Jump to content

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்


Recommended Posts

நாம் சில குறிபிட்ட பொருட்களின்  தீவிர வாடிக்கையாளர்களாக (நுகர்வோர்களாக) இருப்போம், அப்பொருட்களின் பயண் எம்மை மிகவும் கவர்ந்து இருக்கும், அவை உணவுப் பொருட்களாகவோ , நொறுக்குத்தீனிகளாகவோ, வீட்டுப் பாவனைப் பொருட்களாகவோ .... எவையாகவும் இருக்கலாம் அவற்றினை பகிர்வதன் மூலம் நாமும் சில நல்ல பொருட்களை மற்றவர்கள் மூலம் அறிந்து அதன் பலனை நாமும் அனுபவிக்கலாம், நாம் பெற்ற பயனை மற்றவர்களும் பெறச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

 

Lindt Hauchdünn Milch & Orange

 

Hauchdünne Täfelchen Orange 125g

 

எனக்கு சுவிசில் மிகவும் பிடித்த சொக்கிலேட்டில் இதுவும் ஒன்று , மிகவும் மெல்லியதாக இருக்கும் ஒரு இரண்டு தாள்களின் மொத்தம் தான் இருக்கும், அத்துடன் அதன் தோடம்பழ சுவை மிகவும் இனிமையாக இருக்கும் , வாயில் போட்டவுடன் அதன் மிக மெல்லிய தண்மை காரணமாக நாவில் உடணடியாகக் கரைந்து  தோடம்பழ சுவை + சொக்கிலேற் சுவை இரண்டையும் ஒருசேரக் கலந்து ஒரு ரம்மியமான சுவையைத்தரும். 
ஒரு முறை கனடா உறவினர்களுக்கு இதனை கொடுத்து அனுப்பியிருந்தேன்  அவர்கள் ஒவ்வொரு முறையும்  இந்த சொக்கிலேட்டினைத் தான் கேட்பார்கள்  அதனாலோ என்னவோ இப்போது இது எனக்கு இன்னும் பிடித்து போனது

விலை  8.50 (180g) ; கடை  coop (Swiss)

Denner  இல் இடையிடையே 3 பக்கற் 17.00 chf இற்கு போடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில், விமான பயண டிக்கெட்கள்

ரயில் பயண டிக்கெட்கள், பிரித்தானியாவில் மிகவும் அதிகம்.

அதேவேளை இந்த பயண பாதைகள், தொடர்பில், சரியான கணக்கீடுகள், முறைமைகள், ரயில் நிர்வாகத்தினால் செய்ய முடியாமல் இருப்பதால், விடயம் தெரிந்தவர்களுக்கு சட்ட  பூர்வமாக, மலிவாக டிக்கெட் எடுக்க தெரிந்திருக்கும்.

உதாரணமாக வடமேல் லண்டனில் இருந்து காட்விக் விமான நிலையம் போக, மத்திய லண்டன் விக்டோரியா நிலையம் போய் ( £7) காட்விக் எக்ஸ்பிரஸ் பிடித்தால் (£20)..... குறைந்தது £27... ஒரு வழி மட்டும். அதேயே, ஹாரோ வீல்ட்ஸ்டான் நிலையத்தில் இருந்து மத்திய லண்டன் போகாமல் நேரே காட்விக் விமான நிலையம் போக £12 மட்டுமே.

முக்கியமாக, லண்டனில் இருந்து வேல்ஸ் தலைநகர் கார்டிப்ப் செல்ல உதாரணமாக £120. அதேயே நடுவில் இருக்கும் பிரிஸ்டல் நகரத்துக்கு ஒரு டிக்கெட், பிரிஸ்டல் இருந்து கார்டிப்ப் என பிரித்து வாங்கினால் £70 ஆகும். ஒரே ரயில்.... தொடர்ந்து பயணிக்க முடியும்.... 

இது எப்படி சாத்தியம் என பார்த்தால், அவர்களது 'very complicated pricing method' என்கிறார்கள். அதை சரி செய்தால் வேறு எங்கோ உதைக்குமாம்.

இதை புரிந்து டபக்கெண்டு டிக்கெட் வாங்காமல், நன்றாக மேய்ந்து வாங்குங்கள்.

