Jump to content

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!


Recommended Posts

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

 
 

வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ர­னுக்­கும் சபை­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான குழப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி குழம்­பிய குட்­டை­யில் மீன்­பி­டிப்­ப­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி கடும் முயற்சி செய்­வது தெளி­வா­கவே தெரி­கின்­றது.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஊடா­கச் செய்ய முயன்று முடி­யா­மல்­போ­னதை இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி நிறை­வேற்­றி­வி­ட­லாம் என்று தலை­கீ­ழாக நிற்­கி­றார்­கள். முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லங்­கள் ஆர்ப்­பாட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் அவர்­களே பெரு­ம­ள­வில் இருந்­தார்­கள். அதற்­கான கார­ணத்தை முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் நேர­டி­யா­கவே நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி தமது அணிக்­குத் தலைமை தாங்க வர­வேண்­டும் என்று அவர் அழைப்பு விடுத்­தி­ருந்­தார். முத­ல­மைச்­சரை ஆத­ரித்து அவர்­கள் நடத்­தும் போராட்­டங்­க­ளின் பின்­னா­லும், எழுப்­பும் முழக்­கங்­க­ளின் பின்­னா­லும் அவ­ரைத் தமது பக்­கம் இழுத்து, எப்­ப­டி­யா­வது ஒரு நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தித்­து­ வத்­தைப் பெற்­று­வி­டு­வதே அவர்­க­ளின் ஆசை, அவா எல்­லாமே.

அதற்­கா­கவே முத­ல­மைச்­ச­ருக்­கும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடையே எந்­த­வோர் இணக்­க­மும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தில் கவ­ன­மாக இருக்­கி­றார்­கள். அதற்­கான கருத்­துக்­க­ளைத் தெரிந்­தெ­டுத்து வெளிப்­ப­டுத்­து­வ­தில் மும்­மு­ர­மாக இருக்­கி­றார்­கள். ஆனால், இந்த அவ­ச­ரத்­தில் அவர்­கள் சில தர்க்க நியா­யங்­களை மறந்­து­வி­டு­கி­றார்­கள் என்­ப­து­தான் வேடிக்கை.

நேற்­றைய தினம் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம், ‘‘திரு­டர்­க­ளின் குகை­யா­கத் தமிழ் அர­சுக் கட்சி மாறி­விட்­டது‘‘ என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார். வடக்கு மாகாண சபை­யில் திரு­டர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­காக தமிழ் அர­சுக் கட்சி செயற்­பட்டு வரு­கின்­றது என்­றும் குற்­றஞ்­சாட்­டி­ னார். அதே­ச­ம­யம், தான் அங்­கம் வகிக்­கும் தமிழ் மக்­கள் பேர­வை­யில் சிலர் நிதி மோச­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்று உள்­ளக விசா­ர­ணை­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­போது பேரவை ஒரு திரு­டர்­க­ளின் குகை என்று அவர் கூற­வில்லை. ஏன், அப்­ப­டி­யொரு திருட்டு இடம்­பெற்­றது என்­ப­தைக்­கூட அவர்­கள் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்­க­வே­யில்லை. மூடி மறைத்து உண்­மை­யைப் புதைத்­து­விட்­டார்­கள்.

ஆக, அவர்­க­ளு­டைய உண்­மை­யான நோக்­கம் அர­சி­ய­லுக்­காக விமர்­ச­னம் செய்­வ­தும் குட்­டையை மேலும் குழப்பி விக்­னேஸ்­வ­ரன் என்­கிற மீனைப் பிடிக்க முடி­யுமா என்று பார்ப்­ப­துமே தவிர, மக்­கள் மீதான அக்­க­றை­யல்ல.
அது­போன்றே விக்­னேஸ்­வ­ர­னைத் தோற்­க­டிப்­ப­தற்­காக தமிழ் அர­சுக் கட்சி அர­சு­ட­னும், ஈபி­டி­பி­யு­ட­னும், தமிழ் மக்­க­ளைக் காட்­டிக்­கொ­டு்த்த தரப்­பு­க­ளு­ட­னும் சேர்ந்­து­கொண்­டுள்­ள­தா­கக் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

இப்­ப­டித்­தான் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது முன்­னாள் ஒட்­டுக் குழுக்­க­ளும், தமிழ் மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்த அமைப்­பு­க­ளு­மான ஈபி­ஆர்­எல்­எவ், புளொட், ரெலோ போன்­ற­வற்­று­டன் தமிழ் அர­சுக் கட்சி வைத்­துக்­கொண்­டுள்ள கூட்­டுத்­தான் கூட்­ட­மைப்பு என்று மேடை மேடை­யாக முழங்­கி­னார்­கள். ஆனால், தேர்­த­லில் தோற்ற கையோடு அதே புளொட், ஈபி­ஆர்­எல்­எவ் என்­ப­வற்­று­டன் கைகோர்த்­துக்­கொண்டு தமிழ் மக்­கள் பேர­வையை உரு­வாக்­கி­னார்­கள்.

தாங்­கள் அணி சேர்ந்­த­போது ,முன்­னாள் ஒட்­டுக் குழுக்­க­ளா­க­ வும் தமிழ் மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்த அமைப்­பு­க­ளா­க­வும் புளொட், ஈபி­ஆர்­எல்­எவ் அமைப்­பு­கள் அவர்­க­ளுக்­குத் தெரி­ய­ வில்லை. இப்­போது மீண்­டும் அதே­போன்று ஈபி­டிபி, அரசு, மக்­க­ளைக் காட்­டிக்­கொ­டுத்த தரப்­பு­க­ளு­டன் தமிழ் அர­சுக் கட்சி கூட்­டுச் சேர்ந்­து­விட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட்­டு­ கி­றார்­கள்.

அதே­நே­ரத்­தில் முத­ல­மைச்­ச­ருக்­குத்­தான் தாம் ஆத­ரவு என்ற ரீதி­யில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் (கொழும்பு அர­சின் முக்­கிய பங்­காளி) யாழ். மாவட்ட அமைப்­பா­ளர் இ.அங்­க­ஜன் விடுத்த அறிக்­கை­யைப் பற்றி அவர் மூச்­சும் விட­வில்லை. அரை­வா­சிக் கொழும்பு அர­சான சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ரவு தனக்­குத் தேவை­யில்லை என்று முத­ல­மைச்­சர் அறிக்­கை­யே­தும் விட்டு அதனை நிரா­க­ரிக்­கா­தது குறித்­தும் அவர் அக்­க­றை­கொள்­ள­வில்லை.

ஆக, தத்­தம் கட்சி நலன்­க­ளுக்­காக , சுய நலன்­க­ளுக்­காக – ஏதா­வது விமர்­ச­னங்­களை வைத்து ஆதா­யம் அடை­வ­து­தான் இவர்­க­ளின் நோக்­கம். ‘‘அர­சி­ய­லில் இதெல்­லாம் சாதா­ர­ண­மப்பா‘‘ என்­பது மக்­க­ளுக்­கும் புரி­யா­தது அல்­லவே!

http://uthayandaily.com/story/7200.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.