Jump to content

நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்?


Recommended Posts

நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்?

 
 
36 மில்லியன் ஆண்ட்ராய்ட் கருவிகளை பதம் பார்த்துள்ள 'ஜூடி' வைரஸ்படத்தின் காப்புரிமைAFP

36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம், அதன் இணைய தளத்தை உருவாக்கியவர்களுக்கு மோசடி வழியில் பணம் சம்பாதித்து தருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட செயலிகள் தென் கொரிய மேம்பாட்டாளர் கினிவினியால் தயாரிக்கப்பட்டவை.

எனிஸ்டூடியோ என்ற பெயரில் இந்நிறுவனம் பளே ஸ்டோரில் வீடியோ விளையாட்டுகளை வெளியிட்டு வருகிறது.

இந்த அனைத்து விளையாட்டுகளிலும் ஜூடி என்ற ஒரு பாத்திரம் இடம்பெறுகிறது. சுமார் 4 மில்லியன் முதல் 18 மில்லியன்கள் முறை வரை விளையாட்டுக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

'கண்டுபிடிக்க முடியாதப்படி ஒளிந்திருப்பது'

பிற செயலி மேம்பாட்டாளர்கள் தயாரித்த பல செயலிகளில் இந்த தீய குறியீடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

''தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒருவர் இன்னொருவரிடமிருந்து இந்தக் குறியீடுகளை பெற்றிருக்கலாம்,'' என்று செக் பாயிண்ட் கூறியுள்ளது.

36 மில்லியன் ஆண்ட்ராய்ட் கருவிகளை பதம் பார்த்துள்ள 'ஜூடி' வைரஸ்படத்தின் காப்புரிமைCHECK POINT

பாதிப்புகளுக்கு உள்ளான செயலிகள் சுமார் 36.5 மில்லியன் முறைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

செயலிகளின் தீங்கிழைக்கும் பதிப்புகள் எவ்வளவு நாட்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தன என்பது தெரியவில்லை என்றும், ஆனால் அனைத்து ஜூடி விளையாட்டுகளும் இந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது என்றும் செக் பாயிண்ட் தெரிவித்துள்ளது.

பிற செயலி மே்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட செயலிகளில் மிகவும் பழமையானது கடந்த ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு அப்டேட் ஆகியுள்ளது. ஆக, பிளே ஸ்டோரில் பல நாட்களாக இந்த தீய குறியீடு யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்ததாக செக் பாயிண்ட் கூறுகிறது.

இந்த தீய குறியீடு எப்போது செயலிகளில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரியாதததால் எவ்வளவு கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற உண்மை எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.

தீய குறியீடு எப்படி வேலை செய்கிறது ?

நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

இந்த செயலிகள் முதலில் பிளே ஸ்டோரில் உள்ள பாதுகாப்பு அமைப்பான கூகுள் பவுண்ஸரை எவ்வித பிரச்சனைகளின்றி தாண்டிச் சென்றுவிட்டன. ஏனென்றால் அப்போது ஜூடி குறியீட்டின் தீய பகுதியை அப்போது அந்த செயலி கொண்டிருக்கவில்லை.

ஆனால், செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், பயன்பாட்டாளருக்கே தெரியாமால் செயலி கைப்பேசி கருவியை ஒரு தொலைதூர சர்வரோடு இணைக்கிறது. தொடர்ந்து, அதற்கு எதிர்வினையாற்றும் சர்வர், ஒரு மறைவான இணையதளத்தை திறக்க வழிவகை செய்யும் தீய மென்பொருளை பதிலுக்கு அனுப்புகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள விளம்பரங்களுக்கு பயன்பாட்டாளரை தன்னிச்சையாக அழைத்துச் சென்று வருவாயை அதிகரிக்கிறது.

''இந்த வகையான விநியோகம் என்பது பொதுவான ஒன்று'', என்று பிபிசியிடம் கூறுகிறார் ஓபன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்மித்.

பாதிப்புகளுக்குள்ளான செயலிகள் பலவிதமான விளம்பரங்களை கருவியின் திரையில் காட்டுகின்றன. அதில் சில விளம்பரங்கள் பயன்பாட்டாளர் கிளிக் செய்யும்வரை மூடுவதென்பது இயலாத காரியம்.

http://www.bbc.com/tamil/science-40105668?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.