Jump to content

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!


Recommended Posts

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

 

மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது.

அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டுவந்திருந்தனர்.

இதனால் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் எட்டு வழக்கறிஞர்களும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராக எதிர்த்தரப்பில் 12 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வரதர் மறைமுகமாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறி ஒரு கடிதத்தை கொடுத்து அதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட ஒப்புதல் வழங்கியிருந்தமை பின்னரே தெரியவந்தது.

இதனை சாட்டாக காட்டிய நீதிமன்றம் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன் தொடர்ச்சியான விசாரணையை புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளமை தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

http://thuliyam.com/?p=70679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது பல சேனா தான் இவயளுக்கு மருந்து.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் நீதி கிடைக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

Link to comment
Share on other sites

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

 

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்தவரும் மூதூர் தொகுதியில் இம்ரான் மக்றூப் எனும் முஸ்லிம் நபரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியவரும் திருகோணமலையின் ஒரு தமிழர் ஆசனத்தை முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்த புண்ணியவான் சட்டத்தரணி வரதன் மூதூர் நீதிமன்றில் திடீரென பல்டி அடித்து வழக்கின் போக்கை எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார்.

அதே நேரம் விசித்திரமான சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராக வந்த சட்டத்தரணி வரதன் சந்தேகநபர்களுக்கு சார்பாக பேச ஆரம்பித்தார்.

குறித்த வழக்கில் அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காட்டவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கூறினார்.

அத்தோடு பொலிசார் குறித்த சிறுமிகளிடம் ஒரு புகைப்படத்தை காண்பித்து இவர்தான் குற்றவாளி என்று கூறி இவரை அடையாளம் காட்டுங்கள் என கூறியதாகவும் ஆனாலும் குறித்த சிறுமிகள் அடையாளம் காட்டவில்லை எனவும் பொலிசார் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த சட்டத்தரணியின் செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அதேசமயம் CHRD என்ற அமைப்பை சேர்ந்த வரதன் என்ற சட்டத்தரணி, சிறுமிகளின் சார்பாக வழக்காடுவதாக, அவர்களின் பெற்றோரிடம் சம்மத கடிதம் பெற்றுவிட்டு சந்தேக நபர்களுக்கு ஆதரவாக வாதாடியமை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதற்கு அவர் நேரடியாகவே சந்தேகநபர்களுக்கு ஆதரவாக ஆஜராவதாக நீதிமன்றில் தெரிவித்துவிட்டு வாதாடியிருக்கலாம்.

நேற்று மூதூர் மல்லிகைத்தீவு சிறுமிகள் துஸ்பிரயோக வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கு விசாரணைகளை பார்வையிட மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜனா, பிரசன்னா, ஜெனார்த்தனன் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் ஒன்பது சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஏழு சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

குறிப்பாக இன்றைய தினம் இரண்டு முஸ்லிம் சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக அடையாள அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கான அடையாள அணிவகுப்பு அது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த நபரை அடையாளம் காட்டாத போதிலும், இன்றைய தினம் புதிதாக பொலிசாரால் கொண்டுவரப்பட்ட சம்பவ தினம் குறித்த பிரதேசத்தில் நடமாடிய பிரதேசத்துக்குப் புதிய நபரைக் கண்ணுற்ற அதே பாடசாலையில் கல்வி பயிலும் (12வயது) மாணவிகள் இருவர் குறித்த நபரை அடையாளம் காட்டியிருந்தனர்.

அதன் பின்னர் திறந்த மன்றில் முதல் வழக்காக அழைக்கப்பட்ட குறித்த வழக்கில் பொலிசார் சார்பில் அறிக்கையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மரபணு சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது அமைதியின்மையை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

