Jump to content

 கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி


Recommended Posts

 கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி

 

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்,ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - காங்., உள்ளிட்ட, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து, கூவத்துாரில் நடந்த குதிரை பேரம் தொடர்பாக, 'சிடி' ஆதாரத்துடன் முறையிட்டனர்.

'லஞ்சம் கொடுத்தே நம்பிக்கை ஓட்டெடுப்பில், பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, அ.தி.மு.க., ஆட்சியை உடனே கலைக்க வேண்டும்' என்றும், வலியுறுத்தினர்.

தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு, பிப்., 18ல், நம்பிக்கை ஓட்டு கோரியது. அதில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க் களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். அப்போது அவர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் தங்கம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

எனவே, 'சட்டசபையில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; சபாநாயகர் ஏற்கவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
 

 

ரூ.10 கோடி


இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன், தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பான வீடியோ காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சியில், 'முதல்வர் பழனிசாமி அரசு
நம்பிக்கை ஓட்டு கோரிய நேரத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஆறு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதிலும், சிலருக்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது' என, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கூறுவது இடம் பெற்றிருந்தது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் இந்தப் பேரம் குறித்து விவாதிக்க வேண்டும் என, மூன்று நாட்களாக, சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை காங்., தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபுபக்கர் ஆகியோர், நேற்று மாலை, கவர்னர் மாளிகை சென்றனர்.

கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, 'எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்துள்ளது உறுதியாகி உள்ளதால், நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.
 

 

சி.பி.ஐ., விசாரணை


கவர்னர் உடனான அரை மணி நேர சந்திப்புக்கு பின் வெளியே வந்த, ஸ்டாலின் கூறியதாவது:
குதிரை பேரத்தில் தான், இந்த ஆட்சி ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது என்பதை, 'டிவி'யில் வெளியான, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் பேட்டிகள் உறுதிப்படுத்தி உள்ளன. சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என, மூன்று நாட்களாக, கோரினோம்; சபாநாயகர் ஏற்காமல், 'ஆதாரம் கொடுங்கள்' என்றார்.

அதை ஏற்று, 'டிவி'யில் ஒளிபரப்பான காட்சிகள் அடங்கிய, 'சிடி'யை, அவரிடம் வழங்கி உள்ளோம். நாளை இந்த பிரச்னையை அவர் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், பேச தயாராக உள்ளோம்.கவர்னரை சந்தித்து நடந்த சம்பவங்களை விளக்கினோம். 'டிவி' காட்சிகள் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு போட வேண்டும்; சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, கோரினோம்.

குதிரை பேரம் மூலம், நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, ஓட்டெடுப்பை ரத்து செய்துவிட்டு, ஆட்சியை கலைக்க வேண்டும் என, வலியுறுத்தினோம்.அவரும் சட்ட ரீதியாக கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்; நடவடிக்கை எடுப்பார் என, நம்புகிறோம். நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளோம்; கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1792891

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.