Jump to content

மணமகன் தேவை விளம்பரம் ; 10 ஆண்களை திருமணம் செய்த பெண் ; திருமணக்கோலத்தில் கைது


Recommended Posts

மணமகன் தேவை விளம்பரம் ; 10 ஆண்களை திருமணம் செய்த பெண் ; திருமணக்கோலத்தில் கைது

 

 

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது.

கேரள பத்திரிகையொன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன் தேவை' என பெண்ணின் படமும் கையடக்கத்தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது. அதை பார்த்த இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டுள்ளார்.

கணவனை இழந்த தான் பெங்களுருவில் மென்பொருள் பொறியியலாளர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும்,ஷாலினி குறித்த இளைஞனிடம் கூறியுள்ளார்.

ஷாலினியின் பேச்சில் மயங்கிய குறித்த இளைஞன் திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளார். திருமணத்தில் மணமகன் வீட்டார் மட்டும் பங்கேற்றனர். அப்போது திருமணத்திற்கு வந்த ஒருவருக்கு மணமகள் தனது நண்பனின் மனைவி போல் உள்ளமையால் சந்தேகம் ஏற்பட, உடனே தன் நண்பருக்கு தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் ஷாலினியை விசாரித்தபோது இன்னும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின.

ஷாலினி இதுபோன்று மணமகன் தேவை விளம்பரங்கள் மூலம் இதுவரை 10 திருமணங்களை செய்த விவரம் தெரியவந்துள்ளது.விளம்பரத்தின் மூலம் இளைஞர்களை மயக்கி திருமணம் செய்துகொண்டு அன்றிரவே பணம் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விடுவது ஷாலினியின் வழக்கமாம்.

கடந்த 2014 ம் ஆண்டு நாயர் என்பவரை ஏமாற்றித் திருமணம் செய்த ஷாலினி தமிழகத்தில் பழனிக்கு தப்பிவந்தது போதிலும் பொலிஸார் ஷாலினியை கைது செய்தனர். மேலும்,கேரளாவில் 5 இடங்களில் அவர் மீது திருமண மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சொகுசாக வாழ ஆசைப்பட்ட காரணத்தினாலே ஷாலினி இவ்வாறு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk/article/21067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்தி எண்டால் வழக்கமாய் ஒரு சிங்கம் பாய்ந்து வந்து கருத்து போடும் ஆள் இனி வரார் கல்யாணம் காட்சி கண்டு விட்டார் எல்லோ .:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இப்படியான செய்தி எண்டால் வழக்கமாய் ஒரு சிங்கம் பாய்ந்து வந்து கருத்து போடும் ஆள் இனி வரார் கல்யாணம் காட்சி கண்டு விட்டார் எல்லோ .:unsure:

சீடர்கள் இருக்கிறோம் ...........
சமூகத்தில் இன்னும் சில சாலினிகள் வரட்டும் என்று 
தக்க பொழுக்கு காத்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இப்படியான செய்தி எண்டால் வழக்கமாய் ஒரு சிங்கம் பாய்ந்து வந்து கருத்து போடும் ஆள் இனி வரார் கல்யாணம் காட்சி கண்டு விட்டார் எல்லோ .:unsure:

சிங்கம் சீறுவதை நிறுத்துவதாக  தெரியவில்லை

ஆனால்......????:grin:

3 minutes ago, Maruthankerny said:

சீடர்கள் இருக்கிறோம் ...........
சமூகத்தில் இன்னும் சில சாலினிகள் வரட்டும் என்று 
தக்க பொழுக்கு காத்திருக்கிறோம். 

தங்க  பொழுதுக்கு  காத்திருக்கின்றோம்   என வாசித்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

சிங்கம் சீறுவதை நிறுத்துவதாக  தெரியவில்லை

ஆனால்......????:grin:

சீறுவதோ கர்ஜிப்பது எல்லாம் இனி வீட்டுக்கு வெளியாலை அதுவும் வத வத இரண்டு வீட்டுக்குள் தவள தொடங்க எல்லாம் மறந்து போய் எலி ரேன்சிலை திரிய வேண்டியதுதான்.:207_mouse::223_speak_no_evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

சீறுவதோ கர்ஜிப்பது எல்லாம் இனி வீட்டுக்கு வெளியாலை அதுவும் வத வத இரண்டு வீட்டுக்குள் தவள தொடங்க எல்லாம் மறந்து போய் எலி ரேன்சிலை திரிய வேண்டியதுதான்.:207_mouse::223_speak_no_evil:

ஏன் பயப்பா  பயப்படுத்துகிறீர்கள்??

வெளியில்  என்றால்  எம்மீது தானே...??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஷாலு குட்டியின் போண் நம்பரை ஏன் செய்தியில் போட வில்லை  போட்டிருந்தால் போணை  போட்டு ஒரு அப்பிளிகேஷன் போட்டு பார்த்திருக்கலாம்tw_blush::unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

இந்த ஷாலு குட்டியின் போண் நம்பரை ஏன் செய்தியில் போட வில்லை  போட்டிருந்தால் போணை  போட்டு ஒரு அப்பிளிகேஷன் போட்டு பார்த்திருக்கலாம்tw_blush::unsure: 

பத்தோடு பதினொன்றாக......?

முத்த  முதலே  சொன்னனான்.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பத்தோடு பதினொன்றாக......?

முத்த  முதலே  சொன்னனான்.....:grin:

 இதுவும் கடந்து போகும்  அண்ண :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

 இதுவும் கடந்து போகும்  அண்ண :10_wink:

முன்பு  பெண்கள்இந்த வரிகளை  பயன்படுத்தினார்கள்

இன்று ஆண்கள்

உண்மை தான்  இதுவும்ஆண்களை  கடந்து  போகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையை சொல்ல போனால் அண்ண கல்யாணம் கட்ட வேணும் என்ற ஆசை இருந்த போது குடும்ப சுமைகள்  அதனால் அந்த ஆசைகளை அடக்கி  உழைத்து  ஓரளவு நல்ல நிலமைக்கு வந்த பிறகு குறித்த வயது கடந்து போகிறது பிறகு ஏனோ தானோ அந்த ஆசை குறைந்து விட்டது  இந்த தனி ஒரு வாழ்க்கையும் நன்றாகத்தான் இருக்கிறது :unsure:

3 minutes ago, விசுகு said:

முன்பு  பெண்கள்இந்த வரிகளை  பயன்படுத்தினார்கள்

இன்று ஆண்கள்

உண்மை தான்  இதுவும்ஆண்களை  கடந்து  போகும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனி ஒருவன் said:

உன்மையை சொல்ல போனால் அண்ண கல்யாணம் கட்ட வேணும் என்ற ஆசை இருந்த போது குடும்ப சுமைகள்  அதனால் அந்த ஆசைகளை அடக்கி  உழைத்து  ஓரளவு நல்ல நிலமைக்கு வந்த பிறகு குறித்த வயது கடந்து போகிறது பிறகு ஏனோ தானோ அந்த ஆசை குறைந்து விட்டது  இந்த தனி ஒரு வாழ்க்கையும் நன்றாகத்தான் இருக்கிறது :unsure:

அடப்பாவி  நான் சும்மா பகிடிக்கு..

அதெல்லாம்  காலநேரம் வர  கைகூடும்

இனி வருவதை  அலட்சியம் செய்யவேண்டாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.