அதன்பின்னர் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய ஒன்பது சட்டத்தரணிகள் சார்பாகவும் ஒரு சட்டத்தரணி பிணை கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரான லாபீர் எனும் குறித்த சட்டத்தரணி தனது வாதத்தில் அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சந்தேகநபர்களை இனம்காட்டவில்லை எனவும், இந்த வழக்கில் சில குறிப்பிட்ட குழுவினர் தங்கள் சுயநலங்களுக்காக அப்பாவிகளை தண்டிக்க முனைவதாகவும், இதில் சர்வதேச சதிகள் இருப்பதாகவும், முகநூலில் இதுபற்றி எழுதி தேவையற்ற பிரச்சனைகளை சிலர் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு சந்தேக நபர்களின் உரிமையையும் சட்டத்தையும் மதித்து அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் எத்தகைய பிணை நிபந்தனைகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இந்த வழக்கில் தனது தரப்பினர் எந்த தலையீடுகளையோ அச்சுறுத்தல்களையோ செய்யமாட்டார்கள் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பான சட்டத்தரணி செலஸ்டின் குறித்த வழக்கு பாரதூரமான குற்றச்செயல் எனவும் இந்த வழக்கை பொதுமக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டுள்ளனர் எனவும் இவர்களுக்கு பிணை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் வாதிட்டார்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள் என்பதையும் விட குழந்தைகள் என்பதே பொருத்தமாக இருக்கும் எனவும் சட்டத்தரணிகள், பொலிசார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலர் கூடியிருந்த இடத்தில் மேலு 42 நபர்களை நிறுத்தி அடையாளம் காட்டச் சொன்னால் அது அவர்களால் முடியாத காரியம் எனவும் புதுமையான அனுபவமற்ற இடத்தில் குறித்த குழந்தைகளால் அடையாளம் காட்ட முடியவில்லை எனவும் அதனை வைத்து இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற முடிவுக்கு வரமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

 

http://thuliyam.com/?p=70751

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தை வெட்டுவது மரத்தினால் ஆன கோடரியே  இனம்  விற்று  பிழைப்பு நடத்துபவர்கள்  நடத்துங்க உங்க காட்டில் இப்ப மழை ஆனால் அது வெள்ளமாகி  உடைத்து உங்களையே அடித்து செல்லும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த செயலுக்கு சிங்களவன் அடிபோடும்போது தெரியும் எம்மினம் ஏமாறுவது எம்மவர்களால் மட்டுமே என்பதை வரதன் நிரூபித்துள்ளார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

பெரிதாக ஒன்றும் வேண்டாம். 

இதை அப்படியே சிங்களத்தில் மொழி பெயர்த்து முகப்புத்தகத்தில் மீதும் போட வேண்டும்.

லிங்கை பொது பல சேனவுக்கு அனுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

9 hours ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

தமிழர்களிடம் இருந்து காணிகளை ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்கள் பறிக்கவில்லையே? அவர்கள் கொடுத்த பணம் போதுமென்று அதை வாங்கிக்கொண்டு தமிழர்கள் வேறு இடத்தில் குடியேறியதால் முஸ்லிம்கள் காணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

Link to comment
Share on other sites

44 minutes ago, Jude said:

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

உதாரணம் தந்தால் என்ன செய்ய போவதாய் உத்தேசம் ?

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிகள் வேடத்தில் நரிகள் இங்கு ...
ஜாக்கிரதை ஜனங்களே !!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

செய்த செயலுக்கு சிங்களவன் அடிபோடும்போது தெரியும் எம்மினம் ஏமாறுவது எம்மவர்களால் மட்டுமே என்பதை வரதன் நிரூபித்துள்ளார் 

ஈழப் போராட்டத்தில்... ஏற்பட்ட தோல்விக்கும், எம்மவர்களே  காரணம்.
அது... தொடர் கதையாக, இருப்பதை நினைக்க, இப்படிப் பட்ட  இனம், 
உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

 

17 hours ago, Nathamuni said:

பெரிதாக ஒன்றும் வேண்டாம். 

இதை அப்படியே சிங்களத்தில் மொழி பெயர்த்து முகப்புத்தகத்தில் மீதும் போட வேண்டும்.

லிங்கை பொது பல சேனவுக்கு அனுப்ப வேண்டும்.

 

9 hours ago, Jude said:

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

இதுகும்.... மேலே உள்ளவரின்  பதிவு.
முஸ்லீம்களுக்கு  வக்காலத்து வாங்குபவர்கள், இதனை பார்த்த பின்பாவது...
சோற்றில் உப்பு, போட்டு சாப்பிடுங்கள்.

