Jump to content

என்று தணியும் இந்த விளம்பர தாகம்!


Recommended Posts

cat-lion-shadow-fb-1180x520.jpg

இன்று காலை கைபேசிக்கு ஒரு பகடி வந்தது, அது ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான ஒரு உரையாடல் !

கணவன் : இந்த பற்பசை எங்க வாங்கின ? எல்லா நிறுவனமும் உப்பு, மிளகு இருக்குனு தான் சொல்வாங்க!, இதுல புளிப்பு, காரம்லாம் இருக்கே?.

மனைவி : மூதேவி! தூக்க கலக்கத்துல புளி குழம்பு பேஸ்ட் எடுத்து பல்லு விளக்கிட்டு இருகிங்க!.

இந்த பகடிய படுச்சுட்டு வெறுமன சிரிச்சிட்டு மட்டும் என்னால நகர்ந்து போக முடியவில்லை, காரணம் இந்த பற்பசை நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது நமது இயற்கை முறையான, வேம்பு, கரி, உப்பு இவற்றை கொண்டு பல் தேய்த்த முறையை ஆரோக்கியமின்மை என்று விளம்பரப் படுத்தியே அவர்களின் பற்பசையை விற்பனை செய்தனர், இன்று அதே நிறுவனங்கள் உப்பு, கரி, வேம்பு உள்ளதாக விளம்பரம் செய்கின்றன!,  இது மக்களை ஏமாற்றும் செயல் தானே ?

விளம்பரங்கள் ஒரு பொருளோட விற்பனையை பல மடங்கு அதிகரிக்குது , அதனால் எல்லா நிறுவனங்களும் விளம்பரம் அதிக அளவு செய்றாங்க அத நாம் தவறுனு சொல்ல முடியாது!. ஆனால் “நுகர்வோரை பயமுறுத்தி” பொருள் வாங்க வைப்பதும், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ள முடியாது!. என்னப்பா, இது புது  பொரலியா இருக்கு என்று தோன்றலாம். ஆனால் நாம் கண்களை திறந்து கொண்டே ஏமாறத்தான் செய்கிறோம் .

விளம்பரங்களால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் “அட்சய திருதி” அன்று நகை வாங்குவதனால் செல்வம் பெருகும் என்ற விளம்பரம்!, எனது அம்மாவிடம் கேட்டல் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நகை வாங்கும் ஐதீகம் எல்லாம் என்று சொல்கிறார், சரி  நமது வேதங்களில் எங்காவது இதைப்பற்றி உள்ளதா என்று எனது தமிழ் ஆசிரியர் தூக்கத்தையும் கெடுத்து பார்த்தாகிவிட்டது!. அப்படி எந்த வேதமும் சொல்லவில்லை, பின் எப்படி அட்சய திருதியை அன்று அவ்வளவு கூட்டம் நகை கடைகளில்?. (அதுவதாது பரவாயில்லை சென்ற ஆண்டு இரண்டு, மூன்று நாட்கள் சிறப்பு விற்பனை, ஒரு நாள் தானே அட்சய திருதியை என்பது!)

“வெறும்  பண விரயம் என்றால் கூட பரவாயில்லை, நம் உடல் நலமும் அல்லவா பாதிக்கிறது”. ஒரு விளம்பரம்; அதில் மேல்தட்டு குடும்பத்தின் அம்மா ஒருவர், தன்னுடைய குழந்தையை வெளியே விளையாட போகாதே 10  விதமான நோய்கள் வரும் என்று சொல்லி பின் இந்த “சோப்பு ” தான் இதற்கு தீர்வு என்றும் சொல்வார். (சுரங்க தொழிலாளிகளுக்காக கண்டு பிடிக்கப்பட்டதுதான் சோப்புனு வரலாறு சொல்லுது)

குழந்தை நல மருத்துவர், குழந்தைகள் கண்டிப்பாய் மண்ணில் விளையாட வேண்டும் சின்ன சின்ன நோய்கள் வரணும் அப்பதான் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகரிக்கும் என்று சொல்கிறார்.

