Jump to content

யார் இந்த திருமுருகன் காந்தி?


Recommended Posts

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அரசியல் திறனாய்வு... மற்றும் ஈழத்தமிழர் தொடர்பில்..  இருக்கும்.. நன்கு பரந்துபட்ட அறிவு.. வியக்கத்தக்கது. எம் ஈழத்தில் கூட இப்படி சிந்திக்கக் கூடியவர்கள் குறைவு.  ஈழத்தமிழர்களை வைத்து நகரும் சர்வதேச நகர்வுகளை விளங்கவும் விளக்கவும் தெரிந்தவர். அந்த வகையில்.. ஹிந்திய அரச பயங்கரவாதமும் அதன் எடுபிடி தமிழக திராவிட அரசியல் கூலிகளும்.. இவர்களை சிறையில் வைப்பது என்பது வியப்புக்குரியதல்ல.

இவர்களின் விடுதலைக்கு நாம் தமிழர் உட்பட எல்லோரும் தமிழகத்தில் குரல் கொடுக்கனும். 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன்காந்தி விடுதலையாகி வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. 

Link to comment
Share on other sites

மோடியின் இந்துத்துவா பயங்கரவாதம் தமிழ் தேசியத்தையும் மக்கள் போராட்டங்களையும் முற்றாக நிராகரிக்கும் என்பதற்கு தமிழகத்தில் இன்று நிகழும் நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன. மோடியின் இந்த கொள்கைக்கு தலையாட்டும் எடுபிடி தமிழக அரசின் கோழைத்தனமான செயல்களில் ஒன்றுதான் திருமுருகன் காந்தியின் கைது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பெளத்த பயங்கரவாதமும் அனுமதிக்குது இல்லை, இந்து பயங்கரவாதமும் அனுமதிக்கின்றது இல்லை.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திருமுருகன் காந்திக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.6.2017 at 11:47 AM, nedukkalapoovan said:

இவரின் அரசியல் திறனாய்வு... மற்றும் ஈழத்தமிழர் தொடர்பில்..  இருக்கும்.. நன்கு பரந்துபட்ட அறிவு.. வியக்கத்தக்கது. எம் ஈழத்தில் கூட இப்படி சிந்திக்கக் கூடியவர்கள் குறைவு.  ஈழத்தமிழர்களை வைத்து நகரும் சர்வதேச நகர்வுகளை விளங்கவும் விளக்கவும் தெரிந்தவர். அந்த வகையில்.. ஹிந்திய அரச பயங்கரவாதமும் அதன் எடுபிடி தமிழக திராவிட அரசியல் கூலிகளும்.. இவர்களை சிறையில் வைப்பது என்பது வியப்புக்குரியதல்ல.

 

உண்மை இதனால்தான். 
மிகவும் ஆதார, அறிவியல்பூர்வமான,  ஆய்வுரீதியான புரிதலும்  விளக்கமுமே திருமுருகன் காந்தி மீதான  இந்துப் பயங்கரவாத அரசினது ஏவற்கைக்கூலிகளின் பாய்ச்சலுக்குக் கரணியமாகும். குண்டர்சட்டம் செல்லாதென்று நீதிமன்றமாவது உணர்ந்தமை நன்று. விடுதலையாகி வந்தமை மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

ஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி!

0-85.jpg

அவன் இளைஞன். படித்து முடித்து நிறைய கனவுகளுடன் இருந்தான். அவனிடம் இருந்த படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனம் தொடங்கினான். அவன் திறமைக்கு நல்ல மரியாதை கிட்டியது. நிறைய வாய்ப்புகள். நல்ல பெயர். பல புகழ் பெற்ற விளம்பரங்கள் எடுத்தான். குடும்பம், குழந்தை என நிம்மதியான வாழ்க்கை! இருந்தும் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது. வாழ்க்கை நிறைவு கொண்டுவிட்டதாக அவனால் நினைக்க முடியவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.

அவன் வளர்ந்த சூழல் எல்லா குழந்தைகளும் வளரும் சாமானியமான சூழல் அல்ல. அப்பா ஒரு தொழிற்சங்கவாதி. பெரியாரிய சிந்தனையாளர். அதனாலேயே அவன் வளர்ந்த சூழல் புத்தகங்கள் நிறைந்ததாக இருந்தது. பல அரசியல் விவாதங்களை வீட்டுப்பாடம் செய்தபடியே கவனித்திருக்கிறான். அரசியல் கூட்டங்கள் சென்றிருக்கிறான். போராட்டங்கள் கவனித்திருக்கிறான். இங்கிருக்கும் அரசியலின் போதாமை என்ன என்பதை தெரிந்தே வளர்ந்திருக்கிறான்.