Bild könnte enthalten: 1 Person, Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

தமிழர்களிடம் இருந்து காணிகளை ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்கள் பறிக்கவில்லையே? அவர்கள் கொடுத்த பணம் போதுமென்று அதை வாங்கிக்கொண்டு தமிழர்கள் வேறு இடத்தில் குடியேறியதால் முஸ்லிம்கள் காணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

 

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

உங்களுக்கு தெரிந்த உன்மை அவ்வளவுதான் போல் இருக்கிறது தமிழரின்  காணிகளை ஏன் வாங்ன்க வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க வில்லை   கிழக்கை தங்கள் வசப்படுத்தி அதிலிருந்த  தமிழ் சமூகத்தை அடக்கி ஆள நினைக்கிறது முஸ்ல்லிம், சமுதாயம் அதற்கு அவர்கள்  வகுத்து வரும் வியூகம் என்பது நல்ல தமிழர்களை வைத்து   தமிழர் காணிகளை வாங்கி  அங்கு முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி தமிழர்களை விரட்டி விடுவதுதான்  இந்த ஏறாவூர் என்பது  ஆரம்பத்தில் தமிழர்கள் கிராமமாக இருந்தது தற்போது அது மாறிவிட்டது  புணாணையில்  கட்டும் அரபிக்கல்லூரியை பாருங்கள் எத்தனை ஏக்கறை பிடித்து கட்டுகிறார்கள் ஊர்ல் இருந்தால் நிலமை தெரியும்  இல்லாவிட்டால் ??

 

 பறித்த  அந்த காணிகள் பற்றி தெரிந்த உங்களுக்கு தமிழரின் காணிகள்  சிங்கள  பேரினவாதிகளாலும் , முஸ்லீம் பேரினவாதிகளாலும் கைப்பற்றப்படும் போது தெரியவில்லை என்பதும்  அதன் போது இப்படி  ஒரு கருத்து எழுதவில்லையே என்று நினைக்கும் போது  வெடிக்கை  சீ சீ வேடிக்கையாக இருக்குறது 

Link to comment
Share on other sites

11 hours ago, Jude said:

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளவை விதண்டாவாதம் அல்ல, அவை தான் நாம் கேட்க நினைக்கும் நியாயமான கேள்விகள். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றிய பின் அவர்களும் சரி, தமிழ் மக்களும் சரி அவர்களது காணிகளை மட்டுமல்ல பெறுமதியான சொத்துகளையும் பள்ளிவாசல்களையும் கூட கையகப்படுத்தவில்லை. இந்த நிலை 1995 ஆம் ஆண்டு சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தை பிடிக்கும் வரைக்கும் நீடித்தது.

புலிகளின் / தமிழ் மக்களின் தோல்விக்கு பூகோள அரசியல் முதல் கொண்டு பலவகையான விரிவான மற்றும் நுட்பமான காரணங்கள்  இருக்கும் போது வெறுமனே அவர்கள் நண்பர்களை சம்பாதிக்கவில்லை என்று  (அதுவும் நீங்கள் நண்பர்கள் என்று சொல்ல முற்படுவது கம்யூனிச / சோசலிச கழுதைக் கூட்டங்களை என நினைக்கின்றேன்) ஒற்றை காரணத்தை சொல்வது அவர்கள் மீதான கடுமையான காழ்ப்புணர்ச்சியினால் மட்டுமே.

புலிகள் அற்ற இந்த 8 ஆண்டுகளில் உங்களால் எத்தனை பேரை நண்பர்களாக மாற்றிக் கொள்ள முடிந்தது என்றும்  அப்படி நண்பர்களாக்கியதன் காராணத்தினால் அரசியல் ரீதியில் நாம் எந்தளவுக்கு சாதிக்க முடிந்துள்ளது என்றும் விளக்க முடியுமா?


2009 பின் முஸ்லிம் செல்வந்தர்களாலும், றிசாட்  போன்றவர்களாலும் தமிழ் மக்களின் காணிகள் சுரண்டப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இப்படியான விடயங்களால் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுக்காது, அவர்களது அரசியலை மலினப்படுத்தி அவர்களையே குற்றவாளிகளும் ஆக்கி விடும் உங்களைப் போன்றவர்களால் தான் நாம் இன்னமும் இழப்புகளை மட்டுமே எதிர் கொண்டு வருகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ, இணையத்தில் இன்று இணைக்கப் பட்டு உள்ளது. இணைத்த தேவர் வம்சம், சீமானுக்கு முழு எதிரானது. 

அதே வேளை, இவர்கள் மீள தம் பேரில் வெளியிடும் வீடியோ ஜேர்மன் வாழ் ஈழத் தமிழருடையது.

முஸ்லிகள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் போல் உள்ளது. 

இந்த வீடியோவை இணைப்பது, அதிலுள்ள கருத்துக்களுக்கு நான் ஆதரவு என்பதல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களைகளை புடுங்கி மண்ணை சுத்தம் செய்யாதவரை 
நல்ல பயிர்ச்செய்கை என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை.

