Jump to content

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?!


Recommended Posts

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில்

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! - புருஜோத்தமன் தங்கமயில்

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில்

 

‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை, அவை ஏன் நிறைவேற்றப்பட்டன? என்று வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கே இப்போது ஞாபகமிருக்குமா தெரியாது. அந்தத் தீர்மானங்களின் அதிகபட்ச ஆயுட்காலம், ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதோடு முடிந்துபோயிருக்கின்றன.

இப்போது, முதலைமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் வேறு வகையானது. தவிர்க்க முடியாதது. அது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் பெரும் ஆணைபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து சில காலத்துக்குள்ளேயே, அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலேயே முன்வைக்கப்பட்டன. அது தொடர்பிலான பல மாத கால இழுபறிகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் குறித்த விசாரணைக்குழுவுக்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டனர். விசாரணைக்குழு கடந்த நவம்பர் மாதம் விசாரணைகளை ஆரம்பித்து, கடந்த மே மாதம் 19ஆம் திகதி, 82 பக்கங்களைக் கொண்ட தன்னுடைய விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்திருக்கின்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளடங்கலாக ஐந்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த விசாரணைக்குழு, சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கின்றது. முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், அமைச்சர் குழுவின் முதல்வர் மற்றும் கூட்டுப்பொறுப்பு என்கிற அடிப்படையில், அமைச்சர்கள் தம்பிராசா குருகுலராஜா மற்றும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் இழைத்த குற்றங்கள் அல்லது அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு, குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டிய கடப்பாட்டினையும் அவர் மீது காலம் வழங்கியிருக்கின்றது. இது, மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதும் மறக்கப்படும் தீர்மானங்கள் போன்று இலகுவானவை அல்ல. சற்றுக் கடினமான பணி. நிதானமாக ஆனால், தீர்க்கமாக எடுக்க வேண்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தம்முடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால், சொல்லிக் கொள்ளக் கூடியதான பெரிய நிர்வாகப் பொறுப்புக்களை அல்லது ஆட்சி நடைமுறைகளை தமிழ்த் தேசிய அரசியல் கடந்த எழுபது ஆண்டுகளில் கொண்டிருக்கவில்லை. இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபை தன்னுடைய நிர்வாக காலத்தினை சிறிய காலத்துக்குள்ளேயே முடித்துக் கொண்டது. ஆனால், ஒப்பீட்டளவில் வடக்கு மாகாண சபையே தமிழ்த் தேசிய அரசியலின் போக்கில் அதிக காலம் வகிக்கப்படும் நிர்வாகப் பொறுப்பு (உள்ளூராட்சி முறைமையின் கடைநிலை அமைப்புக்களான பிரதேச சபை, நகர சபைகள் தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை). ஏற்கனவே, மிகமிக அதிகார வலு குறைந்த நிர்வாகக் கட்டமைப்பான மாகாண சபை முறைமைக்குள்ளேயே நிர்வாகக் குறைபாடு, மோசடிக் குற்றச்சாட்டுக்கள் என்று பலத்த விமர்சனத்தை விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சரவை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்களை விட, ஆளுங்கட்சி உறுப்பினர்களும், ஊடகங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அதிகம்.

விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலான விமர்சனங்கள், அவரின் நிர்வாகத்தின் மீது விழுவது தேர்தல் அரசியலின் போக்கில் வழமையானது. அது எங்கும் நிகழ்வதுதான். ஆனால், அதனை அவர் புறந்தள்ளுவதற்கான ஏதுகைகளினை, அவர் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையே வழங்கவில்லை. முதலமைச்சரை சற்றுப் பதட்டத்தோடு வைத்துக் கொள்வது தொடர்பில் அவரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்கள் அக்கறையோடு இருந்து வருகின்றார்கள். அது அவருக்கும் தெரியும். ஆனாலும், அவரின் அதிகூடிய உணர்ச்சிவசப்படுகின்ற நிலை, தொடர் சிக்கலுக்குள் அவரை மாட்டி விட்டிருக்கின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பெரியளவில் மேலெழுந்து மக்கள் எரிச்சல் நிலையை அடைந்த தருணத்தில் கூட, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் நற்சான்றிதழ் வழங்குவதில் குறியாக இருந்தார். குறிப்பாக, பொன்னுத்துரை ஐங்கரநேசன், தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் தொடர்பில் பிணையெடுப்பதில் அதிக நேரம் செலவிட்டு உழைத்திருக்கின்றார். விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அழைத்த இடங்களுக்கெல்லாம் முதலமைச்சர் சென்றார், அவர் சொல்வதெல்லாம் வேதவாக்குப் போன்றும் நடந்து வந்தார். இப்போது, ஐங்கரநேசன் மேற்கொண்டதாகக் கூறப்படும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகள் முதலமைச்சரை முகமாக வைத்தே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்கிற தொனி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சுன்னாகம் பகுதியிலுள்ள தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிலிருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுகள், அந்தப் பகுதி நிலத்தடி நீரில் கலந்திருக்கின்றது என்று தெரிவித்து எதிர்ப்புப் போராட்டங்களை மக்கள் 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். அந்த விடயம் தொடர்பில் நிபுணர் குழுவினை நியமித்து, நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவுகள் கலக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்க வைத்தமை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது அதிருப்திகள் எழுந்திருந்தன. அண்மையில், மல்லாகம் நீதிமன்றத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சமர்ப்பித்த அறிக்கையில், சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரியில் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. மக்களின் குடிநீர்ப் பிரச்சினையில் பொறுப்பற்று செயற்பட்டு யாரோ சிலரின் தேவைகளை நிறைவேற்ற முனைந்தமை தொடர்பில் விக்னேஸ்வரனும், பொன்னுத்துரை ஐங்கரநேசனும் குற்றச்சாட்டுக்களை இப்போதும் சந்தித்து நிற்கின்றனர்.

பொன்னுத்துரை ஐங்கரநேசன் தன்னை சூழலியலாளராக தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருபவர். ஆனால், அது தொடர்பிலான பல செயற்திட்டங்களில் உண்மையாக அவர் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றாரா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான ஆய்வுகள் ஏதுவும் செய்யப்படாத காலப்பகுதியிலேயே அந்தப் பகுதி மக்களை கூட்டி குறித்த திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரினார். அங்கு மக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் கூட்டத்திலிருந்து இடைநடுவிலேயே வெளியேறினார். அதுபோல, குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த வடமராட்சிக் கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவரை, அரசியல் காரணங்கள் காட்டி பதவி நீக்கினார். (அமைச்சரால் பதவி நீக்கப்பட்டவரே, தற்போது மீண்டும் அந்தப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்பது வேறு விடயம்.)

பொன்னுத்துரை ஐங்கரநேசன் வடக்கின் இயற்கை வளத்தினைக் காப்பாற்றுவதற்காக மாகாண அதிகார வலுவிற்கு அப்பால் சென்று செயலாற்றியிருக்கின்றார். அது, அரசியல் தலைமையென்கிற அடிப்படையில் சரியானது என்கிற நியாயப்படுத்தல்கள் வைக்கப்படுகின்றன. அப்படியாயின், சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்திலும், மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலும் அவர் நடந்து கொண்டமையை எவ்வாறு எடுத்துக் கொள்வது? அதுபோல, அதிபர்கள் நியமனப் பிரச்சினை, ஆசிரியர்கள் இடமாற்றப் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தொடர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வந்திருக்கின்றார். அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

மாகாண அமைப்பு முறை என்பது அதிகார வலு மிகவும் குறைந்தது. அதனை அதிகாரப் பகிர்வின் அங்கமாகவே கொள்ள இயலாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அது, அரசியல் ரீதியான உறுதிப்பாடு சார்ந்தது. ஆனால், அந்த வலுக்குறைந்த அவையினூடு ஆற்றப்படக் கூடிய சில விடயங்களை போருக்குள் முப்பது வருடங்களுக்கும் மேலாக அல்லாடியவர்களாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களில் வழி இலங்கைக்குள் வந்த மாகாண சபை முறைமையால், அதிக பலன்களை இப்போது, தெற்கு பெற்று வருகின்றது. மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த வடமத்திய மாகாணமும், வடமேல் மாகாணமும் மாகாண சபை முறைமையூடு பல வெற்றிகரமான கட்டங்களைத் தொட்டிருக்கின்றன. ஆனால், அதிக தேவைகளோடு இருக்கின்ற வடக்கு மாகாண சபை, கிடைத்துள்ள மிகக்குறைந்த அதிகாரங்களைக் கொண்டே மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றது என்பது வேதனையானது. மன்னிக்கவே முடியாதது. இழைத்த குற்றங்களுக்கு தார்மீகக் பொறுப்பை ஏற்று அமைச்சர்கள் இருவரும் பதவி விலகுவார்களா அல்லது பதவி நீக்கப்படுவர்களா என்பதை காலம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்!

