Jump to content

14 வயதுவரை எனது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்கவேயில்லை; சொல்கிறார் பில்கேட்ஸ்


Recommended Posts

12225_content_gates(1)_13055.jpg

எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் பயன்படுத்தத்தரவில்லை’ எனக் கூறும் பில்கேட்ஸ், இப்போதும் ’குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் செல்போன் திரையையோ, கணினித்திரையையோ பார்க்க அனுமதிப்பதில்லை’ என்கிறார்.

‘இதனால் குழந்தைகளுக்கு இரவு நல்ல உறக்கம் கிடைக்கும்’ என செல்போன் நிறுவன அதிபரே தனது குழந்தைகளின் நலனை கவனத்தில்கொண்டு, செல்போனுக்குத் தடை விதித்திருக்கிறார். 

பில்கேட்ஸ் மெலிண்டா தம்பதியினருக்கு ஜெனிஃபர் (20), ரோரி (17), ஃபீப் (14) என மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது, இவர்கள் மூவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ’ஆப்பிள்’ தயாரிப்புகளை மட்டும் பயன்படுத்த தாயார் மெலிண்டா தடை விதித்துள்ளார்.

இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, மற்றொரு செல்போன் நிறுவனமான ‘ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்கூட தனது குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

http://www.thinakkural.lk/article.php?technology/hvmxtoydxy24383cf255972517101zjg0ga9fdfa602ec8c887440f32qrjur

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிஃபர் தனது சொந்த பெயரில் லோன் எடுத்துதான் படிக்கிறார் ....

நாம்தான் பிள்ளைகளின் படிப்புக்கு என்று எமது வாழ்வை வீணாக்க ..
பணத்தின் அருமை தெரியாது வளரும் பிள்ளைகள் பின்பு தமது வாழ்வை வீண் ஆக்குகிறார்கள். 

பிள்ளைகளின் வாழ்வில் பாலமாக இருக்க வேண்டும் 
அவை நல்ல இடங்களை சென்று அடையும் பாதைகளை 
இணைப்பவையாக இருக்கவேண்டும் ........

பிள்ளளைகளின் கால்களாகவே நாம் இருக்க முற்சிப்பது 
எமது வாழ்வையும் ..... வீணாக்கி ... அவர்கள் வாழ்வையும் வீணாக்கும். 

எப்படி முக்கினாலும் எல்லோரும் ஒரு 100 வருடம் இங்கு தங்க போகிறோம் 
தனி தனி அனுபவமே சால சிறப்பானது ஆகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.