அதே போல் தான் கனடா - கொழும்பு டிக்கெட். ஒரு சராசரி குடும்பம் இலங்கை போக, பயண சீட்டு மட்டும் $10,000 என்கிறார்கள்.

ஆனாலும், Transat போன்ற விமான சேவைகள் மிக மலிவாக பயணிகளை பிரித்தானியாவின், கிளாஸ்கோ போன்ற நகரங்களுக்கு கொண்டு வரும். அங்கிருந்து esayjet, ryanair போன்ற மலிவு சேவைகளில், லண்டனுக்கோ, அல்லது ஐரோப்பிய விமான நிலையங்களுக்கு போய், மலிவாக இலங்கை கொண்டு போகும் விமானத்தில் பயணித்து, சேமிக்க முடியும். 

இந்த வகை மலிவு சேவை விமானங்கள், ஒரு வருடம் முன்பே பதிய முடியும். மிக குறைவான கடடணங்கள், (£5 தொடக்கம்). ஆகவே நன்கு திட்டமிட்டால் சேமிக்க முடியும்.

நண்பர் குடும்பத்துடன், கிளாஸ்க்கோவில் இருந்து டொரோண்டோ போனதால் £1200 சேமித்து, அதை அங்கே நன்கு செலவு செய்ய பயன் படுத்தியதாக சொன்னார்.. லண்டனில் இருந்து தான் போக வேணும், இங்க ஏறினா அங்க தான் இறங்க வேணும் என்று அடம் பிடியாமல் பார்த்தால், சேமிக்க முடியும்.

முக்கியமாக, நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்களோ, அதில் ஒரு பகுதி உங்கள் travel ஏஜென்ட் கமிசன் ஆக கிடைப்பதால், அவர் இந்த வழிகளை சொல்லித்தர மாட்டார். 

நாம் தான் வலையில் புகுந்து விளையாட வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் கோடைகால விடுமுறைக்கு கொழும்புக்கு airlanka 950 பவுண்ட் ஹீத்துரோ வில் இருந்து போய்திரும்புதல் நம்மாட்களும் அடைந்தால் மகாதேவன் கணக்காய் airlankaavai புக் பண்ணின்னம்.

பக்கத்து கெட் வீக் லிருந்து ஒருமணிநேரம் இடைத்தங்கல் கொழும்பு ரிக்கெட் விலை 550 பவுண்ட் மட்டுமே கட்டார் விமானம் போய்திரும்புதல் விலை .

48 minutes ago, Nathamuni said:

முக்கியமாக, நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்களோ, அதில் ஒரு பகுதி உங்கள் travel ஏஜென்ட் கமிசன் ஆக கிடைப்பதால், அவர் இந்த வழிகளை சொல்லித்தர மாட்டார். 

ஆங்கிலம் பெரிதாக தெரியாத  சிங்களம் மட்டும் தெரிந்த ஏஜென்ட்கள் airlankaaவை வலுக்கட்டாயமாக தலையில் கட்டும் சம்பவங்களும் நிறைய இங்கு கூட .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

போன வருடம் கோடைகால விடுமுறைக்கு கொழும்புக்கு airlanka 950 பவுண்ட் ஹீத்துரோ வில் இருந்து போய்திரும்புதல் நம்மாட்களும் அடைந்தால் மகாதேவன் கணக்காய் airlankaavai புக் பண்ணின்னம்.

பக்கத்து கெட் வீக் லிருந்து ஒருமணிநேரம் இடைத்தங்கல் கொழும்பு ரிக்கெட் விலை 550 பவுண்ட் மட்டுமே கட்டார் விமானம் போய்திரும்புதல் விலை .

ஆங்கிலம் பெரிதாக தெரியாத  சிங்களம் மட்டும் தெரிந்த ஏஜென்ட்கள் airlankaaவை வலுக்கட்டாயமாக தலையில் கட்டும் சம்பவங்களும் நிறைய இங்கு கூட .

Ebookers, Expedia.com வலையில் புகுந்து விளையாட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

Ebookers, Expedia.com வலையில் புகுந்து விளையாட வேண்டும்.