http://thuliyam.com/?p=70317

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி.... ஒரு நிலைமை,  வந்தால்....
அடுத்த முதல்வர்...  புருஜோத்தமன் தங்கமயில் தான்.....
தங்க மயில் அண்ணே... நீங்க, ரெடியாகுங்கண்ணே....   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளடங்கலாக ஐந்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த விசாரணைக்குழு, சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கின்றது

இதுதான் ‍"ஹைலட்"....வடமாகாணசபையை இல்லாமல் பண்ணுவதே பலரின் குறிக்கோள்.....மத்திய அரசின் சில செயல்களை செய்யவிடாமல் தடுப்பதனாலும் ...மற்றும் இராணுவ வெளியேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை விடுவதானாலும் ..

Link to comment
Share on other sites

 

VA

சிக்கலுக்குள் சிக்கியது அமைச்சர்களா? முதலமைச்சரா?

(ஆசிரியப்பார்வை)

தமிழ்மக்கள் மத்தியில் அண்மைய நாட்களாக பேசுபொருளாக மாறியிருப்பது வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் தொடர்பிலான விசாரணைக்குழு பரிந்துரையும் சில ஊடகங்கள் அவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவமும்.

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லாத சமூகத்தில் வாழ்ந்த மக்கள் இந்த விடயத்திற்கும் தண்டனையை எதிர்பார்ப்பதை இம்மியளவும் நிராகரிக்க முடியாது. அது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா என்பதாகவோ அல்லது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் என்பதாகவோ இருக்கலாம் ஏன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாக இருந்தால் கூட குற்றம் இழைத்திருந்தால் இழைக்கப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முடியாது. தப்பித்துக்கொள்ளவும் கூடாது.

ஆனாலும்,

விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இறுதித் தாளுக்கு முன்பாக சொல்லப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்களும் அவற்றுக்கு சேகரிக்கப்பட்ட சாட்சியங்களும் முடிவில் குழுவினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தனியே எழுத்துக்களாக மட்டுமல்லாமல் அதனுள்ளே பல்வேறு பாரதூரமான விடயங்களையும் தாங்கிநிற்கின்றது.

ஊடகங்கள் சில அமைச்சர்கள் தொடர்பில் வெளியிட்ட செய்திகளும் வெளியிடப்பட்ட பாணியும் பார்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அமைச்சர்களும் குறைந்தது பத்து மில்லியன் ரூபாய் என்றாலும் கையாடியிருப்பார்கள் என்று எண்ணவைத்திருந்தன. ஆனால் ஒரு ரூபாய் கூட அவர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்பதை அறிக்கையின் ஒரு வரியிலும் தரிசிக்க முடியவில்லை.

கணக்காய்வாளர்கள் எவரும் சாட்சிக்கு அழைக்கப்பட்டதாகவோ, அவர்கள் குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ததையோ குறிப்பிடவில்லை.

இதில் இன்னொரு விடயத்தினை மிக முக்கியமாக சுட்டிக்காட்ட முடியும், வடக்கு மாகாணசபை தனியான நிர்வாக அலகாக செயற்பட்டாலும் அதற்கென தனித்தனியான அரச அதிகாரிகள் செயற்பட்டாலும் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற கணக்காய்வாளர்கள் அமைச்சர்களின் நிதிப்பங்கீடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவோ, முறைப்பாடு செய்யவோ முடியும் என்ற நிலையில் இந்த விசாரணைக்குழு ஏன் அவ்வாறான ஆதாரங்களை சேர்க்கவோ இணைக்கவோ முற்படவில்லை என்ற கேள்வி பெரிதாகவே தெரிகிறது.

பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டபோதிலும் அவற்றுக்கான சரியான சான்றாதாரங்களை சேகரிக்காமலேயே விசாரணை முடிவுகளை அறிவிக்கும் கைங்கரியத்தை விசாரணைக்குழு மேற்கொண்டிருக்கிறது.

விசாரணைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணை முடிவுகள் தொடர்பிலும் விசாரணைக்குழு வெளியிட்டிருக்கின்ற அனைத்து விடயங்களையும் எமது இணையத்தளத்தில் வாசகர்கள் பார்வையிட்டுக்கொள்ளலாம்.

இந்த இடத்தில் முக்கிய விடயத்திற்கு வரலாம்,

விசாரணைக்குழு அறிக்கையால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் இருவருமா அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரா? என்பது தொடர்பில் ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம்.

தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் பிரதான பாத்திரம் வகிக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. வலுவான ஆரோக்கியமான மாற்று சக்தி எதுவுமே இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் தேர்வுசெய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் குரலாகச் செயற்படுவதாகச் சொல்லி செயற்பட்டும்வருகிறது.

வலுவான மாற்று சக்தி இன்மையால் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தில் இருக்கின்ற ஒரு சிலரே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற வகையிலும் செயற்பட்டும் வருகின்றனர். உதாணமாக இறுதிப்போரில் நிகழ்ந்த கொரூரங்களில் இருந்து அன்றைய ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் கைங்கரியத்தில் இன்றுவரையில் ஈடுபடும் பணியில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் வலுதீவிரமாகச் செயற்பட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசில் அங்கம் பெறுகின்ற அரசாங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் தோள்கொடுத்துக் காக்கின்ற பணியில் கூட்டமைப்பு தீவிரம் காட்டி செயற்பட்டே வருகிறது.

இந்த இடத்தில் தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியை கனகச்சிதமாக பயன்படுத்த முற்பட்டது மட்டுமல்லாமல் அதில் வெற்றியும் பெற்றுவருகின்றார்.

நாற்பது ஆண்டுகளால் இனவிடுதலைப்போராட்டத்தில் இரண்டறக் கலந்த எமது தமிழ் மக்கள் இணக்க அரசியல் என்கிற பாதையை என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை சம்பந்தன் மிகத் தெளிவாக புரிந்துகொண்டவர் தான்.. எனவே அரசாங்கத்துடன் இணக்க அரசியலில் கை கோர்த்துள்ள சம்பந்தன் எதிர்பரசியல் மனோ நிலையில் இருக்கின்ற தமிழ் மக்களின் வாக்குவங்கியை கூட்டமைப்பு கைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதை விரும்பினார்.

சம்பந்தனின் சூட்சுமம் நிறைந்த இந்தத் திட்டத்திற்கு துருப்பாகப் பயன்படுத்தப்படுகிறார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். தொடக்கத்தில் இருந்த போக்கிற்கும் பின்னாளில் ஏற்பட்ட மாறுதலுக்கும் ஒரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தன் எதிர்ப்புக் காட்டவோ, முதல்வரைக் கட்டுப்படுத்தவோ முற்படவில்லை என்பது பகிரங்கமான விடயம். இந்த இடத்தில் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கூட்டமைப்பினர் கடுமையான எதிர் நிலைப்பாட்டினை எடுத்த நிலையிலும் சம்பந்தன் மட்டும் முதல்வருக்கு பச்சைக் கொடி காட்டியிருந்ததன் உள்நோக்கத்தினை இப்போது வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும்.

பின்நோக்கிச் சென்று பார்த்தால்,

முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் சில இடங்களில் ஈழவிடுதலைப்போராட்டப் பாதை தொடர்பில் முன்வைத்த எதிர் நிலைக் கருத்துக்கள் சமூகத்தில் பலத்த எதிர்ப்புக்களைச் சம்பாதிக்கத் தொடங்கின.

