Jump to content

யார் இந்த திருமுருகன் காந்தி?


Recommended Posts

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அரசியல் திறனாய்வு... மற்றும் ஈழத்தமிழர் தொடர்பில்..  இருக்கும்.. நன்கு பரந்துபட்ட அறிவு.. வியக்கத்தக்கது. எம் ஈழத்தில் கூட இப்படி சிந்திக்கக் கூடியவர்கள் குறைவு.  ஈழத்தமிழர்களை வைத்து நகரும் சர்வதேச நகர்வுகளை விளங்கவும் விளக்கவும் தெரிந்தவர். அந்த வகையில்.. ஹிந்திய அரச பயங்கரவாதமும் அதன் எடுபிடி தமிழக திராவிட அரசியல் கூலிகளும்.. இவர்களை சிறையில் வைப்பது என்பது வியப்புக்குரியதல்ல.

இவர்களின் விடுதலைக்கு நாம் தமிழர் உட்பட எல்லோரும் தமிழகத்தில் குரல் கொடுக்கனும். 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன்காந்தி விடுதலையாகி வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. 

Link to comment
Share on other sites

மோடியின் இந்துத்துவா பயங்கரவாதம் தமிழ் தேசியத்தையும் மக்கள் போராட்டங்களையும் முற்றாக நிராகரிக்கும் என்பதற்கு தமிழகத்தில் இன்று நிகழும் நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன. மோடியின் இந்த கொள்கைக்கு தலையாட்டும் எடுபிடி தமிழக அரசின் கோழைத்தனமான செயல்களில் ஒன்றுதான் திருமுருகன் காந்தியின் கைது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பெளத்த பயங்கரவாதமும் அனுமதிக்குது இல்லை, இந்து பயங்கரவாதமும் அனுமதிக்கின்றது இல்லை.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திருமுருகன் காந்திக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.6.2017 at 11:47 AM, nedukkalapoovan said:

இவரின் அரசியல் திறனாய்வு... மற்றும் ஈழத்தமிழர் தொடர்பில்..  இருக்கும்.. நன்கு பரந்துபட்ட அறிவு.. வியக்கத்தக்கது. எம் ஈழத்தில் கூட இப்படி சிந்திக்கக் கூடியவர்கள் குறைவு.  ஈழத்தமிழர்களை வைத்து நகரும் சர்வதேச நகர்வுகளை விளங்கவும் விளக்கவும் தெரிந்தவர். அந்த வகையில்.. ஹிந்திய அரச பயங்கரவாதமும் அதன் எடுபிடி தமிழக திராவிட அரசியல் கூலிகளும்.. இவர்களை சிறையில் வைப்பது என்பது வியப்புக்குரியதல்ல.

 

உண்மை இதனால்தான். 
மிகவும் ஆதார, அறிவியல்பூர்வமான,  ஆய்வுரீதியான புரிதலும்  விளக்கமுமே திருமுருகன் காந்தி மீதான  இந்துப் பயங்கரவாத அரசினது ஏவற்கைக்கூலிகளின் பாய்ச்சலுக்குக் கரணியமாகும். குண்டர்சட்டம் செல்லாதென்று நீதிமன்றமாவது உணர்ந்தமை நன்று. விடுதலையாகி வந்தமை மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

ஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி!

0-85.jpg

அவன் இளைஞன். படித்து முடித்து நிறைய கனவுகளுடன் இருந்தான். அவனிடம் இருந்த படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனம் தொடங்கினான். அவன் திறமைக்கு நல்ல மரியாதை கிட்டியது. நிறைய வாய்ப்புகள். நல்ல பெயர். பல புகழ் பெற்ற விளம்பரங்கள் எடுத்தான். குடும்பம், குழந்தை என நிம்மதியான வாழ்க்கை! இருந்தும் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது. வாழ்க்கை நிறைவு கொண்டுவிட்டதாக அவனால் நினைக்க முடியவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.

அவன் வளர்ந்த சூழல் எல்லா குழந்தைகளும் வளரும் சாமானியமான சூழல் அல்ல. அப்பா ஒரு தொழிற்சங்கவாதி. பெரியாரிய சிந்தனையாளர். அதனாலேயே அவன் வளர்ந்த சூழல் புத்தகங்கள் நிறைந்ததாக இருந்தது. பல அரசியல் விவாதங்களை வீட்டுப்பாடம் செய்தபடியே கவனித்திருக்கிறான். அரசியல் கூட்டங்கள் சென்றிருக்கிறான். போராட்டங்கள் கவனித்திருக்கிறான். இங்கிருக்கும் அரசியலின் போதாமை என்ன என்பதை தெரிந்தே வளர்ந்திருக்கிறான்.