விளையாட தெரிந்தாலும் நம்பிக்கையின்மை கூட காசை சிலவளித்து போகுதுகள் உதாரணமாய் போனவருட கட்டாரின் மலிவு விலை நான் எத்தனையோ பேருக்கு சொல்ல நம்புதுகள் இல்லை இங்கு திரியும் தனித்தவில் ஒண்டை பிடிச்சு விசா இருக்கு ஊர் போய்வா என்று அதன் விசா காட்டில் புக் பண்ணி ஏத்தி அனுப்பி விட அது ஊருக்கு போய் விளம்பரம் செய்து முடிக்க கொலிடே முடிந்துவிட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை இலண்டன் நம்பர் விளம்பரத்தில்...

போன் அடித்தால், அப்படியே கடத்தி,  கொழும்பில... கோல் சென்றர்....

அவருக்கு கமிசன் கூடவரவேண்டும் என்றால், நம்மள கூட செலவழிக்க வைக்கவேண்டும்.

இன்ரநெற்ல பூந்து வெளாடி, டீல் பிடிக்க முடியாவிடில், Travel ஏஐன்ட் என்று போக முன், சொந்தகாரர், உறவினர் உதவி பெற்றால், சேமிக்க முடியும்.

இங்க பெருமாள் சொன்னபடி பார்தாலே, £400 சேமிப்பு. பொல்லால அடிச்ச காசு.

அநேகமா, கனடாக்காரர்... உந்த இடைத்தங்கள் (Transit) ஒழுங்குகள் என்று ஏஜன்றிடம் போய், அநியாயத்துக்கு காசைக் கொடுப்பினம்.

இன்றநெற்றுக்குள்ள போய் தனித்தனிய சகல பதிவுகளையும் செய்யலாம். உதாரணமா, லண்டன்கற்விக்  - கொழும்பு பதிவு கல்ப்ஏயர், கட்டார் ஏயர் எல்லாமே இணைய வழியே செய்யலாம். அதே கற்விக் விமான நிலையத்துக்கு, ரொரண்ரோவில் இருந்து Transat Air மூலம் வரலாம்.

தனித்தனிய பதிவு செய்கையில், இலண்டன் சிலநாள் தங்க யாரும் காசு பறிக்க ஏலாது. :cool:

ஆனால் ஒரேயடியான பதிவில் ஏஜன்ற், Journey break என்று, அதுக்கு வேற பிடுங்குவார். tw_cry:

சேமிப்பு பல ஆயிரம் CAD$.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2017 at 5:48 AM, பெருமாள் said:

போன வருடம் கோடைகால விடுமுறைக்கு கொழும்புக்கு airlanka 950 பவுண்ட் ஹீத்துரோ வில் இருந்து போய்திரும்புதல் நம்மாட்களும் அடைந்தால் மகாதேவன் கணக்காய் airlankaavai புக் பண்ணின்னம்.

பக்கத்து கெட் வீக் லிருந்து ஒருமணிநேரம் இடைத்தங்கல் கொழும்பு ரிக்கெட் விலை 550 பவுண்ட் மட்டுமே கட்டார் விமானம் போய்திரும்புதல் விலை .

ஆங்கிலம் பெரிதாக தெரியாத  சிங்களம் மட்டும் தெரிந்த ஏஜென்ட்கள் airlankaaவை வலுக்கட்டாயமாக தலையில் கட்டும் சம்பவங்களும் நிறைய இங்கு கூட .

Gatwick இல் இருந்து Qatar airways போகின்றதா???

On 6/19/2017 at 1:14 PM, Nathamuni said:

இங்கை இலண்டன் நம்பர் விளம்பரத்தில்...

போன் அடித்தால், அப்படியே கடத்தி,  கொழும்பில... கோல் சென்றர்....

அவருக்கு கமிசன் கூடவரவேண்டும் என்றால், நம்மள கூட செலவழிக்க வைக்கவேண்டும்.

இன்ரநெற்ல பூந்து வெளாடி, டீல் பிடிக்க முடியாவிடில், Travel ஏஐன்ட் என்று போக முன், சொந்தகாரர், உறவினர் உதவி பெற்றால், சேமிக்க முடியும்.

இங்க பெருமாள் சொன்னபடி பார்தாலே, £400 சேமிப்பு. பொல்லால அடிச்ச காசு.

