்படி இயற்கையாகவே சிறந்த வழிகள் உண்டு 
மாதத்தில் 7 நாட்கள் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 10 நாள்தான் 
அவதானம் தேவை மற்றைய படி ஓப்பன் விசா தான்.

அந்த 7 நாளையும் தவற விட்டு விட்டு மீதி நாளில் சைக்கிள் ஓடி கொண்டு 
பின்பு பிள்ளை இல்லை பிள்ளை இல்லை என்று சிலர் திரிகிறார்களோ என்று 
நான் நினைப்பது உண்டு. 

வயது 23க்கு உள்ளே இருவருக்கும் இருக்கு மட்டும் கொஞ்சம் கூடிய அவதானம் தேவை 
பெட்ரோல் மணக்கிற வாட்டர் பம் மாதிரி டக்கென்று பத்திடும். அதுக்கு பிறகு இந்தியன் வாகனம் 
மாதிரி கொஞ்ச நேரம் எடுத்து மிதிக்கவேணும்.(நேரம் எடுத்து மிதிக்கோணும் என்றால் ... இதை தவறாக புரிந்து விடலாம் 
சில முட்டைகள் வீரியம் காரணமாக 10-14 நாட்கள் கூட நல்ல நிலையில் இருக்க 
சாத்தியம் உண்டு. அதுபோல் ஆணின் உயிர் அணுவும் வீரியம் காரணமாக ஓடி திரியிறது 
முட்டை தேடுற விளையாட்டு கொஞ்சம் கூட இருக்கும் ....பின்பு அதன் வீரியம் 
சராசரி நிலைக்கு வந்துவிடும் )

 

இப்போ ஸ்மார்ட் போனில் ஆப்ஸ் இருக்கு தரைஇறக்கி வைத்திருந்தால் 
மாத சுழட்ச்சி தொடங்கும் நாளை அதில் போட்டால் ... மீதி நாட்கள் எல்லாவற்றையும் 
அதுவே கணித்து தரும் .........
எல்லோர் உடல் நிலையும் ஒரே மாதிரி இல்லை ஆதாலால் குறைந்த பட்ஷம் ஒரு 
மூன்று நாலு மாதம் சரியான கணிப்புக்கு எடுக்கும் ...... முதலில் 28 நாட்கள் கணக்கு வைத்து 
கணிக்கும் ......... பின்பு எப்போது வருகிறோதோ ... அந்த திகதிகளை நீங்கள் போட்டு கொண்டு வந்தால் 
ஒரு நாலு மாதத்தில் அது சரியாக கணிக்க தொடங்கி விடும்.

பெண்களுக்கு மிக வசதியான ஆப்ஸ் ...
காரணம் விடுமுறை ...... வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று போகும் பெண்கள் 
அந்த காலண்டர் உதவியுடன் திகதிகளை நிர்ணயிக்கலாம். விடுமுறைக்கு 
திகதியை நிர்ணயித்து டிக்கெட் கோட்டல் எல்லாம் புக் பண்ணி விட்டு 
பின்பு பிளேன் ஏறும்போது .......... அட சனியன் இது வேற இதுக்குள்ள வந்து 
தொலைச்சுவிட்டதே என்று கடுப்பாக தேவை இல்லை. 
2018- 2019 ஆம்  ஆண்டு காலண்டரையே அண்ணளவாக பார்க்க முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெவரம் தெரியாமத்தான் கேக்கிறேன்...

ஆமா, ஆம்பளப் பயலுகளுக்கு இந்தமாதரி ஆப்பரேசன் செய்து.... கன்னிப்பயல் ஆகேலாதோ?

ஊர் வழிய இருப்பினமே.... பரியாரிமார்..? 

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

வெவரம் தெரியாமத்தான் கேக்கிறேன்...

ஆமா, ஆம்பளப் பயலுகளுக்கு இந்தமாதரி ஆப்பரேசன் செய்து.... கன்னிப்பயல் ஆகேலாதோ?

ஊர் வழிய இருப்பினமே.... பரியாரிமார்..? 

:rolleyes:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/06/2017 at 4:33 PM, தமிழ் சிறி said:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

பார்தியலோ.... எங்கண்ட பரியாரியார்.... தலை தெறிக்க ஓடீயாந்து நிக்கீறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

இது முதலுக்கே மோசம் சிறி பரியாரியார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.