அதனால்தான் அவனுக்கு உலகப்பூர்வத்தில் நிறைவான வாழ்க்கை கிடைத்தும் ஏதோவொரு குறை உறுத்திக் கொண்டேயிருந்தது. வாழ்க்கையில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கும்போது தான அந்த வரலாற்று சோகம் நேர்கிறது. ஈழப்போர்! தமிழ் நெஞ்சங்கள் அடைந்த பதட்டம் அவனுக்கும் ஏற்பட்டது. கையறு நிலையுடன், ஏதாவது நல்லது நடந்துவிடாதா என மனம் பதைத்து, நம்பி காத்திருந்து, எதுவும் முடியாமல், மொத்தத்தையும் காவு கொடுத்த துரதிர்ஷ்ட இனத்தைச் சார்ந்தவன். அவன் நம்பிய இந்தியா, தமிழ்நாடு, கட்சிகள், தேர்தல், அரசியல் எல்லாம் ஏமாற்றி போனது. அவனுக்கு இந்த மாநிலத்தின் எதிர்காலம் மாபெரும் சூன்யமாக தெரிகிறது. தமிழ் மக்கள் வாழ்க்கையும் ஆதாரங்களும் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுவதை உணர முடிகிறது. இவை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு ஒருவனால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்?

தமிழ் கட்சிகளின் பாசாங்கு மொத்த ஈழ மக்களையும் கொன்றொழித்த வலி தாங்க மாட்டாமல் அரசியல் இயக்கம் தொடங்குகிறான். முன்போல தொழிலில் அக்கறை காட்டவில்லை. முன்பு ஈட்டிய வருமானமும் ஈட்டவில்லை. மக்கள் நலன், போராட்டங்கள் என சுற்றுகிறான். வாழ்வில் முன்பு உணராத முழுமையை உணருகிறான். அவனின் அரசியல் தெளிவு, அரசுகளை அச்சுறுத்துகிறது. ஒரு நாள், மெழுகுவர்த்தி ஏந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறான்.

ஆம். அவன் தான் திருமுருகன் காந்தி!

தன் இனத்தின் ஒரு பகுதி கண் முன்னாலேயே துள்ளத் துடிக்க அழிக்கப்பட்டதை கண்டு குமைந்த தலைமுறையை சேர்ந்தவன். உலக அரசியலின் பங்கை தமிழ்நாட்டில் துலக்கமாக புரிந்தவன். அது எந்த பாழ்கிணறுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை தெரிந்தவன். அவனுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது. அவன் நினைத்திருந்தால் இயக்கத்தை கட்சியாக மாற்றி பதவி, லாபம் என பார்த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

ஏன் திருமுருகன் காந்தியை கண்டால் அரசுகளுக்கு இத்தனை பயம்?

காவிரி பிரச்சினையை கர்நாடக பிரச்சினையாக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் வந்து உலக வங்கி இந்தியாவுக்கு கொடுத்திருக்கும் கட்டளைகளை பேசினான். பெரியாரை திட்டிக் கொண்டிருக்கும்போது கிளம்பி வந்து அம்பானி, அதானியை திட்டினான். கருப்புப் பண நடவடிக்கை பொய் என மோடியை திட்டிக் கொண்டிருக்கும்போது அமெரிக்காவில் நடக்கும் தேர்தலையும் ரஷ்யாவின் அரசியலையும் பேசினான்.

தமிழனுக்கு தேவை பெரியாரிய முற்போக்கு, பசுமை அரசியல், முதலாளித்துவ எதிர்ப்பு, காவி எதிர்ப்பு, தமிழ்தேசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் என புரிந்து கொண்டான். இந்த நாட்டின் அரசியலை பற்றிய தெளிவான புரிதல் அவனை அங்குதான் நகர்த்தியது. ஏனெனில் அதுதான் உண்மையான அரசியல்.

வடுகன் என்றும், அதிமுகவை விமர்சிப்பதில்லை என்றும் அவனை விமர்சிப்பவர்களை பார்க்கிறேன். அப்படி சொல்லுபவர்கள் எவரும் அவனின் ஒரு பேச்சைக் கூட முழுமையாக கேட்காதவர்களே என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவன் பேசும் அரசியல் இவற்றையெல்லாம் தாண்டியது. முழுமையானது.

அவன் பேச்சில் அதிமுகவை அல்ல, இந்த நாட்டில் இருக்கும் எந்த கட்சியையும் விட்டு வைத்ததில்லை. எல்லா கட்சிகளின் நீசம்தான் நம் அனைவரின் நாசமும் என்பதை புரிந்தவன். அவன் பேசுவது மாற்று அரசியல். பன்னாட்டு மூலதனத்துக்கு எதிரான அரசியல். இயற்கைக்கான அரசியல். சக மனிதனுக்கான அரசியல். சுரண்டலுக்கு எதிரான அரசியல். சுயமரியாதைக்கான அரசியல். அதனால்தான் அரசுகளுக்கு அவனை பிடிக்கவில்லை. சிறையில் அடைக்கிறது.

சிறைக்கு எல்லாம் அஞ்சுபவன் அல்ல அவன். மக்களுக்காகவே ஓடிக்கொண்டிருந்தவன், நல்ல ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வருவான். இன்னும் கோபத்துடன் வருவான். அரசியல் பேசுவான். பேச வேண்டும். ஏனென்றால் அவன் பேசும் அரசியல்தான் நமக்கு தேவையான அரசியல். அவன் நம்மவன்!

http://www.heronewsonline.com/he-is-thirumurugan-gandhi/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விடுதலையாகி வந்தது மகிழ்ச்சி.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன் விடுதலையானதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.