அநேகமா, கனடாக்காரர்... உந்த இடைத்தங்கள் (Transit) ஒழுங்குகள் என்று ஏஜன்றிடம் போய், அநியாயத்துக்கு காசைக் கொடுப்பினம்.

இன்றநெற்றுக்குள்ள போய் தனித்தனிய சகல பதிவுகளையும் செய்யலாம். உதாரணமா, லண்டன்கற்விக்  - கொழும்பு பதிவு கல்ப்ஏயர், கட்டார் ஏயர் எல்லாமே இணைய வழியே செய்யலாம். அதே கற்விக் விமான நிலையத்துக்கு, ரொரண்ரோவில் இருந்து Transat Air மூலம் வரலாம்.

தனித்தனிய பதிவு செய்கையில், இலண்டன் சிலநாள் தங்க யாரும் காசு பறிக்க ஏலாது. :cool:

ஆனால் ஒரேயடியான பதிவில் ஏஜன்ற், Journey break என்று, அதுக்கு வேற பிடுங்குவார். tw_cry:

சேமிப்பு பல ஆயிரம் CAD$.

எங்கட ஆட்களுக்கு Luggage ஓர் பெரிய பிரச்சனை.

Transit air 23 kg என்றே நினைக்கின்றேன். மற்றய airlines 46kg கனடாகாரர்களுக்கு.

ஆனால் இலங்கையிலிருந்து 23 kg வை கனடாவிற்கு அனுப்ப $ 100 - $ 150 வரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மாலைதீவுக்கும் மட்டும் போட்டு எடுத்துடாதீங்க குளோன் போத்தலைகூட உருவி ட்டான் பாவிகள்  கைப்பையில் இருந்ததை என்ன  சட்டமோ தெரியலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனி ஒருவன் said:

ஆனால் மாலைதீவுக்கும் மட்டும் போட்டு எடுத்துடாதீங்க குளோன் போத்தலைகூட உருவி ட்டான் பாவிகள்  கைப்பையில் இருந்ததை என்ன  சட்டமோ தெரியலை 

100ml ற்கு மேலே கொண்டு செல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

100ml ற்கு மேலே கொண்டு செல்ல முடியாது.

ஆனால் சிறீலங்காவில் ஒரு தமிழர் எதிர் கட்சி தலைவராக உள்ள போது 

%5Burl=https://postimg.org/image/kvdhalp6d/%5D%5Bimg%5Dhttps://s2.postimg.org/batunpzuh/IMG_4641.png%5B/img%5D%5B/url%5D

 

ஆனால் த்ற்போது இலங்கையிலும் சட்டம் வந்துள்ளது நீங்கள் அறிந்துள்ளீர்களா ?? கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

Gatwick இல் இருந்து Qatar airways போகின்றதா???

எங்கட ஆட்களுக்கு Luggage ஓர் பெரிய பிரச்சனை.

Transit air 23 kg என்றே நினைக்கின்றேன். மற்றய airlines 46kg கனடாகாரர்களுக்கு.

ஆனால் இலங்கையிலிருந்து 23 kg வை கனடாவிற்கு அனுப்ப $ 100 - $ 150 வரும்.

எங்கட ஆட்களுக்கு Luggage ஓர் பெரிய பிரச்சனை.

Transit air 23 kg என்றே நினைக்கின்றேன். மற்றய airlines 46kg கனடாகாரர்களுக்கு.

ஆனால் இலங்கையிலிருந்து 23 kg வை கனடாவிற்கு அனுப்ப $ 100 - $ 150 வரும்.

The size of hand luggage cannot exceed 23 x 40 x 51 centimetres on Air Transat flights (sizes are approximate).

Hold Luggage Allowance: Economy: One piece of luggage weighing up to 23kg per paying passenger. ...

Club Class: Two pieces of luggage per paying passenger, with a combined weight of up to 40kg.

குடும்பமா போகேக்க 23 கிலோ ஆளுக்கு... 4 பேர் போனால், ஆகும்... கேபின் பாக் உடன் சேர்த்தா, 125 கிலோ தாண்டும். போதாதே?