இவ்வாறான நிலைப்பாடு தொடர்ந்த நிலையில், தன்னுடைய போக்கில் சடுதியான மாற்றத்தை வெளிக்காட்டியதுடன், அதனை பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் தவறவில்லை. அப்போது தொடக்கம் அவர் தமிழ் மக்களின் குரலாகச் செயற்படத் தொடங்கினார். இன்றுவரையில் அவருடைய பயணம் இடையறாது தொடர்கிறது.

சம்பந்தனின் எண்ணப்பாட்டின் அடிப்படையில் அறிந்தோ அறியாமலோ விக்னேஸ்வரன் முன்னெடுத்துச் செல்லும் எதிர்ப்பரசியல் பாதை எல்லை மீறிச் செல்லக்கூடாது என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாக நடந்துகொள்கிறார் என்பதை புரிந்துகொள்வதற்கு பல சம்பவங்களை குறிப்பிடமுடியும்.

அதற்கான பணியினை சம்பந்தனின் பிரத்தியேக செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் காத்திரமாக முன்னெடுத்துவருகிறார்.

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு நெருக்கடி தரும் விடயங்களை ஏற்படுத்துவது, மிக நெருக்கடி ஏற்படுவதாக தோற்றம் காணப்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தன் தலையிட்டு விக்னேஸ்வரனுக்கு சாதகமாக நடந்துகொள்வது போன்று முடிவுகளை அறிவிப்பார். இதன் மூலம் விக்னேஸ்வரன் எப்போதும் சம்பந்தனின் அன்புக்குரியவராக தான் இருப்பதாகவே எண்ணிக்கொள்ளலாம்.

ஆனாலும் முருங்கை மரமும் வேதாளமும் என்பதாக சுமந்திரனின் ஆணைக்கு தலைசாய்த்து செயற்படும் மாகாணசபை உறுப்பினர்கள் குழு மட்டும் சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் முதலமைச்சரை நெருக்கடிக்கு ஆளாக்கும் முயற்சிகளை கைவிட்டதே கிடையாது. முதலமைச்சரை நெருக்கடிக்குள் தள்ளும் தொடர் நடவடிக்கைகளை குறித்த குழு மேற்கொண்டு வந்தது.

இதன் ஒரு கட்டம் தான் முதலமைச்சருக்கு விசுவாசமாகத் தெரியும் அமைச்சர்களை ஓரங்கட்டுவது அல்லது அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது.

இதே குழுவினால் அமைச்சர்கள் மீது தொடர்ந்தும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து அதற்கு முடிவுகட்ட முற்பட்டு இன்று பாரிய இக்கட்டுக்குள் சிக்கியிருக்கிறார் வடக்கு முதல்வர்.

மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்க குழு ஒன்றை நியமித்தார் முதல்வர். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கானதாய் ஆகிவிட்டது அவருடைய முடிவு.

விசாரணைக்குழு அறிக்கை ஊடகங்களில் கசிந்து, பின்னர் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் எதிர்பாராத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதுதான் இந்தப் பத்தியின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படவேண்டியது.

வழமையாக முதல்வருக்கு எதிராகவும் அவருக்கு ஆதரவானவர்களுக்கு எதிராகவும் பொங்கி எழுகின்ற சுமந்திரப் புன்னகைகள் இன்று தலைகீழாக தங்கள் நிலைப்பாட்டை எடுத்திருந்தன.

மாகாணசபை சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியதில்லை என்ற சாரப்பட கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே மாகாணசபை அமர்வுக்கு முன்பாக மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் தலைமையில் கூடிய கூட்டத்தின் போது, முதலரைமச்சரே பார்த்துக்கொள்ளட்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள்.

எனவே மிகத் தெளிவான முடிவு ஒன்றை அவர்கள் இந்த இடத்தில் எடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.

அவர்களுடைய பார்வையில்,

இந்த விவகாரம் முதலமைச்சருக்கு மிகுந்த நெருக்கடியைத் தரவல்லது.

தாமே தெரிவு செய்த குழுவினர் வழங்கிய தீர்ப்பினை நிராகரிப்பதா?

அவர்கள் முன்னாள் நீதிபதிகள் உள்ளடங்கியவர்கள் என்பதால் அவர்கள் பரிந்துரையை நிராகரிப்பது முன்னாள் நீதியரசர் என்ற அடிப்படையில் தவறாக அமையாதா?

