Jump to content

மணமகள் என்றால் வெட்கப்பட்டுக் கொண்டுதான் நிற்க வேண்டுமா என்ன?


Recommended Posts

மணமகள் என்றால் வெட்கப்பட்டுக் கொண்டுதான் நிற்க வேண்டுமா என்ன?

மணமகள் என்றால் வெட்கப்பட்டுதான் நிற்க வேண்டுமா என்ன?படத்தின் காப்புரிமைCOOLBLUEZ

வட இந்தியாவில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வீடியோவில் ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்று யூ ட்யூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதை பற்றி கேட்டதற்கு மணமகன் மட்டுமே அனைத்து மகிழ்ச்சியையும் பெற வேண்டுமா என்ன? என கேள்வி எழுப்புகிறார் மணப்பெண் அமிஷா பாரத்வாஜ்,

அந்த வீடியோவில் அவர் ஷார்ட்ஸ் அணிந்து தனது தோழிகளுடன் ஆங்கிலப்பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுகிறார்.

"இந்த வீடியோ ஏன் இந்தளவிற்கு பகிரப்பட்டது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது ; ஏனென்றால் அது மணப்பெண் ஒருவர் தனது மணநாளில் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற இயல்பான ஒரு நிகழ்வுதான்" என கூறுகிறார் அமிஷா.

ஆனால் பலர் அவர் அணிந்திருந்த ஆடை குறித்தும், அந்த பாடல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

"எனது வீடியோ, இந்திய மணமகள் என்றால் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்; நடனமாடக் கூடாது, கண்டிப்பாக இந்த வீடியோவில் நான் அணிந்த மாதிரியான ஆடைகளை அணியக் கூடாது; என்பது போன்ற பழமைவாத சிந்தனைகளை தகர்த்தெறியும்" என அமிஷா பாரத்வாஜ் கூறுகிறார்.

"இந்திய மணப்பெண்கள் இம்மாதிரியாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என பல நாட்களாக எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது; மணப்பெண் என்றால் வெட்கப்பட வேண்டும், அவ்வப்போது சிரிக்க வேண்டும், பெற்றோர்களை விட்டு போகும்போது அழ வேண்டும். ஆனால் தற்போது நவீன இந்திய மணப்பெண்கள் தாங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என தாங்களே தீர்மானிக்கின்றனர்" என்கிறார் அமிஷா.

மணமகள் என்றால் வெட்கப்பட்டுதான் நிற்க வேண்டுமா என்ன?படத்தின் காப்புரிமைCOOLBLUEZ

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்தியாவில் திருமண வீடியோக்களைத் தயாரிப்பது ஒரு நீண்ட மற்றும் சுவாரஸ்யமற்ற ஒரு விஷயமாக இருந்தது.

ஆனால் தற்போது பாலிவுட் பாடல்களின் தாக்கத்தால் பல சுவாரஸ்யமான திருமண வீடியோக்களை தயாரித்து வருகின்றனர்.

மேலும் இம்மாதிரியாக நடனம் ஆடுவது, வீடியோவில் முதன்மையாக தோன்றுவது ஆகியவற்றை மணப்பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர்.

"இந்த வீடியோ வித்தியாசமாக வர வேண்டும் என நினைக்கவில்லை ஆனால் எனது ஆழ்மனதில் எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்வதற்கான துணிவு என்னிடம் இருந்தது" என கூறுகிறார் அமிஷா பாரத்வாஜ்.

தன்னம்பிக்கை கொண்ட இளைய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பதால் என்னால் இவ்வாறு செய்ய முடிந்தது. மணமகன்கள் தங்களுக்கு வேண்டியதை செய்கிறார்கள், நடனமாடுகிறார்கள், குடிக்கிறார்கள், மணமகன்கள் தாங்கள் நினைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் போது மணப்பெண்கள் மட்டும் வெட்கப்பட்டு தலைகுனிந்து இருக்க வேண்டும் என எதிர்பார்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.

காலத்திற்கு ஏற்ப மணமகள்களும் மாறிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

பலர் இந்த வீடியோவிற்கு நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளது மூலம் இந்த மாற்றத்தை பலர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது; ஆனால் சிலர், இந்த வீடியோவில் இந்திய கலாசாரத்தை கெடுப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

"என்னை யாரும் கேலி செய்யவில்லை ஏனென்றால் என் பக்கம் பேச இணையத்தில் நிறைய பேர் இருந்தனர்" என தெரிவிக்கிறார் அமிர்தா பாரத்வாஜ்.

"இயல்பு நிலை"

இந்த வீடியோவை எடுத்தவர்களான சுப்ரீத் கவுர் மற்றும் பவன் சிங் இந்திய மணப்பெண்கள் மாறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

மணமகள் என்றால் வெட்கப்பட்டுதான் நிற்க வேண்டுமா என்ன?படத்தின் காப்புரிமைCOOLBLUEZ

பத்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் வீடியோக்களை எடுக்கும் போது மணப்பெண்கள் அழகாகவும், ஒல்லியாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அநேகமாக பலர் புதிய முயற்சிகளை சோதித்து பார்க்க விழைகின்றனர் என சிங் தெரிவிக்கிறார்.