இன்னொரு பிரச்சனை: குளிருக்கு உங்க போடுற உடுத்துணி சுமக்கிறது. இரண்டு நாளுக்கு மட்டும் கொண்டு போய், அங்க வாங்கி பாவிச்சிட்டு, வரும்போது வீதியில் இருப்பவர்களிடம் கொடுத்து வரலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

ஆனால் த்ற்போது இலங்கையிலும் சட்டம் வந்துள்ளது நீங்கள் அறிந்துள்ளீர்களா ?? கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது 

ஆம் அந்த கன்றாவியை இணைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை

தமிழர் ஒருவரை எதிர்கட்சி தலைவராக வைத்துக் கொண்டு

IMG_4641.png

 

IMG_4640.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

ஆம் அந்த கன்றாவியை இணைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை

அது ஏற்கனவே  செய்தியாக வந்துள்ள இணையத்தளத்தில் ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது பிறகு வந்து விட்டு சிங்களவன் முழுவதையும் புங்கிட்ட்டான் என்று சொல்லி அழுவாங்களே அதை தெரியப்படுத்த வேண்டும் முதலில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனி ஒருவன் said:

அது ஏற்கனவே  செய்தியாக வந்துள்ள இணையத்தளத்தில் ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது பிறகு வந்து விட்டு சிங்களவன் முழுவதையும் புங்கிட்ட்டான் என்று சொல்லி அழுவாங்களே அதை தெரியப்படுத்த வேண்டும் முதலில் 

தமிழை கொன்றிருக்கிறார்கள் இணையத்தளத்தில்,

 

உள் வரும் போது பிரச்சனையில்லை வெளியேறும் போதுதான் பிரச்சனை

13 minutes ago, Nathamuni said:

The size of hand luggage cannot exceed 23 x 40 x 51 centimetres on Air Transat flights (sizes are approximate).

Hold Luggage Allowance: Economy: One piece of luggage weighing up to 23kg per paying passenger. ...

Club Class: Two pieces of luggage per paying passenger, with a combined weight of up to 40kg.

குடும்பமா போகேக்க 23 கிலோ ஆளுக்கு... 4 பேர் போனால், ஆகும்... கேபின் பாக் உடன் சேர்த்தா, 125 கிலோ தாண்டும். போதாதே?

இன்னொரு பிரச்சனை: குளிருக்கு உங்க போடுற உடுத்துணி சுமக்கிறது. இரண்டு நாளுக்கு மட்டும் கொண்டு போய், அங்க வாங்கி பாவிச்சிட்டு, வரும்போது வீதியில் இருப்பவர்களிடம் கொடுத்து வரலாமே.

எங்கட சனத்திற்கு 1000 கிலோவும் போதாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STANSTED ஏர்போட் போய் வர எதாவது சீப்பான வழி இருந்தால் சொல்லுங்கள் கோச்சை தவிர்த்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

STANSTED ஏர்போட் போய் வர எதாவது சீப்பான வழி இருந்தால் சொல்லுங்கள் கோச்சை தவிர்த்து

பொடி நடை தான். ஹி, ஹி..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

Gatwick இல் இருந்து Qatar airways போகின்றதா???

