Jump to content

Recommended Posts

துரோகம்

 

தன்னுடைய முன்னாள் குரு, இயக்குநர் சேதுராமனின் படத்தை முதல் காட்சியில் பார்க்க ஆர்வமாகத் திரையரங்கத்துக்குச் சென்ற சுரேந்தர், படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் டைரக்டராக அறிமுகம் ஆவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்த கதையை ஒரு சில நகாசு வேலைகள் செய்து படமாக எடுத்திருந்தார் சேதுராமன்.
21.jpg
பணபலமும், அரசியல் செல்வாக்கும் உள்ள சேதுராமனிடம் மோதுவது இயலாத காரியம். சுரேந்தர் யோசனையில் ஆழ்ந்தான். பளீரென அவன் நினைவுக்கு வந்தது சம்யுக்தாதான். சேதுராமனின் ஒரே மகள். சுரேந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். சேதுராமனுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சம்யுக்தாவின் காதலை மறுத்திருந்தான் சுரேந்தர்.

‘‘எத்தனை வருஷமானாலும் உனக்காகக் காத்திருப்பேன்!’’ என்று சம்யுக்தா சொன்னது சுரேந்தருக்கு ஞாபகம் வந்தது.சுரேந்தரும், சம்யுக்தாவும் மாலையும் கழுத்து மாக வந்து நிற்பதைப் பார்த்த சேதுராமன் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

‘‘துரோகி! என் வீட்டு உப்பைத் தின்னுட்டு, எனக்கே துரோகம் பண்ணிட்டியே!’’ -  வார்த்தை களில் அனல் வீசியது.சுரேந்தர் பொறுமையாக பதில் சொன்னான்... ‘‘என் கதையைத் திருடிப் படமெடுத்து சம்பாதிக்கறீங்களே... அது மட்டும் துரோகம் இல்லையா?’’ பதில் பேச முடியாமல் சிலையானார் சேதுராமன்.      

kungumam.co

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.