Jump to content

180 பேர் உயிரிழப்பு


Recommended Posts

180 பேர் உயிரிழப்பு

p15-7faacc67ec1aa69904b6c1861920f33fbd9f0bc5.jpg

 

110 பேரைக்காணவில்லை

ஐந்தரை இலட்சம் பேர் பாதிப்பு

76 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்

தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிப்பு

வெள்ள நீர் வழிந்தோட ஆரம்பம்

போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

(ஆர்.யசி,எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் தொடரும் மோச­மான கால­நிலை கார­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் சிக்­குண்டு பலியா­னோரின் எண்­ணிக்கை 180 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.  மேலும் 110 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர். அத்­துடன் அனர்த்­தங்­களில் 1 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 303 குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 82 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட 18,845 குடும்­பங்­களை 

 சேர்ந்த 75,308 பேர் தொடர்ந்தும் முகாம்­களில் தங்­கி­யுள்­ளனர்.

கடந்த வாரம் ஏற்­பட்ட சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு என்­ப­ன­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை தொடர்ந்தும் அதி­க­ரித்­த­வண்ணம் உள்­ளது. பாதிப்­புக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்­களை நேற்று 179 ஆக உயர்­வ­டைந்­துள்­ள­துடன் 109 பேர் காணாமல் போயுள்­ளனர். அதேபோல் இரத்­தி­ன­புரி, கேகாலை, மாத்­தளை, கண்டி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மாத்­தறை, ஹம்­பாந்­தோட்டை, காலி,கொழும்பு, களுத்­துறை, கம்­பஹா, மட்­டக்­க­ளப்பு,திரு­கோ­ண­மலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 1 இலட்­சத்து 50 ஆயி­ரத்து 392 குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து 57 ஆயி­ரத்து 505 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட 18 ஆயி­ரத்து 612 குடும்­பங்­களை சேர்ந்த 74 ஆயி­ரத்து 928 பேர் இது­வ­ரையில் 366 தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர் .

நேற்று மற்றும் நேற்று முன்­தினம் கால­நிலை சாதா­ரண நிலை­மையில் இருந்த போதிலும் சாதா­ரண மழை­வீழ்ச்சி காணப்­பட்­டது. சில பகு­தி­களில் கடு­மை­யான மழை வீழ்ச்சி குறித்த சில மணி­நே­ரங்­க­ளுக்கு மாத்­திரம் பதி­வா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களின் நீர் தேங்­கி­யுள்­ளதை அடுத்து மக்­களின் இயல்பு வாழ்க்கை தொடாந்தும் பதிக்­கப்­பட்ட வண்­ணமே உள்­ளது. வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக மீண்டும் கன­மழை பெய்­யக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

 மாத்­தறை மாவட்­டத்தில்

அதி­க­ள­வானோர் பாதிப்பு

இந்த அனர்த்­தங்­களில் மாத்­தறை மாவட்­டமே அதி­க­மாக பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. மாத்­தறை மாவட்­டத்தை சேர்ந்­த­வர்­களே அதி­க­ளவு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலைய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. மாத்­த­றையில் மாத்­திரம் 24 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 15 பேர் காணாமல் போயுள்­ளனர். பாது­காப்பு படை­க­ளினால் காணமால் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்­த­வண்ணம் உள்­ளன. குறித்த மாவட்­டத்தில் 16 பிர­தேச செய­ல­கங்கள் அனர்த்­தத்­தினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இப் பிர­தேச செய­லங்­க­ளுக்கு உட்­பட்ட 87 வீடுகள் முற்­றா­கவும் 2001 வீடுகள் பகுதி அள­விலும் சேத­ம­டைந்­துள்­ளது. மாத்­தறை மாவட்­டத்தில் 41 ஆயி­ரத்து 545 குடும்­பங்­களைச் சேர்ந்த 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 775 பேர் வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்­கப்­பட்ட நிலையில் அவர்­களில் 2714 குடும்­பங்­களைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 370 பேர் 29 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

களுத்­து­றையில் 54 பேர் பலி

இயற்கை அனர்த்­தத்தில் சிக்­குண்டு களுத்­துறை மாவட்­டத்தில் 54 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 69 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் கார­ண­மாக மேலும் 57 பேர் காணாமல் போயுள்­ளனர். களு கங்­கையின் நீர் மட்டம் ஓர­ளவு குறைந்­துள்ள போதும் தாழ் நிலப் பகு­தி­களில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை நீடித்து வரு­கின்­றது. இது வரை­யி­லான காலப்­ப­கு­தியில் களுத்­துறை மாவட்­டத்தில் 29 ஆயி­ரத்து199குடும்­பங்­களைச் சேர்ந்த 107906 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களில் 1602 குடும்­பங்­களைச் சேர்ந்த 6034 பேர் 60 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

  களுத்­துறை மாவட்­டத்தின் 5 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­களில் 26 பாரிய மண் சரிவு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. களுத்­துறை, மது­ரா­வல, தொடான்­கொடை செய­லகப் பிரி­வு­களின் கீழ் உள்ள பகு­திகள் பல நேற்றும் அபாய எச்­ச­ரிக்­கையின் கீழேயே அடை­யா­ள­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேல் மாகா­ணத்தி க்கு தொடர்ந்து மழை பெய்யக் கூடிய அபாயம் காணப்­படும் நிலையில் களுத்­துறை மாவட்­டத்­திற்­கான எச்­ச­ரிக்கை தொடர்­கி­றது.

