Jump to content

“போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!”


Recommended Posts

“போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!”

சசி குடும்பத்துக்கு தீபக் கெடு

 

ஜெயலலிதா வாழ்ந்தவரை போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம், கம்பீரத்தின் உச்சமாகத் திகழ்ந்தது. அது, பொதுமக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இடம்; அ.தி.மு.க-வினருக்கு வழிபாட்டுத்தலம்; எதிர்க்கட்சிகளுக்குச் சிங்கத்தின் குகை. ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறை சென்றபிறகு அந்த இல்லத்தின் கம்பீரம் சிதையத் தொடங்கியது. கடந்த 11-ம் தேதி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவை நிர்வாகி ராஜா ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்குள் போட்ட நான்குமுனைச் சண்டை, தெருச் சண்டை ரகம்.

தீபா, தீபக் மோதலையடுத்து பல வாதங்கள் வதந்திகளாகப் பரவின. ‘‘போயஸ் கார்டன் வீடு குறித்து ஜெயலலிதா தனியாக ஒரு உயில் எழுதி உள்ளார். அதன்படி அந்த வீட்டுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபக், தீபா ஆகியோர் தற்போது உரிமை கொண்டாட முடியாது’’ என்று ஒருபக்கம் பேசப்பட்டது. இதற்கிடையில் தீபா, “அத்தை எழுதிய உயில் என்னிடம் உள்ளது... நேரம் வரும்போது அதை வெளியிடுவேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தீபக்கை சந்தித்துப் பேசினோம். பல விஷயங்களை நம்மிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார் அவர்.

p42a.jpg

‘‘போயஸ் கார்டன் வீட்டின் தற்போதைய நிலை என்ன... அது யார் பெயரில் இருக்கிறது?’’

‘‘போயஸ் கார்டன் வீடு என் அத்தையின் உரிமையில்தான் இப்போதும் இருக்கிறது. இந்த வீடு பாட்டியும் (ஜெயலலிதாவின் தாயார் சந்தியா), அத்தையும் சேர்ந்து வாங்கியது. ‘நாட்டியக் கலா நிகேதன்’ என்ற அமைப்பில் என் அத்தையும் பாட்டியும் பங்குதாரர்கள். இந்த அமைப்பின் பெயரில்தான் போயஸ் வீடு வாங்கப்பட்டது. அதன்பிறகு அதில் செய்யப்பட்ட மாற்றங்கள், கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் எல்லாம் அத்தையின் சொந்த சம்பாத்தியத்தில்தான் நடந்தன. 1971-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பாட்டி, ‘நாட்டிய கலா நிகேதன்’ அமைப்பின் பெயரில் இருக்கும் சொத்துகளும் இந்த வீட்டின் முழு உரிமையும் அத்தைக்குத்தான் என்பதைத் தெளிவுபடுத்தி உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த ஆவணங்கள் தற்போது என்னிடம் உள்ளன.

அதன்பிறகு அத்தை இறக்கும்வரை, வேறு யாருக்கும் மாற்றி எழுதிக் கொடுக்கவில்லை. அப்படி அத்தை செய்திருந்தால் அது நிச்சயமாக சசி அத்தைக்குத் தெரிந்திருக்கும். இதுவரை சசி அத்தை அப்படி நடந்ததாகச் சொல்லவில்லை. மேலும், வேறு யாரும் அப்படி ஒரு உயில் இருக்கிறது என்று சொல்லி உரிமை கேட்டு வரவில்லை; வரவும் முடியாது. ஏனென்றால், என் அத்தை அப்படி ஒரு உயிலை எழுதவில்லை என்பதுதான் உண்மை. அதனால், சட்டப்படி இந்த வீடு எனக்கும் தீபாவுக்கும் சொந்தமாகிறது. இந்த வீடு மட்டுமல்ல, ‘தன்னுடைய பெயரில் உள்ள சொத்துக்கள்’ என அத்தை எவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டு தன்னுடைய பிரமாணப் பத்திரங்கள் மூலம் நீதிமன்றங்களில் குறிப்பிட்டுள்ளாரோ... அவை அனைத்தும் எங்களுக்கே சொந்தம். அதில் வேறு யாரும் எந்தப் பிரச்னையும் செய்ய முடியாது.’’

‘‘சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இதில் ஏதாவது இடையூறு ஏற்படுத்துகிறார்களா?’’