தீர்ப்பில் திருப்தியில்லை எனத் தெரிவித்து நிராகரித்தால் தனக்கு நெருக்கமானவர்கள் என தோற்றம் காட்டுகின்ற அமைச்சர்களை காப்பாற்றுவதாக மற்றையவர்கள் கருதமாட்டார்களா?

பரிந்துரைக்கு அமைய நடவடிக்கை எடுத்தால், ஏனைய அனைவரும் எதிர் நிலை எடுக்கும் போது அத்தனை பேரையும் எதிர்த்து தன்னுடன் நிற்பவர்களை வெளியில் விட்டால் தனிமரம் ஆகிவிடமாட்டோமா?

இன்னும் ஏராளம் கேள்விகளுக்குள் சிக்கியிருக்கிறார் முதலமைச்சர் என்பதே முக்கியமாகிறது. எனவே மிக மிக நெருக்கடிக்களுக்குள் சிக்கியிருக்கின்ற முதலமைச்சரின் கையறு நிலையினை பயன்படுத்தி அதிலும் ஆதாயம் தேடமுற்பட்டே சுமந்திரனின் வாரிசுகள் தங்கள் போக்கில் மாறுதலை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பதே வெளிப்படையானது.

வழமையாக சிறிய சிறிய விடயங்களுக்கே பொங்கி எழும் அவர்கள் தற்போது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காட்டுவதன் உள்நோக்கம் தான் என்ன?

இதனிடையே அண்மைய காலமாக தமிழ் மக்கள் மனங்களில் உயரிய இடத்தினை பெற்றிருக்கின்ற முதலமைச்சர் தெரிவு செய்த விசாரணைக்குழுவினர் எவ்வாறு தவறான முடிவுகளை வழங்குவர் என்ற கேள்வி தவிர்க்கமுடியாதுதான்.. இந்த இடத்தில் தான் முதலமைச்சர் சொன்ன பதிலையே அந்தக் கேள்விக்கான பதிலாக வழங்க முடியும்.

கொழும்பிலிருந்து வந்த எனக்கு இங்கு அனைத்துமே புதியவை தான்.. மக்களுடன் நாளுக்கு நாள் பழகி அறிந்துகொண்டவற்றின் அடிப்படையிலேயே நான் என்னில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கினேன் என்ற சாரப்பட முதலமைச்சர் ஒரு நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.

இந்த விடயத்தினையே விசாரணைக்குழுவினர் தெரிவிக்கான பதிலாக ஏன் வழங்கக்கூடாது.

விசாரணைக்குழுவினரை முதமைச்சருக்கு பரிந்துரைத்தவர்கள் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்கலாம். அல்லது அவர்கள் தொடர்பிலான பின்னணி தெரிந்திருக்காமல் அவர்கள் தொடர்பில் சரியான விபரங்கள் தெரியாமலேயே முதலமைச்சர் நியமித்திருக்கலாம்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கருதுகோள்களாகவும் ஆதாரங்கள் அற்றவையாகவும் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் இருந்து அவர்களால் இலகுவில் வெளியில் வந்துவிடமுடியும் என்று வைத்துக்கொண்டாலும் இந்தச் சிக்கல்களில் சிக்கிக்கொண்டிருப்பவர் முதலமைச்சர் தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு இடமில்லை.

கடந்த கூட்டத் தொடரின் போது, அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றிய முதல்வர் கருத்துத் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம், ஆனால் இறுதி முடிவை தானே எடுப்பேன் எனத் தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.

ஆக ஒரு தெளிவான உறுதியான முடிவினை அவர் முன்வைக்கத்தான் போகிறார்.. எந்த முடிவும் அரசியல் சூழ்ச்சிகளைக் கடந்ததாய், நீதியின் பக்கம் நிற்பதாய் அமையவேண்டும் என்பதே தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும்.

-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

http://tamilleader.org/?p=2147
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Athavan CH said:

மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலும் அவர் நடந்து கொண்டமையை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

எங்கன்ட "யாழ்கள மருதங்கேணியரை" ஆய்வு கட்டுரை சமர்பிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்..... :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.