Jump to content

சித்திரைக்கஞ்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரைக்கஞ்சி

P1140293

சித்திரா பவுர்னமி அன்று அம்மனுக்கு சித்திரைக் கஞ்சி வார்ப்பார்கள். அன்று சித்திர குப்த நாயனார் திருமண நாளுமாகும்.

இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் ஒருமுறை  எதிர்பாராவிதமாக ஒரு சித்திரா பவுர்னமி அன்று சென்றிருந்தேன்.

சித்திரைக்கஞ்சி வார்த்தார்கள். அப்படி ஒரு சுவை, அமிர்தமாக இருந்தது.

அதை செய்தவர், அதில் ஒரு பெரும் கில்லாடி என்றும் வருடாவருடம் செய்பவர் என்றும் சொன்னார்கள். 

அவரிடம் செய்முறை கேட்கலாம் என்றால், பிசியாக இருந்தார், மேலும் அது கேட்க கூடிய இடமும் இல்லை தானே. பிறகும் அவரை சந்திக்க முடியவில்லை.

அதன் பின்னர் அதே சித்திரா பவுர்னமி நாளில் செல்லும் வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை.

ஆனாலும் இந்த செய்முறை பலமாதிரியாக செய்தும் கூடி வரவில்லை.

தேடித் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் போட்டிருந்தது கண்ணில் பட்டது.

P1140287

இதோ இங்கே. செய்து சுவைத்துப் பாருங்கள். கிழே அவரது பதிவின் இணைப்பும் உள்ளது.

1. சிவப்பு அரிசி தேவையான அளவு எடுத்து குலைய வேகவைத்து இறக்கி ஆற விடுங்கள்.

2. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உண்டென எடுத்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.

3. கறிவேல்பிலை தேவையான அளவு எடுத்து சிறியதாக அரிந்து கொள்ளுங்கள்.

3. தேவையான அளவு இஞ்சி எடுத்துக் கொள்ளுங்கள். 

4. தேங்காய்ப்பால் தேவையான அளவு.

4. இஞ்சியை உரலில் இட்டு (அல்லது மிச்சியில்) இடித்து அத்துடன் அரிந்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேல்பிலை சேர்த்து துவையலாக எடுங்கள்.

5. ஆறிய வேக வைத்த சோறில், இந்த துவையலை சேர்த்து, தேங்காய்ப்பால் உண்டென சேர்த்து, கைகளினால் பிசைந்து கலக்கி, அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதித்தும் இறக்கி தேசிக்காய் புளி சேர்த்தால், அமிர்தம் ரெடி.  

தாராளமான பால், அளவான புளியின் சேர்மானத்துக்கு அமைய கஞ்சியின் சுவை தானாகவே உச்சமடையும். 

P1140284

https://3d715.wordpress.com/2016/04/21/உணவு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது சித்திரைக்கஞ்சியில்லை பாருங்கோ.......ரம்ழான் நேரம் பள்ளியிலை ஊத்துற நோன்புக்கஞ்சி கண்டியளோ.....இஞ்சியும் கறிவேப்பிலையும் சித்திரைக்கஞ்சியின்ரை வரலாற்றிலையே இல்லை :grin:

 

பகிர்வுக்கு ரொம்ப தாங்ஸ்பா :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உது சித்திரைக்கஞ்சியில்லை பாருங்கோ.......ரம்ழான் நேரம் பள்ளியிலை ஊத்துற நோன்புக்கஞ்சி கண்டியளோ.....இஞ்சியும் கறிவேப்பிலையும் சித்திரைக்கஞ்சியின்ரை வரலாற்றிலையே இல்லை :grin:

 

பகிர்வுக்கு ரொம்ப தாங்ஸ்பா :cool:

அதுதான் விசயமே, அண்ணர்.

பிரதேச வேறுபாடு உண்டு. இங்கே நான் தந்த இணைப்பில் கூட, அவரே சொல்கிறார். வேறு அரிசியும் கலக்கலாம்.... கத்தரி, வாழைக்காய் பால்கறி செய்து கலப்பது குறித்தும் சொல்கிறார்.

இஞ்சி கலப்பது இவர் சொல்வது.

கருவேல்பிலை கலப்பது, ஈலிங் அம்மன் கோவில் செய்முறை.

உங்களுக்கு பிடித்ததை சேர்த்து, விடுவதை விடுத்து அடியுங்கோ.

நான் இஞ்சியை நன்றாக குறைத்து, உள்ளி சேர்த்துப் பார்த்தேன்... நன்றாக இருந்தது.

பறங்கியர் லம்பரைஸ் மாதிரி இதுவும் இப்படித்தான் எடுப்பார் கைப் பிள்ளை போல இருக்குறதோ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.