‘‘சசி அத்தையும், அவர்களுடைய உறவினர்களும் இதுவரை எங்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. தற்போது போயஸ் வீட்டை நான்தான் பராமரித்து வருகிறேன். பூங்குன்றன்கூட இப்போது இங்கு வருவதில்லை. நந்தகுமார் என்பவரை வைத்து அந்த வீட்டின் தினப்படி வேலைகள் எப்போதும்போல் நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளேன். நான் அந்த வீட்டுக்கு எப்போது போனாலும் யாரும் என்னை அங்கு தடுப்பதும் இல்லை. வேறு எந்தப் பிரச்னையும் செய்வதில்லை. அவர்களால் செய்யவும் முடியாது. ஒருவேளை சசி அத்தையின் உறவினர்கள் ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், சசி அத்தையே அதைத் தடுத்துவிடுவார். நடராசன் அங்கிளும் வேடிக்கை பார்க்க மாட்டார். இதெல்லாம் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

ஆனாலும், இதைத்தாண்டி நான் சொல்ல விரும்புவது... அத்தையின் பெயரில் உள்ள சில சொத்துகள் தற்போது வேறு சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் தானாக முன்வந்து அவற்றை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்டமாக போயஸ் கார்டன் வீட்டை முழுமையாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வீட்டில் எங்களைத்தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அப்படி உரிமை உள்ளதாக நினைத்துக்கொண்டு, அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து செல்லும் சசி அத்தையின் உறவினர்கள் இனிமேல் அதுபோன்ற செயல்களைக் கைவிட வேண்டும். அவர்களுடைய உடைமைகள் ஏதாவது இங்கே இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும்.’’

‘‘கடந்த 11-ம் தேதி தீபா, தீபக், மாதவன், ராஜா என நான்குமுனைச் சண்டை போயஸ் கார்டன் வீட்டில் நடந்ததே... அதற்குப் பின்னணி என்ன?’’

‘‘போயஸ் வீட்டுக்கு நான் வரும்போது என்னை யாரும் தடுப்பதில்லை. எனக்குத் தொந்தரவுகள் கொடுப்பதில்லை. எனக்கு இருப்பதைப் போன்ற அந்த ஒரு பிடிமானம், என் அக்கா தீபாவுக்கும் இந்த வீட்டோடு இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அதனால்தான் கடந்த 11-ம் தேதி நானே தொலைபேசியில் அழைத்து, தீபாவை வரச் சொன்னேன்.

அவர் வரும்போதே ராஜாவையும் அழைத்து வந்தார். அதன்பிறகு நானும் தீபாவும் அத்தையின் படத்துக்குப் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினோம். இங்கேயே சமைத்துச் சாப்பிட்டோம். அதுவரை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீரென தீபா என்ன நினைத்தாரோ... வீட்டுக்குள் இருந்த சசி அத்தையின் படம் உள்ளிட்ட மற்ற பொருட்களை அப்புறப்படுத்த முயன்றார். நான் அப்போது தலையிட்டு, ‘அந்தப் பொருள்கள் நமக்கு உரிமையில்லாதவை. அவற்றை இப்போது தொடாதே! சசி அத்தை அல்லது அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் வைத்து அவற்றைப் பொறுமையாக அப்புறப்படுத்தலாம்’ என்றேன். ஆனால், தீபா கேட்கவில்லை. சசி அத்தையின் படத்தை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தார். அதன்பிறகுதான் சசி அத்தையின் செக்யூரிட்டிகள் வந்து பிரச்னை செய்தனர். உடனே நான் தலையிட்டு, தீபா, அவருடைய கணவர் மாதவன், தீபாவின் பாதுகாப்புக்காக வந்த ராஜா ஆகியோரை வெளியேற்றச் சொன்னேன். அதில் தீபாவுக்குக் கோபம். அவர் என்னை சரமாரியாகத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கூச்சல் போட்டு ரகளை செய்துவிட்டார்.’’

‘‘நீங்கள் ராஜாவையும் மாதவனையும் தாக்கியதாக தீபா சொல்கிறாரே?’’

‘‘நான் மட்டுமல்ல... அங்கிருந்த வேறு யாரும் ராஜாவையோ, மாதவனையோ, தீபாவையோ தாக்கவில்லை. அன்று நடந்தவை எல்லாம் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி உள்ளன. அவற்றைப் பார்த்தால் உண்மைகள் தெரியும்.’’

p42.jpg

‘‘போயஸ் கார்டன் வீட்டில் 11-ம் தேதி நடந்த விவகாரங்கள் எல்லாம் சசிகலாவுக்குத் தெரியுமா... அவர் ஏதாவது சொன்னாரா?’’