திருமணம் என்பது அவர்கள் வாழ்வின் முக்கிய தருணம் என்றும் அதில் தாங்கள் தாங்களாகவே இருக்க வேண்டும் என்றும் பல மணப்பெண்கள் புரிந்து கொண்டுள்ளதாக கவுர் தெரிவிக்கிறார்.

மேலும் கடந்த பத்து வருடங்களில் பெண்கள் பலர் பணிபுரிய தொடங்கிவிட்டதால் அப்போதைய சூழல் தற்போது இல்லை.

அமீஷா மட்டுமல்ல இது குறித்து நீங்கள் தேடினால் பல புதுமையான திருமண வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம் என கூறுகிறார் சிங்.

அம்மாதிரியான மணப்பெண்களில் ஒருவர்தான் இஷிதா கிர்தார். பெண்கள் தங்கள் பெற்றோர்களை விட்டுச் செல்லும் போது பொதுவாக அழ வேண்டும் ஆனால் அவர் அழவில்லை.

மணமகள் என்றால் வெட்கப்பட்டுதான் நிற்க வேண்டுமா என்ன?படத்தின் காப்புரிமைCOOLBLUEZ Image captionஇஷிதா கிர்தார்

"திருமணம் என்பது மகிழ்ச்சியான ஒரு தருணம்; எனவே நடனமாடுவது என நான் முடிவு செய்தேன்; பிறரையும் என்னுடன் நடனமாட வைத்தேன்" என கூறுகிறார் கிர்தார்.

மணப்பெண் என்றால் இவ்வாறாகத்தான் இருக்க வேண்டும் என சிலர் நினைப்பதற்கு ஹிந்தி திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் ஒரு காரணமாகும்.

"திரைப்படங்களில் மணப்பெண்கள் வெட்கப்படுவது போன்றே காட்டுகின்றனர் எனவே அதை மக்கள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர்". என கிர்தார் தெரிவித்தார்.

"நீங்கள் வெட்கப்பட வேண்டுமென்றால் வெட்கப்படுங்கள் ஆனால் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்பதற்காக அதை செய்யாதீர்கள்" என மற்றொரு மணப்பெண்ணான மனன்மிதா குமார் கூறுகிறார்.

குடும்பங்களின் ஆதரவு

இம்மாதிரியான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. சிறிய நகரங்களில் உள்ள பெண்கள், ஏன் நகரங்களில் உள்ள சில பெண்களுக்கும் கூட இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என கூறுகிறார் கவுர்.

"ஒரு முறை எனது வாடிக்கையாளர் பெண் ஒளிப்பதிவாளரை நம்ப முடியாது எனக்கூறி வீடியோவிற்கு மறுப்பு சொல்லிவிட்டார். மற்றொருவர் மணப்பெண் தனியாக வீடியோ எடுக்க ஒப்புக் கொண்டதால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்".

மணமகள் என்றால் வெட்கப்பட்டுதான் நிற்க வேண்டுமா என்படத்தின் காப்புரிமைCOOLBLUEZ Image captionமனன்மிதா குமார்

"மாற்றங்கள் வந்து விட்டது; ஆனால் மணப்பெண்கள் இயல்பாக இருக்கும் நிலை வருவதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளது".என்கிறார் கவுர்.

இம்மாதிரியான வீடியோக்களை எடுப்பதற்கு மணப்பெண்களுக்கு ஆதரவளிக்கும் அவர்களின் குடும்பத்தையும் நாம் பாராட்ட வேண்டும் என்கிறார் அமீஷா.

என்னால் இம்மாதிரியான வீடியோ எடுக்க முடிந்ததற்கு காரணம் எனது கணவருக்கு இதில் ஆட்சேபணை இல்லை என்பதாலும் தான். நான் இதற்காக அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றில்லை இருப்பினும் உங்களுடைய துணை உங்கள் ரசனைகளை ஒத்திருந்தால் அது சிறப்பானது என்கிறார் அமீஷா.

இந்த வீடியோ எப்போது படம் பிடிக்கப்பட்டது என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் இந்த வீடியோ, மணப்பெண் என்றால் வெட்கப்பட்டுதான் நிற்க வேண்டும் என்று பலரிடம் நிலவும் , குறிப்பாக மணமகன்களிடம் நிலவும், கற்பிதத்தைத் தகர்க்கும் எனக் கூறுகிறார் அமீஷாவின் கணவர் ப்ரணவ் வர்மா.

http://www.bbc.com/tamil/india-40258004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சோட்ஸ்சுடனாவது ஆடினாளே சந்தோசப்பட்டிகிருக்க வேண்டியதுதான் அதுவும் இல்லையென்றால் சர்ச்சை  ஆனால் இந்தியாவில் சர்சை இல்லை சன்னிலியோனையே ரசித்த கூட்டம்  இருக்கு நடிகை  நடிகை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரித்த சடைமுடி தொடுத்து முடிக்குமுன் எடுத்த  சபதம் முடித்தவளே    
    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.