பிரபகரனின் தோல்வி என்பது ...
பிரபாகரனின் "தன்னிலை மாறுதல்" எனும் இடத்தில்தான் தொடங்கியது.

சர்வதேசம் புடலங்காய் கத்தரிக்காய் ....
என்று பல மாறுதல்களை "தன்னிலை" கடந்து செய்ய முற்படட போதுதான் 
தோல்வியின் படலம் தொடர தொடங்கியது. 

இதை இல்லை என்று வாதிடலாம் .....
ஆனால் பிரபாகரனின் வெற்றி என்பது "தன்னிலை தாளாமை"
என்பத்தில்தான் தொடங்கியது என்பதை ... எந்த வாதமும் இல்லாமல் 
எல்லோராலும் ஏற்றுக்கொள்ள படுகிறது.

இதை ஏற்றுக்கொள்ளும்போதே ... மறைமுகமாக முதலாவதும் ஏறுகொள்ள்ளப்படுகிறது.
ஆனால் ....... அவர் அவர் விருப்பு வெறுப்பு அதற்கு இடம் கொடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

On 6/14/2017 at 8:59 AM, Sasi_varnam said:

பரிகள் வேடத்தில் நரிகள் இங்கு ...
ஜாக்கிரதை ஜனங்களே !!:rolleyes:

வாங்கின காசுக்கு சேவகம் நடக்குது! அவ்வளவ்வு தான்!

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனி ஒருவன் said:

  புணாணையில்  கட்டும் அரபிக்கல்லூரியை பாருங்கள் எத்தனை ஏக்கறை பிடித்து கட்டுகிறார்கள் ஊர்ல் இருந்தால் நிலமை தெரியும்  இல்லாவிட்டால் ??

 

 

அதில் குடியேற்றதிட்டங்களும் உண்டு ...‍‍‍ஹிஸ்புல்லா மாதிரிகிராமம் என்று பெரிய ஒரு பெயர்பலகையும் உண்டு நான் இந்தடவை வரும் பொழுது பார்த்தேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அதில் குடியேற்றதிட்டங்களும் உண்டு ...‍‍‍ஹிஸ்புல்லா மாதிரிகிராமம் என்று பெரிய ஒரு பெயர்பலகையும் உண்டு நான் இந்தடவை வரும் பொழுது பார்த்தேன்....

நீங்கள் ஊருக்கு வந்து போவதாக் தெரிகிறது என நினைக்கிறேன் அப்படியே மேற்குப்பக்கமும் வளைச்சு பிடிக்கிறாங்கள்  எல்லாம்  உள் விளையாட்டால் நடக்கிரது ஆர் ஆர் உடந்தை என்பது மந்த மான நிலையில் தொக்கி நிற்கிறது  வெளிவரும்  சில நாட்களுக்குள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2017 at 3:09 AM, Jude said:

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

நீங்கள் உங்கள்  பரம்பரை எல்லாமே ஒரு காலத்தில் வந்தேறு குடிகளுக்கு காசுக்கு விலை போன **** கூட்டம்தான். இப்பிடித்தான் பேசச்சொல்லும்.
கேடுகெட்ட கூட்டம். ஒன்றுமே இல்லாமல் கஷ்டப்படுபவர்களிடம் காசைக்காட்டி சூசகமாக காணிகளை அபகரிக்கும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குதுகள். விஜயகாந்த் சொன்னமாதிரி சீ தூ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் உங்கள்  பரம்பரை எல்லாமே ஒரு காலத்தில் வந்தேறு குடிகளுக்கு காசுக்கு விலை போன **** கூட்டம்தான். இப்பிடித்தான் பேசச்சொல்லும்.
கேடுகெட்ட கூட்டம். ஒன்றுமே இல்லாமல் கஷ்டப்படுபவர்களிடம் காசைக்காட்டி சூசகமாக காணிகளை அபகரிக்கும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குதுகள். விஜயகாந்த் சொன்னமாதிரி சீ தூ.

 

தயவுசெய்து இப்படி எழுதாதீர்கள் ......
சிலரின் எதிர்பார்ப்பே நீங்கள் யாரவது வந்து இப்படி எதையாவது எழுதவேண்டும் என்பதே.

சிலருக்கு தாங்கள் தமிழரில்லை என்ற எண்ணம் 
தமிழர்கள் தாழ்ந்துபோனால் அதில் ஒரு சுகம்.