‘‘இங்கு நடந்தவை, நடந்துகொண்டிருப்பவை எதையும் சசி அத்தையிடம் இருந்து மறைக்க முடியாது. அவருக்கு உடனடியாகத் தகவல் தெரிந்துவிடும். நடந்தவற்றைக் கேள்விப்பட்ட அவர் என்னிடம், ‘போயஸ் கார்டன் வீட்டை அக்காவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அதற்காக நீ அந்த வீட்டை விட்டுக்கொடு’ என்று கேட்டார். அதற்கு நான், ‘நினைவு இல்லமாக மாற்றவோ... அல்லது வேறு நல்ல காரியங்களுக்காகவோ என்றால் நான் இந்த வீட்டை நிச்சயமாக விட்டுத் தருவேன். ஆனால், உங்களைத் தவிர உங்களுடைய உறவினர்கள் யாராவது இந்த வீட்டை வேறு வழிகளில் ஆக்கிரமிக்கவோ, அபகரிக்கவோ நினைத்தால் அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டேன்.’’

‘‘தீபாவின் உதவியாளராக இருக்கும் ராஜா யார்? தீபாவின் கணவரையே மிரட்டும் அளவுக்கு அவருக்கு எப்படி உரிமை வழங்கப்பட்டது?’’

‘‘ராஜா என் மூலமாகத்தான் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கம். கடந்த 15 ஆண்டுகளாக அவர் எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமானவர்தான். ஒரு பகுதியில் செல்வாக்கான நபர்கள் இருந்தால், அவர்களோடு வலியப்போய் சிலர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள் அல்லவா! அதுபோல் ராஜா என்னோடு பழக்கமானார். ஆனால், நெருங்கிய நட்பு என்பதெல்லாம் கிடையாது. இதற்கு மேல் அவரைப் பற்றி பேச நான் விரும்பவில்லை... விட்டுவிடுங்கள்.’’

‘‘தீபாவின் கணவர் மாதவனோடு உங்களுக்கு என்ன பிரச்னை?’’

‘‘மாதவனோடு எனக்குப் பிரச்னையும் இல்லை; நெருக்கமும் இல்லை. தீபா - மாதவன் திருமணத்துக்குக்கூட என்னை அவர்கள் அழைக்கவில்லை. அப்போது இருந்தே மாதவனோடு நான் சரியாகப் பேசியதில்லை. அத்தை இறந்தபிறகு தீபாவின் நடவடிக்கைகள்... அவர் கட்சி தொடங்கியது... அதன்பிறகு தீபா பெயரைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை மாதவன் வசூல் செய்தது... என்றெல்லாம் வந்த தகவல்களை நான் ஆராய்ச்சி செய்ததும் இல்லை. அதுபற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனாலும்கூட தீபா என் அக்கா. அதனால், அவர் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும், வருத்தம் இருந்தாலும், அவர் மீது பாசமும் அக்கறையும் எனக்கு இருக்கும்.’’

- ஜோ.ஸ்டாலின்


ஜெயலலிதாவின் சொத்துகள்...

நாட்டியக் கலா நிகேதன் பெயரில் உள்ளவை:

1. 10 கிரவுண்ட் இடத்தில் போயஸ் கார்டன் வீடு.

2. ஸ்ரீநகர் காலனி வீடு, ஹைதராபாத்.

3. 15 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஜீடிமெட்லா, ஹைதராபாத்.

4. 2.5 கிரவுண்ட் நிலம், மணப்பாக்கம், சென்னை.

ஜெயலலிதா பெயரில் உள்ளவை:

1. செயின்ட் மேரீஸ் சாலை வணிகக் கட்டடம், சென்னை.

2. கடை எண் 18. பார்சன் காம்ப்ளக்ஸ், அண்ணா சாலை, சென்னை.

3. 3.5 ஏக்கர் விவசாய நிலம், செய்யூர், காஞ்சிபுரம்.

சசிகலாவும் ஜெயலலிதாவும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் பெயரில் உள்ளவை:

1. பிரின்டிங் பிரஸ், கட்டடம் மற்றும் மெஷின்கள், கிண்டி தொழிற்பேட்டை.

2. நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாள்.

3. பட்டம்மாள் தெருவில் உள்ள வீடு, மந்தைவெளி, சென்னை.

4. கடை எண் 14, பார்சன் காம்ப்ளெக்ஸ், அண்ணாசாலை, சென்னை.

5. கடை எண் 9, ஜெம்ஸ் கோர்ட் காம்ப்ளெக்ஸ், நுங்கம்பாக்கம், சென்னை.

6. 3.5 ஏக்கர் நிலம், சுந்தரக்கோட்டை, மன்னார்குடி.

7. 8.5 கிரவுண்டில் உள்ள வீடு, தஞ்சாவூர்.

http://www.vikatan.com/juniorvikatan/2017-jun-21/politics/132079-jayalalitha-nephew-deepak-interview.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.