Jump to content

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்


Recommended Posts

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

 

ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அம்சமாகதிருமணம் உள்ளது என்று கண்டறிந்த ஆய்வாளர்கள், உடலில் அதிக அளவு கொழுப்பு போன்ற முக்கிய இதய நோய் ஆபத்து காரணிகளால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், திருமணத்தால் அவரின் ஆயுள் அதிகரிப்பு சாத்தியப்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.

'நம் உடல் நலனை பேணுவதற்கு அன்பான துணை வேண்டும்'படத்தின் காப்புரிமைKUZMICHSTUDIO/GETTY

இதய நலன் தொடர்பான மாநாடொன்றில், பிரிட்டனை சேர்ந்த ஏறக்குறைய 1 மில்லியன் வயது வந்தோரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நம் உடல் நலனை நாம் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு ஒரு அன்பான துணை தூண்டுகோலாக இருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அல்லது நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இந்த ஆய்வில் திருமணமானவர்களின் உடல்நலன் திருமணமாகாமல் தனியாக இருப்பவர்களை விட மேம்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவர் பால் கார்ட்டர் மற்றும் அஷ்டன் மருத்துவ கல்லூரியை சேர்ந்த அவரின் சகபணியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மாரடைப்பிலிருந்து தப்பித்து உயிர் வாழ்வதற்கும், திருமணத்திற்கும் தொடர்பு இருப்பது இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் இதயநாள நலன் அமைப்பின் மாநாட்டில் ஆய்வாளர்களின் அண்மைய ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.

'நம் உடல் நலனை பேணுவதற்கு அன்பான துணை வேண்டும்'

கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பெரும் இதய நோய் காரணிகளுக்கு எதிராக உடலநலனை தாங்கும் சக்தியாக திருமணம் உதவுவதாக ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வில் சந்தேகம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதய நோய் உள்ளிட்ட அனைத்து காரணங்களினால் ஏற்படும் மரணம் குறித்து இந்த ஆய்வில் அலசப்பட்டது.

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்படத்தின் காப்புரிமைTHINKSTOCK Image captionஇதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்

அஷ்டன் மருத்துவ கல்லூரியை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட 14 ஆண்டு ஏசிஏஎல்எம் ஆய்வில், உடலில் அதிக கொழுப்பு இருந்த 50, 60 மற்றும் 70 வயதான ஆண் மற்றும் பெண்களில் தனியாக வாழ்பவர்களை விட திருமணமானவர்கள் அதிக காலம் உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிலும் திருமணமானவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.

ஆனால், கூடி வாழ்பவர்கள், விவகாரத்தானவர்கள், திருமண பந்தத்திலிருந்து பிரிந்தவர்கள் அல்லது துணையை இழந்தவர்களுக்கு உடல் நலன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இந்த ஆய்வில் கிடைக்கவில்லை.

அதே போல், திருமணமானவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று தங்கள் ஆய்வில் சோதித்து ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.

அனைவரும் திருமணம் செய்து கொள்ள பரிந்துரைக்கிறதா ஆய்வு?

தங்களின் ஆய்வு கண்டுபிடிப்பு குறித்து மருத்துவர் கார்ட்டர் கூறுகையில், ''இது குறித்த அடிப்படை காரணங்களை மேலும் அறியவேண்டும். இதய நோயுள்ளவர்கள் மட்டுமல்லாமல் இதய நோய் தொடர்பான ஆபத்து காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருமணம் என்ற அம்சம் உடல்நலன் தொடர்பாக பாதுகாப்பாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

''அதற்காக அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை'' என்று மேலும் தெரிவித்த கார்ட்டர், மேலும் குறிப்பிடுகையில், ''திருமணத்தால் உண்டாகும் ஆதாயங்களை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதே போன்று நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூக ஆதரவுதளங்களையும் நமது உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்று மேலும் தெரிவித்தார்.

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'நம் உடல் நலனை பேணுவதற்கு அன்பான துணை வேண்டும்'

பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனை சேர்ந்த மருத்துவர் மைக் நாப்டன் கூறுகையில், ''இதனால் இறுதியாக நமக்கு கிடைக்கும் செய்தி என்னவென்றால், நமது சமூக தொடர்புகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆயுளுக்கும், உடலுக்கும் ஆபத்து விளைவிக்கும் காரணிகள் நமது உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்'' என்று தெரிவித்தார்.

''நீங்கள் திருமணமானவரோ அல்லது திருமணமாகாதவரோ, இதய நோய் உண்டாக்கும் ஏதாவது ஆபத்துக்கள் உங்கள் உடலில் இருந்தால், அதனை சமாளிக்க உங்களிடம் மிகவும் அன்பாக இருப்பவரை நீங்கள் நாடலாம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/science-40192842

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.