Jump to content

உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா.

உலகம் முழுவதும், வரலாறு எங்கணும் உள்ள ஒரே படிப்பினை (அரசியல்) யுத்தத்தில் தோல்வி என்பது, தனது பலம் மீதான பெரும் நம்பிக்கையினால் அல்ல, எதிரியின் பலவீனம் தொடர்பான அதீத நம்பிக்கையினால் உண்டாவது.

மகிந்தர் தனது அரசியல் எதிரி ரணில் பலவீனம் மீதான அதீத நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் முன்னதாக தேர்தலை வைக்க பிரகடனத்தில் கை எழுத்தினை வைத்தார். 

பலவீனமான எதிரி, ரணில் புத்திசாலித்தனமான வேலையால், மைத்திரியுடன் சேர்ந்து மகிந்தரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதே போன்ற ஒரு பெரும் கூத்து இந்த வாரம் பிரித்தானியாவில் நடந்து முடிந்திருக்கிறது.

இன்னும் மூன்று வருடங்கள் அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் அரசமைக்கும் உரிமை இருந்தும், இன்னும் பலத்தினை அதிகரிக்கலாம் என்று நினைத்தார் தெரேசா மே அம்மையார்.

Image result for theresa may wikipedia

இந்த நோக்கத்துக்கு காரணம் அவரது அரசியல் எதிரி ஜெரமி கோர்பின் பலவீனம் தொடர்பான அதீத நம்பிக்கை.

Image result for jeremy corbyn wiki

தொழில் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் ஒரு கொம்யூனிச சிந்தனை உள்ளவர். இவர் உண்மையிலே ஒரு பலவீனமான தலைவராக அரசியல் உலகில் கருதப்பட்டார்.

இங்கிலாந்தில் உள்ள 164 அதி சிறந்த பாடசாலைகளுக்கு (கிரம்மர் பாடசாலைகள்) கடும் போட்டி உள்ள பரீட்ச்சை மூலமாகவே மாணவர்கள் தெரிவாவர். இந்த வகையான பாடசாலை ஒன்றில் பயின்ற ஜெரமி, பல்கலைக் கழகம் சென்றவரில்லை. ஒரு முறையான வேலை செய்யவில்லை. ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்துள்ளார்.  பல ஆண்டுகளுக்கு முன்னர் இவரது விரிவுரையாளர் மனைவி, மிக்க கடுமையாக முயன்று மகனை வடக்கு லண்டன் ராணி எலிசபெத் கிராமர் பாடசாலை பரீட்ச்சையில் சித்தி பெற்று அனுமதி பெற வைக்கிறார்.

பொதுவுடைமை கருத்தியல் கொண்ட ஜெரமியோ, அங்கே மகனை அனுப்பாமல், பக்கத்தில் இருக்கும் சாதாரண பாடசாலைக்கு அனுப்பி மாறு சொல்லிவிட்டார். விளைவு, உமது அரசியலுக்காக எமது மகனின் கல்வியினை விலையாக்க முடியாது என மனைவி விவாகரத்து செய்து விட்டார்.

அவரை சுற்றி உள்ள சக அரசியல் வாதிகள், தருணம் பார்த்து, இவரை தலைமைப் பதவியில் இருந்து கவிழ்க்க முயன்றாலும், தலைமைத்துவ தேர்வில் தொழில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களான தொழிலாளர் சங்கங்கள், ஆதரவின் காரணமாக இவரை அசைக்க முடியவில்லை.

ஆனால், இவரை போட்டுத்தாக்குவதே டேவிட் கமரோன் முதல், தெரசா மே வரை வாடிக்கையாக இருந்தது. பதிலுக்கு அவரோ தனிமனித தாக்குதலை தவிர்த்து வந்தார். இதனை பலவீனமாக கருதி வந்தனர் எதிர் தரப்பினர், மட்டுமல்ல அவரது சொந்த கடசியினர் கூட.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பான குடியொப்ப முடிவில் டேவிட் கமரோன் வீடு செல்ல, பதவிக்கு வந்தவர் தெரேசா மே அம்மையார்.

இந்த ஜெரமி கோர்பின் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டார். அவரது கடசியினரே அவரை அனுப்பி விடுவார்கள் ஆகையால் ஆள் இருக்கும் போதே, தேர்தலை வைத்தால், நம்ம பலத்தினை கூட்டி, 'ஸ்ட்ரோங்' ஆக இன்னும் 5 வருசம் அப்படியே ஒக்காந்திரலாம் என்று கணக்கு போட்டார் அம்மணி.  

நம்ம ஜெரமி கோர்பின் மிக கவனமாக செய்த ஒரே வேலை, தேர்தல் விஞ்ஞாபனத்தில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் கல்விக் கடன், அரச மான்யமாகும் என்று அறிவித்தார். 