இதை போன்றதே கொசு விரட்டி, கரப்பான் பூச்சி விரட்டி, வீடு துடைக்கும் கிருமி நாசினி முக்கியமாக கழிவறை சுத்திகரிப்பான் (பாவம் இந்த விளம்பரங்களுக்கு என்று முன்னாள் கதாநாயகன் சிக்கி விடுகிறார்) என்று உங்கள் வீடு, உடம்பு என்று அனைத்தும் கிருமிகள் வாழும் நரகம் போன்றதாகவும் அந்த நிறுவனத்தின் பொருள் தேவ தூதன் போலும் காட்டி நம்மை வாங்க வைக்கிறார்கள். என்னப்பா ரொம்ப பில்டப் குடுக்குறியே என்று தோணலாம், ஆனால் ஆய்வின்படி கடந்த சில ஆண்டுகளாக சுத்தமாக இருப்பதற்காக பழைய ரூபாய் நோட்டுக்களை கூட கைகளில் தொட அஞ்சுகிறார்களாம்! (இது ஹைபர் ஆக்டிவிட்டி மக்களே)

விளம்பரங்களின் முக்கியமான இரண்டு உத்தி அது எந்த பொருளாக இருந்தாலும், ஒன்று கவர்ச்சி/காதல் மற்றொன்று குழந்தைகளை கவர்வது!. அது பைக், கார் எதுவாக இருந்தாலும் சரி. அதுவும் 5 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு பொருளை மிட்டாயுடன் கொடுத்து 50 ரூபாய் வசூலிப்பது எல்லாம் வேறு லெவல். பையில் 100 ரூபாய் உடன் தான் குழந்தைகளை கடைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். விளம்பரங்களை பார்க்கும் நடுத்தர குடும்ப குழந்தைகளுக்கு அதன் விலை என்ன புரியவா போகிறது? பெற்றோர்கள்தான் பாவம். அப்ப ஏழை குழந்தைகளுக்கு இந்த உயர் விலை மிட்டாய் எல்லாம்? “காக்கா முட்டை” பட பாணி தான்!

ஒரு விளம்பரம் அதில் ஒரு அப்பா தன் பையனை தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்கிறார், பையன் மறுக்கிறான், காரணம் என்னவென்று பார்த்தால் அவன் பையில் இருக்கும் மிட்டாயை தாத்தா பிடிங்கி விடுவார் என்பது போல் போகிறது அந்த விளம்பரம். இப்படித்தான் நாம் நம் கலாச்சாரத்தை விளம்பரங்கள் மூலம் குழந்தைகளின் மனதில் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்!

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஒரு சத்துப் பொடி, அறிவுக்கு ஒன்று, நோய் எதிர்ப்புக்கு ஒன்று என்று வகை வகையான பொருட்கள் விளம்பரப்படுத்தப்படுகிறன. அவை எந்த அளவு இயற்கையானது என்று ஆராய்ந்து பார்திருக்கிறோமா?, உண்மையில் நினைவுத் திறன், உடல் வளர்ச்சி என்பது நமது உணவு மற்றும் பரம்பரை வாகு (ஜீன்) பொறுத்தது.

இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் கறுப்பு மற்றும் மாநிறம் உள்ளவர்கள்தான் அதிகம் இதை எந்த செயற்கை முகப் பூச்சாலும் மாற்ற முடியாது. அப்படி மாற்றி இருந்தால் மொத்த தமிழகமும் இப்பொழுது வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும்!. காரணம் அனைத்து வீடுகளிலும் இன்று முகப் பூச்சுக்கள் கிலோ கணக்கில் உள்ளன. சரி அவர்கள் சொன்ன காலக்கெடுவில் நமது முகம் வெள்ளையாகவில்லை என்றால் நம்மால் அவர்களை என்ன செய்ய முடியும்?, ஒன்றும் செய்ய இயலாது. எல்லா விளம்பரத்திலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற வாசகம் வரும் இனி அதையும் கவனியுங்கள்!.

