Jump to content

வாய்ப்பில்லை? ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு... அ.தி.மு.க.,வின் 3 அணிகள் மோதலால் குளறுபடி


Recommended Posts

வாய்ப்பில்லை?
ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு...
அ.தி.மு.க.,வின் 3 அணிகள் மோதலால் குளறுபடி
 
 
 

அ.தி.மு.க., அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் ஆர்வமாக இல்லை. எனவே, ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_179276720170618001913_318_219.jpg

தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50
லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல், 2016 அக்டோபரில், இரண்டு கட்டங்களாக நடக்க இருந்தது.
 

சிறப்பு அதிகாரி


இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், தேர்தல் நிறுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். எனினும், மாநில அரசு

போதிய ஒத்துழைப்பு தந்தால்,உள்ளாட்சி தேர்தலை, ஜூலைக்குள் நடத்தி முடிப்பதாக, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது.

மாநில தேர்தல் கமிஷனராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாலிக் பெரோஸ்கான், ஏப்., 8ல், பொறுப்பேற்றார். மே, 5ல், திருச்சிக்கும், மே, 16ல், விழுப்புரத்திற்கும்சென்று, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து,மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசித்தார். ஆனால், தேர்தலுக்கு தேவையான, இட ஒதுக்கீடு பட்டியல் உள்ளிட்ட விபரங்களை, தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசு இன்னும் தரவில்லை.

உள்ளாட்சித்துறை அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், இவ்விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர். இதற்கு ஆளும் கட்சியான, அ.தி.மு.க., வில் நிலவும் குழப்பமே காரணம் என, கூறப்படு கிறது. அ.தி.மு.க., தற்போது, மூன்று அணி களாக பிளவு பட்டுள்ளது. அக்கட்சியின், இரட்டை இலை சின்னம், தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டு உள்ளது. இரட்டை இலைக்கு, அ.தி.மு.க., பன்னீர், சசிகலா அணிகள் உரிமை கோரி வருகின்றன.

யாருக்கு அந்த சின்னம் கிடைக்கும் என, இன்னும் தெரியாத நிலையில், அந்த அணிகள் வட்டாரத்தில் குழப்பம்நிலவுகிறது.அணிகள் சார்பில், பல லட்சம் தொண்டர்களிடம், பிரமாண வாக்குமூலங்கள், தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

திடீரென, ஜெ., அண்ணன் மகள் தீபாவும், உரிமை கோரி, பல ஆயிரம் பேரின் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். அவற்றை ஆய்வு செய்து,

 

தேர்தல் கமிஷன் எப்போது முடிவை அறிவிக் கும் என்பது தெரியவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை யில், பல அணிக ளாக பிளவுபட்டு,உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., விரும்ப வில்லை. இரட்டை இலை சின்னத்தை பெற்ற பின், தேர்தலை சந்திக்க, முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.
 

தயக்கம்


எனவே, மாநில தேர்தல் கமிஷனுக்கு, ஒத்து ழைப்பு அளிக்க, அதிகாரிகள் தயங்கு கின்றனர். ஒருமாதமாக, உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜூலையில், தேர்தலை நடத்தி முடிப்பதாக, மாநில தேர்தல் கமிஷன் உறுதி அளித்திருந்தாலும், பல்வேறு குளறுபடிகளால், முன்னேற்பாடுகள் அனைத் தும் முடங்கி உள்ள நிலையில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பதே இப்போதைய நிலை.- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1792767

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.