அது மட்டுமல்ல. தனியார்மயமாகும் வைத்திய சேவை துறையினை தடுத்து அரச சேவையாக வைத்திருப்பேன் என்றார்.

பிரித்தானியாவின் மிகப் பெரிய தொழில் தருணரான, வைத்திய சேவை துறையும், பல்கலைக்கழக மாணவர்களும், அவர்களது வேண்டுதலின் அவர் தம் தாய், தந்தை, தாத்தா பாட்டி என்று எல்லோருமாக கிளப்ப ஜெரமி கோர்பின் கொடி பறக்க, முன்னரிலும் பார்க்க 26 சீட்டுக்கள் அதிகமாக, அம்மணியிடம் இருந்து ஆட்டையை போட்டு விட்டார்.

அம்மணி இப்போது 'உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா' நிலை. 

பெருபான்மையில் இருந்த அரசு இன்று தேவையான பெருபான்மை பெற, 10 சீட்டுகளை வைத்திருக்கும் வட அயர்லாந்தின் சிறிய கட்சி ஒன்றினை நாட வேண்டிய கேவலமான நிலை.

தொழில் கட்சி அரசியல் வாதிகள் கடாசி விட்ட கத்திகளை தூக்கி விட்டனர் கான்செர்வ்டிவ் கடசியினர். வெல்வேன் என்ற இறுமார்ப்பில், TV விவாதங்களுக்கு போகாமல், தேர்தல் விஞ்ஞாபனத்தில் அக்கறை இல்லாமல், பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லாமல் எடுத்தெறிஞ்சு கதைத்த அம்மணி ரொம்ப நாளுக்கு இருக்கப் போவதில்லை.

மறுபக்கம் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து விட்டார் ஜெரமி கோர்பின். அவருக்கு பின்னால் இருந்து கத்தியை தயார் படுத்தியவர்கள் அனைவரும் தடாலடியாக கத்தியை சுழட்டி கடாசி விட்டு, ஆகா, ஓகோ என்று நிலைப்பாடு எடுப்பதை பார்க்க வேண்டுமே.  

ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா

Image result for scottish first minister wikipedia

தேவையில்லாமல் லொள்ளு பண்ணிய இன்னுமொரு அம்மணிக்கும் மண்டையில் அடி விழுந்து இருக்கிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் தான் குடியொப்பத்தில் ஸ்காட்லாந்து   மக்கள், பிரிந்து செல்வதை மறுத்து இருந்தனர். அதுமட்டுமல்ல, பிரிவினையினை முன் நிறுத்திய ஸ்காட்லாந்து தேசியவாத கடசியினரின், தலைவர் அலெக்ஸ் உட்பட 50 பேரை (மொத்தம் 56 தொகுதியில்) அடுத்த வருடமே நடந்த பொது தேர்தலில் வெஸ்ட்மினிஸ்டர்  தேசிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருந்தனர்.

அதற்கு அடுத்தவருடம் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பான குடியொப்ப முடிவில் மொத்த பிரித்தானியாவின் 6% மக்கள் தொகை கொண்ட ஸ்காட்லாந்து பிரிந்து போவதை 62% மக்கள் ஆதரிக்க வில்லை. ஆனாலும் பிரித்தானியாவின்  மிகுதி 94% மக்கள் விலக தீர்மானித்தனர்.

இதனால், வெகுண்ட நிக்கோலா அம்மையார் மீண்டும் ஸ்காட்லாந்து   மக்கள், பிரிந்து செல்வதை தீர்மானிக்கும் இன்னுமொரு குடியொப்பம் நடாத்தப் பட வேண்டும் என அறிவித்தார்.

இந்த தேர்தலில், அவர்களது உறுப்பினர்கள் 50 ல் இருந்து 26 க்கு குறைந்து விட்டது. அது மட்டுமல்ல, தேசியவாத கடசியினரின் முன்னாள் தலைவர் அலெக்ஸ் கூட வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  இவர் தான் ஸ்காட்லாந்து பிரிந்து செல்லும் முதல் குடியொப்பத்தின் பிதாமகர்.

மக்கள் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொள்ளாமல், மீண்டும் குடியோப்பம் என்று தேவை இல்லாமல் அதிகமாக லொள்ளு பண்ணிய நிக்கோலா அம்மையார் மண்டையில் சம்மட்டி அடி வாஙகி பம்மிக் கொண்டு இருக்கிறார்.

இங்கே முக்கியமான விடயம் என்னெவென்றால், இவரது கட்சி இழந்த சீட்டுகளை பிடித்தது, ஸ்காட்லாந்தில் பெரிதாக மக்களைக் கவராத, இரண்டாவது குடியொப்பத்துக்கான தேர்தலுக்கு இப்போது இல்லை என அனுமதி மறுத்த பிரதமர் தெரசா அம்மையாரின் கட்சி.

மக்கள் தெளிவாக உள்ளனர்.

** யாழுக்காக... எனது பகிர்வு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.