Jump to content

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம் ; வைத்தியசாலை வளாகம் போர்களமானது


Recommended Posts

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம் ; வைத்தியசாலை வளாகம் போர்களமானது

 

 

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஜகிரிதி வைத்தியசாலையில் அகன்ஷா  என்ற 17 வயது  பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவியிற்கு வைத்தியசாலையில் உள்ள ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள உதவியாளர் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த அகன்ஷாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, வைத்தியசாலை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

201706221800439363_Teenage-girl-is-raped

அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்லை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில் பொலிஸார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாணவி கூறுகையில், அன்றைய தினம் தன்னுடைய தாய் தனக்கு உடைகளை மாற்றிவிட்டு சென்று விட்டார்.அதன் பின் இரவு நேரத்தில் தன்னுடைய வார்டிற்கு வந்த உதவியாளர் தன்னுடைய உடை முழுவதும் ஈரமாக இருப்பதாகவும் அதனால் உடை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதனால் , மற்றொரு பெண் தாதியரை அல்லது தன் தாய்யை கூப்பிடுவதாக நான் கூறினேன். ஆனால் அவரோ அவர்கள் யாரும் இல்லை தானே உடை மாற்றி விடுகிறேன் என்று கூறினார்.

அதன் பின் தன் உடையை அவர் மாற்றினார். அப்போது தனக்கு ஒரு வித தயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக எனது படுக்கைக்கு வந்து படுத்துவிட்டேன். படுக்கைக்கு வந்த அவர் தன் உடலில் ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார். அப்போது நான் மயங்கிய நிலையை அடைந்துவிட்டேன். அதை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், காலையில் வந்து பார்க்கும் போது, என் மகளிடன் உடையில் மாற்றங்கள் இருந்தன. அப்போது அவள் எதுவும் கூறாமல் அழுது கொண்டு இருந்தால். அவளைத் தொடர்ந்து கேட்ட பின் நடந்தவற்றை கூறினாள்.

இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது இந்த தகவல் வெளியில் பரவியதால், எங்கள் உறவினர்கள் மற்றும் சிலர் எங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர் என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமி தொடர்பாகவும் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/21156

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.