Jump to content

காக்கி நிறத்தில் பாவாடை..


Recommended Posts

கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது.

நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக்கப்பட்டிருப்பதாய் நினைத்துக்கொள்கிறார்களோ என்று நினைக்கத்தோன்றியது காட்சி.

அன்றைய நாள்முழவதும் அழகியல் நிறைந்து கிடந்தது. பொதுவாக நாள் எவ்வாறு ஆரம்பிக்கிறதோ அவ்வாறே நகர்கிறது. மாலை திட்டமேதுமில்லாததால் யூரியூபை நோண்டிக்கொண்டிருந்தேன். ஒரு வித்தியாசமான காணொளி கண்ணில் படப் பார்கத் துவங்கினேன்.

84 வயதில் மரணித்த ஒரு பெண்ணின் உடல் அம்மணமாக மேசையில் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிவர பார்வையாளர்களும் ஒளிப்பதிவுக் கருவிகளும் இருந்தன. இரண்டு மருத்துவர்களும் ஒரு சில மாணவர்களும் இருந்தார்கள். நிகழ்வு ஜேர்மனியில் பதிவாகியிருந்தது. மனித உடலமைப்பு, குறிப்பாக குருதியோட்டத் தொகுதியில் நிகழக்கூடிய பிறழ்வுகள் பற்றியது நிகழ்ச்சி. அதற்காக அந்தப் பெண்ணின் உடல் வெட்டித் திறக்கப்பட இருந்தது.  

சில முகவுரைகளைத் தொடர்ந்து, ஜேர்மனிய மருத்துவர் உடலத்தை அறுக்கத் தொடங்கினார். கழுத்திற்குக் கீழே நெஞ்சுப் பகுதியில் ஆரப்பித்து இடது மார்பகத்தைக் கடந்து சென்று அடிவயிற்றைக் குறுக்கறுத்தது வெட்டுப் பாதை. ஒரு பயணப் பொதியின் சிப்பைத் திறந்து பையைத் திறப்பது போல் கத்தி அந்த உடலத்தின் சிப்பைத் திறந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிற கொழுப்பு வெளியே தெரிந்தது. இறந்த உடலமாதலால் குருதிப்பெருக்கில்லை. மூன்று நான்கு தடவை கத்தி தடத்தில் பயணித்தபின்னர் பயணப்பொதி திறப்பது போல் மருத்துவர் அந்த உடலத்தில் உடம்பின் மூடியினை அவளது இடது மார்பகத்தோடு சேர்த்துத் தூக்கித் திறந்து போட்டார். உள்ளுர நுரையீரல் தொட்டுப் பெருங்குடல் முடிவுவரை அவள் உள்ளுறுப்புக்கள் கிடந்தன.

அன்றைய நாள் முளுவதும் நிறைந்து கிடந்த அழகியலை மறுபடி நினைத்துப் பார்த்தேன். காலையில், காக்கி நிறப் பாவாடை, நீல நிறச் சட்டை, சிற்றருவியெனக் கருங்கேசம், லூயி விற்ரான் பை, தாளத்திற்குத் தப்பாதை நடை, அவளுடன் பேசிவிடத் தோன்றிய எனது உந்துதல். மாலையில், இடது மார்பகம் உள்ளடங்கலாகப் பயணப் பை திறப்பது போல் திறந்து போடப்பட்ட உடலம். இப்போதும் முறுவல். நாளைய காட்சிகளிற்காய்ப் பின் தூக்கம்.
 
 

Link to comment
Share on other sites

13 hours ago, Innumoruvan said:

மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக்கப்பட்டிருப்பதாய் நினைத்துக்கொள்கிறார்களோ என்று நினைக்கத்தோன்றியது காட்சி.

நிதர்சனமான உண்மை. கணவன் மனைவி உறவுகூட மின்காந்த அலைகளிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் ஏன் காக்கி நிறத்தில் பாவாடை எனத்தலைப்பு வைத்தாரோ என யோசிக்கிறேன். அழகியின் சந்திப்பை காதல் தடுத்துவிட்டதாகக் கூறினாலும், அவரது மனது  அழகியின் சந்திப்பைத் தவிர்த்ததை இறந்த பெண்ணின் திறக்கப்பட்ட உடலைப் பார்த்த பின்னர் சமரசம் செய்ய முயல்வதாகத் தோன்றுகிறது. அதாவது அழகியின் புறம் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டது போலவே  இறந்தவரின் அகம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.  "வெளியால எல்லாம் வித்தியாசம்  எண்டாலும் உள்ளுக்கு எல்லாம் ஒன்றுதான்" - எழுத்தாளரின் மனவோசை இதுவாகத்  இருந்திருக்கும்.

எனது 19ஆவது வயதில், எனது  நண்பனின் தந்தையாரின் உடலை என்பார்ம் செய்ய அருகிலிருந்து உதவினேன். என்பார்ம்  செய்தவருக்கு வெறி. நான் குடிக்கவில்லை. பலநாட்களுக்கு அந்த சம்பவம் என்னுள் உறைத்துக் கொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதைக்கு சொல்லுவோம்....அந்த அழகி மீண்டும் வந்து முத்தம் கொடுத்து உணர்ச்சியை தூண்டியிருந்தால் அகம் மறந்து புறம் கிளர்த்தெழுந்திருக்கும்....என நான் நினைக்கிறேன்...