அதற்கு காரணம் உண்டு விரிவாக எழுதமுடியாது.
சில விடயங்களை விளங்கினாலும் ......விளங்காத மாதிரி நடிப்பதில் 
லாபம் நிறைய உண்டு.

உங்களை ஒருவர் அடித்தால் .... நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது 
ஒருவருக்கு நிற்ச்சயமாக தெரிந்தால் ...... அவர் யோசித்து அதை எப்படி 
முறியடிப்பது என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்த்து உங்களை அடிக்க வாய்ப்பு உண்டு.

நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது யாருக்கும் தெரியாத வரைதான் உங்கள் பலம். 

இது தமிழர்களால் தமிழருக்கா ... கருத்துக்கள் பகிரும் ஒரு களம்.
இதில் சில கருத்துக்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ......
அதில் நிறைய காரணமும் இருக்கிறது 
அப்படியானவற்றை கண்டால் ......... காணாத மாதிரி போய்க்கொண்டு இருந்தால் 
பின்பு அவர்களை காண கிடைக்காது.
சீ .. சீ இந்த பழம் புளிக்கும் என்றுவிட்டு  ... காணாமல் போனவர்கள்தான் அதிகம். 

ஆக்கிரமிப்பு பற்றி பேசும்போது ......
தமிழர்கள் அடிவாங்கும்போது அலறியது தப்பு என்று 
அவர்கள் சொல்வார்கள்.
ஆமாய்யா ....... தமிழர்கள் அப்படி அழுத்திருக்க கூடாது 
என்று எழுதிவிட்டு போனால் ..... அவர்கள் எதிர்பார்ப்பு தவிடு ஆகிடும்.
நீங்கள் அதை உணர்ச்சிபூர்வமாக பார்த்து கருத்து எழுத தொடங்கினால் ...
அவர்கள் எதிர்பார்ப்பு அதுதான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

தயவுசெய்து இப்படி எழுதாதீர்கள் ......
சிலரின் எதிர்பார்ப்பே நீங்கள் யாரவது வந்து இப்படி எதையாவது எழுதவேண்டும் என்பதே.

சிலருக்கு தாங்கள் தமிழரில்லை என்ற எண்ணம் 
தமிழர்கள் தாழ்ந்துபோனால் அதில் ஒரு சுகம்.

அதற்கு காரணம் உண்டு விரிவாக எழுதமுடியாது.
சில விடயங்களை விளங்கினாலும் ......விளங்காத மாதிரி நடிப்பதில் 
லாபம் நிறைய உண்டு.

உங்களை ஒருவர் அடித்தால் .... நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது 
ஒருவருக்கு நிற்ச்சயமாக தெரிந்தால் ...... அவர் யோசித்து அதை எப்படி 
முறியடிப்பது என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்த்து உங்களை அடிக்க வாய்ப்பு உண்டு.

நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது யாருக்கும் தெரியாத வரைதான் உங்கள் பலம். 

இது தமிழர்களால் தமிழருக்கா ... கருத்துக்கள் பகிரும் ஒரு களம்.
இதில் சில கருத்துக்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ......
அதில் நிறைய காரணமும் இருக்கிறது 
அப்படியானவற்றை கண்டால் ......... காணாத மாதிரி போய்க்கொண்டு இருந்தால் 
பின்பு அவர்களை காண கிடைக்காது.
சீ .. சீ இந்த பழம் புளிக்கும் என்றுவிட்டு  ... காணாமல் போனவர்கள்தான் அதிகம். 

ஆக்கிரமிப்பு பற்றி பேசும்போது ......
தமிழர்கள் அடிவாங்கும்போது அலறியது தப்பு என்று 
அவர்கள் சொல்வார்கள்.
ஆமாய்யா ....... தமிழர்கள் அப்படி அழுத்திருக்க கூடாது 
என்று எழுதிவிட்டு போனால் ..... அவர்கள் எதிர்பார்ப்பு தவிடு ஆகிடும்.
நீங்கள் அதை உணர்ச்சிபூர்வமாக பார்த்து கருத்து எழுத தொடங்கினால் ...
அவர்கள் எதிர்பார்ப்பு அதுதான் !

மருது  இப்பிடியெல்லாம் எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறானான் ஆனால் உந்தாளின்ட அலப்பறை தாங்க முடியுதில்லை. இது உங்கடை மாகாணம் .இல்லை என்ற நிலைக்கு கொண்டு வருவம் எண்டு ஒரு முஸ்லீம் சொன்னபின்னும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிறதுகளை வேறு என்ன செய்யலாம்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.