Jump to content

demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள்


Recommended Posts

demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம்.

 

unnamed.jpg

 

பிரான்ஸ் கான் நகரில் நடக்கும் 70 வது உலகத் திரைப்பட விழாவில் கடந்த வாரம் demons N paradiseஆவணப்படம் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இலங்கைத்தீவில் முப்பதாண்டு காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை மையாமாக வைத்து யூட்ரட்ணதினால் இயக்கப்பட்டிருந்தது.ஆவணப்படங்கள் என்றாலே வழமையாக ஒரு இருபது,முப்பது பேருடன் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு முன்நூறுக்குமதிகமான பார்வையாளர்களுடன் அகன்ற திரையரங்கில் பார்த்தது. ஆச்சரியம் கலந்த அனுபவமாகவேயிருந்தது.மிகக்குறைந்த வளங்களோடு சுமார் பத்தாண்டுகால உழைப்பில் இந்தப் படத்தினை யூட் ரட்ணம் இயக்கியிருக்கிறார் என்கிற அறிவிப்போடு படம் கறுப்பு வெள்ளையில் தொடங்கியது.

 

கோவணங்கள் மட்டுமேயணிந்த சிறுவர்கள் ஒரு தென்னம் தோப்பிலிருந்து எம்மை நோக்கி ஓடி வருகிறார்கள்.."இந்த நாடு சுதந்திரமடைத்த நாளிலிருந்து நாங்கள் தமிழராக எங்கள் மொழியை பேசுகிற உரிமை எதோ ஒரு விதத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது".. என்கிற ஜூட் ரட்ணத்தின் குரலோடு ஆங்கிலேயர்கள் கனிமவளங்களை ஏற்றி செல்வதற்காக அமைக்கப்பட்ட புகையிரதப்பதையில் நிலக்கரியில் இயங்கும் புகையிரதத்தோடு படமும் நகரத் தொடங்குகிறது .பின்னர் கைவிடப்பட்ட புகையிரதப்  பெட்டிகளை பெரியதொரு ஆலமரமொன்று  ஆக்கிரமித்து வளர்ந்திருப்பதை காட்டுவதோடு இரண்டு நிமிடத்திலேயே இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்.. தென்னிலங்கையில் மருதானைக்கு அருகில் குழந்தைகள் விளையாடும் பூங்காவில் சிறிய விளையாட்டு இரயிலை கலரில் காட்டுவதினூடு எம்மை நிகழ்காலத்துக்கு கொண்டுவருகிறார். அந்த இரயிலில் ஏறி விளையாடுவதற்காக "அப்பா   இங்கை வாங்கோ".. என சத்தமாக அழைக்கிறான்.

unnamed1.jpg

 

"இது எனது மகன் .சத்தமாக தமிழில் கதைக்கும்போதெல்லாம் என்மனதின் ஆழத்தில் எங்கிருந்தோ ஒரு பய உணர்வு என்னுள் தோன்றி உடலை நடுங்க வைக்கும். காரணம் அப்போ எனக்கு ஐந்து வயது நான் தமிழில் சத்தமாக கதைதுவிடக் கூடாது என்பதற்காகவே அப்பா பல நாட்கள் என் வாயை பொத்திப்பிடித்து வைத்திருந்திருக்கிறார்". என்று தொடர்ந்து ஒலிக்கும் குரலோடு 1983 ம் ஆண்டின் யூலை கலவரத்தின் காட்சிகள் புகைப்படங்களாக நகருகின்றது.அம்மணமாக  இருத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழரை சுற்றி ஆனந்தக் கூத்தாடும்சில சிங்கள இளைஞர்.   உலகத்தையே உலுக்கிப்போட்ட இந்தப்படத்தை கையில் பிடித்தபடி நடந்துவரும்  ஒரு சிங்கள புகப்படப்பிடிப்பாளர்.. "இதோ இந்த இடத்தில்தான் அந்த தமிழரை அம்மணமாக இருத்தி வைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள்.நான்தான் இந்தப்படத்தை ஒரு பேருந்தின்  பின்னல் மறைந்திருந்து எடுத்தேன்.அந்த தமிழரை காப்பாற்றாது எதற்கு படமெடுத்தாய் என என்னை நீங்கள் கேட்கலாம்.தடுக்கப் போயிருந்தால் என்னையும் அவர்கள் கொலை செய்திருப்பார்கள்.படத்தை எடுத்துக் கொண்டுபோய் காவல்துறையிடம் கொடுத்துவிட்டேன்.என்னால் முடித்து அவ்வளவுதான்"... என்கிறார்.அடுத்து அகதிகளாக தமிழர்கள் வடக்கு நோக்கி சென்ற இரயிலில் பணிபுரிந்த இரயில் திணைக்கள ஊளியர்களின் அனுபவங்களையும்.தமிழர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து,அழித்து பயந்து வாழ்ந்த வாழ்க்கைகளையும் பதிவு  செய்தவாறு நகர்ந்த ஒளிப்படக்கருவி அடுத்த முக்கிய காலகட்டத்துக்கு எம்மை அழைத்துச்செல்கிறது .