20 hours ago, Innumoruvan said:

அவளுடன் பேசிவிடத் தோன்றிய எனது உந்துதல். மாலையில், இடது மார்பகம் உள்ளடங்கலாகப் பயணப் பை திறப்பது போல் திறந்து போடப்பட்ட உடலம். இப்போதும் முறுவல். நாளைய காட்சிகளிற்காய்ப் பின் தூக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனதியான நினைவலைகளை கிளறும் நளினமான கதை ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

ஒரு கதைக்கு சொல்லுவோம்....அந்த அழகி மீண்டும் வந்து முத்தம் கொடுத்து உணர்ச்சியை தூண்டியிருந்தால் அகம் மறந்து புறம் கிளர்த்தெழுந்திருக்கும்....என நான் நினைக்கிறேன்...

 

இதுக்கு நான் லைக்கு போட்டே ஆகவேண்டும் 

புத்தரே உணர்ச்சி என்பது ஒரு போதைதான்  இன்றையோட  இந்த குடியை விட வேண்டும் என்று சொன்னவர்கள் (சிலர் ) விட்டதாக  சரித்திரம் இல்லை  tw_blush:

Link to comment
Share on other sites

அனைவரது கருத்திற்கும் மிக்க நன்றி.

தும்பளையான். உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். காக்கி நிறத்தில் பாவாடை என்று தலைப்பிட்டமைக்கு ஒரு காரணம் முதற்பந்தியில் சொல்லப்பட்ட வெளிப்படையான காரணம். மற்றையது, மனவமைப்பின் மீதான நையாண்டி.

எதேச்சையாக கையில் கிடைத்த ஒரு புத்தகம் ஒரு புதிய முனை விசாரணைகளைக் கிழறிக்கொண்டிருப்பதால், இதுவும் இதற்கு முந்தைய பதிவும் அப்புத்தகத்தின் தாக்கத்தில் தான் இருக்கின்றன.

சில நாட்களிற்கு முன்னர் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன். அவரிற்குக் கைகள் இல்லை. விரல்கள முளங்கையிற்கும் தோளிற்கும் இடைப்பட்ட பகுதியில் முளைத்திருந்தன. அவையும் சூம்பிப்போயிருந்தன. ஆனால் நான் பார்த்தபோது அந்தப் பெண், பிளக்பெரியில் அலுவலக மின்னஞ்சல் அவசரமாக அனுப்பிக் கொண்டிருந்தாள். எனது மனதின் கணிப்பீட்டில் அவளது கைகளை மடக்கினால் அவை பிளக்பெரியினை பிடிக்கும் அளவிற்குக் நீளமுடியாத குள்ளமாகவே தோன்றின. ஆனால் என் கண்முன்னே அந்தக் கணிப்பிற்கு முரணாக அவள் இயங்கிக் கொண்டிருந்தாள். அவளது கையின் தன்மை எனக்குள் மறைந்து போய் ஒரு சக மனிசி தோன்றினாள். இவ்வாறே அதை அடுத்த சில நாட்களில் ஒரு ட்;டுவோபிசம்(குள்ளன்) பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன். எமது மனதின் தன்னிச்சையான கணிப்பீடுகளைத் தாண்டுகையில் அவனுள்ளும் அவனது வயதின் முதிர்ச்சிக்கேற்ற மனிதன். குள்ளன் எனது மனதில் மறைந்து போய் ஒரு சக மனிதன் தோன்றினான். ஆனால் பெரும்பான்மை மணித்துளிகள் மனதின் கற்பிதங்களிற்குள் சிறைப்பட்டே கிடக்கின்றன.

இந்தக் கதை அகம் புறம் என்பதாகவோ, உள்ளிற்குள் எல்லாம் ஒன்று என்ற சமரசமாகவோ எனக்குள் எழவில்லை. மாறாக, மனதின் கற்பிதங்களிற்கு மேலான தளம் என்ற வகையில் தோன்றியது. நான் குறிப்பிட்ட காணொளியில் அந்த 84 வயது உடலத்தின் முகத்தை மறைத்திருந்தார்கள், அதன் காரணம் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக என்றார்கள். முகம் மட்டுமே எமது அடையாளமா? அடையாளங்கள் சார்ந்து fragmented realities create பண்ணிக்கொண்டு யானை பார்த்த குரடர்களாக வாழ்வு நகர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுப் பெண்களை பார்ப்பதும் பேச முயற்சிப்பதும் ஆண்களுக்கு எப்போதும் விருப்பமானதுதான். ஆனால் இதயம் படத்தில் வந்த முரளியின் காரக்டர் மாதிரி இல்லாமல் இருக்கவேண்டும்.

உடலை அறுப்பதை காணொளியில் பார்த்து அறிவை வளர்க்கும் பக்குவம் இன்னமும் வரவில்லை. உயிரல்லாத உடல் வெறும் காற்றுப்போன பையாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான்..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.