இங்கு கவலை அளிப்பது நமது இயற்கை நிறமான கறுப்பை, தாழ்வான நிறமாக நம்மையே நினைக்க வைத்ததுதான். குறிப்பாக பெண்கள், 10இல் 9 விளம்பரத்தில் வெள்ளையாக இருக்கும் பெண்கள்தான் சமூகத்திற்கு குரல் கொடுப்பார்கள். தைரியமாக பேசுவார்கள் கறுப்பாய் இருப்பவர்கள் தைரியம் அற்று முகத்தை மூடியபடிதான் இருப்பார்கள் என்று நம் மனதில் விதைத்து விட்டார்கள். இதனினும் கொடுமை பல விளம்பரங்கள் பெண்களை கவர்ச்சி பொம்மைகளாக மட்டுமே காட்டுகிறது. காண்டம்  விளம்பரத்தை விட “பாடி ஸ்ப்ரே” விளம்பரங்கள்தான் ஆபாசத்தின் உச்சம்! ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பாடி ஸ்ப்ரே அடித்தால் திருமணம் ஆன பெண் கூட அந்த ஆடவர் உடன் செல்வாரம்!. (டேய் இதுக்கு பேரு வேறடா) இன்னொரு விளம்பரத்தில் பார்த்த உடன் அவருடன் உடல் உறவு கொள்ள தோன்றுமாம், இதை நம் குழந்தைகள் பார்ப்பார்கள் என்று ஏன் யாரும் நினைப்பதில்லை?.

ஒரு பொருள் உற்பத்தி செலவில் பாதியை இன்று அதை விளம்பரப்படுத்த செலவளிக்கிறார்கள். அப்படி என்றால் அதை பொருளின் விலையில்தானே சேர்ப்பார்கள் ?. நடிகர் ராஜ்கிரண் அவர்களை ஒரு வேட்டி தயாரிப்பு நிறுவனம் அணுகி, சில கோடி வரை சம்பளம் தருகிறோம் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டார்களாம். நீங்கள் எனக்கு இவ்வளவு பணம் தருகிறீர்கள் என்றால் அதை மக்களிடம்தானே வசூலிப்பீர்கள் என்னைப் பார்த்து பொருள் வாங்கும் ரசிகனை ஏமாற்ற மாட்டேன் என்று நடிக்க மறுத்துவிட்டாராம். சரி இப்ப எதுக்கு இத சொல்றிங்க பாஸ், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சத்யராஜ், மதன் பாப் போன்ற நடிகர்கள் “ஈமு கோழி” வளர்ப்பு விளம்பரத்தில் நடித்து அதை பிரபலப்படுத்தினார்கள் , ஆனால் முடிவு அதில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தெருவில் நின்றார்கள் பலர். நடிகர்கள் மட்டுமே காரணம் என்று சொல்லவில்லை இருப்பினும் நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்கள் விளம்பரத்தை பணம் சம்பாதிக்கும் இடமாக மட்டும் கருதாமல் மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் மேகி இங்கு தடை செய்யப்பட்டது. பின் அனுமதி வழங்கப்பட்டது. இப்பொழுது விளம்பரத்தில் மிகவும் பாதுகாப்பன உணவு என்று விளம்பரம் செய்கிறார்கள்! எதை நம்புவது? இதுவாது பரவாயில்லை “விக்ஸ் பொருட்களுடன் 380 மருத்துவ பொருட்களை இந்தியா தடை செயதுள்ளது” ஆனால் அதற்கு முன்பே விக்ஸ் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள்! பின்  இந்தியா ஏன் அதை அனுமதித்து பின் தடைசெய்தது (அரசியல்வாதிகளுக்கு பங்கு சரியா போய்ருக்கும் போல) இன்றும் அனைத்து மருந்தகம் மற்றும் பெட்டிக்கடைகளில் தாரளமாக விக்ஸ் கிடைக்கிறது. தடைசெய்யப்பட்ட பொருட்களின் தீமைகளை மக்களிடம் விளக்கி சொல்வது அரசின் கடமை. காரணம் இங்கு அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது நீங்கள் தானே!… அதே போன்று குண்டூசி விற்கும் விளம்பரத்தில் கூட  வெள்ளை உடையுடன் மருத்துவர் போல் ஒருவர் வந்து பொருள் வாங்க சொல்கிறார்கள், உண்மையிலயே நீங்களா டாக்டர் தானா ?….

இப்பொழுதெல்லாம் பல்லு விளக்க கையில் பேஸ்ட், பிரஸ் எடுத்தால் யாரோ நான்கு பேர் சுத்தி நின்று உங்க பேஸ்ட்ல அது இருக்கா இது இருக்கானு கேக்குற மாதிரியே தோணுறது எனக்கு மட்டும் தானா?…

https://roar.media/tamil/features/advertisement-practices/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.