Jump to content

கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’!


Recommended Posts

கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’!

green_dhal_garlic_paneer

 

இல்லத்தரசிகளின் அன்றாடக் கவலைகளில் தலையாயது... இன்று என்ன சமையல் என்பதில் இருந்து  தொடங்குகிறது. காலையில் இட்லி, தோசை, மதியம் மீல்ஸ்,  இரவுக்குச் சப்பாத்தி என்பது பல வீடுகளில் இன்றைக்கு ரொட்டீன் மெனு.  இவற்றில் ஐட்டங்கள் மாறுமே தவிர மெனு அப்படியே தான் இருக்கும். இந்த மெனுவிலும் கூட இட்லி, தோசை, சப்பாத்தி, மீல்ஸ் வரை எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் அவற்றுக்கு தொட்டுக் கொள்ள என்ன சமைப்பது என்பது தான் பல நேரங்களில்  மிகப்பெரிய குழப்பமாகி விடும். 

பெரும்பாலும் நமது தென்னிந்திய வீடுகளில் இட்லி, தோசை என்றால் சாம்பார், சட்னி வகைகள், சப்பாத்தி என்றால் உருளைக் கிழங்கு குருமா, நவரத்ன குருமா, காளான் கிரேவி, பனீர் கிரேவி என்று வழக்கமாக ஒரே விதமான கிரேவிகளை மட்டுமே செய்து கொண்டிருப்போம். சில நேரங்களில் அந்த மெனுவை நினைக்கும் போது நமக்கு போர் அடிக்கத் தொடங்கி விடும். இதைத் தவிர்க்க நாமே புதிதாகவும், சத்தாகவும் ஏதாவது புது ரெசிப்பி கண்டுபிடித்தால் என்ன என்று தோன்றியதின் பலன் தான் இந்த ரெசிப்பி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதோடு இது மிக மிக சத்தான கிரேவியும் கூட! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பூரி எனப் பல ஐட்டங்களை இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

  • பாசிப் பயறு: 1 கப்
  • தக்காளி- 2 (பெரியது)
  • சின்ன வெங்காயம்: 8 (பொடியாக நறுக்கவும்)
  • பனீர்: 1/2 பாக்கெட் (கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)
  • சோம்பு: 1/2 டீஸ்பூன்
  • மிளகு: 1 டீஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு: 4
  • புதினா: 1 கைப்பிடி
  • இஞ்சி: 1 சி. துண்டு
  • பூண்டு: 6 பல்
  • கொத்தமல்லி தளை: கொஞ்சம்
  • மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலத்தூள்: 1 டீஸ்பூன்
  • உப்பு: தேவையான அளவு
  • கடுகு, உளுந்தம் பருப்பு: 1/2 டீஸ்பூன்
  • நெய்: 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை: 1 ஆர்க்

அரைக்க:

மேலே சொன்னவற்றில் இஞ்சி, 4 பூண்டுப் பற்கள், ஒரு கைப்பிடி புதினா, மிளகு, சோம்பு, தக்காளி, எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.

செய்முறை: 

ஒரு கப் பாசிப்பயிறை எடுத்துக் கொண்டு அதை நீரில் நன்கு கழுவவும். கழுவிய பாசிப்பயிறை குக்கருக்கு மாற்றி விட்டு, ஒரு கப் பாசிப்பயிறுக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக விடவும். வேக வைக்கும் போது உப்பு சேர்க்கத்தேவை இல்லை. பாசிப்பயிறு வெந்து இறக்கியதும் அதில் உள்ள தண்ணீரைக் கீழே கொட்டி வீணாக்கத் தேவையில்லை. அதை அப்படியே தேவையான அளவுக்கு கடைசியில் கிரேவியில் கலந்து கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளலாம். பயிறு வெந்த தண்ணீர் என்பதால் இதனால் கிரேவிக்குக் கூடுதல் சுவை கிடைக்கும்.

வெந்த பாசிப்பயிறை இறக்கி வைத்து விட்டு, இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி 1 ஸ்பூன் நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து விட்டு பொடியாக நறுக்கிய  சின்னவெங்காயத்தைப் போட்டு வதக்கவும்,  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மேலே அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து கொஞ்சமாக பயிறு வடித்த தண்ணீரையும் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும். இந்தக் கலவை ஒரு கொதி வந்ததும் அதனுடன் வெந்த பாசிப்பயிறைச் சேர்த்து நாசூக்காக கிளறவும் ஏனெனில் பாசிப்பயிறு குழைந்து விடக் கூடாது. அரைத்த மசாலாக் கலவை பாசிப்யிறுடன் கலந்ததும் எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் உள்ளிட்ட ஐட்டங்களைச் சேர்க்கலாம். மசாலாக் கலவை, பாசிப்பயிறுடன் நன்றாகக் கலந்ததும், இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு பனீர் கியூப்களை கிரேவியின் மேற்பகுதியில் ஒவ்வொன்றாக உடைந்து விடாமல் கவனமாகச் சேர்க்கவும். கியூப்களுடன் மசாலா ஒட்டும் அளவுக்கு மிக நாசூக்காக கரண்டியால் கிரேவியை அடியிலிருந்து மேலாக  ஓரிரு முறை மெல்லப் புரட்டி விட்டால் உப்பும், மசாலாக்கலவையில் பனீரில் நன்கு கலந்து விடும். பனீரைப் போட்டுக் கிளறி ஓரிரு கொதி வந்ததும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அப்படியே அடுப்பை அணைத்து  வாணலியை கீழிறக்கி கொத்தமல்லித் தளை கிள்ளிப் போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.  சுவையும், மணமுமாக இந்தக் கிரேவி கூடுதலாக இரண்டு சப்பாத்திகளை உண்ணும் ஆசையைத் தூண்டக் கூடியது.

நிஜமா? இல்லையா? என்பதை சமைத்து சாப்பிட்டு விட்டுச் சொல்லலாம்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.