மன்னிக்கவும் எமிரேட்ஸ் தான் எல்லாம் அரபு உலகம் கட்டாரை வதைக்க  அதுதான் எடுத்தவுடன் நினைவில் வந்து துளைக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, பிரயோசனமான.... தலைப்பு  ஆதவன்.
நாதமுனி, பெருமாள், மீரா... ஆகியோரின் அனுபவங்கள், இப் பதிவுக்கு வலு சேர்க்கின்றது.
அவற்றை வாசிக்கும் போது.... விமான சீட்டு வாங்கும் போது,  
நாம்  அவசரப் படாமல் கணனியில் தேடும் போதே... 
பெரும் தொகை பணத்தை சேமிக்க முடியும் என்பது நல்ல தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்துக்கு பாரிசுக்கும் லண்டனுக்கும் 10 தடவைகளுக்கு மேல் ஐரோ சட்டில் மூலம் ஆங்கில கால்வாயை கடப்பவர்களுக்கு இந்த முறை லாபகரமானது  45 பவுன் ஒருமறை போய் திரும்புதல் இந்த லிங்கில் https://www.eurotunnel.com/uk/tickets/types/frequent-traveller/ கணக்கை திறந்து முற்பணம் கொடுத்தபின் விலைகுறைவான டிக்கெட் தனி வரிசை என்பது போன்ற வசதிகள் .குறைந்தது 500   பவுன் சேமிக்லாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை மொன்றியல் விசிட் அடித்தபோது போன் மொபைல் போன் ரோமிங் நிறுத்த மறந்து விட்டன் திரும்பவும் லண்டன் வந்தபோது வந்து விழுந்த பில் 1200 பவுண்ட்ஸ் இவ்வளவுக்கும் நெட் பாவிக்கவில்லை வேறு என்ன அப்ப Tமொபைல் என்றபெயரில் மணித்தியால கணக்கில் கொள்ளுபட்டு பலனில்லை நெட்டில் தேடியபோது ஒம்புச்ட்மன் மனு குடுப்பது பற்றி இருந்தது கடிதம் போட்டு நான்காம் நாள் அந்த ஓவரா அடித்த 1200 கான்செல் பண்ணி விட்டம் என்று பதில் வந்தது . மொபைல் போன் குழப்படி நெட்வொர்க் பற்றி முறையிட இந்த லிங்கில் சாம்பிள் கடிதமும் உண்டு http://www.which.co.uk/consumer-rights/advice/how-to-complain-to-the-ombudsman-about-a-mobile-phone-provider#find-the-correct-ombudsman இங்கிலாந்து  வாசிகளுக்கு மட்டும் மற்றயவர்கள் மன்னிக்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

ஒருமுறை மொன்றியல் விசிட் அடித்தபோது போன் மொபைல் போன் ரோமிங் நிறுத்த மறந்து விட்டன் திரும்பவும் லண்டன் வந்தபோது வந்து விழுந்த பில் 1200 பவுண்ட்ஸ் இவ்வளவுக்கும் நெட் பாவிக்கவில்லை வேறு என்ன அப்ப Tமொபைல் என்றபெயரில் மணித்தியால கணக்கில் கொள்ளுபட்டு பலனில்லை நெட்டில் தேடியபோது ஒம்புச்ட்மன் மனு குடுப்பது பற்றி இருந்தது கடிதம் போட்டு நான்காம் நாள் அந்த ஓவரா அடித்த 1200 கான்செல் பண்ணி விட்டம் என்று பதில் வந்தது . மொபைல் போன் குழப்படி நெட்வொர்க் பற்றி முறையிட இந்த லிங்கில் சாம்பிள் கடிதமும் உண்டு http://www.which.co.uk/consumer-rights/advice/how-to-complain-to-the-ombudsman-about-a-mobile-phone-provider#find-the-correct-ombudsman இங்கிலாந்து  வாசிகளுக்கு மட்டும் மற்றயவர்கள் மன்னிக்க .

தனியார்மய கம்பனிகள் , கார்ப்பரேட் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் இவற்றுக்கெல்லாம் "ombudsman office " இது ஒரு சிம்மசொப்பன வார்த்தை.
ஒரு நுகர்வாளனாக, வாடிக்கையாளராக உங்கள் பிரச்சினைகளை சம்பத்தப்பட்ட நிறுவனங்கள் கவனம்  எடுக்காதவறினால் அல்லது நீங்கள் அநீதியான முறையில் நடத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தாலோ, அல்லது உங்கள் முறைப்பாடுகள் சரியாக தீர்க்கப்படாவிட்டாலோ நீங்கள் அடுத்த கட்டமாக அணுகவேண்டிய நிர்வாக அமைப்பு தான் இந்த "ombudsman office".
பொதுவாக நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் "ombudsman office" ஐ அணுகுவதை சற்றும் விரும்ப மாட்டார்கள்.
தீர்க்கப்படாத பிணக்குகளை கூட அலறி அடித்துக்கொண்டு தீர்த்து தருவார்கள்.
இப்படி தீர்க்கப்பட்ட கதைகள் ஏராளம். காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள், விமான சேவைகள், அணைத்து அரச சேவைகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

