Jump to content

சித்திரைக்கஞ்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரைக்கஞ்சி

P1140293

சித்திரா பவுர்னமி அன்று அம்மனுக்கு சித்திரைக் கஞ்சி வார்ப்பார்கள். அன்று சித்திர குப்த நாயனார் திருமண நாளுமாகும்.

இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் ஒருமுறை  எதிர்பாராவிதமாக ஒரு சித்திரா பவுர்னமி அன்று சென்றிருந்தேன்.

சித்திரைக்கஞ்சி வார்த்தார்கள். அப்படி ஒரு சுவை, அமிர்தமாக இருந்தது.

அதை செய்தவர், அதில் ஒரு பெரும் கில்லாடி என்றும் வருடாவருடம் செய்பவர் என்றும் சொன்னார்கள். 

அவரிடம் செய்முறை கேட்கலாம் என்றால், பிசியாக இருந்தார், மேலும் அது கேட்க கூடிய இடமும் இல்லை தானே. பிறகும் அவரை சந்திக்க முடியவில்லை.

அதன் பின்னர் அதே சித்திரா பவுர்னமி நாளில் செல்லும் வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை.

ஆனாலும் இந்த செய்முறை பலமாதிரியாக செய்தும் கூடி வரவில்லை.

தேடித் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் போட்டிருந்தது கண்ணில் பட்டது.

P1140287

இதோ இங்கே. செய்து சுவைத்துப் பாருங்கள். கிழே அவரது பதிவின் இணைப்பும் உள்ளது.

1. சிவப்பு அரிசி தேவையான அளவு எடுத்து குலைய வேகவைத்து இறக்கி ஆற விடுங்கள்.

2. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உண்டென எடுத்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.

3. கறிவேல்பிலை தேவையான அளவு எடுத்து சிறியதாக அரிந்து கொள்ளுங்கள்.

3. தேவையான அளவு இஞ்சி எடுத்துக் கொள்ளுங்கள். 

4. தேங்காய்ப்பால் தேவையான அளவு.

4. இஞ்சியை உரலில் இட்டு (அல்லது மிச்சியில்) இடித்து அத்துடன் அரிந்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேல்பிலை சேர்த்து துவையலாக எடுங்கள்.

5. ஆறிய வேக வைத்த சோறில், இந்த துவையலை சேர்த்து, தேங்காய்ப்பால் உண்டென சேர்த்து, கைகளினால் பிசைந்து கலக்கி, அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதித்தும் இறக்கி தேசிக்காய் புளி சேர்த்தால், அமிர்தம் ரெடி.  

தாராளமான பால், அளவான புளியின் சேர்மானத்துக்கு அமைய கஞ்சியின் சுவை தானாகவே உச்சமடையும். 

P1140284

https://3d715.wordpress.com/2016/04/21/உணவு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது சித்திரைக்கஞ்சியில்லை பாருங்கோ.......ரம்ழான் நேரம் பள்ளியிலை ஊத்துற நோன்புக்கஞ்சி கண்டியளோ.....இஞ்சியும் கறிவேப்பிலையும் சித்திரைக்கஞ்சியின்ரை வரலாற்றிலையே இல்லை :grin:

 

பகிர்வுக்கு ரொம்ப தாங்ஸ்பா :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உது சித்திரைக்கஞ்சியில்லை பாருங்கோ.......ரம்ழான் நேரம் பள்ளியிலை ஊத்துற நோன்புக்கஞ்சி கண்டியளோ.....இஞ்சியும் கறிவேப்பிலையும் சித்திரைக்கஞ்சியின்ரை வரலாற்றிலையே இல்லை :grin:

 

பகிர்வுக்கு ரொம்ப தாங்ஸ்பா :cool:

அதுதான் விசயமே, அண்ணர்.

பிரதேச வேறுபாடு உண்டு. இங்கே நான் தந்த இணைப்பில் கூட, அவரே சொல்கிறார். வேறு அரிசியும் கலக்கலாம்.... கத்தரி, வாழைக்காய் பால்கறி செய்து கலப்பது குறித்தும் சொல்கிறார்.

இஞ்சி கலப்பது இவர் சொல்வது.

கருவேல்பிலை கலப்பது, ஈலிங் அம்மன் கோவில் செய்முறை.

உங்களுக்கு பிடித்ததை சேர்த்து, விடுவதை விடுத்து அடியுங்கோ.

நான் இஞ்சியை நன்றாக குறைத்து, உள்ளி சேர்த்துப் பார்த்தேன்... நன்றாக இருந்தது.

பறங்கியர் லம்பரைஸ் மாதிரி இதுவும் இப்படித்தான் எடுப்பார் கைப் பிள்ளை போல இருக்குறதோ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.