Jump to content

விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; ஒரு வரலாற்றுத் தவறு -யதீந்திரா


Recommended Posts

Wiggy.jpg?resize=1200%2C550

 

இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய கணிப்புக்களை வெளியிடுவதும் கடினமானது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மதிப்பிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் போல் தெரியும். அதுதான் உண்மையான காரணமா?

முதலில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! ஒக்டோபர் 2013இல் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தப் பொறுப்பை ஏற்கும் போது விக்னேஸ்வரன், சம்பந்தனதும் தமிழரசு கட்சியினதும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர். ஆனால், இப்போது அதே விக்னேஸ்வரன் மீது, அதே தமிழரசு கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்கும் போது அனைத்தும் சம்பந்தனதும் சுமந்திரனதும் ஆலோசனையின் பேரில்தான் நடந்தேறியது. அமைச்சர்கள் நியமனத்திலிருந்து அவைத் தலைவர் வரையில் அனைத்துமே தமிழரசு கட்சியின் ஆதிக்கத்தின் கீழ்தான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனைத்தையும் விக்னேஸ்வரன்தான் செய்கிறார் என்பதான தோற்றமே வெளியில் காண்பிக்கப்பட்டது.

அமைச்சரவை நியமனத்தின் போது திட்டமிட்டு கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய கட்சிகளின் தெரிவுகள் நிராகரிக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு இடம் வழங்கப்பட்டது. அதற்கும் பின்னாலும் கூட, கட்சிகளை பிரித்தாளும் திட்டம் இருந்ததேயன்றி, நல்ல நோக்கம் இருக்கவில்லை. ஆனால், இன்று நிலைமைகள் கணிசமாக மாறிவிட்டது. புளொட் தலைவர் சித்தார்த்தன் திம்பு பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்ட ஒருவர். அப்படியான ஒருவருக்கு அமைச்சரவையில் ஒரு இடம்கொடுக்க தமிழரசு கட்சி மறுத்தது. மகாபாரத்தில் எல்லாப் பழியும் கிருஸ்ணனுக்கே என்பது போல் இந்தப் பழியையும் விக்னேஸ்வரனே சுமந்துகொண்டார். ஆனால், இன்று எந்த சித்தார்த்தனை, சம்பந்தன் கண்டுகொள்ளவில்லையோ, அந்த சித்தார்த்தனின் உதவியை நாடியிருக்கிறார். சித்தார்த்தனைக் கொண்டே சம்பந்தன் சமரச முயற்சியில் இறங்கியிருக்கிறார். சித்தார்த்தன், முதலமைச்சர் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் பேசக் கூடிய ஒருவராக இருப்பதால், சமரச முயற்சிக்காக அவரை நாடவேண்டிய நிலைக்கு தமிழரசு கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

பொதுவாக அரசியலில் ஒரு பிரபலமான கருத்துண்டு. அதாவது, அரசியலில் நிரந்தர நன்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது. இந்தக் கூற்றுக்கு வடக்கு மாகாண சபையே தற்போது மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஆரம்பத்தில் விக்னேஸ்வரனா! அவர் அற்புதம் என்றவர்கள் எவரும் தற்போது அவருடன் இல்லை. ஆனால், ஆரம்பத்தில் அவரிலிருந்து விலகிநின்றவர்கள் அனைவரும் தற்போது அவருக்கு பக்கபலமாக நிற்கின்றனர். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு விக்னேஸ்வரன் ஊழல் தொடர்பில் உறுதியான முடிவை அறிவித்தது மட்டும்தான் காரணமா? விடயங்களை மேலோட்டமாகப் பார்த்தால் விடயங்கள் அனைத்தும் இரண்டு அமைச்சர்கள் தொடர்பானது போன்றே தெரியும். அதாவது கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணிக்கப்பட்ட அமைர்ச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகிய இருவரைக் காப்பாற்றும் நோக்கில்தான், அனைத்துமே நடைபெறுவது போன்றதொரு தோற்றம் தெரிகிறது. உண்மையில் இதற்காகவா விக்னேஸ்வரன் மீது தமிழரசு கட்சி இந்தளவு கோபம் கொண்டது? ஆனால், விக்னேஸ்வரன் அவ்வாறானதொரு முடிவை எடுப்பதற்கு முன்னர் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அவர்களது ஆலோசனைகளை கேட்டிருக்கிறார். இதில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளும் நான்கு அமைசர்களையும் மாற்றுமாறுதான் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றன. ஆனால், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை, விக்னேஸ்வரனின் முடிவை எதிர்த்ததுடன், அவ்வாறாயின் நீங்களும் விலக வேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவையின் மேற்படி கூற்று, விக்னேஸ்வரனை வெளியேற்ற வேண்டும் என்னும் திட்டம் ஏற்கனவே தமிழரசு கட்சியிடம் இருந்திருக்கிறது என்பதையே காண்பிக்கிறது. கூட்டமைப்பின் முதலமைச்சர் என்னும் வகையில் நோக்கினால் விக்னேஸ்வரன் எடுத்து முடிவு சரியானது. அதில் ஒரு ஜனநாயம் உண்டு. ஆனால், முதலமைச்சரை வெளியேற்றும் விடயத்தில் தமிழரசு கட்சியானது, ஏனைய கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தன்னிச்சையாகவே முடிவுகளை எடுத்துவிட்டு, அதனை ஏற்குமாறு ஏனைய கட்சிகளுக்கு கட்டளையிட்டிருக்கிறது. ஆனால், இந்த விடயத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மூன்றும் சரியான பக்கத்தில் நிற்கின்றன. தமிழரசு கட்சியின் முடிவை முற்றிலுமாக நிராகரித்திருக்கின்றனர்.

