Jump to content

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை!


Recommended Posts

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை!

 
 
 

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் புகாரால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Edappadi Palanisamy

 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட எட்டு கேள்விகளை அவர் கேட்டிருந்தார். இதற்கு, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று பதில் வந்துள்ளது.

52d7af98-d9dd-4640-839c-f446fc7f6a5e_120

aaa03fc8-d887-462a-ba75-816401452f53_122

வைரக்கண்ணன் கேட்ட மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/92681-ec-asks-tn-police-to-file-a-case-against-cm-edappadi-palanisamy-over-bribe-allegations-in-rk-nagar-poll.html

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா புகார்: முதல்வர், அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்க - ஸ்டாலின்

 

 
ஸ்டாலின். | கோப்புப் படம்: சிவ சரவணன்.
ஸ்டாலின். | கோப்புப் படம்: சிவ சரவணன்.
 
 

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு விலை கொடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு 12.4.2017 அன்று நடைபெறவிருந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்குள் உள்ள இரு அணிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் கடுமையாக போட்டிபோட்டு தேர்தல் களத்தில் ஊழல் செய்த பணத்தை வாரி இறைத்தனர்.

ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வெற்றி பெறுவதற்கு அத்தனை அமைச்சர்களும் ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக பணம் கொடுத்துனர். ஆர்.கே.நகரில் பண விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், 8.4.2017 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, 5 கோடி ரூபாய் பணம், 89 கோடி ரூபாய் பணம் விநியோகிக்கும் பட்டியல் உள்ளிட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த வார்டுகள், வார்டு வாரியாக இருந்த வாக்காளர்கள், அவர்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் ஆகியவை தொடர்பான விவரங்கள் எல்லாம் அதில் இடம்பெற்று அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் குழுக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கேப்டனாக இருந்தார் என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய பணப்பட்டியலில் இருந்து தெரியவந்தது.

'லஞ்சம் கொடுத்து வாக்காளர்களை வளைக்கும் மிகப்பெரிய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது என வருமான வரித்துறை சோதனையில் கண்டிபிடிக்கப்பட்டது' என்று இந்திய தேர்தல் ஆணையமே வெளிப்படையாக தனது உத்தரவில் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வருமான வரித்துறை ரெய்டில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 'தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்காது' என்பதை உறுதி செய்துகொண்ட தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட மூன்று ஆணையர்கள் தலைமையில் அவசரமாக கூடி, 9.4.2017 அன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், தமிழக வரலாற்றில் தேர்தல் ஜனநாயகத்தில் மிகப்பெரிய கரும்புள்ளியை விழ வைத்தது அதிமுக அரசு. அரசியல் சட்டப்படி, தன்னாட்சி பெற்ற அமைப்பை தேர்தல் நடத்தவிடாமல் செய்த குற்றத்தில் முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் உள்ளாக்கப்பட வேண்டியவர்கள். ஆனாலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது குறித்து, முதல்வர் மீதோ, அதிமுக அமைச்சர்கள் மீதோ தேர்தல் ஆணையம் வேறு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை ரெய்டில் கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் பட்டியல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அவருக்கு பதில் அளித்துள்ள ஆணையம், 'இந்திய தண்டனை சட்டப்பிரிவு 171Bன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 18.4.2017 அன்றே உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், 34 பக்கங்கள் கொண்ட வருமான வரித்துறை சோதனை அறிக்கையையும், அத்துடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், தலைமைச் செயலாளருக்கும் இணைத்து தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு மூன்று மாதங்கள் ஆன பிறகும், முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மூர்க்கத்தனமாக அவமதிக்கும் செயலாக இது அமைந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை ஏற்று முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை இவ்வளவு தயங்குவது ஏன்? வழக்குப்பதிவு செய்வதற்கு தடையாக இருப்பது யார்? மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள இந்த உத்தரவின் நகல் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளதால், ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற தலைமைச் செயலாளர் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது எல்லாம் அடுத்தடுத்த கேள்விகளாக எழுகிறது.

ஆகவே, ஜனநாயகத்தின் எஜமானர்களாகத் திகழும் வாக்காளர்களை விலைகொடுத்து வாங்கிய குற்றத்திற்கு உள்ளான முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, இந்திய தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை நிறைவேற்ற இனியும் தவறினால், திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஆர்கேநகர்-பணப்-பட்டுவாடா-புகார்-முதல்வர்-அமைச்சர்கள்-மீது-கிரிமினல்-வழக்குப்-பதிவு-செய்க-ஸ்டாலின்/article9729749.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.