Jump to content

வடக்கின் மீது கைநீட்டும் முயற்சி


Recommended Posts

வடக்கின் மீது கைநீட்டும் முயற்சி
 

டக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, தமக்கான அரசியல் இலாபத்தை அடைவதற்குப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்த விவகாரத்தை வைத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் குற்றவாளியாக்க ஒரு தரப்பு முனைகின்றது.   

அதேவேளை, இன்னொரு தரப்பு, அவர் நீதியாக, வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளார் என்று மகுடம் சூட்டுகின்றது.  

image_c163ab941b.jpg

இந்த விவகாரத்தை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கூட முனைப்புகள் காட்டப்படுகின்றன.   

அதேவேளை, மற்றொரு புறத்தில் இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் திருப்பிவிடும் முயற்சிகளும் நடக்கின்றன.  

இவையெல்லாம் தமிழர் தரப்புக்குள் நடத்தப்படுகின்ற அரசியல் ஆட்டங்கள் என்றால், இதை வைத்துத் தெற்கிலும் அரசியல் இலாபம் ஈட்டுகின்ற நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

தனிநாடு கேட்டவர்களால், ஒரு மாகாணசபையைக் கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்று அமைச்சர் மனோ கணேசனிடம், சிங்கள நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.  

அதேவேளை, வடக்கு மாகாணசபையில் இடம்பெற்றுள்ள மோசடிகள், தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோருவதற்குத் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

இந்தக் கோரிக்கையை அவர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்வைப்பதற்குத் தயாராகி வருகிறார் என்று அவரது அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.  

தனிநாடு கேட்ட தமிழர்களால், ஒரு மாகாண சபையைக்கூட, ஒழுங்காக நடத்த முடியவில்லை என்ற கேள்வியின் மீது விசமத்தனம் இருப்பது போலவே, வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விசமத்தனமானதுதான்.  

தனிநாடு கோரியது புலிகள்தான் என்றும், ஆனால், மாகாண சபையை நடத்துவது கூட்டமைப்பு என்றும் சில நியாயங்கள் கூறப்படுகின்றன. ஆனால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும், தமிழ் அரசியல் கட்சிகளும் தனிநாடு கோரியது உண்மைதான்.   

தனிநாடு ஒன்றை அமைத்தால்தான், நிம்மதியாக வாழ முடியும் என்ற சூழ்நிலையைத் தமிழர்களுக்கு உருவாக்கியது, சிங்களப் பௌத்த பேரினவாத அடக்குமுறைகள்தான்.   
அடுத்து, ஒருநாடு, ஓர்அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டும் அளவுக்கு ஒரு சிறப்பான ஆட்சிமுறை வடக்கில் புலிகளின் காலத்தில் இருந்ததை யாரும் மறந்து விடமுடியாது.  

வடக்கில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் வசித்தவர்கள், இப்போதும் அந்தக்காலம் மீண்டும் வராதா என்று ஏங்குகின்ற நிலை இருக்கிறது.  

போருக்குப் பின்னர், நவீன வசதிகள், வாய்ப்புகள் எல்லாம் கிடைத்திருந்தாலும், விடுதலைப் புலிகளின் காலத்து நிர்வாக முறைமை இன்னமும் மக்களை ஈர்க்கின்றது என்றால், அதற்காக ஏங்குகிறது என்றால், அதற்குக் காரணம், புலிகளின் திறமையான நிர்வாகம்தான்.  

வடக்கில் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விட்டால், புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று கேட்கும்நிலை இருக்கிறது. அண்மையில், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர் கூட, “புலிகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா” என்று கேட்ருந்தார். இது விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திறனையே வெளிப்படுத்தியது.  

அப்படியிருக்கும்போது, தனிநாடு கோரியவர்களால் மாகாணசபையைக் கூட நடத்த முடியவில்லை என்று கேட்பது அபத்தமானது.  

அதேவேளை, அவ்வாறு கேட்கின்ற சூழலை ஏற்படுத்தியதற்காக, தமிழர்களாகிய நாம் வருந்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  

இன்னொரு பக்கத்தில், வடக்கு மாகாண சபையில் மிகப்பெரிய ஊழல்கள், மோசடிகள் நடந்து விட்டது போலவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து, விசாரிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சிக்கப்படுகிறது.  

வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் மீது அதிகார முறைகேடு, அதிகார வரம்பு மீறல், நிதி விரயம் போன்ற குற்றச்சாட்டுகளைத்தான், முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு கூறியிருக்கிறது. 

