Jump to content

சி.வீ.கே. பிரேரணையை கையளித்தது சட்டத்திற்கு புறம்பானது.- சி.வி.


Recommended Posts

சி.வீ.கே. பிரேரணையை கையளித்தது சட்டத்திற்கு புறம்பானது.- சி.வி.

 
vikki.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண அவைத்தலைவர், நம்பிக்கையில்லா பிரேரணையை , வடமாகாண ஆளுனரிடம் கையளித்தது சட்டத்திற்கு புறம்பான செயல் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண முதலமைச்சர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
 
அவைத்தலைவரின் பங்கு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெளிவில்லாமல் இருக்கின்றது. அவையில் ஒரு அமைச்சருக்கு எதிராகவோ முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் , அதனை அவைத்தலைவருக்கு தான் கையளிக்க வேண்டும்.
 
இங்கே அவைத்தலைவர் தானாக முன் வந்து தன் பக்கம் சிலரை இழுத்துக்கொண்டு , ஆளுனரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்து உள்ளார். அவரது அந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்றே நம்புகின்றேன்.
 
அவ்வாறு பக்க சார்பாக நடந்து கொண்ட அவைத்தலைவர் தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது. அதனை உறுப்பினர்கள் பேச இருக்கின்றார்கள் விவாதிக்க இருக்கின்றார்கள் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றேன்.
 
அமைச்சர்களின் விடுமுறை கோரிக்கையை கைவிடுகிறேன். 
 
 

அமைச்சர்களின் விடுமுறை கோரிக்கையை நான் கைவிடுவதாக தெரிவித்ததை அடுத்து இந்த நிலைமை சுமூகமாக வந்துள்ளதாக நம்புகின்றோம்.

 
ஆனால் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும். அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் திணைக்களங்கள் அமைச்சுக்களில் இருக்கின்றார்கள் அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை அளிப்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
 
அவர்கள் சாட்சியங்கள் அளிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்க வேண்டும் இவற்றை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கின்றோம்.
 
புதிய அமைச்சர்கள் தொடர்பில் முடிவில்லை. 
 
பதவி விலக கோரிய  அமைச்சர்களின் இடத்திற்கு வேறு அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்க வில்லை. தற்போது உள்ள நிலைமையினை ஸ்திர படுத்திய பின்னரே அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க முடியும்.
 
அமைச்சர்கள் மீது விசாரணை நடத்திய குழு சட்ட ரீதியானது. 
 
அமைச்சர்களை விசாரணை செய்த குழு சட்ட பூர்வமான குழு தான் அதேநேரம் இப்பொழுது மற்றைய இரு அமைச்சர்கள் மீதான விசாரணைகளை செய்ய வேண்டியது வேறு ஒரு குழு ஏனெனில் , இந்த அமைச்சர்களின் விசாரணைகளில் வேறு விதமான பின்னணி இருப்பவர்கள் பங்கு பற்ற வேண்டிய காரணம் இருப்பதனால் , அதனை மாற்றி அமைக்க இருக்கின்றோம்.
 
விவசாய அமைச்சு தொடர்பில் மீளாய்வு செய்வது தொடர்பில் பரிசீலனை. 
 
விசாரணை அறிக்கை தொடர்பில்  மீளாய்வு செய்ய முடியுமா? என பரிசீலிக்கிறேன். ஏனெனில் அவர் கூறுவதில் சில விடயங்கள் இருக்கின்றன அந்த விசாரணை குழு கண்டு பிடித்தது அமைச்சர் அதிகார துஸ்பிரயோகம் செய்தார் என்றும் , பண விரயத்தில் ஈடுபட்டு இருந்தார் என்றும் ஆனால் கையாடல் செய்தார் என எங்கும் குறிப்பிடப்பட்டு இருக்க வில்லை அந்த அடிப்படையில் சில விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது.
 
கல்வி அமைச்சர் இராஜினாமா கடிதத்தை கையளிக்கவில்லை. 
 
கல்வி அமைச்சர் தன்னுடைய இராஜினாமா கடிதத்தை தருவதாக தொலைபேசியில் குறிப்பிட்டு இருந்தார். இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. கிடைக்கும் என நம்புகின்றேன். என தெரிவித்தார்.
 
அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டு தொடர்பில் விசாரணை செய்த குழுவினர் விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை பதவி விலக வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
 
அது தொடர்பில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வில் முதலமைச்சர் இரு அமைச்சர்களும் தங்கள் பதவிகளை தியாகம் செய்ய முன் வரவேண்டும் எனவும் , அவர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை நாளை (15ஆம் திகதி ) தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
 
அதற்கு இணங்க மறுநாள் (15ஆம் திகதி) விவசாய அமைச்சர் பொ.இங்கரநேசன் தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்து இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/30364

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.