அதனால்தான் அவனுக்கு உலகப்பூர்வத்தில் நிறைவான வாழ்க்கை கிடைத்தும் ஏதோவொரு குறை உறுத்திக் கொண்டேயிருந்தது. வாழ்க்கையில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கும்போது தான அந்த வரலாற்று சோகம் நேர்கிறது. ஈழப்போர்! தமிழ் நெஞ்சங்கள் அடைந்த பதட்டம் அவனுக்கும் ஏற்பட்டது. கையறு நிலையுடன், ஏதாவது நல்லது நடந்துவிடாதா என மனம் பதைத்து, நம்பி காத்திருந்து, எதுவும் முடியாமல், மொத்தத்தையும் காவு கொடுத்த துரதிர்ஷ்ட இனத்தைச் சார்ந்தவன். அவன் நம்பிய இந்தியா, தமிழ்நாடு, கட்சிகள், தேர்தல், அரசியல் எல்லாம் ஏமாற்றி போனது. அவனுக்கு இந்த மாநிலத்தின் எதிர்காலம் மாபெரும் சூன்யமாக தெரிகிறது. தமிழ் மக்கள் வாழ்க்கையும் ஆதாரங்களும் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுவதை உணர முடிகிறது. இவை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு ஒருவனால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்?

தமிழ் கட்சிகளின் பாசாங்கு மொத்த ஈழ மக்களையும் கொன்றொழித்த வலி தாங்க மாட்டாமல் அரசியல் இயக்கம் தொடங்குகிறான். முன்போல தொழிலில் அக்கறை காட்டவில்லை. முன்பு ஈட்டிய வருமானமும் ஈட்டவில்லை. மக்கள் நலன், போராட்டங்கள் என சுற்றுகிறான். வாழ்வில் முன்பு உணராத முழுமையை உணருகிறான். அவனின் அரசியல் தெளிவு, அரசுகளை அச்சுறுத்துகிறது. ஒரு நாள், மெழுகுவர்த்தி ஏந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறான்.

ஆம். அவன் தான் திருமுருகன் காந்தி!

தன் இனத்தின் ஒரு பகுதி கண் முன்னாலேயே துள்ளத் துடிக்க அழிக்கப்பட்டதை கண்டு குமைந்த தலைமுறையை சேர்ந்தவன். உலக அரசியலின் பங்கை தமிழ்நாட்டில் துலக்கமாக புரிந்தவன். அது எந்த பாழ்கிணறுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை தெரிந்தவன். அவனுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது. அவன் நினைத்திருந்தால் இயக்கத்தை கட்சியாக மாற்றி பதவி, லாபம் என பார்த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

ஏன் திருமுருகன் காந்தியை கண்டால் அரசுகளுக்கு இத்தனை பயம்?

காவிரி பிரச்சினையை கர்நாடக பிரச்சினையாக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் வந்து உலக வங்கி இந்தியாவுக்கு கொடுத்திருக்கும் கட்டளைகளை பேசினான். பெரியாரை திட்டிக் கொண்டிருக்கும்போது கிளம்பி வந்து அம்பானி, அதானியை திட்டினான். கருப்புப் பண நடவடிக்கை பொய் என மோடியை திட்டிக் கொண்டிருக்கும்போது அமெரிக்காவில் நடக்கும் தேர்தலையும் ரஷ்யாவின் அரசியலையும் பேசினான்.

தமிழனுக்கு தேவை பெரியாரிய முற்போக்கு, பசுமை அரசியல், முதலாளித்துவ எதிர்ப்பு, காவி எதிர்ப்பு, தமிழ்தேசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் என புரிந்து கொண்டான். இந்த நாட்டின் அரசியலை பற்றிய தெளிவான புரிதல் அவனை அங்குதான் நகர்த்தியது. ஏனெனில் அதுதான் உண்மையான அரசியல்.

வடுகன் என்றும், அதிமுகவை விமர்சிப்பதில்லை என்றும் அவனை விமர்சிப்பவர்களை பார்க்கிறேன். அப்படி சொல்லுபவர்கள் எவரும் அவனின் ஒரு பேச்சைக் கூட முழுமையாக கேட்காதவர்களே என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவன் பேசும் அரசியல் இவற்றையெல்லாம் தாண்டியது. முழுமையானது.

அவன் பேச்சில் அதிமுகவை அல்ல, இந்த நாட்டில் இருக்கும் எந்த கட்சியையும் விட்டு வைத்ததில்லை. எல்லா கட்சிகளின் நீசம்தான் நம் அனைவரின் நாசமும் என்பதை புரிந்தவன். அவன் பேசுவது மாற்று அரசியல். பன்னாட்டு மூலதனத்துக்கு எதிரான அரசியல். இயற்கைக்கான அரசியல். சக மனிதனுக்கான அரசியல். சுரண்டலுக்கு எதிரான அரசியல். சுயமரியாதைக்கான அரசியல். அதனால்தான் அரசுகளுக்கு அவனை பிடிக்கவில்லை. சிறையில் அடைக்கிறது.

சிறைக்கு எல்லாம் அஞ்சுபவன் அல்ல அவன். மக்களுக்காகவே ஓடிக்கொண்டிருந்தவன், நல்ல ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வருவான். இன்னும் கோபத்துடன் வருவான். அரசியல் பேசுவான். பேச வேண்டும். ஏனென்றால் அவன் பேசும் அரசியல்தான் நமக்கு தேவையான அரசியல். அவன் நம்மவன்!

http://www.heronewsonline.com/he-is-thirumurugan-gandhi/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விடுதலையாகி வந்தது மகிழ்ச்சி.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன் விடுதலையானதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.