Jump to content

கூகுளோடு ஊர் சுற்றலாமா! “Google Trips”


Recommended Posts

Google Trips

கூகுள் வழிகாட்டி (Map) சக்கைப் போடு போடுவதால், அதையொட்டி பல சேவைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் “Google Trips” .

தற்போது துவக்க நிலையில் இருப்பதால், இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதில் என்ன பயன்கள் உள்ளது என்று பார்ப்போம்

இதைப் பயன்படுத்த நீங்கள் ஜிமெயில் கணக்குப் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால், நம்முடைய மின்னஞ்சலுக்கு வரும் பயணச் சீட்டு குறித்த விவரங்களைப் படித்துத் தானியங்கியாக இதனுடைய விவரங்களை எடுத்து அதிலிருந்து நமக்குத் தகவல்களைத் தரும்.

உதாரணத்துக்கு IRCTC யில் முன்பதிவு செய்தவுடன் நமக்கு மின்னஞ்சல் வரும், அதை கூகுள் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இதே போல விமானத்தில் முன்பதிவு செய்யும் போது வரும் மின்னஞ்சலை சேர்த்துக்கொள்ளும்.

நம்முடைய முன்பதிவு விவரங்களைச் செயலி தனியாகக் காட்டும். இவையல்லாமல் நாமும் நம்முடைய பயணத் திட்டங்களை இதில் சேர்க்கலாம்.

இந்த ஊரில் என்ன சிறப்பு?

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு, சுற்றுலாத்தலங்கள் இருக்கும் ஆனால், இது நமக்குத் தெரியாது, மற்றவரிடம் கேட்க கூச்சம் இருக்கலாம்.

இந்தச் செயலியை வைத்து இருந்தால் இந்தப் பிரச்சனைகள் இல்லை. இதுவே சுற்றுவட்டார பகுதிகளில் எந்த இடம் பிரபலம், பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த தகவல்கள் என்று அனைத்தையும் நமக்குத் தெரிவிக்கும்.

நமக்குப் பிடித்த இடத்தை இதில் தேர்வு செய்து வழியைச் சொடுக்கினால் கூகுள் வழிகாட்டி செயலி திறந்து நாம் செல்லவேண்டிய இடத்துக்கு வழியை எப்போதும் போலக் காட்டும்.

Google Trips

பிரபலமான உணவகங்கள்

சுற்றுலா இடங்கள் மட்டுமல்லாது பிரபலமான உணவகங்கள் இருக்கும் இடத்தையும் காட்டும்.

முன்னரே கூறியபடி இந்தச் செயலி ஆரம்ப நிலையில் தான் உள்ளது. எனவே, பல இடங்கள் இதில் காட்டப்படவில்லை.

இதைப் பயன்படுத்துபவர்கள் தவறவிடப்பட்ட இடங்களைச் சேர்க்க கூகுளுக்குப் பரிந்துரைக்கலாம்.

http://www.giriblog.com/2017/05/google-trips.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைக்கு.... ஏற்ற,   நல்ல பதிவு  ஆதவன்,  தொடருங்கள். வாசிக்க, ஆவலாக உள்ளேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.