இந்த இடத்தில் ஒரு கேள்வியை கேட்போம் – அப்படியென்ன அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீதும் தமிழரசு கட்சிக்கு இந்தளவு காதல்? உண்மையில் டெனீஸ்வரன் டெலோவின் சார்பில் அமைச்சராக இருப்பவர். அவரைக் காப்பாற்ற டெலோவே முயற்சிக்கவில்லை. அப்படிப் பார்க்கப் போனால் ஒரு சத்தியலிங்கத்திற்காகவா தமிழரசு கட்சி இந்தளவிற்கு முதல்வரை எதிர்க்கிறது? அவரை வெளியேற்ற முயற்சிக்கிறது?

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான முரண்பாடு என்பது இருவருக்கும் இடையிலான ஈகோ விவகாரமாக காண்பிக்கப்பட்ட போதிலும் கூட, உண்மையில் அது ஒரு ஈகோப் பிரச்சினையல்ல. மாறாக அரசியல் நிலைப்பாடு தொடர்பிலான பிரச்சினை. விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்தது சம்பந்தன் என்றாலும் கூட, ஒரு கட்டத்திற்கு பின்னர் சம்பந்தனது நிலைப்பாட்டுடன் விக்னேஸ்வரன் பயணிக்கவில்லை. அவர் தனித்து பயணித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் என்னும் வகையில் அவரது அரசியல் நிலைப்பாடுகள் சம்பந்தனது நகர்வுகளுக்கு இடைஞ்சலாக மாறின. தமிழ் அரசியலில் சம்பந்தன் தரப்பு என்றும், விக்னேஸ்வரன் தரப்பு என்றும் பிரித்து நோக்குமளவிற்கு அரசியலில் ஒரு தெளிவான கருத்துநிலைப்பட்ட பிளவு தெரிந்தது. களத்திலும் புலத்திலும் தமிழ்த் தேசியம் தொடர்பில் உறுதியான நிலைப்பாடுடைய பலரும் விக்னேஸ்வரனையே தலைவராகக் கண்டனர். இது கொழும்பின் நிகழ்ச்சிநிரலுக்கும் ஒரு தலையிடியாக மாறியது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமடைந்துவிடும் என்னும் கொழும்பின் கணக்கை பொய்ப்பிக்கக் கூடிய ஒருவராக விக்னேஸ்வரன் தெரிந்தார். முக்கியமாக வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் விக்னேஸ்வரனின் தொடர்ச்சியான பேச்சுக்கள் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு புத்துணர்ச்சியூட்டியது. புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் விக்னேஸ்வரனின் நன்மதிப்பு உயர்ந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் மக்கள் பேரவை விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி தோற்றம்பெற்றது. இதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட எழுக தமிழ் நிகழ்வுகளை, தமிழரசு கட்சி எதிர்க்கிறது என்று தெரிந்தும், விக்னேஸ்வரன் அவற்றில் பங்குகொண்டார்.

இவை அனைத்தையும் தொகுத்து நோக்கினால் விக்னேஸ்வரன் தமிழரசு கட்சியால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவராக இருந்தார். இவ்வாறானதொரு நிலையில் விக்னேஸ்வரன் என்னும் தலையிடியை எவ்வாறு போக்குவது என்னும் சிந்தனையின் விளைவுதான் தற்போதைய நம்பிக்கையில்லா தீர்மானம். எனவே, அமைச்சர்கள் விவகாரம் என்பது வெறும் துருப்புச் சீட்டு மட்டுமே. உண்மையான இலக்கு விக்னேஸ்வரன் ஆவார். அந்த வகையில் இது முன் கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தமிழரசு கட்சியினது ஒரு தாக்குதல் நடவடிக்கையாகும் – ஒப்பிரேசன் விக்னேஸ்வரன்.