18954750_2080738411976408_1418039624368589219_o.jpg

 

அடிவாங்கி அகதிகளாக வடக்கு நோக்கிச் சென்றவர்களில் சிங்களவர்களுக்கு எப்படியும் திருப்பியடிக்க வேண்டும்.தனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என ஈழ விடுதலை இயக்கங்களில் இணைகிறார்கள்.அப்படிதான் எனது மாமாவும் இயக்கத்துக்கு போனார் என்று தற்சமயம் கனடாவில் வசிக்கும் மனோகரன் என்பவரை யூட் அறிமுகப் படுத்துகிறார்.இந்த ஆவணப்படத்தின் கதா நாயகன் என்றே அவரை சொல்லலாம்.N.L.F.T அமைப்பிலிருந்த மனோகரன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்கு திரும்பியவர்.குடும்பமாக அவர்கள் வாசித்த கண்டி நகருக்கு சென்று 83 கலவரத்தின்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய சிங்கள மக்கள் முன்னால் போய் நிக்கிறார்.யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.தன்னை அடையாள படுத்தியதும் அவர்கள் கட்டித்தழுவி ஆனந்தக்கண்ணீர்ரோடு நலம் விசாரிக்கிறார்கள்.பின்னர் அங்கிருந்து தன்னோடு இயக்கத்திலிருந்த நண்பனைத் தேடி யாழ்ப்பாணம் போகிறார்.அவருக்கும் நண்பருக்குமான உரையாடலில் விடுதலை இயக்கங்களுகிடையிலான மோதல்கள் வன்முறைகள் பற்றிய சம்பவங்களை நினைவு மீட்டுகிறார்கள் .இவர்களோடு .T.E.L.O; P.L.O.T; E.R.O.S;L.T.T.E..ஆகிய உறுப்பினர்களும் நினைவு மீட்டல்களில் பங்கெடுக்கிறார்கள்.ஒவ்வொருவரும் இயக்க மோதல்களையும் தாங்கள் உயிர் தப்பியதையும் விபரிக்கிறார்கள்.தங்களின் இயக்கமான .N.L.F.T புலிகளால் தடை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவான மனோகரன் தோட்டத்துக்கு வேலைக்கு போகும் கூலித் தொழிலாளி போல் அழுக்கான சாரமும் தலைப்பாகையும் கட்டிக்கொண்டு பழைய சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்லும் போது சாவகச்சேரி பகுதியில் காவலுக்கு நின்ற புலி உறுப்பினர் ஒருவர் தங்கள் காவலரண் அமைப்பதற்காக இரயில் தண்டவாளத்தை கிழறி எடுத்து அதனை துண்டுகளாக வெட்டிக் கொடுத்துவிட்டு போகும்படி கட்டளையிடுகிறார்.இது அவருக்கு மட்டுமான கட்டளையல்ல .

 

அந்தப்பகுதியால் சென்றவர்கள் அனைவருக்குமானது.ஒருவர் எட்டு தண்டவாளங்களை அறுக்கவேண்டும்  அதுவும் சாதாரணமாக  இரும்பு அறுக்கும் வாளால்.அப்படி எட்டு தண்டவாளங்களை அறுத்துக்கொடுதுவிட்டு இயக்கச்சி வழியாக இராணுவப்பகுதிக்கு தப்பிச் சென்று கனடா சென்று விடுகிறார்.

