Jump to content

அவைத் தலைவரும் 22 திருடர்களும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவைத் தலைவரும் 22 திருடர்களும்!

June 17, 2017
viber-image-15.jpg?resize=696%2C367

இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல.

இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும்.

தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள்.

ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.

மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர்.

அதுவும் அவைத் தலைவர் சிவஞானமோ எல்லோரையும் விஞ்சி நிற்கிறார். மரபுப்படி நடுநிலை வகிக்க வேண்டிய பதவியை வகிக்கும் அவரோ மரபை மீறி முதலமைச்சரை நீக்க ஒற்றைக்காலில் நிற்கிறார்.

இதுவரை ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கோசம் போட்டு வந்த இந்த அவைத்தலைவர் இப்போது முதலமைச்சரை நீக்குவதற்காக அதே ஆளுநர் காலில் போய் விழுந்துள்ளார்.

அதுமட்டுமன்றி ஆளுநர் ஆங்கில மொழியில் உரையாடிய வேளையிலும் இவர் அவருடன் சிங்கள மொழியில் உரையாடுகிறார்.

கேப்பாப்புலவில் மக்கள் போராடுகின்றார்கள். காணாமல் போனவர்களின் உறவுகள் போராடுகின்றார்கள்.

பன்னங்கட்டியில் மக்கள் போராடுகின்றார்கள். இரணைதீவு மக்களும் தமது சொந்த நிலத்தில் குடியேற அனுமதி கேட்டு போராடுகிறார்கள்.

வாக்கு போட்ட மக்கள் போராடுகிறார்கள். ஆனால் பதவி பெற்ற அவைத்தலைவரோ இந்த மக்களுக்காக ஆளுநரை ஒருபோதும் சந்திக்கவில்லை.

ஆனால் இன்று ஊழல் அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காக அதே ஆளுநரை ஓடிச் சென்று சந்திக்கிறார்.

முன்பு சங்கக்கடையில் ஊழல் செய்த இந்த அவைத் தலைவர் இன்று அமைச்சர்களின் ஊழலுக்கு துணை போனதில் ஆச்சரியமில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த அவைத் தலைவர் இதுவரை மூன்று ஆசனங்களை மாற்றி விட்டாராம்.

தனக்கு உட்காருவதற்கு சொகுசாக இல்லை என்றுகூறி இதுவரை மூன்று விலை உயர்ந்த ஆடம்பரமான ஆசனங்களை மாற்றியவர் தனது பதவிக்காலம் முடிவதற்குள் இன்னும் எத்தனை ஆசனங்களை மாற்றப் போகிறாரோ என்று அதிகாரிகள் முழிக்கின்றனராம்.

கேப்பாப்புலவில் குழந்தைகள்கூட ரோட்டில் ராணுவ கம்பி வேலிகருகில் உறங்கிய வேளை இந்த அவைத் தலைவர் தனக்கு சொகுசு ஆசனம் வேண்டும் என்று அடம்பிடித்தது அசிங்கம் இல்லையா?

இப்போது இந்த அசிங்கத்திற்கு மன்னிக்கவும் அவைத் தலைவருக்கு முதல்வர் சிம்மாசனம் வேண்டுமாம்.

ஜயகோ! இன்னும் எத்தனை கேவலங்களை தமிழ் மக்கள் காண வேண்டி வருமோ?

-Balan tholar

http://www.quicknewstamil.com/2017/06/17/அவைத்-தலைவரும்-22-திருடர்க/

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.