விக்னேஸ்வரனை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை சற்று உற்று நோக்கினால் அதன் அரசியல் ஆழத்தை புரிந்துகொள்ள முடியும். விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவதற்காக ஆளும் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் உதவியை தமிழரசு கட்சி நாடியிருக்கிறது. இது யாழ். சமூகத்தின் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றையே எள்ளிநகையாடும் ஒரு செயல். இதன் பின்னாலும் ஒரு இரகசிய நிகழ்ச்சிநிரல் உண்டு என்பதே இந்தக் கட்டுரையின் சந்தேகம். ஏற்கனவே, கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு, ஒரு கூட்டாட்சியிலேயே பங்கு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சியமைப்பதாக கூறிய போதும் பின்னர், ஆளும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இணைந்தே ஆட்சியமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதி என்னும் சிங்கள பெண்மணி போக்குவரத்து அமைச்சராக இருக்கின்றார். இங்கும் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, தமிழரசு கட்சியைச் சேர்ந்த இருவரே அமைர்ச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இருவருமே தமிழ் தேசிய அரசியலுடன் தொடர்பற்றவர்கள். இதன் ஊடாக தமிழரசு கட்சி, கிழக்கு மாகாணத்தின் தமிழ் தேசியக் குரல்களை பலவீனப்படுத்துவதில் தற்காலிக வெற்றியை பெற்றுக்கொண்டது. கிழக்கு மாகாணத்தின் சூழலுக்கு ஏற்ப தந்திரோபாய ரீதியாக ஏனைய சமூகங்களோடு ஊடாடுவதை இந்தக் கட்டுரை நிராகரிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அது அவசியமானதே. ஆனால், அதில் நிதானம் இருப்பது அவசியம். தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயலாற்றுவது என்பதும் தமிழரசு கட்சியின் சுய நலன்களை முன்னிறுத்தி செயலாற்றுவது என்பதும் ஒன்றல்ல.

இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய அரசியலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கில் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியத்தின் வலுவான குரலாக இருந்துவருகிறார். தமிழ்த் தேசிய அரசியலை சிலர் யாழ். மையவாத அரசியல் என்றும் கூறுவதுண்டு. அது தவிர்க்க முடியாதது என்பதே இக்கட்டுரையின் கருத்து. ஏனெனில், தமிழ் மக்கள் தனித்து மேலாதிக்கம் செலுத்தும் பாரம்பரிய பகுதியான வடக்குத்தான் தமிழ்த் தேசிய அரசியலின் மையமாக இருந்தது. எனவே, அங்கு தமிழ் மக்களின் குரல் வலுவாக இருந்தால்தான் அதனை அடித்தளமாகக் கொண்டு கிழக்கிலும் தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்த முடியும். வடக்கில் தமிழ்த் தேசிய குரல் பலவீனப்படுமாக இருப்பின் அது தமிழ்த் தேசிய அரசியலை வீழச்சிப் பாதையிலேயே கொண்டு செல்லும். வடக்கின்றி கிழக்கால் தனித்து எழ முடியாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விக்னேஸ்வரனை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஒருவேளை இந்த விடயத்தில் தமிழரசு கட்சி வெற்றிபெறுமாக இருப்பின் கிழக்கு போன்று வடக்கிலும் ஆளும் கட்சிகளுடன் சேர்ந்து ஒரு கூட்டாட்சி இடம்பெறும். இதன் மூலம் வடக்கிலும் கிழக்கிலும் அனைவரும் இணைந்து ஆட்சியமைத்திருக்கும் நிலையில் இலங்கையில் என்ன பிரச்சினையிருக்கிறது என்னும் தர்க்கம் முன்வைக்கப்படும். தமிழ் அரசியல் முற்றிலுமான தமிழ்த் தேசிய நீக்கத்திற்குள்ளாகும். இதுவே தமிழரசு கட்சியின் திட்டம். இது அவர்களின் திட்டம் மட்டும்தானா? ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழரசு கட்சியின் செயற்பாடானது, தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு கறையாகும். இனி முடிவு மக்களிடம்.

யதீந்திரா

 

http://maatram.org/?p=6106

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.
வட மாகாண சபை விடயங்களில்,  பாராளுமன்ற எம்.பி.க்களான...
சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மூ க்கை  நுழைப்பது.. மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விடயம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.