இப்படி அனைவருமே தனி நாட்டுக்கான போராட்டம் எனத் தொடக்கி பின்னர் ஒரு இயக்கம் ஒற்றுமையின்மையால் இன்னொரு இயக்கத்தை அழித்து படுகொலைகளை செய்தது மட்டுமல்ல அப்படி ஒரு இயக்கம் மற்றைய இயக்கத்தை அழிக்கும்போது பலமான இயக்கத்துக்கு மக்களும் ஆதரவு கொடுத்தது.குறிப்பாக புலிகள்  ரெலோவை அழிக்கும்போது எந்தக் கேள்வியுமின்றி புலிகளுக்கு சோடாவும் உணவும் கொடுத்து வரவேற்றது புலிகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் மற்றைய இயக்கங்களையும் அவர்கள் தடை செய்து அழித்து தனிப்பெரும் இயக்கமாக மாறிய புலிகள்  பின்னர் அழிக்கப்பட்டதற்கும் அதிகாரத்தோடு ஒத்தோடும் பெரும்பான்மை தமிழ்  மக்களின் மனநிலையும் ஒரு காரணம் என்கிற பொதுவான வாதத்தை அனைவரும் முன்வைகிறார்கள்.

இறுதியாக புகையிரதப்பெட்டிகளை ஆக்கிரமித்து நின்ற பெரிய ஆலமரம் வெட்டப்பட்டு அவை விடுவிக்கப் படுவதோடு மீண்டும் கொழும்பிலிருந்து யாழுக்கான பிகையிரதப் பாதை போடப்படும் காட்சியோடு படம் முடிவடைகிறது.திரையரங்கத்தில் அனைவருமே  தங்கள் கண்களை துடைத்து விட்டபடியே சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக கரவொலி எழுப்பிகொண்டிருந்தார்கள்.அப்பொழுது யூட்ரட்ணத்தை நோக்கி வந்த இளவயதுப் பெண்ணொருவர் அவர் கையைப்பிடித்து  "நான் இந்த நாட்டில்தான் பிறந்து வளர்ந்தவள் அப்பா இலங்கைத் தமிழர்தான் .நான் இதுவரை இலங்கை சென்றதில்லை.அப்பா அடிக்கடி தனது நாட்டைப்பற்றி சொல்வார் ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோது ஒரு இனத்தின் துயரத்தை புரிந்து கொள்ள முடிந்தது".என்று வார்த்தைகள் முட்டி மோதி அழுகையோடு சொல்லிவிட்டு சென்றார்.  "இதை விட உங்களுக்கு வேறு விருதுகள் தேவையில்லை ".யூட் ரட்ணத்தின் தோளில் தட்டி சொல்லிவிட்டு வெளியே வந்து கனத்த மனத்தோடு கான் நகர கடலை நீண்ட நேரம் வெறித்தபடியே இருந்தேன்....

 

 

Link to comment
Share on other sites

சாத்திரி, உங்கள் விமரிசனத்தினை வாசிக்கும் போது இவ் ஆவணப்படத்தை உடனே  பார்க்க வேண்டும் போல தோன்றுகின்றது. பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

31 minutes ago, நிழலி said:

சாத்திரி, உங்கள் விமரிசனத்தினை வாசிக்கும் போது இவ் ஆவணப்படத்தை உடனே  பார்க்க வேண்டும் போல தோன்றுகின்றது. பகிர்வுக்கு நன்றி

டொராண்டோவில் திரைப்பட விழாவில் திரையிடுகிறார்கள் .திகதி அறியத் தருகிறேன்

இந்தப்படத்தை எடுத்த படப்பிடிப்பாளரே தனது அனுபவத்தை நேரடியாக பதிவு செய்துள்ளார்

L’image contient peut-être : une personne ou plus

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி...சாத்திரியார்!

அடிக்கடி இல்லாவிட்டலும்....இடைக்கிடையாகவாவது காண்பது மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சாத்ஸ் ........! tw_blush: 

Link to comment
Share on other sites

On 13/06/2017 at 0:58 AM, புங்கையூரன் said:

பகிர்வுக்கு நன்றி...சாத்திரியார்!

அடிக்கடி இல்லாவிட்டலும்....இடைக்கிடையாகவாவது காண்பது மகிழ்ச்சி!

மிக்க மகிழ்ச்சி

On 13/06/2017 at 7:24 PM, suvy said:

பகிர்வுக்கு நன்றி சாத்ஸ் ........! tw_blush: 

நன்றியண்ணா

Link to comment
Share on other sites

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தமிழ் இனத்துக்குள் மூண்ட மோதல்கள்: உலகுக்கு காட்டுகிறது இலங்கை தமிழரின் ஆவணப் படம்

 
‘டெமான்ஸ் இன் பாரடைஸ்’ ஆவணப் படத்தின் ஒரு காட்சி.
‘டெமான்ஸ் இன் பாரடைஸ்’ ஆவணப் படத்தின் ஒரு காட்சி.
 