பெரியளவில் ஊழல்கள் நடந்திருப்பதாகவோ, மாகாணசபையின் நிதி, மோசடி செய்யப்பட்டிருப்பதாகவோ கூறப்படவில்லை. வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டத்தில் இன்னமும் மில்லியன் கணக்கில்தான் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்ற நிலையில், பாரியளவு மோசடிகளோ, முறைகேடுகளோ நடந்திருக்க வாய்ப்பில்லை.  

இதைவிடப் பெரியளவில், பலநூறு பில்லியன் கணக்கான ரூபாய் மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் முன்னைய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருந்தன. ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டி விட்டதாக முன்னைய அரசாங்கத்தின் மீது இப்போதைய அரசாங்கமே குற்றம்சாட்டியது.  

அந்த முறைகேடுகள் குறித்து இந்த அரசாங்கம் இன்னமும் கூட, சரியான விசாரணைகளை முன்னெடுக்கவோ, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளை எடுக்கவோ இல்லை.  

ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சின்ன மீன்கள்தான் சிக்கியுள்ளனவே தவிர, சுறாக்களும் திமிங்கிலங்களும் தப்பித்துக் கொண்டுதான் திரிகின்றன.  

இப்படிப்பட்ட நிலையில், வடக்கு மாகாணசபையில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று விட்டதுபோன்ற, தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தில் உள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.  

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், வடக்கு மாகாணசபைக்கு இராணுவ ஆளுநரைக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடிவாளம் போட்டு வைத்திருந்தது.  

இப்போது அந்த நிலைமையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபை முழுமையாகத் தனது அதிகாரங்களை இன்னமும் பெற்றிருக்கவில்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லா அதிகாரங்களையும் வடக்கு உள்ளிட்ட மாகாணசபைகளால் இன்னமும் அனுபவிக்க முடியாத நிலையே உள்ளது.  

மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டுள்ள வடக்கு மாகாணசபை மீது, மத்திய அரசாங்கத்தின் தலையீட்டை ஏற்படுத்துகின்ற மற்றொரு முயற்சியாகத்தான், விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பார்க்க முடிகிறது.  

மாகாணசபை இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றபோது, மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்ய முனையுமானால் அது மீண்டும் மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையிலான மோதலாக உருவெடுக்கும்.  

மாகாணசபை ஒன்று, மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றோ, அதன் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ அவசியம் இல்லை.  

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், மத்தியின் திட்டங்களைச் செயற்படுத்தும், பின்பற்றும் சபையாகவே, மாகாணசபைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. அதற்காக வடக்கு மாகாணசபைக்குப் பல்வேறு நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டன.  

ஆனால், தற்போதைய அரசாங்கம் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிராது போனாலும், அரசாங்கத்தை அத்தகையதொரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன என்பதை மறந்து போகக்கூடாது. 

அத்தகைய சக்திகள்தான், கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வடக்கு மாகாணசபையை ஆட்டுவிப்பதற்கு முயற்சிக்கின்றன.  

அதேவேளை, வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் கூடத் தமிழர்களின் அரசியலுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். 

அதிகாரப் பகர்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் தரப்பு, கிடைத்துள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் விளைவுகளையும் இதன் மூலம் உணர முடிகிறது.  

மாகாண சபைகளின் நிர்வாகத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்கின்ற நிலை ஏற்படுமானால், அது தொடர்ச்சியான சிக்கல்களுக்கே வழிவகுக்கும். அவ்வாறான நிலையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்காத வகையில், மாகாண நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்.  

வடக்கு மாகாணசபை பொறுப்புக்கூறலிலும், வெளிப்படைத்தன்மையிலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று பெயரெடுத்து விட்டால் மாத்திரம் போதாது, இதுபோன்ற கறைகள் இனிமேலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது.  

இதுபோன்ற, இன்னொரு சூழல் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் அனைவரதும் கடப்பாடு. ஒருசிலரின் அல்லது ஒருசில தவறுகள் ஒட்டுமொத்த இனத்தின் நலன்களுக்குமே ஆபத்தாக அமைந்து விடக்கூடாது. 

அவ்வாறான நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அது, அரசியல்வாதிகளுக்கானது மாத்திரமல்ல; வாக்காளர்களான மக்களுக்குமான பொறுப்புத்தான்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கின்-மீது-கைநீட்டும்-முயற்சி/91-198768

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.