 காலியில் 12 உயி­ரி­ழப்­புக்கள்

 நிவா­ரண சேவைகள் தீவிரம்

தொடர்ச்­சி­யாக பெய்த கன­மழை கார­ண­மாக காலி மாவட்­டத்தின் பல பகு­தி­களும் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. கிங் கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­ததன் விளை­வாக ஏற்­பட்ட வெள்­ளத்தில் கிங் கங்­கையை அண்­மித்­துள்ள பகு­திகள் அனைத்தும் நீரில் மூழ்­கிய போதும் தற்­போது வெள்ளம் வடிந்­தோ­டி­வ­ரு­கின்­றது. எனினும் காலியின் பத்­தே­கம மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் வெள்ள நீர் தொடர்ந்தும் அதே மட்­டத்தில் காணப்­படும் நிலையில் அப்­ப­கு­தி­களில் உள்ள பல கிராம சேவகர் பிரி­வு­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை கொன்டு செல்லும் பணி­களில் தொடர்ந்தும் சிரமம் காணப்­ப­டு­கின்­றது.

 அனர்த்தம் கார­ண­மாக காலி மாவட்­டத்தில் 38155 குடும்­பங்­களைச் சேர்ந்த 151360 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 10 பேர் காணாமல் போயுள்­ளனர். பாதிக்­கப்­பட்­டோரில் 634 குடும்­பங்­களைச் சேர்ந்த 1411 பேர் 13 முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இரத்­தி­ன­பு­ரியில் 77 உயி­ரி­ழப்­புக்கள்

   28 பேரை காண­வில்லை

அனர்த்­தங்­க­ளினால் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லேயே அதிக உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. மண் சரிவு, வெள்ளம் கார­ண­மாக இந்த உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் நேற்று ஐந்­தா­வது நாளா­கவும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பகு­திகள் தொடர்ந்தும் நீரில் மூழ்­கி­யி­ருந்­தன. இந் நிலையில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மட்டும் இது­வரை 77 பேர் மண் சரிவு மற்றும் வெள்­ளத்­துக்கு பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் 26 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 28 பேர் காணாமல் போயுள்­ளனர். இரத்­தின புரி மாவட்­டத்தில் தற்­ச­மயம் மழை ஓய்ந்­துள்ள போதும் , இரத்­தி­ன­பு­ரியின் 325 கிராம சேவகர் பிரி­வுகள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

 ஏனைய மாவட்­டங்கள்

கேகாலை மாவட்­டத்தில் 1526 குடும்­பங்­களை சேர்ந்த 5799 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் நான்கு பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மாத்­தளை மாவட்­டத்தில் 7 குடும்­பங்­களை சேர்ந்த 31 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மாவட்­டத்தில் 4 குடும்­பங்­களை சேர்ந்த 20பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். வவு­னியா மாவட்­டத்தில் 31 குடும்­பங்­களை சேர்ந்த 102 பேர் பாதிக்கப் பட்­டுள்­ள­துடன், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 27குடும்­பங்­களை சேர்ந்த 72பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 2409 குடும்­பங்­களை சேர்ந்த 10368 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 5பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கொழும்பு மாவட்­டத்தில் 5150 குடும்­பங்­களை சேர்ந்த 20172நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கம்­பஹா மாவட்­டத்தில் 3756 குடும்­பங்­க­களை சேர்ந்த 16133பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 4 குடும்­பங்­களை சேர்ந்த 20 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 206 குடும்­பங்­களை சேர்ந்த நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 28 குடும்­பங்­களை சேர்ந்த 123 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நீர்­மட்டம் குறைவு.

மழை­வீழ்ச்சி குறை­வ­டைந்­துள்ள நிலையில் களு­கங்கை, நில்­வலா கங்கை, கிங் கங்கை, களனி கங்கை ஆகிய நான்கு கங்­கை­களின் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்ள நிலையில் வெள்­ள­பெ­ருக்கும் குறை­வ­டைந்­துள்­ளது. தற்­போது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்ட போதிலும் திடீர் மழை பெய்யும் நிலையில் மீண்டும் அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

எட்டு மாவட்டங்கள் தொடர்தந்தும்

அனர்த்த எச்சரிக்கை.

 கேகாலை, காலி மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, அம்பாந்தோட்டை களுத்துறை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த நிலைமை எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று மாலை விடுக்கப்பட்ட இந்த அறிவித்தலின் அடிப்படையில் மலைப்பாங்கான பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-30#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.