ஒருமுறை மொன்றியல் விசிட் அடித்தபோது போன் மொபைல் போன் ரோமிங் நிறுத்த மறந்து விட்டன் திரும்பவும் லண்டன் வந்தபோது வந்து விழுந்த பில் 1200 பவுண்ட்ஸ் இவ்வளவுக்கும் நெட் பாவிக்கவில்லை வேறு என்ன அப்ப Tமொபைல் என்றபெயரில் மணித்தியால கணக்கில் கொள்ளுபட்டு பலனில்லை நெட்டில் தேடியபோது ஒம்புச்ட்மன் மனு குடுப்பது பற்றி இருந்தது கடிதம் போட்டு நான்காம் நாள் அந்த ஓவரா அடித்த 1200 கான்செல் பண்ணி விட்டம் என்று பதில் வந்தது . மொபைல் போன் குழப்படி நெட்வொர்க் பற்றி முறையிட இந்த லிங்கில் சாம்பிள் கடிதமும் உண்டு http://www.which.co.uk/consumer-rights/advice/how-to-complain-to-the-ombudsman-about-a-mobile-phone-provider#find-the-correct-ombudsman இங்கிலாந்து  வாசிகளுக்கு மட்டும் மற்றயவர்கள் மன்னிக்க .

 

8 hours ago, Sasi_varnam said:

தனியார்மய கம்பனிகள் , கார்ப்பரேட் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் இவற்றுக்கெல்லாம் "ombudsman office " இது ஒரு சிம்மசொப்பன வார்த்தை.
ஒரு நுகர்வாளனாக, வாடிக்கையாளராக உங்கள் பிரச்சினைகளை சம்பத்தப்பட்ட நிறுவனங்கள் கவனம்  எடுக்காதவறினால் அல்லது நீங்கள் அநீதியான முறையில் நடத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தாலோ, அல்லது உங்கள் முறைப்பாடுகள் சரியாக தீர்க்கப்படாவிட்டாலோ நீங்கள் அடுத்த கட்டமாக அணுகவேண்டிய நிர்வாக அமைப்பு தான் இந்த "ombudsman office".
பொதுவாக நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் "ombudsman office" ஐ அணுகுவதை சற்றும் விரும்ப மாட்டார்கள்.
தீர்க்கப்படாத பிணக்குகளை கூட அலறி அடித்துக்கொண்டு தீர்த்து தருவார்கள்.
இப்படி தீர்க்கப்பட்ட கதைகள் ஏராளம். காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள், விமான சேவைகள், அணைத்து அரச சேவைகள்...

ஆகா.. அருமையான தகவல்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஈஸிஜெட் விமானத்தில் ஐரோப்பிய நாடு சென்று வந்தேன்.

வரும்போது விமானம் 5.10 மணி நேர தாமதம். 

ஒரு விமான சிப்பந்தி சிக் ஆனதால், ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி விட்டார்கள்.

விமானத்தில் board பண்ணிய 20 பேர் வரையான வயதானவர்களை, சிறுகுழந்தைகளுடனான தம்பதிகளையும் திருப்பி கேட் அனுப்பி விட்டார்கள்.

முதலில் வேறு சிப்பந்திக்கு காத்திருக்கிறோம் என்றார்கள். பின்னர், சிப்பந்திக்கு காயம், காரணம் விமானம் மின்னல் தாக்கியதால் அவருக்கு காயம், விமானம் பறக்க முடியாது, வேறு விமானம் காட்விக்கில் இருந்து வருகிறது என்கிறார்கள்.

இதென்னடா கதை மாத்துகிறார்கள் என்றால், இயறகை சமபந்தமா இடையூறாயின் நஷட ஈடு கொடுக்க தேவையில்லையாம். வேறுவகையில் ஆயின் கொடுக்க வேண்டுமாம். 5 மணித்தியாலத்துக்கு மேலேயின் அதிகம் கொடுக்க வேண்டும்.

வந்தபின், 4.33 மணித்தியால தாமதத்துக்கு வருந்துவதாக சொன்னார்கள். 

பழுதான விமானத்தில், எப்படி பயணிகளை board பண்ணுனீர்கள் என்றால், பதில் சொல்லாமல் மழுப்புகிறார்கள்.

இப்ப கதை விடுகிறார்கள் என்று புரிகிறது. இதுக்கு அலுவல் பார்க்க வேண்டும். நேரம் இல்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.