 

இலங்கையில் ராணுவத்துக்கும் பல்வேறு தமிழ் போராட்ட குழுக் களுக்கும் இடையே நடந்த போரின் போது, தமிழ் சமுதாயத்துக்குள் நடந்த மோதல்களை உலகுக்கு காட்டுகிறது இலங்கைத் தமிழர் ஒருவர் தயாரித்துள்ள ஆவணப் படம் .

இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம் (39) ‘டெமான்ஸ் இன் பாரடைஸ்’ என்ற ஆவணப் படத்தை இயக்கி உள்ளார். இது அவரது முதல் படம். பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த கான் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால், இந்தப் படத்தை தயாரித்ததற்காக தனக்கு சிலர் துரோகி பட்டமும் வழங்கக்கூடும் என்று கூறுகிறார் ரத்னம்.

கொழும்பு நகரில் ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “என்னைப் பொறுத்தவரை, எனது குழந்தைப் பருவம் முதல் தமிழர்களின் அடையாளம் பற்றி எனக்குள் எழுந்த கேள்விகளை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படத்தைப் பார்க்கிறேன்” என்றார்.

தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக 90 நிமிட ஆவணப் படத்தின் மூலம் இலங்கை உள்நாட்டுப் போரை சித்தரித்து உள்ளார் ரத்னம்.

இலங்கை தலைநகர் கொழும்பில் 1983 ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக கலவரம். மூண்டபோது 5 வயது சிறுவனாக இருந்தார் ரத்னம். அவரது பெற்றோர் அங்கிருந்து தப்பினர். வடகிழக்கு பகுதியில் வளர் இளம் பருவத்தை கழித்தார் ரத்னம்.

அங்கு பல்வேறு தமிழர் போராட்ட குழுக்கள் செயல்பட்டதை ரத்னம் நேரில் கண்டார். இலங்கை ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போரிட்ட அவர்களை ரத்னம் ஹீரோக்களாக பார்த்தார்.பின்னர் அவரது குடும்பம் கண்டிக்கு புலம்பெயர்ந்தது. சில காலம் அங்கு வசித்த அவர்கள் மீண்டும் கொழும்பு நகருக்கு திரும்பினர்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை உள்நாட்டுப் போர் பற்றி ஆவணப்படம் தயாரிக்க ரத்னம் வடக்கு பகுதிக்கு ரயிலில் பயணம் செய்தார்.

படத்தின் முதல் பாதியில் தனது குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும் உள்நாட்டுப் போர் தனது குடும்பத்தில் ஏற்படுத் திய தாக்கம் பற்றியும் விவரித்துள் ளார். இதுகுறித்து ரத்னம் கூறும் போது, “என்னுடைய தாய் தனது பொட்டை அழித்துக் கொள்வார். எனது தந்தை சிங்களர்களைப் போல உடை அணிந்து கொள்வார். கொன்று விடுவார்களோ என்ற அச் சத்தில் மிகவும் தாழ்ந்த குரலில் தமிழில் பேசிக்கொண்டோம்” என பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

இந்தப் படம் ரத்னம் குடும்பத் தாரை மட்டும் மையமாக கொண்டது அல்ல, ரத்னத்தின் மூதாதையர் தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து 6 தலைமுறைக்கு முன்பே இலங் கைக்கு புலம் பெயர்ந்தவர்கள்.

சிங்களர்களை பெரும்பான்மை யாக கொண்ட நாடு தமிழர்களை அடிமையாக நடத்தியது மற்றும் தமிழர்கள் ஆயுதங்களை ஏந்தி போராட தொடங்கியதை சித்தரிப் பதற்காக தனது குடும்பத்தின் கடந்த கால வரலாற்றை புகுத்தி உள்ளார்.

மேலும் 1983-ல் கொழும்பு நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் கொல்லப்படுவதற்கு முன் நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழர் மற்றும் அவரைப் போன்று கொல்லப்பட்டவர்களை புகைப் படம் எடுத்த சிங்கள புகைப்படக் கலைஞர் போன்றோரின் கருத்துகளையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.

இந்தப் படத்தை எடுத்து முடிக்க ரத்னத்துக்கு 10 ஆண்டுகள் தேவைப் பட்டது. இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “இந்தப் படத்தை எடுக்கத் தொடங்கியபோது மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்தார். அப்போது, உள்நாட்டுப் போர் பற்றி பேசவே அனைவரும் அச்சப்பட்டனர். அனைவரையும் சமாதானப்படுத்தி இந்தப் படத்தை எடுக்க மிகவும் கஷ்டப்பட்டேன்” என்றார்.

