Jump to content

முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி


Recommended Posts

முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி

 

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக  அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், ரெலோ கட்சியிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு மாறிய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கையளித்திருந்தனர்.  

இது  தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதன்போதே, வடமாகாண சபை தொடர்பில் முடிவெடுக்கும் விவகாரத்தை முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக  அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Leave-the-matter-to-the-Chief-Minister

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

அடிக்கிற காத்திலை அம்மிக்கல்லே பறக்கிறது இனி கூடி இருந்து அடுத்த சதி நாடகம் தீட்டுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

அடிக்கிற காத்திலை அம்மிக்கல்லே பறக்கிறது இனி கூடி இருந்து அடுத்த சதி நாடகம் தீட்டுவினம்.

 

38 minutes ago, நவீனன் said:

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையிலயே மாகாணசபையினதும் முதலமைச்சரினதும்  அதிகாரத்தை ஜனாதிபதி மதிக்கின்றாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வடமாகாண ஆளுநர்  கூறியிருந்தார் "விக்னேஸ்வரனின் அரசியல் முடிவடையப்போகுது" கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்களெல்லாம் கூடி பொறி வைத்து எப்போ முதலமைச்சர் மாட்டுவார் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஏதோ  முதலமைச்சர்  செய்யக்கூடாத வேலையைச் செய்தமாதிரி  நாடகம் காட்டும் மாவையைப்  பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவ்வளவு பதவி ஆசை    போட்டாட்டுது. உதுகளை அரசியலில் இருந்து ஒதுக்காவிட்டால் முதலமைச்சரோட சொறிஞ்சு கொண்டே இருக்குங்கள். உதுகளை மக்கள் ஓரங்கட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

அண்மையில் வடமாகாண ஆளுநர்  கூறியிருந்தார் "விக்னேஸ்வரனின் அரசியல் முடிவடையப்போகுது" கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்களெல்லாம் கூடி பொறி வைத்து எப்போ முதலமைச்சர் மாட்டுவார் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஏதோ  முதலமைச்சர்  செய்யக்கூடாத வேலையைச் செய்தமாதிரி  நாடகம் காட்டும் மாவையைப்  பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவ்வளவு பதவி ஆசை    போட்டாட்டுது. உதுகளை அரசியலில் இருந்து ஒதுக்காவிட்டால் முதலமைச்சரோட சொறிஞ்சு கொண்டே இருக்குங்கள். உதுகளை மக்கள் ஓரங்கட்ட வேண்டும்.

தேர்தலில் ஒட்டு கேட்டு வரும்போது புலி புலி என்று வந்து புலியை சாட்டி ஓட்டு வேண்டுனவையல் பிறகு சிங்கள அரசை விட தீவிர புலி எதிர்பாளர்களா தம்மை விரும்பி காட்டிகொண்டவர்கள் பதவி சுகத்துக்கு .முன்னாள் புலிகள் உதவி கேட்டு போனபோது பேப்பருக்குள் தலைய கவுண்டுகொண்டு இருந்தவர் நிலைமை மாறுது எண்டவுடன் பேருக்கு கொஞ்ச முன்னாள் புலிகளை கட்சியில் இணைத்தவுடன் மக்கள் மாறிவிடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டினம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றதான் அரசியல்வாதிகள் சுமத்திரனின் கூட்டம்கல் கவனித்து பாருங்கள் அரசியல் என்பது இரண்டாவது உழைப்பு போல் ஆள் அடித்து விடுவார.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 இலங்கையில் தமிழ் மக்கள் இவர்களை ஒதுக்க வேண்டிய சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் தமிழர்  அழிப்பு கட்சி என்றே சொல்ல வேண்டும் கிணறு வெட்ட  போய் பூதம் எழும்பிய கதை போல ஆகிவிட்டது தற்போது இவர்களுக்கு

 மக்களுக்கு என்ன கோபம் என்றால்  இவர்களை ஊழல் செய்தவர்கள் அவர்களை நீக்க முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு ஆனால் ஏன் இவர்களை முதலமைச்சரை தடுத்து அவர்களை காப்பாற்ற முனைகிறார்கள் என்றும் இவர்களின்  உன்மையான முகத்தை மக்கள் அறிந்துள்ளனர் ஏற்கனவே விக்கினேஸ்வரன் ஐயா தான் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை அதற்கு தங்களது உறுப்பினர்களே தடையாக இருப்பதாக கூறியிருந்தார் தற்போது அந்த செய்தி எவ்வளவு உன்மையானது என்று உலகத்தில் அனைத்து தமிழர்களும் அறிந்துள்ளார்கள் 

இன்று  உள்ள அனைவரதும்  கேள்ளி  இவர்களா நமக்கு தீர்வு பெற்று தாருவார்கள் என்ற கேள்வி விக்கி ஐயா கூட தீர்வு பெற்று தராவிட்டாலும் ஊழல் இல்லாத  சபை ஒன்றுய் இயங்கி மத்திய அரசால் வழங்கப்படும   அபிவிருத்தி  பணிகள்  மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறொன்றும் இருக்க முடியாது 

1 hour ago, putthan said:

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

ம்  மைத்திரி பால அரசு கொஞ்சம் வேற லெவல்தான் பாருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

நல்லிணக்க அரசியலின் பெயரிற்கு எந்தக்கேட்ட பெயரும் வந்துவிடக்கூடாது. ஆகவே ஜனாதிபதியின் பேச்சாளர்களாகக் கூட்டமைப்பின் சம்மந்தரும் சுமந்திரனும் செயற்படுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயாவுக்கு இரண்டும் கெட்டான் நிலை.  மாவையும் சுமந்திரனும் எப்படியாவது தாங்கள் முன்னுக்கு வந்து விடவேண்டுமென்ற பேராசை அதனால் முதலமைச்சரை எப்படியாவது ஓரங்கட்டப் பார்க்கிறார்கள்.  மக்கள் இவ்விருவரினது; நோக்கங்களை இனங்கண்டு அரசியலிலிருந்தே இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் இல்லா விட்டால் தமிழ்நாட்டின் நிலைதான் இங்கும் உருவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகங்கள்  தெரியும் காலப்பகுதி  இது...

இந்தளவுக்கு  எதிர்பார்க்கவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.