தனது உறவினர் மனோரஞ்சனின் கதையைப் பயன்படுத்தி தமிழ் சமுதாயத்தின் அரசியல் தேர்வு மற்றும் தமிழர்கள் போராட்டம் பற்றி படத்தின் 2-வது பாதியை நகர்த்துகிறார் ரத்னம். இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “ஆயுதம் ஏந்திய போராட்டக்குழுக்களில் சேர நானும் பல இளைஞர்களும் விரும்பினோம். ஆனால் அதை எனது மாமா மனோரஞ்சன் ஆதரிக்கவில்லை” என்றார்.

கண்டியில் வளர்ந்த மனோரஞ் சன் சரளமாக சிங்கள மொழியில் பேசுவார். ஆனால் கண்டியில் போர் தீவிரமடைந்ததும் வடக்கு பகுதிக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு சிறிய இடதுசாரி குழுவில் (தமிழ் ஈழ தேசிய விடுதலை முன்னணி) சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதிக்கம் பெற்றதால் இதர அமைப்புகள் வலுவிழந்தன.

இதையடுத்து, துப்பாக்கியை போட்டுவிட்டு அவர் பத்திரிகை யாளராக பணியாற்றினார். பின்னர் விடுதலைப்புலிகள் கொலை மிரட் டல் விடுத்ததால் அவர் இலங் கையை விட்டு வெளியேறி கனடா வில் குடியேறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இலங்கைக்கு (கண்டி) திரும்பி னார். அங்கு போரின்போது தனது குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த சிங்களர்களுடன் மீண்டும் இணைந்ததை இந்தப் படம் சித்தரிக்கிறது.

மேலும் இந்தப் பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வீரர் வாசுதேவன் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறுகிறார். இப்போது பிரிட்டனில் வசித்து வரும் அவர் கூறும்போது, “நாங்கள் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டோம். போராட்டம் என்ற பெயரில் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழர் உரிமைக்காக போராடிய போட்டி அமைப்பான டெலோவைச் சேர்ந்த 900 வீரர்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்” என்கிறார்.

இதுபோல, மனோரஞ்சன் கூறும்போது, “மாணவர் போராளிகளான செல்வி மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் எனது உயிரைக் காப்பாற்றினர். எதிர் கருத்தை கூறியதற்காக அந்த இருவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொன்றுவிட்டனர்” என்கிறார்.

சுயபரிசோதனை வேண்டும்

போர் ஓய்ந்துள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் காக, கடந்த கால வரலாற்றையும் அதன் விளைவாக இப்போது ஏற் பட்டுள்ள விளைவுகளையும் சுயபரி சோதனை செய்ய வேண்டியது மிக வும் அவசியம் என்கிறார் ரத்னம்.

இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “போர் ஓய்ந்துள்ள நிலையில் சாதிப் பிரச்சினை இப்போது இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு நேர் மாறான நிலை உள் ளது. விடுதலைப் புலிகள் அமைப்பி னர் சாதியை ஒழிக்கவே இல்லை. அதை அப்படியே அமுக்கி வைத் திருந்தார்கள். சாதி ஒழிந்திருந்தால், போருக்குப் பிறகு சாதி பாகுபாடு ஏன் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதை ஆராய வேண்டும்” என்றார்.

படத்தின் 2-வது பாதியில், இறுதிக்கட்ட போரின்போது ராணு வத்தின் ஒடுக்குமுறை பற்றி அவ் வளவாக சித்தரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “இலங்கை ராணுவத் தின் அட்டூழியங்களை நான் மறைப் பதாகக் கருத வேண்டாம். தமிழர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரும் நேர்மையாக சுய பரிசோதனை செய்ய தயாராக இருக்கிறோமா என இந்தப் படத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படம் வெளியிட யாரா வது முன்வருவார்களா என்பது சந்தேகமாக இருந்தாலும், என்னை துரோகி என பல தமிழர்கள் முத்திரை குத்தலாம். இலங்கை மட்டுமல்லாமல், இந்தியாவில் குறிப் பாக ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் சமுதாயத்தினர் இலங்கைத் தமிழர் இயக்கி உள்ள இந்த ஆவணப் படத்தை துணிவிருந் தால் பார்க்கட்டும்” என்றார்.

http://tamil.thehindu.com/world/இலங்கை-உள்நாட்டுப்-போரின்போது-தமிழ்-இனத்துக்குள்-மூண்ட-மோதல்கள்-உலகுக்கு-காட்டுகிறது-இலங்கை-தமிழரின்-ஆவணப்-படம்/article9728213.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.